tag:blogger.com,1999:blog-281802122024-03-19T13:12:43.507+05:30ஸ்மைல் பக்கம்திருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comBlogger117125tag:blogger.com,1999:blog-28180212.post-82138228353783006852015-10-14T19:47:00.000+05:302015-10-14T19:47:00.112+05:30Could be a Suicide note
Two weeks ago that night I was coming from my friends place to my house. On my way back, by a speed breaker I had an accident. I didn’t remember anything until I reached my home. After that vaguely remember that friend took me to home. As I slept, 3a.m I woke up and realise I have pain in my head, knees and in hands. Was crying whole night with no idea.
Next day as I spoke to my friend, He explained that I had an accident near thiruvanmaiyur. And I was crying in the road. Couple of securites near the apartment took me safe. They were asking many question but I was simply cried. Where He just called whether I reached home or not. And I picked the call and I blabbered, “I don’t know where I am.. there are men around me.. I am scared.. don’t know what’s happening “. Then he came all the way and took me home. And I stopped him near my house saying “I might get in trouble if you come at this time to my house”. So he left near my house.
Then next day he came and brought the two wheeler back home. And bought some tablets and creams. For the next days I was in a mental stress and pain.
Thanks to those good hearted unknown angels took me safe in that road and my friend. But, this accident in my life made me realise how uncertain is my life, how unsafe is my life. What if I got serious accident and there is nobody in that road?! Even If I was hospitalized who will be there for me to take care?! With all the question and negative thoughts the shock I had by the accident everything together made me for a week as mentally disturbed.
In between, I had to go to Madurai for a paper presentation, so that, I’ll get some money to pay this month rent. Where I stayed with a senior trans-activist, who advised me, “working for mainstream is good thing. But, You should also take care of yourself. Because, end of the day you will be alone my dear”. How true!!!
Then I went to my hometown to my family. Thinking, that will help me to cheer. Where it only got even worst., after all these years yes they accept me but not my Gender. They strictly refuse to accept me as female. They still address me with male pronounce.
In between, each struggle I only push myself to be happy to the core of it. But, seriously, who am I kidding?! Whats the point?! 10 years of theatre experience and Study from London I made a theatre production called “Color of Trans”. But, all these 10 shows of it we only happened to perform by queer friends and some friends help. Even National School of Drama denied our play to perform in a theatre festival.
All these years I never wanted to be a sex worker or begger but want to be an actress and worked all I could. But, What is the point to be a good girl? Whats the point to be an inspiration? End of the day I am still alone and not settled.
Honestly, I am sharing this just so It could be a document other than looking for sympathy.
Dear frineds, So please don’t be shocked in future.. if you see me in begging or doing sexwork or as a mentally challenged in streets or even if you heard I committed suicide!!!
லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28180212.post-43252607270992067282013-12-14T12:45:00.003+05:302013-12-14T12:47:42.885+05:30377 சில விளக்கங்களும்; கேள்விகளும்
<b>விளக்கங்கள்
</b>
1. 377-ஐ குறித்து பேசும் முன் சமபால் ஈர்ப்பிற்கும், பாலியல் அடையாள சிக்கலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்…
சமபால் ஈர்ப்புடையவர்களுக்கு பாலியல் ஈர்ப்பென்பது சமபால் ஈர்ப்புடையவர்களுடன் ஏற்படும் ஈர்ப்பு மட்டுமே.. பாலியல் அடையாள சிக்கல் என்பது திருநங்கைகளும்/திருநம்பிகளும் தங்கள் பாலினத்தை முறையே பெண்/ஆண் என முழுமையாக மாற்றி வாழ வேண்டுமென்பது.
<b>2. இயற்கை?
</b>
இயற்கைக்கு முரணானது என்று சொல்லுபர்கள் பெரும்பாலும் மதவாத பிண்ணணியை கொண்டர்வகளாகவே இருக்கிறார். எது இயற்கை? அல்லது எது இயற்கை எது இயற்கைக்கு முரணானது என்று தீர்மானிப்பது யார்?
அப்படி பார்த்தால் மதமும், சாதியம் தானே இயற்கைக்கு முரணானது.. ஒரு செல் அமீபா தோன்றி பல மில்லியன் ஆண்டு பரினாம வளர்ச்சியில் உருவான ஹோமெசெப்பியன்ஸ் ஆடையின்றி குகைவாசிகளாக இருந்து மெல்ல நெருப்பும், சக்கரமும் கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக வேட்டியாடி, விவசாயம் செய்து இன்றைய நவீன மானுடமாக வளர்ந்துள்ளோம்.. இதில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த மதம் தானே இயற்க்கைக்கு முரணானது.
மேலும், காதல், காமம் புரியாத வயதில் குழந்தை திருமணம் செய்து வைத்தீர்களே அது இயற்கைக்கு முரண் இல்லையா… இல்லை அந்த பொம்மை கல்யாணத்தில் கூட சிறுவன் இறந்த பின் பெண் குழந்தைகளை விதவையாக்கி ரசித்தது இயற்கைக்கு முரண் இல்லையா..? கணவன் இறந்த பின் உடன்கட்டை ஏற்றி ஊர் கூடி கொலை செய்தது இயற்கைக்கு முரண் இல்லையா…
ஏன் இப்போதும் கூட மனிதன் பிறந்தால் இறக்க வேண்டும் என்ற இயற்கைக்கு மீறி ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து மரணம் தொட்ட மனிதர்களை மீண்டும் உயிர்கொடுத்து உலவவிடுதல் இயற்கைக்கு முரணில்லையா…?
தாங்கள் நம்பும் மதத்திற்கு முரணானது என்பதை ஒத்துக்கொள்ள நேர்மையற்ற இவர்கள் பயன்படுத்தும் மாற்று சொற்கள் தான் இயற்கையும், கலாச்சாரமும்..
ஆனால், சமபால் ஈர்ப்புடைய தோழர்களும், திருநங்கைகளும், திருநம்பிகளும் முறையே பாலியல் ஈர்ப்பிற்கும், பாலியல் அடையாளத்திற்கும் நேர்மையாக இருந்து அந்த உரிமையை நேர்மையாகத்தான் கேட்கிறோம்..
ஒரு ஜனநாயக நாட்டில், ஆதி முதல் இருந்து வந்த சமபால் ஈர்ப்பு கொண்ட தோழர்களை இயற்கைக்கு முரணானவர்கள் என்று உச்ச நீதிமன்றமே கூறுவது… இந்திய இறையாண்மைக்கு பெருத்த அவமானமாகும்.
<b>3. பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமா?
</b>
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம் என எதுவும் பாலின பேதமின்றி இருக்க வேண்டுமென கூறும் போது ஏன் திருநங்கைகள்/திருநம்பிகள் மற்றும் சமபால் ஈர்ப்பு கொண்ட ஆண்/பெண்கள் ஒதுக்கப்பட வேண்டும்.
இது ஒருபுறமிருக்க, ஒரு வேளை குரங்குகளோ இன்ன பிற விலங்குகளொ உங்களிடன் எங்களுக்கு இன்ன உரிமை வேண்டுமென்றால் நீங்கள் புதிய சட்டமியற்றலாம். அல்லது, ஒருவேளை செவ்வாய் கிரகவாசிகளாக இருந்து உங்கள் இந்திய நாட்டில் இந்த உரிமை கொடுங்கள் என்றால் புது சட்டம் இயற்றுங்கள்…
ஆனால், சக இந்தியர்களான நாங்கள் சட்டத்தை திருத்தத்தான் போராட முடியும்.
<b>கேள்விகள்
</b>
1. 377 என வரும்போது நாடுமுழுதும் திருநங்கைகள் உட்பட திரளும் LGBTiQ ஏன் திருநங்கைகள்/திருநம்பிகளின் கல்வி/வேலைவாய்ப்பு என வருகையில் ஏன் ஐந்து பேர் கூட கூடுவது இல்லை…?
2. மூலைக்கு மூலை 377-ஐ விவாதிக்கும் ஊடகங்கள் சமீபத்தில் வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு கேட்டு போராடிய எங்கள் போரடங்களுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் தராதது ஏன்…? அல்லது இந்தியாவில் முதன்முறையாக TNPSC தேர்வெழுத போராடி அனுமதி பெற்ற ஸ்வப்னா தோழர்க்கு என்ன முக்கியத்துவம் தரப்பட்டது? நாடு முழுவதும் 377 க்கு எதிராக போராட கிடைத்த குறைந்தபட்ச அனுமதி கூட திருநங்கைகள்/திருநம்பிகளின் வேலை வாய்ப்புக்காக போராட கிடைப்பதில்லை ஏன்?
3. திருநம்பிகளையும், சமபால் ஈர்ப்புடைய பெண்(லெஸ்பியன்)களையும் ஏற்றுக்கொள்ள தயங்கும் திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் சமபால் ஈர்ப்புடைய ஆண்களுக்காக உறுதுணையாக நிற்பது ஏன்…?
லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28180212.post-50332261514060702592013-09-30T21:40:00.000+05:302013-09-30T21:40:24.780+05:30ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தேவதையும்
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFGFTGxIPjEzJ-z-7SRiic0I5xC7b40sjMFLb-vDDhmT6BwsgXjklfm9g85aky5_QBDGO-8gqE_Po-pvTSuH3Y4_UgTqekJPwBH3dyPNMbi37B8cPzhKxHQ6xDSQG5L8hs4Bnv/s1600/o-a-m.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFGFTGxIPjEzJ-z-7SRiic0I5xC7b40sjMFLb-vDDhmT6BwsgXjklfm9g85aky5_QBDGO-8gqE_Po-pvTSuH3Y4_UgTqekJPwBH3dyPNMbi37B8cPzhKxHQ6xDSQG5L8hs4Bnv/s320/o-a-m.jpg" /></a></div>
இது <b>ஓநாயும் ஆட்டுக்குட்டியும்</b> படத்தை விமர்சனம் அல்ல...
காரணம் ஒன்று... இயக்குநர் மிஷ்கின் எனக்கு சினிமா குரு.. அவருடன் “நந்தலாலா” என்ற ஒரு முழு படத்தில் பணியாற்றிய அனுபவத்திற்குப்பிறகு என்னால் அவர்து படங்களை அப்பணியாற்றிய அனுபத்துடனே அணுக முடிகிறது. உதாரணத்திற்கு.. ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போதும்.. இதை அவர் எந்த பார்வையில்/நோக்கத்தில் செய்திருப்பார்.. இக்காட்சியை படம்பிடிக்கையில் படப்பிடிப்பு தளத்தில் என்ன நிகழ்ந்திருக்கும்.., எப்படி உழைத்திருப்பார்/உழைப்பை கொண்டு வந்திருப்பார்... என்ற தளத்திலேயே அல்லது இம்முறை நான் அந்த படிப்பிடிப்பு தளத்தில் இல்லையே என்றவாறு என் சிந்தை வேறு எங்கோ சென்று விடுகிறது.. அது வேறொரு உணர்வு...
காரணம் இரண்டு..
அவர் என் குரு, குருவை நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ விமர்சிக்கும் பக்கும்/தைரியம்/போதுமை எனக்கில்லை...
காரணம் மூன்று ( முக்கியமானதும்..)
இப்படத்தின் பாரதி என்ற தேவதையின் (ஏஞ்ஜல் கிளாடி) கதாபாத்திரம்...
நூறாண்டு கண்ட இந்திய சினிமாவின் அங்கமான 80 ஆண்டு கண்ட தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு திருநங்கையை மிக குறிப்பாக திருநங்கை என்று எங்குமே குறிப்பிடாமல் பாரதி(கண்ட பெண்ணாக)-ஆக மட்டுமே காட்டியதோடு, இவ்வனத்தின் வன விலங்குகளுக்கிடையே... வன தேவதையாக தலைப்பிலும் அவள் தேவதையாய் அவள் பெயரைப்போல, அவளைப் போலவே காட்டியது..
எனது (சிறுவனாக அறியப்பட்ட)சிறிமி காலம் தொட்டு ஒவ்வொரு முறையும் குடும்பத்துடன் படம் பார்க்கும் போதெல்லாம் திருநங்கைகள் குறித்த அபத்த/ஆபாத்தான காட்சிகள் வரும்போதெல்லாம் என்னுள்/பலர் முன் சிறுத்துப்போய் கூனிக்குறுகி நின்றவள் நான்... முதன்முறையாக ஒரு திருநங்கையாக ஒரு திரைப்படத்தை, திரையரங்கில் பார்க்க்கும் போது.. என் பாலிய்ல் அடையாளம் குறித்த சிறுமை/பெருமை இன்று கெத்தாக பார்த்த பாத்திரமிது..
“என்ன... இதுக்கு முன்னாடி சில நல்ல படம் அந்த மாதிரி வந்திருக்கே... நான் கடவுள்., தெனாவெட்டு..”
இல்லை.. இல்ல்லை... இல்ல்ல்ல்லை...
அதிலெல்லாம் ஒரு செயற்கைதனம் அல்லது திருநங்கைகள் குறித்த செயற்கை புரிதல் தொற்றிக்கொண்டே இருந்தது...
முதல் முறையாக... ஒரு திருநங்கையை வலிந்து திணிக்காமல்ல்.. எந்த வசனமோ எதுமோ திருநங்கை என்று வலிந்து சொல்லாமல் அவளை ஒரு பெண்ணாக/மனுஷியாக மட்டுமே கூடுதலாக தேவதையாக அணுகிய திரைக்கதையை தமிழ்சினிமால் நான் உணர்ந்து முதல்முறையாக இப்போதுதான்...
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixcpSeNbqQMhfIrR8PXuyPlY1MNiXqHyI7Zi_P2Wp2lllPdVCXxlCuJqwZAmy7NVWKfCnY5092EuV2qtmUqsh7nd8T7XhMWm_AyQ8gEz5zcJAEvzCX2AmycgDxEJO0csXY1p1L/s1600/glady.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixcpSeNbqQMhfIrR8PXuyPlY1MNiXqHyI7Zi_P2Wp2lllPdVCXxlCuJqwZAmy7NVWKfCnY5092EuV2qtmUqsh7nd8T7XhMWm_AyQ8gEz5zcJAEvzCX2AmycgDxEJO0csXY1p1L/s320/glady.jpg" /></a></div>
எங்கள் தேவதை ஏஞ்ஜல் கிளாடியும் தன் பொறுப்புணர்ந்து வெகு சரியாக பயன்படுத்தியதில் மென்மேலும் பெருமை கொள்கிறேன்...
Love you Glady and my (Wolf) Guruji...
இப்படம் பொருளாதாரரீதியாகவும், விமர்சன்ரீதியாகவும் வெற்றிகொள்ளவும்...
இத்திரைப்படம் ஒரு நல்ல ஆரம்பமாக இருந்து.., ஒரு trendsetter'ஆக இருக்க வேண்டுமென கூடுதல் பேராசை கொள்கிறேன்.. லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28180212.post-38920812922493943242013-06-19T08:08:00.000+05:302013-06-19T15:47:31.594+05:30இலக்கியம் : கற்றவை, பெற்றவை
அம்புலிமாமாவில் துவங்கி ராஜேஷ் குமார், ரமணி சந்திரன் என சென்ற பேருந்து பயண வாசிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் நூலகம். ஜெயகாந்தனின் ரிஷி மூலம் என் வாசிப்பை மாற்றியது., பிறகு அவரது 90% நாவல்களை வெறித்தனமாக படித்தேன். அடுத்து தி.ஜாவின் மரப்பசு, செம்பருத்தி பிறகு சு.ரா., கி.ரா., எஸ்.ரா.க்களின் சிறுகதைகள், இவர்களை தொடர்ந்து சிறு பத்திரிக்கைகள், பிறகு பெண்ணியம் குறித்த புரிதலை அம்பை, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, ரேவதி, குட்டிரேவதி, லீணா மணிமேகலை, சல்மா போன்றோர் தந்தனர். தொடர்ச்சியாக உலக சினிமாக்கள், குறும்படங்கள்.. இவற்றினூடே பேரா.இராமனுஜம், மு.ராமசாமி, முருகபூபதி, பிரளயன், ந.முத்துசாமி போன்றோர் மூலம் நவீன நாடகம் என சென்று... இறுதியாண்டின் இறுதியில் முதுகலை நாடகம் படிக்க விரும்பி., தமிழ் பல்கலைகழகத்தில், முதுகலை-மொழியியல் சேர்ந்து, பேரா.மு.ராமசாமி அவர்களில் சிறு அறையில் பழியாய் இருந்து "கழகக்காரர் தோழர் பெரியார்" எனும் நாடகத்தில் சேர்ந்து 45 மேடையேறி.., இடையிடையே, ஒத்திகை கலைக்குழுவில் சேர்ந்து "சாம்பான்" இருமுறை, ஆழி.வெங்கடேசன் மற்றும் கார்த்திக் அண்ணன்களின் இருநாடகங்கள், புதுவையில் அப்போதைய நாடகத்துறை மாணவர் கோபி இயக்கிய ந.முத்துசாமி அவர்களின் "நாற்காலிக்காரர்" நாடகங்களில் நடித்து என எல்லாமே நன்றாக போனது... பிறப்பு கொடுத்த ஆண் அடையாளத்திலேயே இருந்து என் பெண் தன்மையை வெளி உலகத்திற்கு மறைத்து வைத்தது வரை...
ஆண் அடையாளத்தில் பிறந்த போதும், பெண்ணாக என்னை தீர்க்கமாக உணர்ந்த பின், அந்தஉணர்விற்கு நேர்மையாக, நான் பெண் என்று வெளிவந்ததன் விளைவாக மட்டுமே நான் இழந்தவை பல.., குடும்பம் (சில விதிவிலக்குகளோடு), கற்ற கல்வியின் பயன்பாடு, சமூக அங்கீகாரம், இயல்பு வாழ்க்கை என இழந்தவை எத்தனையோ அவற்றில் மிக முக்கியமாக நானிழந்தது "இலக்கியமும், வாசிப்பும்". திருநங்கை என்று படி தாண்டிய அன்று முதல் வாழ்க்கை தலைகீழாக திரும்பி விட்டது. வாழ்க்கை தந்த கசப்புணர்வு சம்பந்தமேயின்றி வாசிப்பிலிருந்து என்னை புறந்தள்ளிவிட்டது.
அதனையும் மீறி கடந்த 8 ஆண்டுகளில், திருநங்கையாக இருந்த போதும், இந்தியாவிலேயே, பெண்/திருநங்கை என்ற அடையாளத்தோடே பொதுத் துறையில் பணியாற்றிய முதல் திருநங்கையாக நிரூபித்தேன்...
முதன்முறையாக, எனது பெயரை/பாலினத்தை முதல் முறையாக சட்ட மற்றும் அறிவியல்ரீதியாக மாற்றிக்காட்டினேன்.
முதன்முறையாக, திரைத்துறையில் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்ற முதல் திருநங்கையாகவும் நிரூபித்தேன்.
முதல்முறையாக 25 வ்யதில் "நான் வித்யா" என்னும் தன்வரலாற்று நூலும் எழுதி, அது ஆங்கிலம், மலையாளம், மராத்தி, கன்னடம் என மொழிபெயர்ப்பாகவும் வ்ந்தது. குறிப்பாக, கன்னட மொழிபெயர்ப்பு சாகித்ய அகாடமி வென்றது. அவ்வப்போது கவிதை என்ற பெயரில் கொஞ்சம் எழுதியதுமுன்டு.
இவற்றோடு அ.மங்கை, ஸ்ரீஜித் சுந்தரம், மு.ரா., ச.முருகபூபதி, கருணா பிரசாத் உள்ளிட்ட 10 இயக்குநர்களிடம், கிட்டதட்ட 25 நாடங்களில் குறிப்பாக திருநங்கையாக அன்றி பெண்ணாகவே நடித்திருந்தேன். இதோ வரும் வருடத்தில் பிரிட்டிஷ் கவுன்சில்-சார்ல்ஸ் வாலஸ் பெலோஷிப் மூலம் 6 மாதம் நாடகம் பயில போகிறேன்....
இடையிடையே மானே, தேனேன்னு சில சிறப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்,
தற்பெருமைன்னுதானே சொல்றீங்க., சொல்லிக்கோங்க No Problem..!!
இவை அத்தனையும் திருநங்கையாகவே இருந்து நான் நிரூபித்து காட்டியது... அத்தனையும் இந்த அநாகரீக/அறிவியல் பார்வையற்ற சமூகத்திற்கு என்னை நிரூபிக்க வேண்டி வெறி கொண்டு (பல நல்லுள்ளங்களில் உதவியோடு) நான் போராடி வென்ற சாதனைகள்..
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்..............
நேற்று முன்தினம் மாலை "நெல்லை புத்தக விழா" நிகழ்விற்கு பிறகு அதன் தீவிரத்தை உணர்ந்தேன். "நெல்லை புத்தக திருவிழா" மேடையில் என் கவிதை வாசிப்பிற்கு பிறகு, பெருங் கவிஞர்களும், இலக்கிய ஜாம்பவான்களும், விழா அமைப்பாளர்களும் என்னை புறக்கணித்த விதம்... நான் வெறும் திருநங்கைதானோ என்ற... சலிப்பை ஏற்படுத்தியது.
அதனினும் கொடுமை, பார்வையாளராக அமர்ந்திருந்த, நான் வெகுவும் மதிக்கும் இலக்கிய ஜாம்பவான்கள் யாரும் என் கவிதையை கேட்கவும் தயாரின்றி உரையிடாலில் திளைத்திருந்தனர். எல்லோரும் என் கவிதையை கேட்க வேண்டும், ரசிக்க வேண்டும், புகழ்ந்த தள்ள வேண்டும் என்பது என் தேவையல்ல., தன் கண்முன் ஒலிக்கும் ஒரு விளிம்பின் குரலை கேட்கவும் தயாரில்லை என்ற மெத்தனமே என்னை பாதிக்கிறது.
இது ஒருபுறமிருக்க, விழா அமைப்பினரோ தலையிலிருந்து விழும் கூந்தலுக்கு தரும் மரியாதையைக்கூட தரவில்லை., ஹானரோரியம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையை எனக்கும், தோழர்கள் ப்ரியா பாபு, பாரதி கண்ணம்மா மற்றும் நடனமாடிய திருநங்கை முத்து மீனாட்சி நால்வருக்கும் போக்குவரத்துடன் சொற்ப தொகையும், எங்களுக்கு கொடுத்த்தை விட ஏழு படங்கு+போக்குவரத்து செலவு என பெரும் இலக்கியவாதி ஒருவருக்கும் கொடுத்தார்கள். எங்களின் போக்குவரத்திற்கே போதாத அந்த சொற்பத்தொகையையோடு கூடுதல் கொஞ்சம் கேட்டபோது கூட மறுநாள் மதியம் 1-மணி வரை காத்திருந்தே பெற்றோம் (அந்நிலையில் எங்களுக்கு ஆதரவாக நின்ற எழுத்தாளர் க்ருஷிக்கும், அரங்க ஆளுமை மு.ராமசாமி அவர்களுக்கும் எம் பெரும் நன்றி!)..
நண்பர்களே!! இப்பதிவின் நோக்கம் என்னவென்றால், திருநங்கைகள் குறித்த முதல் புத்தகம் எழுதிய தோழர் ரேவதியாகட்டும், அதிகபட்சமாக மூன்று புத்தகங்களை எழுதிய தோழர் @Priyababu ப்ரியா பாவுவாகட்டும், சிறியவள் நானும் எங்கள் பாலியல் அடையாளயத்தை வென்று, அதன் பக்க விளைவுகளையும் வென்று சற்று பிரச்சார நெடியோடாவது (என்று முன்முடிவும், பின்முடிவும் கொண்டோர்க்கு) இந்தளவிற்காவது எழுத முடியுமென்றால்,
பதின்ம வயதிலேயே பாலியல் அடையாள சிக்கலினால் ஏற்படும் மன உலைச்சல்கள் இன்றி, பள்ளியில் மாணவர்-ஆசியர்களின் பாலியல் வக்கிரங்கள் ஏதும் இன்றி, ஆரோக்கியமான கல்விச் சூழலும், வாசிப்பு சூழலும், கூடுதலாக இன்றைய இலக்கிய சாம்பவான்களுக்கு அன்று வாய்த்த ஆண்-சுதந்தரமும் வாய்த்திருக்கேமேயானால், எங்களின் படைப்பும், தரமும் உங்களின் தரத்திற்கு கொஞ்சமும் குறைந்திருக்காது என்பது உறுதி.. இதற்குப் பிறகும் எங்கள் உரையும், கவிதையும் மொக்கையென்றோ, பிரச்சார நெடியென்றோ கருதி காதுகொடுக்கவும் நீங்கள் தயாரில்லையென்றால், நீங்கள் தாரளமாக எங்களை புறக்கணிக்கவே செய்யலாம்.
லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28180212.post-57366881105647469992012-12-05T12:56:00.001+05:302012-12-05T12:58:03.010+05:30Urgent sale<b>
I would like to sell my new drawing titled “EVOLUTION”, Special Offer Rs.4,000/- + my book “I am Vidya” in English. First come; First served (delivery takes a week of course).
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinlqIC4FosTdknRkbHVW3p3clHuwMCM6UyNThqfqXUxRoHeXamm62OiEHDoRFR1cgfIlkguptsEVQltLpvhyIEexp3xRBqyQqiQAGRgzKMB0Ok9tRikGfT-VEoAN2_K6_oLL7x/s1600/Evoultion.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="235" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinlqIC4FosTdknRkbHVW3p3clHuwMCM6UyNThqfqXUxRoHeXamm62OiEHDoRFR1cgfIlkguptsEVQltLpvhyIEexp3xRBqyQqiQAGRgzKMB0Ok9tRikGfT-VEoAN2_K6_oLL7x/s320/Evoultion.jpg" /></a></div>
Thank you</b>லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28180212.post-57037139524849846972012-06-14T22:27:00.001+05:302012-06-14T22:28:07.505+05:30A Memorial MeetingIn a country whose civilisation goes back a long way and which today is open to science and progress, there yet exist groups of people, lesbian, gay, bisexual and transgender people, in short sexual minorities who are yet to find their place in the national mainstream, who are not acknowledged for what they are, not granted respect and are instead subject to ever greater oppression. On account of their sexual orientation and ambiguities with regard to sexual identity, sexual minorities face particular kinds of problems, and on this account have come together these past 20 years to demand recognition of their rights and their humanity - both from state and society. It is because of their incessant struggles that today our society has learned to display a certain minimum regard towards sexual minorities.
In spite of not getting the attention, recognition and attention that they deserve, individuals amongst the sexual minorities have made their mark, singly, and here and there, in the fields of art, media, literature and the Information technology sectors. Yet even those who have managed to do so have to reckon with families that are indifferent towards them, with social disrespect and the absence of safe spaces. Thus many amongst the sexual minorities continue to experience shame and are yet searching for a home of their own, being refugees in their own country. It does not seem right that an Indian citizen who is of the sexual minority cannot find a location within the public sphere, that citizenship does not bring such a person any social advantages.To challenge this state of affairs, in June 2003, LGBT groups took out a Pride March, the Rainbow Coalition March in Kolkatha.
In Tamil Nadu, the first LGBT pride march was held in 2009, and since then we have had a march in the month of June every year, in which individuals as well as NGOs participate. This year, Kattiyakkari, the theatre group has decided to observe Pride by holding a memorial service for those who have laid their lives down for the cause of the sexual minorities.
Today, it is possible for transgenders, especially those who see themselves as female to align with others like themselves and start a new life. But for a transgender person who views himself to be male, it is not easy to do so – in fact the chances of such a person leaving home alive are almost nil. And for those that do, there exists very little, by way of opportunity or space to remake their lives. For transgenders who identify themselves female, there does exist a context, however undesirable, to earn their livelihood, either through sex work or through ‘going to the shops’ and asking for money. For transgenders who identify male, such contexts do not exist, and there are no support groups for them, as there exist for transgenders who identify female.
When a person who is seen as female starts identifying as a male, the problems and dangers she experiences in her family defy language and description. She is forced to behave ‘as a girl’, observe propriety, be obedient and of course when she grows into adulthood, she has to await with dread, the prospect of marriage. For a transgender who identifies male, he cannot imagine what it is, to marry a man or be obedient to him. It is then that he has to express his sexual choices. Often this ends up in him being killed – a crime of honour, no less. Thus, many transgenders who identify male and women who love women are killed, commit suicide, losing thereby their right to life and ‘live’ amidst us as the forgotten and overlooked dead.
Since 1860 when a law that criminalised same sex love was passed, many who loved those of their own sex have been affected, both in law as well outside of it. It is important to remember that in 1987 Leela and Urmila, two women who had got married forfeited their jobs in the police force – they were forced to resign.
Even today there is no answer to the question that the poet Inquilob asked: ‘in whose laws will my love fit?’In June 2000 a magazine from Sri Lanka carried an article that argued it was right to subject women who loved women to violence. Several other magazine writers appeared to agree with this. Those who follow the Tamil press in Sri Lanka are bound to know its views on women who love women. In this society, where religion holds sway, the love life of sexual minorities continues to be attacked and bruised. There are many transgenders who identify male and women who love women that have been driven to suicide on account of the hurt they endured at the hands of parents or female lovers who are in denial and have left them. As far as trangenders who identify female are concerned, they have to deal with lovers who take advantage of their financial status and are not true to them. They too suffer when their lovers desert them, and are driven to suicide. They feel abandoned when the love they had trusted deserts them and on account of this foolhardy emotion kill themselves.
In the Indian context, society, the police and law, all of them and together, directly and indirectly are responsible for the deaths that occur amongst sexual minorities. Families that do not accept transgenders who identify female fight to take possession of the dead and insist on carrying out funeral rights as if it were a son that was dead. The ultimate violence that is done to a transgender who identifies female is to stick a penis made of mud on to her body before it is cremated. A transgender who identifies female risks losing the support of family and society, risks being accepted by them because she has decided she cannot live has a man, or perform the role of a man and choses to sculpt herself into a female being, and to thus stick a penis on to her when she is dead is terrible violence and one wonders when such a thing shall cease to be.
Kattiyakari will hold a memorial meeting in honour of our late comrade Maria who was murdered in Kerala by anti-socials and to commemorate the memory of several others who have died in police custody, at the hands of anti-socials and because their parents have refued to understand them. We call upon you to participate in this event and offer your support.
Let us unite as human beings, let us stand as an example of humanity.
Thank you.
Contact:
Kattiyakari 90940 31188 (Srijith), 99944 36973 (Smiley).லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28180212.post-71679469582894220972012-06-14T22:20:00.000+05:302012-06-14T22:20:00.681+05:30நினைவேந்தல்நாம் வியந்து போற்றும் பல்வேறு அறிவியல் மாற்றங்களும் நாகரீக வளர்ச்சியும் கொண்ட இன்றைய இந்திய சமூகத்தில் இன்னும் இன்னும் சமூக மையநீரோட்டத்தில் கண்டுணரப்படாமலும் மதிக்கப்படாமலும் இருப்பதோடு மட்டுமல்லாமல் கூடுதலாக நசுக்கப்பட்டும் வரும் சகமனிதர்கள், சம பால் ஈர்ப்புடைய பெண்கள் (Lesbian), சமபால் ஈர்ப்புடைய ஆண்கள் (Gay), இருபால் ஈர்ப்புடையவர்கள் (Bi -sexual) மற்றும் திருநம்பி/ திருநங்கைகள் (Transgenders), சுருங்கச் சொன்னால் பாலியல் சிறுபாண்மையினரே (LGBT). சாதி, மத, இன வேறுபாடின்றிப் பாலினத்தேர்வு மற்றும் பாலின அடையாளச் சிக்கல் காரணமாக ஒடுக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் இவர்கள் ஒன்றினைத்து கடந்த 20 வருடங்களாக நாடு முழுதும் வெவ்வேறு வகையில் சகமனிதர்களாலும் அரசாலும் அங்கீகரிக்கப்பட வேண்டி இடைவிடாது தொடர்ந்து போராடிவருகிறார்கள். இதன் பயனாகப் பாலியல் சிறுபாண்மையினர்கள் மீதான குறைந்தபட்ச அக்கரையைப் பெற்று வருகிறது இன்றைய சமூகம்.
முழு அங்கீகாரம் கிடைக்காத நிலையிலும் கலை, எழுத்து, ஊடகம், கணினித் துறை போன்ற பல தளங்களில் தங்களுக்கான இடத்தை விடாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர்கள் அடைந்துவருகின்றனர். இருப்பினும், பரவலாகப் பாலியல் சிறுபாண்மையினரின் இன்றைய நிலை என்பது குடும்ப ஆதரவின்றி, சமூக அந்தஸ்து மறுக்கப்பட்டு, பாதுகாப்பான புகலிடம் இன்றி, தங்களுக்குள் கூனிக்குறுகி, தாய்நாட்டு அகதிகளாக இருளில் புகலிடம் தேடி அலையும் அவல நிலையிலேயே உள்ளது.
தமது பாலியல் அடையாளச் சிக்கல் காரணமாக ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தும் எந்த சமூகப்பயனும் பெறமுடியாதவர்களாகவே பாலியல் சிறுபாண்மையினர் இருந்துவருகின்றனர். அன்போடு அரவணைக்க வேண்டியவர்களைப் பொதுவெளியிலுருந்து விலக்கப்பட்டவர்களாக வைத்திருப்பது நாகரீக சமூகத்திற்கு முறையாகுமா? இந்த் நிலை மாற இந்திய அளவில் ஜூன் 2003, கொல்கத்தாவில் “வானவில் அணிவகுப்பு” என்ற LGBT PRIDE MARCH முதலில் துவங்கியது. அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் பங்காக 2009 முதல் சென்னையிலும் வருடம் தோறும் ஜூன் மாதம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் LGBT PRIDE MARCH பல தொண்டு நிறுவனங்களாலும், தனிநபர் ஆர்வலர்களாலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக இவ்வருடம் கட்டியக்காரி அரங்கக்குழு காலந்தோறும் மறித்துப்போன பாலியல் சிறுபாண்மையினருக்கு மரியாதை செய்யும் விதமாக நினைவேந்தல் நிகழ்வு ஒன்றினை நடத்துகிறது.
தன்னைப் பெண்ணாக உணரும் திருநங்கைகளைக் குடும்பம் வெறுத்துத் தள்ளிய போதும் வெளியேறித் தன்னையொத்த திருநங்கைகள் குழுவுடன் இணைந்து ஒரு புதுவாழ்வை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு திருநங்கைகளுக்கு உண்டு. ஆனால், தன்னை ஆணாக உணரும் திருநம்பிகள் குடும்பத்தை விட்டு உயிரோடு வெளியேறும் வாய்ப்போ மிக மிக அரிதானது. மீறித் தப்பிப் பிழைக்கும் திருநம்பிகளுக்குத் தம் வாழ்வைப் புணரமைத்துத் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கான எந்த வாய்ப்பும் இடமும் இங்கில்லை.
பாலியல் சிறுபாண்மையினரில் திருநங்கைகளுக்கு விரும்பத்தகாத போதும் கடை கேட்கவோ, பாலியல் தொழில் செய்து பொருளீட்டும் சூழலோ உள்ளது போல குடும்பத்தை விட்டு வெளியேறி வந்த திருநம்பிகளுக்கென பொருளாதார வாய்ப்போ பணிச்சூழலோ இல்லை. திருநங்கைகளுக்கென திருநங்கைகள் குழுமம் இருப்பதைப் போல திருநம்பிகளுக்கு குறைந்த பட்சம் ஆதரவான சூழலும் இல்லை.
திருநம்பியின் குழந்தை பருவத்தில் அவனது ஆண் போன்ற நட்த்தையை குடும்பம் அடையாளம் காணும் முதல் நாள் தொடங்கி அத்திருநம்பி எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை வெறும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. பெண் போல அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளத் தொந்தரவு செய்யப்படுவதாகத் தொடரும் ஒடுக்குமுறை திருமண வயதில் பூதாகரமாக நிற்கிறது. தன்னையே ஆணாக உணரும் ஒரு திருநம்பியால் மற்றொரு ஆணை மணப்பதோ அவனுக்கு அடிபணியும் மனைவியாக மாறுவதையோ கற்பனைகூட செய்யமுடியாத நிலையில் தனது பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்த நேர்கிறது. இது இறுதியில் கௌரவக் கொலையில் முடிகிறது. பெரும்பாலான திருநம்பிகளும், சமபால் ஈர்ப்புகொண்ட பெண்களும் பெரும்பாலும் தற்கொலைகளாலும், கௌரவக்கொலைகளாலும் தங்கள் உயிர்வாழும் உரிமையை இழந்து வரலாற்றில் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறார்கள்.
1860ல் ஆங்கிலேய அரசு இந்தியாவில் சமபால் புணர்ச்சிக்கு எதிராக sec 377 சட்டம் கொண்டுவந்தது முதல் சட்டரீதியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் பல சமபால் ஈர்ப்புடைய சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1987 திசம்பரில் போப்பாலைச் சேர்ந்த லீலா - ஊர்மிளா என்னும் சமபால் விருப்பமுடைய பெண்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட காரணத்தால் காவல்துறை பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
யார் வகுத்த விதியில் எங்கள் காதல் அடங்கும் என்ற கவிஞர் இன்குலாபின் கேள்விக்கு இன்றுவரை விடையில்லை. 2000, ஜுன் மாதம் வெளிவந்த ஒரு இலங்கைப் பத்திரிக்கை பெண்களை நேசிக்கும் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது சரி என எழுதியது. இதனைச் சக இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் குழுவும் சரி என்றே ஆணவத்துடன் கருத்து தெரிவித்தது. பெண்களை நேசிக்கும் பெண்களைக் குறித்த தமிழக பத்திரிக்கைகளின் போக்கை, செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவராலும் எளிதில் அவதானித்துவிட முடியும். மத அடிப்படையிலான இச்சமூகத்தில் பாலியல் சிறுபாண்மையினர் அனைவரது காதலும் இன்றுவரை காயடிக்கப்பட்டே வருகிறது. பெற்றோர்களாலோ, அல்லது சமூக வரைமுறைக்கு அஞ்சியோ தன் காதலை மறுதலித்து வெளியேறும் காதலிகளின் பிரிவுதாளாமல் தற்கொலை செய்து கொண்ட திருநம்பிகள்/ சமபால் ஈர்ப்புடைய பெண்கள் பலர். திருநங்கைகளில் காதலர்களில் மெய்யான காதலன்றி அவளது பொருளாதார பலனுக்காகக் காதலிக்கும் சுயநல காதலர்கள் பலர். இதனை அறிந்தும் அத்தகைய ஒருவனைக் காதலிக்கும் திருநங்கைகள் தன்னை முற்றாக மறுதலிக்கும் அக்காதலனின் பிரிவு தாளாமல் தற்கொலை எனும் முட்டாள் முடிவை எடுப்பதுண்டு. வாழ்க்கையின் இறுதிப் பற்றுதலாகத் தான் நம்பிய காதலும் தன்னைக் கைவிட்ட நிலையில் இம்முட்டாள்தனத்திற்குத் தன்னைப் பலிகொடுத்துவிடுகிறார்கள்.
இந்தியச் சூழலில், குடும்பம், சமூகம், காவல் துறை, சட்டம் என அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல பாலியல் சிறுபாண்மையினரின் மரணத்திற்குக் காரணமாக இருந்துவருகின்றன. வாழும் போது ஏற்றுக் கொள்ளாத திருநங்கைகளின் குடும்பமோ இறந்த பின் அடாவடியாகத் திருநங்கையின் உடலைப் பெற்று ஆணுக்குரிய முறையில் ஈமச்சடங்கு செய்கிறது. அதோடுவிட்டுவிடாமல் இறந்தவளின் உடலில் களிமண்ணால் செய்த ஆணுறுப்பைப் பொருத்திவைத்து எரிக்கும் சடங்கும் நிகழ்த்துவது உட்சப்ட்ச வன்முறையாகும். தன்னால் ஒரு ஆணாக நடிக்கவோ/ வாழவோ முடியாதென குடும்பம், சமூக அங்கீகாரம் என எதை இழந்தாலும் தனது உயிரே போனாலும் பாதகமில்லையெனத் தன் உடலைச் செதுக்கும் திருநங்கையின் பிணத்தின்மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறை எப்போது நிற்கும்.
சமீபத்தில் சமூக விரோதிகளால் மறித்துப்போன கேரளத்தைச் சேர்ந்த தோழர் மரியாவுக்கும், அவரைப் போலவே காவல்துறையினராலும் சமூக விரோதிகளாலும் புரிதலற்ற பெற்றோர்களாலும் மரணத்தைத் தழுவிய அத்தனை தோழர்களுக்கும் கட்டியக்காரி அரங்க குழு சார்பாக நினைவேந்தல் கூட்டம் வரும் ஜூன் 30-ம் தேதி ஸ்பேசஸ், பெசண்ட் நகரில் நிகழவிருக்கிறது.
இந்நினைவேந்தலின் உறுதியான நோக்கம் இனிவரும் காலங்களில் எந்த ஒரு பாலியல் சிறுபாண்மையினருக்கும் இத்தகையதொரு நினைவேந்தல் செய்ய வேண்டிய அவசியமற்றுப்போக வேண்டுமென்பதே. இந்நிகழ்வைச் சாத்தியப்படுத்த நிறைந்த அன்புடன் நிகழ்வில் பங்கேற்று உங்கள் ஆதரவை உறுதிபடுத்த வேண்டுகிறோம்.
மனிதர்களாக ஒன்றிணைவோம்!
மானுடத்தின் உதாரணமாக நின்றிடுவோம்!!
நன்றி!!
தொடர்புக்கு :
கட்டியக்காரி 90940 31188 (ஸ்ரீஜித்), 99944 36973 (ஸ்மைலி).லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28180212.post-33917817871688148412012-06-06T10:23:00.002+05:302012-06-13T11:48:12.965+05:30எனது ஓவிய முயற்சிகள்நண்பர்களுக்கு வணக்கம்,
எனது நாடகப்பணிகள் மற்றும் சிறிய அளவிலான சமூக பணிகளுக்கு மத்தியில் அவ்வப்போது வரைந்த ஓவியங்களை எங்கள் கட்டியக்காரி கலைக்குழுவின் முதல் நாடக ஆக்கம் “மொளகாப்பொடி” அரங்க நிகழ்வின் போது காட்சிக்காக வைத்திருந்தோம்.. பார்வையாளர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை அவை தந்தது.
தற்போது சந்தித்து வரும் எனது பொருளாதார நெருக்கடியின் காரணமாக இவ்வோவியங்களை விற்பனை செய்ய் விரும்புகிறேன்.. ஓவியங்களுக்கான் கண்ணாடி மற்றும் ப்ரேம் செலவு மற்றும் போக்குவரத்து செலவு படம் ஒன்றுக்கு 1000/- ஆனது மேலும் இதற்கான கண்காட்சியின் போது ஒளிஅமைப்பு மற்றும் கலை அமைப்பிற்கான செலவு 16,000/- ஆனது இவற்றை கவனத்தில் கொண்டு குறைந்தது ஒரு ஓவியத்திற்கு 4,000/- ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளேன்..
ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்காணும் பதினோரு ஓவியங்களில் தங்களுக்கு விருப்பமான ஓவியங்களை தேர்வு செய்து தங்களுக்கு விருப்பமான விலையை தெரிவித்தால் 10 நாட்கள் கழித்து அதிக விலை தெரிவித்த நண்பர்களுக்கு விற்பனை செய்யலாமென எண்ணியுள்ளேன்... ( மெயில் அல்லது பதிலிடும் போது தவறாமல் ஓவியத்தின் தலைப்பையும் குறிப்பிட வேண்டுகிறேன் )
தங்களின் சிறு உதவி எனது சமூகப்பணிக்கும், நாடகப்பணிக்கும் உறுதுணையாக இருப்பதோடு தொடர்ந்து வரைவதற்கும் எனக்கு ஊக்கமளிக்கும் எனவே அன்பர்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!!
தொடர்புக்கு
+91 99944 36973
livsmile@gmail.com
எனது ஓவிய முயற்சிக்கு முழு பொருளாதார உதவி செய்த தோழர் ஸ்ரீஜித் சுந்தரம்,
எனது ஓவியத்தை முதலில் விலை குடுத்து வாங்கியதோடு இணையத்தில் விற்பனை செய்ய அறிவுருத்திய கீதா, இளங்கோவன் தம்பதியினருக்கு எனது அளவுகடந்த அன்பும் நன்றியும்...
<b>I am my Body</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSIsRmaAC1nzzrSdQydwfZqLemI7NZM1apHiUvPxPQdeeufkOqqStQQkge3LMsuBp2cF7vrrHQCINcwjT4JFiJ-2_9V-WJhy8X6qwS80sCCBmdn77I9BTw63OrdusqBLk-N7dK/s1600/I+am+My+body.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSIsRmaAC1nzzrSdQydwfZqLemI7NZM1apHiUvPxPQdeeufkOqqStQQkge3LMsuBp2cF7vrrHQCINcwjT4JFiJ-2_9V-WJhy8X6qwS80sCCBmdn77I9BTw63OrdusqBLk-N7dK/s320/I+am+My+body.JPG" /></a>
<b>Female Power</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfYE2UoAp_qR-bxoWZ2ptajFLC72vINXvQokcQ6PePvhzjPpaLg_DSKPToXQUIao_B-R9QH3P-dL7zCLzYo69Y-aBKW81Ki3hU10nMqbPe8e-faerZP7rjDSqxow5rhrYZVHy9/s1600/Female+power.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="278" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfYE2UoAp_qR-bxoWZ2ptajFLC72vINXvQokcQ6PePvhzjPpaLg_DSKPToXQUIao_B-R9QH3P-dL7zCLzYo69Y-aBKW81Ki3hU10nMqbPe8e-faerZP7rjDSqxow5rhrYZVHy9/s320/Female+power.JPG" /></a>
<b>You Me and Buddha</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEcrFuopvpa-VXqagF_xiiArSBUQ3iK-BwybSH0jOCTqvFH9YrwbkTXXzoIj1igfJ9rtttRf89cA5LoSWLmsZaCNAboW6jZiZNcjDBDEPlUvHMHtf0hWWNiXe8UusULb6RKNtc/s1600/You+me+and+Buddha.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="280" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEcrFuopvpa-VXqagF_xiiArSBUQ3iK-BwybSH0jOCTqvFH9YrwbkTXXzoIj1igfJ9rtttRf89cA5LoSWLmsZaCNAboW6jZiZNcjDBDEPlUvHMHtf0hWWNiXe8UusULb6RKNtc/s320/You+me+and+Buddha.JPG" /></a>
<b>Blessing Herself</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifNpr4KNcl-iY1-BXe3hVJym37QBSKPxFltmrUbEbIM85qGVhoNbFAI-BW7NXKzv3yyOnpqUvoDSJ1UcnDk_RO93zjgJHcMvY0RbnAAPjPU1ZMB3aKKSMGDwiCatHZ9kY0Nfje/s1600/Blessing+herself.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="287" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifNpr4KNcl-iY1-BXe3hVJym37QBSKPxFltmrUbEbIM85qGVhoNbFAI-BW7NXKzv3yyOnpqUvoDSJ1UcnDk_RO93zjgJHcMvY0RbnAAPjPU1ZMB3aKKSMGDwiCatHZ9kY0Nfje/s320/Blessing+herself.JPG" /></a>
<b>Beast in Me</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7H5EX44bcfuLlzgjlZxKnk0FnQFsEsqR-vr_YqykhZk_1TELGf501G118o-hCM0ClGnId4fguxnkGDXWGwOJGTQgdw1T2A98XB2sajO36msgDEU4HZoi_Gxzvn0SKjTfbaAoC/s1600/Beast+in+me.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="285" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj7H5EX44bcfuLlzgjlZxKnk0FnQFsEsqR-vr_YqykhZk_1TELGf501G118o-hCM0ClGnId4fguxnkGDXWGwOJGTQgdw1T2A98XB2sajO36msgDEU4HZoi_Gxzvn0SKjTfbaAoC/s320/Beast+in+me.JPG" /></a>
<b>You think a girl just this</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwIvZiYB5meK9TWZTSgMG1JVcCk3Qxc19pPXTPISjtH-BpxyawoRFsnU5POsCG7D56J1tArg2aW2JTbrrReQJXTI4ikonsWg3shXluAG6-ks47-4WTFWQeQJxYOeSXzvcbzRHd/s1600/You+thought+a+girl+is+just+this.....JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="283" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwIvZiYB5meK9TWZTSgMG1JVcCk3Qxc19pPXTPISjtH-BpxyawoRFsnU5POsCG7D56J1tArg2aW2JTbrrReQJXTI4ikonsWg3shXluAG6-ks47-4WTFWQeQJxYOeSXzvcbzRHd/s320/You+thought+a+girl+is+just+this.....JPG" /></a>
<b>Wind</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjElwF5EnQtNthJ9MfFxNeT9O7vVme8FXJh26NFeJMB4O1n4XSdJ_rta-H06pE7bhVncvJkOM4oJsgSEshDRH7-LHFoqpm7Yfpbc8JdVKIw6spLhEaEioH1NobVZLIS748neHcV/s1600/Wind.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="284" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjElwF5EnQtNthJ9MfFxNeT9O7vVme8FXJh26NFeJMB4O1n4XSdJ_rta-H06pE7bhVncvJkOM4oJsgSEshDRH7-LHFoqpm7Yfpbc8JdVKIw6spLhEaEioH1NobVZLIS748neHcV/s320/Wind.JPG" /></a>
<b>What is She</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt8nOlH047cEunU1MNt96WU1zHiVoY4SOP0diZr4k7TL8I28Bnbw5c2ecDxO7iuVmi9D8fPxpqy-t5U98tf242h7xs9zFMKN4OHJE0WnLCkkn_uVOgwU_VJ3g5d8VAx03QVffu/s1600/What+is+she.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="286" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgt8nOlH047cEunU1MNt96WU1zHiVoY4SOP0diZr4k7TL8I28Bnbw5c2ecDxO7iuVmi9D8fPxpqy-t5U98tf242h7xs9zFMKN4OHJE0WnLCkkn_uVOgwU_VJ3g5d8VAx03QVffu/s320/What+is+she.JPG" /></a>
<b>Vithusagi</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnvQVWbi_I-lmM1lfQtqh3Uza-xvuKp17FbcahYxKV7eJrqLwfiCXyJAblw9hrYStKxCLU6t36gQbqZXbQMccQlY8ABMddnaWRU5ak64VZJb3nwYMG_LG-JgyZei8J1Beu2s0X/s1600/Vithusagi.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="286" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnvQVWbi_I-lmM1lfQtqh3Uza-xvuKp17FbcahYxKV7eJrqLwfiCXyJAblw9hrYStKxCLU6t36gQbqZXbQMccQlY8ABMddnaWRU5ak64VZJb3nwYMG_LG-JgyZei8J1Beu2s0X/s320/Vithusagi.JPG" /></a>
<b>Theettu</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT3tANfD_aDMBMpdfa-I5NORzylGJopV0rvZvi84iXRHbmJq-gqYwBWo-xWMngoHkkpap6L4gJlWTDcH4esJIDRa86bGBuocR9uGmD13qgwLJpgXPu3VUtf_cIib4m1tuBtJzK/s1600/Theettu.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="320" width="288" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjT3tANfD_aDMBMpdfa-I5NORzylGJopV0rvZvi84iXRHbmJq-gqYwBWo-xWMngoHkkpap6L4gJlWTDcH4esJIDRa86bGBuocR9uGmD13qgwLJpgXPu3VUtf_cIib4m1tuBtJzK/s320/Theettu.JPG" /></a>
<b>Beauty and the Beast</b>
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib7SYP5gHt3TG-1mkLsk9zwmRNPfnRyrCulxPmh0WxQNLrGkREdufLBbtJHmiz0adRx39eTsfw-e99-nY0zUP-uOAvgctTQ5hBQbdHc20tyNzMcL6gjhDml9RoJzkeunrMxCeR/s1600/Beauty+and+the+beast.JPG" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"><img border="0" height="285" width="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib7SYP5gHt3TG-1mkLsk9zwmRNPfnRyrCulxPmh0WxQNLrGkREdufLBbtJHmiz0adRx39eTsfw-e99-nY0zUP-uOAvgctTQ5hBQbdHc20tyNzMcL6gjhDml9RoJzkeunrMxCeR/s320/Beauty+and+the+beast.JPG" /></a>லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-28180212.post-16953835632898950512012-04-17T02:07:00.004+05:302012-04-17T22:50:55.786+05:30நாகரீக மனிதர்களும், அநாகரீக திருநங்கைகளும்இரண்டு தினங்களுக்கு முன்பு திருநங்கையொருவரை பாலியல் தொழிலில் ஈடுபட்ட காரணத்திற்காக கடமை தவறாத உயரதிகாரியொருவர் நடுரோட்டில் 5 உதவி காவலர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். கையெலும்பு உடைந்த அவர் இது மனித உரிமை மீறல் என்று புலம்பியதில் மேலும் ஆத்திரத்துக்குள்ளாகி தாக்கியதோடு மட்டுமன்றி அருகிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் ஒப்படைத்து அவர் மீது வழிப்பறி செய்ததாக ( 320 ரூபாய்) பொய்வழக்கு பதிவு செய்து சென்றுவிட்டார். மறுநாள் பதறியடித்து அவரை மீட்டு வர போராடிய சில திருநங்கைகள், பெண் வழக்கறிஞ்சர் உட்பட சில தமுஎகச தோழர்களையும் சைதை, கிண்டி, தி.நகர், அடையார் என Assistant commisioner அலுவலகம் முதல் Deputy Commisioner வரை பல அதிகாரிகளிடம் அலைக்கழிக்கப்பட்டனர். ஒருவழியாக இனி யாரும் குறிப்பிட்ட அந்த இடத்தில் பாலியல் தொழிலுக்கு நிற்கக்கூடாது என மிரட்டப்பட்டு 5000/- அபராததொகையுடன் அந்த திருநங்கை விடுவிக்கப்பட்டார்.. ஏப்ரல் 15 திருநங்கைகள் தினம் கொண்டாட்டத்திற்கு முதல் நாள் நடந்த ஒரு சம்பவம் இது.<br /><br />இது போல பல திருநங்கைகள் இன்றும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மட்டுமன்றி ரயிலில் பிச்சையெடுக்கும் திருநங்கைகளையும் லத்தி சார்ஜ் செய்தும், லாக்கபில் அடைத்தும் வருகின்றனர்... அதிலும் சமீபத்தில் ரயிலில் கடைகேட்கும் திருநங்கைகளை ரயில்வே காவல் அதிகாரிகள் நேரடியாகவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் கூடுதல் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது...<br /><br />அதாவது நண்பர்களே! நாகரீக சமூகத்தால் சக மனிதர்களாக ஏற்றுக்கொள்ளப்படாத போதும், கல்வி-வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட போதும், குடும்பத்தால் தங்கள் வாரிசுகளாகவே பாதுகாக்கப்படாதபோதும், திருநங்கைகளை திரைப்படங்களில் கேவலமாக சித்திரக்கப்பட்டு தொடர்ந்து ரசிகமனங்களில் நீங்கா அவமானத்தை சுமந்த போதும், திருநங்கைகள் மட்டும் நாகரீக சமூகத்திற்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதையே காவல் துறை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறது...<br /><br />மேற்கூறிய பொய் வழக்கிலிருந்து சம்பந்தப்பட்ட திருநங்கையை விடுவிக்க கோரிய போது, ஒரு காவல் அதிகாரி ”உங்களுக்குதான் அரசாங்கம் நெறைய பண்ணுதே அப்றம் ஏன் இன்னும் இப்படி கேவலமா நிக்கிறீங்க” என கேட்டார். இதைச் சொன்ன அந்த நல்ல அதிகாரி அதற்கும் சற்று முன்புதான் 500ரூபாய் லஞ்சம் எங்களிடம் பெற்றுக் கொண்டவர் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை...<br /><br /><br />அந்த கண்ணியமான காவல்துறை அதிகாரிமட்டுமல்ல, பிச்சை கேட்கும் இடங்களில் பல தர்மப்பிரபுக்களும் கேட்கும் ரெடிமேட் கேள்வியும் இது தான்.. அரசாங்கம் எங்களுக்கு என்ன சலுகைகள் செய்துள்ளது என்பதை இக் கேள்வியைக் கேட்பவர்களோ அல்லது சம்பந்தப்பட்ட அரசாங்கமோ விளக்கினால் உதவியாக இருக்கும்... நலவாரியம் துவங்கிய 3 ஆண்டு பலனாக திருநங்கைகள் அல்லாத பொது மனிதர்கள் சிலருக்கு நிரந்தர அரசாங்க வேலையும், திருநங்கைகளில் 13 பேருக்கு வாரிய உறுப்பினராக நியமித்து 3 மாதங்களுக்கொரு முறை 1500/- சம்பளமும் கொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக திருநங்கைகளில் சிலருக்கு அடையாள அட்டையும் கிடைத்து. அந்த அடையாள அட்டையால் ஒரு SIM card கூட வாங்க முடியாத போதும், ரேசன் கார்டு, வாக்களர் அட்டை போன்ற பிற அடையாள அட்டைகள் மூலம் பெறக்கூடிய எந்த பயனும் இல்லாத போதும் அரசு எங்களுக்கு செய்ததென்னவோ மாபெரும் கொடைதான்... தினமும் அந்த அடையாள அட்டையைத்தான் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறோம் என்றாவது ஒருநாள் மாயம் நிகழும் என்று...<br /><br />இப்போது சமீபத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் 1,000/- பென்சன் தரப்போகிறார்களாம்.. இந்த வானுயர் விலைவாசி காலத்தில் திருநங்கைகள் யாருக்கும் குடும்பமும், ஆதரவும், சமூக அங்கீகாரம் இல்லாததைப் போலவே பசியும், பட்டினியும், தங்க வீடும், எதுவுமே எந்த செலவுமே இருக்காது என்று அரசாங்கம் ஆணித்தரமாக நம்புவதால் அவர்களுக்கு தாரளமாக 1,000/-யை பென்சனாக தந்து தனது அன்புக்கரத்தால் அணைக்கிறது. இந்த 1,000/- ரூபாய் அன்பும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்... <br /><br />ஏனெனில் 40வயதிற்குட்பட்ட திருநங்கைகளை அவர்கள் பிச்சை மற்றும் பாலியல் தொழில் செய்யும் இடத்தில் காவல்துறையினரோ, இன்ன பிற கலாச்சர காவலர்களோ, வக்கிர பொறுக்கிகளோ உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தாக்குவதேயில்லை, பொய் வழக்குகளில் அலைக்கழிப்பதுமில்லை என்று ஆணித்தரமாக அரசு நம்புகிறது... <br /><br /><br />ஆகவே, இந்தியா என்னும் புனித துணைக்கண்டத்தில் வாழும் இந்திய மகான்களே நீங்கள் மட்டும் இந்தியக் குடிமகன்களுக்குரிய அடிப்படை உரிமைகளான நல்ல குடும்பம், நல்ல கல்வி, நல்ல வேலைவாய்ப்பிற்கான சகல வாய்ப்புகளோடும் கூடுதலாக, லட்சங்களில் லஞ்சமும், கோடிகளில் ஊழலுமாக, அதுவும் போதாக்குறைக்கு அதிகார துஷ்பிரயோகம், கற்பழிப்பு, கொள்ளை, மத துவேஷம், சாதித்திமிர் என நவ நாகரீகமாக வாழுங்கள். உங்களின் காமாலைக் கண்களால் மனிதர்களாகவே இனம்காண முடியாத திருநங்கைகளான எங்களை, பிச்சையெடுக்கும் எங்களை, பாலியல் தேவைக்காக மனைவி, காதலிகள் இருந்தும் இல்லாமலும், அலையும் காமகோடிகளிடம் பொருளாதாரத்திற்காக பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகளான எங்களை என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.<br /><br />சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்து நீங்கள் வாங்கப்போவதில்லை என்று தெரிந்தே ஊதுபத்தி, சோப்பு டப்பா விற்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களா... இட்லிக்கடை, பூக்கடை வைத்து 50க்கும், 100க்கும் அல்லும் பகலும் உழைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா.. <br /><br />குடும்பம், கல்வி, வேலை, சம்பளம், பதவிஉயர்வு, பென்சன், அதிகாரம், எல்லாம் இருந்தும் தீராத பணத்தேவைக்காக சமூககுற்றங்கள் அதிகரிப்பதைப் போலவே... இவை எதுவும் இல்லாத எங்களுக்கும் பொருளாதரம் கூடுதலாகவே தேவைப்படுகிறது.. ஏனெனில் நீங்கள் மறுத்தாலும் நாங்களும் மனிதர்களே.<br /><br /><br />சகமனிதர்களான திருநங்கைகளுக்கும், திருநம்பிகளுக்கும் இந்திய அடிப்படை உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடும் கொடுத்து அதிகாரப்பூர்வ மனிதர்களாக நாங்கள் வாழும் நாள் வரும் வரை உங்கள் நாகரீக உலகில் தொந்தரவாகவே நாங்கள் இருப்போதும்.. இது உங்களால் முடிந்த புறக்கணிப்பிற்கு எங்களால் முடிந்த சிறு தொந்தரவே...லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-28180212.post-51425378800212545402012-04-12T11:51:00.012+05:302012-04-12T16:28:51.237+05:30எதிரொலிக்கும் கரவொலிகள்பிச்சை கேட்பவர்களாக, பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டவர்கள் திருநங்கைள். சக மனிதர்களைப் போல பல்வேறு கலைகளை தன்னகத்தே கொண்ட அவர்களின் திறன் பலரும் உணர்வதில்லை. அவர்களிடம் சுயமாக பாடல் புனைந்து பாடும் திறனும்; கரகம், தப்பாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலைத் திறனும்; இன்னும், பரதம், ஓவியம், சிற்பம், கவிதை, எழுத்து, நடிப்பு என பல கலைத்திறனும் கொண்டவர்கள் திருநங்கைகள்..<br /><br /><br />பெண்ணிய சிந்தனையாளரும், அரங்க கலைஞருமான அ.மங்கை அவர்களின் முயற்சியில் உருவான கண்ணாடிக் கலைக்குழு மூலம் <span style="font-weight:bold;">உறையாத நினைவுகள், மனசில் அழைப்பு</span> என இரு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. முழுக்க முழுக்க திருநங்கைகளால், திருநங்கைகளின் குடும்ப, இருப்பு சார்ந்த நாடகங்களை பேசும் நாடகமாக வரலாறு பதித்தது. அதன் தொடர்சியாக சக அரங்க ஆளுமையான கே.ஏ.குணசேகரன் அவர்களின் இயக்கத்தில் <span style="font-weight:bold;">மாற்றம்</span>, அரங்க கலைஞர் பேரா.மு.ராமசாமி அவர்களின் இயக்கத்தில் <span style="font-weight:bold;">வலியறுப்பு</span> என பல நாடகங்கள் சிறப்பாக திருநங்கைகளின் அரசியல் தேவையை தொடர்ந்து அரங்கில் மக்கள் முன் வலியுறித்தின..<br /><br />இவற்றோடு ஸ்ரீஜித் சுந்தரத்தின் முயற்சியில் சில நிகழ்த்து கவிதை வாசிப்புகளும், சில விழிப்புணர்வு குறுநாடகங்களும் நிகழ்த்தப்பட்டது.. இவரது கட்டியக்காரி கலைக்குழுவிலும் சில திருநங்கைகள் நிரந்தரமாக உள்ளனர். மேலும், இவரது சமீப நாடகம் <span style="font-weight:bold;">மொளகாப்பொடி</span>யில் இரண்டு முக்கிய பெண் கதாப்பாத்திரத்தில் திருநங்கைகளே நடித்திருக்கிறார்கள். மேலும் இரண்டு திருநங்கைகள் காலனி பெண்களாக வருவார்கள். இவ்வாறு திருநங்கைகளை இயல்பான பெண்களாக அரங்கத்தில் நிறுத்தியவர்கள் அ.மங்கை, ஸ்ரீஜித் சுந்தரம், ச.முருகபூபதி<br /><br /><br />திருநங்கைகளின் பல்வேறு கலை திறன்களை ஒருமித்து பொது மக்களின் முன் தம் அரசியல் கோரிக்கையோடு முன்வைக்கும் விழாவாக வரும் ஏப்ரல் 15 <span style="font-weight:bold;">திருநங்கைகள் தின</span> கொண்டாட்டம் இருக்கும். அதன் ஒரு அங்கமாக <span style="font-weight:bold;">வானவில் கலைக்குழு</span> வழங்கும் <span style="font-weight:bold;">எதிரொலிக்கும் கரவொலிகள்</span> நாடகம் நிகழ்த்த உள்ளது. நிகழ்த்துக்கலையில் ஆர்வமுள்ள திருநங்கைகளின் முயற்சியால் துவங்கப்பட்ட இக்குழுவின் இந்த நாடகத்தை நெறியாளுகை செய்பவர் ஸ்ரீஜித் சுந்தரம். <br /><br />நாளை (ஏப்ரல் 13) இந்நாடகத்தின் இறுதி ஒத்திகை பத்திரிக்கையாளர்களுக்காகவும், அரங்க கலைஞர்களுக்காகவும் நிகழ்த்தப்பட உள்ளது. தரமணி SRP Tools பேருந்து நிலையம் அருகில் உள்ள CPI(M) அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு மறக்காமல் கலந்து கொள்ளவும். நிகழ்விற்குப் பின்னுள்ள உரையாடலிலும் கலந்து கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.<br /><br /><br />பொதுமக்கள் அனைவரும் ஏப்ரல் 15 <a href="http://livingsmile.blogspot.in/2012/04/blog-post.html">திருநங்கைகள் தின</a>த்தில் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வையும் சிறப்பிக்க வேண்டுகிறேன். நன்றி!!லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28180212.post-87959575683482682002012-04-06T21:43:00.004+05:302012-04-07T22:53:45.185+05:30திருநங்கைகள் தினம்திருநங்கைகள் தின விழாவிற்கு ஆதரவுகரம் வேண்டி<br /><br />வணக்கம்<br /><br />நாகரீக சமூகத்தில் நம்மிடையே காலகாலமாக சமூக மையநீரோட்டத்தில் கண்டுணரப்படாமல், மதிக்கப்படாமல், நசுக்கப்பட்டு வரும் சகமனிதர்கள் திருநங்கைகள். சாதி, மத, இன வேறுபாடின்றி பாலினத்தால் ஒடுக்கப்பட்டவர்களாக ஒன்றினைத்து திருநங்கைகள் கடந்த 20 வருடங்களாக வெவ்வேறு வகையில் சகமனிதர்களாலும், அரசாலும் அங்கீகரிக்கப்பட வேண்டி இடைவிடாது போராடி வருகிறார்கள். அதன் பயனாக திருநங்கைகள் குறித்த குறைந்தபட்ச அக்கரையை பெற்று வருகிறது இன்றைய சமூகம்.<br /><br />முழு அங்கீகாரம் கிடைக்காத நிலையிலும் சில திருநங்கைகள் கலைத்துறையிலும், எழுத்திலும், ஊடகங்களிலும் மேலும் பல தளங்களில் தங்களுக்கான இடத்தை படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடைந்து வருகின்றனர். ஆயினும், பெரும்பான்மையான திருநங்கைகளின் இன்றைய நிலை என்ன? குடும்ப ஆதரவின்றி, சமூக அந்தஸ்து மறுக்கப்பட்டு, புகலிடமும் இன்றி இறுதியாக பாலியல் தொழில் அல்லது கடைகேட்டல் (பிச்சையெடுத்தல்) என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. <br /><br />தமது பாலியல் அடையாள சிக்கல் காரணமாக ஒரு இந்திய பிரஜையாக இருந்தும் எந்த சமூகப்பயனும் பெறமுடியாதவர்களாக திருநங்கைகள் பொதுவெளியிலுருந்து விலக்கப்பட்டவர்களாக இருப்பது நாகரீக சமூகத்திற்கு முறையாகுமா? இந்நிலை மாற, போராட்டம் வலுப்பெற கடந்த இரண்டு வருடங்களாக ஏப்ரல் 15 திருநங்கைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.<br /><br />திருநங்கைகள் தங்களுக்கான உரிமைகளை அடைய குறிப்பாக, கல்வி/வேலைவாய்ப்பு/சட்ட அங்கீகாரம்/சமூக அந்தஸ்து ஆகியவற்றை மீட்டெடுக்க வரும் ஏப்ரல்-15 அன்று மாபெரும் விழாவாக கொண்டாடவிருக்கிறோம். திருநங்கைகளின் சமூக அங்கீகாரத்தேடலுக்கு உரமூட்டும் தினமாக ஏப்ரல் 15ஐ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) திருநங்கையர் சமூகப் போராளிகளும் இணைந்து மாபெரும் விழாவாக கொண்டாடவிருக்கிறோம். <br /><br />விழாவில் ஓவியக் காட்சி, வரலாறு சொல்லும் புகைப்படக் காட்சி, புத்தக்க்காட்சி, கைவினைப் பொருட் கண்காட்சி, நாட்டுப்புறக் கலைகள், நாடகங்கள் இவற்றுடன் கவிதை, பேச்சு என திருநங்கைகள் தங்களது திறன்களை வெளிக்காட்ட உள்ளனர். <br /><br />வெறும் கலை நிகழ்வோடன்றி திருநங்கைகள் குறித்த புரிதலை, அவர்களின் தனித்துவிடப்பட்ட உணர்வுகளை வெகுஜனங்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் பாலமாக இத்திருநங்கைகள் தினம் விளங்கும். மேலும், அரசிற்கும், சமூகத்திற்கும் தங்களின் கோரிக்கையை காத்திரமாக முன்னிறுத்தவும் இத்தினம் தொடர்ந்து ஒலிக்கும்.<br /><br />சாதனை படைத்த திருநங்கையர்களுக்கும் திருநங்கையர் மேம்பாட்டுக்கு உறுதுணையாய் இருந்தோருக்கும் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளோம். அறிவியல், அரசியல், சமூக, சட்ட விளக்க கருத்துக்களோடு தகுதியான ஆளுமைகள் திருநங்கைகள் குறித்து உரை நிகழ்த்த உள்ளனர்.<br /><br />இம்மாபெரும் அங்கீகார மற்றும் கலை போராட்ட நிகழ்வை சாத்தியப்படுத்த உங்களின் ஆதரவாக....<br />நிறைய அன்பும் உங்களால் இயன்ற பொருளும் தந்து உதவுமாறு தமுஎகச மற்றும் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பாக தோழமையோடு கேட்டுகொள்கிறோம்.<br /><br />மனிதர்களாக ஒன்றிணைவோம்! <br />போராடுவோம்! <br />மானுடத்தின் உதாரணமாக நின்றிடுவோம்!!<br /><br />நன்றி!!<br /><br />தொடர்புக்கு : 99944 36973, 99413 13000, 94440 85385, 95001 00630.லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-28180212.post-28837276457176336012012-03-19T23:40:00.003+05:302012-03-19T23:45:08.741+05:30இல்லாமல் போன சகோதரித்துவம்நீண்ண்ண்ண்...ட இடைவேளைக்குப் பிறகு இன்று என் தங்கையிடம் அலைபேசியில் சிறிது நேரம் பேசினேன். <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNnuchqDQZ3IMjg07bvh8K_Ww8b1oZ6DuUNaOv9L4ecXCsKsF87trlZAN9_T_1QgTjdErXgPi5KfyIuqolI3HIgHzSUfG3OVKqiZHVgkDon1AapVLq9YnWQYvFdO37rtchtpyU/s1600/download.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 194px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNnuchqDQZ3IMjg07bvh8K_Ww8b1oZ6DuUNaOv9L4ecXCsKsF87trlZAN9_T_1QgTjdErXgPi5KfyIuqolI3HIgHzSUfG3OVKqiZHVgkDon1AapVLq9YnWQYvFdO37rtchtpyU/s320/download.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5721672480093945746" /></a><br /><br />கடைசியாக அவளை நேரில் பார்த்த போதோ 11-ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். என் மனச் சித்திரத்தில் அவள் இன்னமும் 9-ம் வகுப்பு தங்கையாகவே பதிந்திருக்கிறாள். எத்தனை வருட இடைவெளியென்று கணக்கு தெரியவில்லை இன்று அவளிடம் பேசும் போது, அவள் BCA படிப்பதாக சொல்கிறாள். ஒரு இளங்கலை மாணவியாக வளர்ந்திருக்கும் அவள் குரலும், அதிலுள்ள தெளிவும் ஆச்சர்யமாக உள்ளது. காலமும், என் கோலமும் எவ்வளவு பெரிய இழப்பை எங்களுக்குள் ஏற்பட்டு விட்டது. <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdR_4vOSANZXAN1giuhMCybbhIaO8_vhyphenhyphenoRN9v-63DwtzG1u_kWNVb6sxwxN8cKZ9yUjtgAZbfJyHvCMNr1bDuEQ-n_2EUwHWvM1-HSOI9py5VSL0AcMiQYpEVanf6jf3T7pcG/s1600/images.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 243px; height: 208px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdR_4vOSANZXAN1giuhMCybbhIaO8_vhyphenhyphenoRN9v-63DwtzG1u_kWNVb6sxwxN8cKZ9yUjtgAZbfJyHvCMNr1bDuEQ-n_2EUwHWvM1-HSOI9py5VSL0AcMiQYpEVanf6jf3T7pcG/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5721673185299259458" /></a><br /><br />இரண்டு அக்கா, ஒரு தங்கையென <br />அதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம்<br />சகோதிரிகளுக்குள்ளான புன்சிரிப்பும், கேளிக்கையும்<br />இல்லாத வறண்ட பாலையாய் பொலிவிழந்து போனது<br /><br />இரண்டு அக்கா, ஒரு தங்கையென<br />எள்ளலும், சீண்டல்களும் கொண்டாட வேண்டிய <br />வளர் இளம் பருவம்<br />குறுகுறுப்பும், <br />பின் தொடரும் ரோமியோக்கள் குறித்த பெருமிதங்களும் <br />அந்தரங்க அவஸ்களை பகிர்ந்து கொள்ளும் தோழமையும்<br />இல்லாத வறண்ட வானிலையாய் <br />வண்ணமிலந்து போனது வளர் இளம்பருவம்<br /><br /><br />பாழாய்போன அந்த ஆணுடலால் <br />பாழாய்ப்போனது என் வசந்த காலம்.<br /><br />எல்லாம் இழந்து பெண்ணுடல் பேணிய போதும்<br />இரண்டு அக்கா, ஒரு தங்கையென <br />அதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம் முதல்<br />எப்போதும் இல்லாமல் போனது எங்களுக்குள் சகோதரித்துவம்<br /><br />இரண்டு அக்கா, ஒரு தங்கையென <br />அதி அற்புதமாய் இருந்திருக்க வேண்டிய சிறு பிராயம்<br />பாழாய்போனது<br />பாழாய்போன அந்த ஆணுடலால்லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-28180212.post-26765982560208825522012-02-28T21:23:00.002+05:302012-02-28T21:34:45.474+05:30கனவு<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDG_H5CSKL9u38ToUs5pVj1rZxrBEHbgGtl-slPQZkzA656u7tx2AXvp3wWvjD66HrQgMJ4G0rk1BbTGsinGqifGWOP-HrbcMWXpJQACKKk_Ir8N_37YB-EIWlW9THonfY2uFB/s1600/images.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 259px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDG_H5CSKL9u38ToUs5pVj1rZxrBEHbgGtl-slPQZkzA656u7tx2AXvp3wWvjD66HrQgMJ4G0rk1BbTGsinGqifGWOP-HrbcMWXpJQACKKk_Ir8N_37YB-EIWlW9THonfY2uFB/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5714217970311605426" /></a><br /><br /><br /><span class="magazine">பு</span>துவகைப் பறவையென பறப்பதாக <br /><br />கனவு கண்டதுண்டு<br /><br /><br /><br />ஆடம்பரமான அலங்காரத்தில்<br /><br />மணமகள் கோலத்தில் நாணிக் கோணும்<br /><br />கனவும் வருவதுண்டு<br /><br /><br />என் கரம்படும் போது மட்டும்<br /><br />மலர்ந்து மணம்வீசும் வண்ண பூக்களும்<br /><br />கனவில் வருவதுண்டு<br /><br /><br /><br />குடைபிடித்து செல்லும் தமிழாசிரியையாக,<br /><br />பென்சிலை தேடும் மாணவியாக,<br /><br />மழைநீரில் குதூகளிக்கும் சிறுமியாக,<br /><br />இன்னும் இன்னும் கனவுகள் வருவதுண்டு<br /><br /><br /><br />எப்போதும் கண்டதில்லை கனவு<br /><br />இப்போது நான் கைதட்டி பிச்சை கேட்பதைப் போல….லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28180212.post-82707031231585892802012-02-25T21:20:00.001+05:302012-02-25T21:21:56.743+05:30சந்திக்க வேண்டிய கோமாளி “ஜுஜூஃபி”<span class="magazine">ந</span>மது தமிழ் நாடகவெளியில் கோமாளி அரங்க ( Clown Theatre) வடிவம் வெகு குறைவாகவே நிகழ்த்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த Clowns without border நாடக்குழுவில் லில்லி என்ற கோமாளிப் பெண்ணாக தொடர்ந்து 12 முறை, சென்னை மற்றும் புதுச்சேரியில் குழந்தைகளுக்காக குதூகலகமூட்டும் நாடகம் நடித்த அனுபவத்திலிருந்து கோமாளி நாடகத்தின் மீது தனி இச்சை கூடியிருந்த்து. தற்போது அ.மங்கையின் நெறியாளுகையில் வ.கீதாவின் பனுவல் “ஆண்மையோ ஆண்மை” கோமாளி வடிவத்தில் தொடர் ஒத்திகை நிகழ்ந்து வருகிறது. மார்ச் 3 & 4, பெசன்ட் நகர், ஸ்பேசஸில் நிகழ்த்த உள்ளது. இந்த வருடம் எனக்கு கோமாளியாக துவங்கியதோடு, தொடர்ந்து மற்றொரு கோமாளி நாடகத்தில் நடிப்பதில் இரட்டை மகிழ்ச்சி. அதோடு, ஆண்மையோ ஆண்மைக்காக அமெரிக்க கோமாளிப் பெண் எம்மாரின் 5 நாட்கள் காமெடியா டெலார்த்தே நாடக வடிவ பயிற்சி பெற்றது முத்தாய்ப்பான வாய்ப்பு. <br /><br />இன்று எமது “ஆண்மையோ ஆண்மை” ஒத்திகை முடிந்தபிறகு. நாங்கள் ஒத்திகை செய்த அதே சென்னை ஸ்பேசஸில் அரங்க இயக்குநர் ராஜீவின் இயக்கத்தில் “ஜுஜூஃபி” நாடகம் நிகழ்த்தப்படுவதாக எதார்த்தமாக அறிந்து, பதார்த்தமாக போய் சேர்ந்தேன். ஒத்திகை முடிந்து சென்றதால் பாதி நிகழ்வில் தான் பார்வையாளராக இணைந்து கொள்ளமுடிந்த்து.<br /><br />நுழையும் போதே அதன் அரங்க வடிமைப்பும், நடிகர்களின் ஆடையும் கண்டு இது கோமாளி நாடகம் (clown Performance) என்பதை உணர்ந்து குதூகளமாக நுழைந்தேன்.<br /><br />அரங்க இயக்குநர் ராஜீவ் அவர்களின் நாடகங்கள் நகைச்சுவை வடிவில் வெகு சிறப்பாக இருக்கும் என்பது கேள்வி ஞானத்தில் நானறிந்தது. இதற்கு முன் இவரது நாடகமென நான் பார்த்தது புரிசை -2010 நாடகவிழாவின் போது பார்த்த “கி.ரா. கொளம்பு”. கரிசல் எழுத்து மன்னன் கி.ராஜ நாரயணன் அவர்களின் நகைச்சுவை சிறுகதைகள் சிலவற்றை தொகுத்து நாடகமாக்கியிருந்தார்கள். அதன் நடிகர்கள் ஆனந்த் சாமி, ஈஸ்வர் மற்றும் மாளவிகாவின் சிறப்பான நடிப்பில் விடாத வெடிச்சிரிப்புடன் நாடகத்தை கண்டுரசித்தேன். குறிப்பாக மாளவிகாவின் நடிப்பை பார்த்து இதற்கு இணையாக ஒரு நகைச்சுவை நாடகத்திலாவது நானும் நடிக்க வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் மாளவிகாவை நகைச்சுவை நடிப்பில் கடக்கமுடியுமா என்று பயந்த்தும் உண்மை...<br /><br />ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என மும்மொழியில் நடிக்கப்பட்ட அந்நாடகத்தில் கி.ரா.வின் எழுத்திலிருந்து கிடைக்கும் சொல்லாடலும், அவரது கரிசல் மனிதர்களையும் சந்திக்கமுடிந்த அளவில் கணமான கதையோ/அரசியலோ இல்லாமல் இருந்த்து சிறு குறையாக நான் உணர்ந்தேன். <br /><br />ஆனால், இந்த “ஜுஜூஃபி” அவ்வாறன்றி ஆனந்த் சாமி, கருணா, தயாளன் போன்ற தேர்ந்த நடிகர்களின் சிறப்பான நடிப்பு, சிறப்பான அரங்க அமைப்பு(ஆர்த்தி), இசை(கிஷோர்)யோடு மட்டுமன்றி சமகால அரசியல் எதேச்சிகாரத்தையும் காட்டமாகவும், நகைச்சுவையாகவும் விமர்சித்திருந்தார். பார்வையாளர்களிடம் அரசியல் விழிப்புணர்வையும், சமகால அரசியல் மீதான விமர்சனத்தை, சிரித்தவாறே வாழைப்பழத்தில் ஏற்றும் ஊசிபோல நாசுக்காக சேர்க்க கோமாளி வடிவமே சிறந்த்து என்பதை மீண்டும் வலுவாக கூறும் நாடகமாக “ஜுஜூஃபி” இருந்த்து. <br />சிறப்பான நடிப்பு மற்றும் வடிவம் போக, இந்த நாடகத்தில் நான் மிகவும் நேசித்தது ஆடை மற்றும் அரங்க பொருட்கள். முன்பு பார்த்த “கி.ரா. கொளம்பு” வில் ஆடை மிக எளிதாக பார்வையாளர்களில் இருந்து மூன்று திடுமென அரங்கம் வந்து நடிக்கத்துவங்கியது போலிருந்த்து. அரங்க பொருட்கள் சிறு மேஜை மட்டுமே இருந்த்தாக ஞாபகம். பையில் பேனா கொண்டுசெல்வது போல் எளிதாகவே இருந்த்து. இந்த முறை ஜுஜூபியிலோ ஆர்த்தியின் வண்ணமயமான அரங்க பொருட்களும், விதவிதமான முகமூடிகளுமாக மேடையிலிருந்து கட்புலன் விலகமுடியாதபடி உறுதியாக இருந்த்து. அதற்கு இணையாக அழகான ஆடை வடிவமைப்பு மற்றும் இசையும். மேற்கத்திய இசையும், மிருதங்கம், உறுமி, மற்றும் புல்லாங்குழல் என அனைத்தும் கச்சிதமாக இருந்த்து. சில இடங்களில் வசனத்தை பின்பற்ற முடியாதபடி இசை உரக்க இருந்ததை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில், பார்க்க பார்க்க இப்படி ஒரு நாடகத்தில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய அனுபவமாக இருந்தது. நாளை (26 பிப்ரவரி) மாலை, பெசன் ட் நகர், ஸ்பேசஸில் இதே நாடகம் நிகழ்த்தப்படுகிறது. வாய்ப்புள்ள அன்பர்கள் தவறாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடகம். குறிப்பாக குழந்தைகளுக்கு அவ்வாய்ப்பை தர மறந்து/மறுத்துவிடாதீர்கள்.<br /><br />சுபம்லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28180212.post-75066090560673991552011-07-02T12:48:00.005+05:302011-07-02T12:59:47.256+05:30Soorppanangu Inivitation 2Here is the English Invitation of S.Muruaga boobathy's new Tamil Play Soorppanangu. <br /><br />Please cherish the moment with us<br /><br />Thank you <br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmwjKOD6FyMClJp2qt9C7X11zbQBlaUzVp4xRnGVjkfhWFOZ80-BIKuOFOCfz38ybCz4zWFAwgwRKyqqmh1l4F0OSXdNwgFoZWqoij0yjTSCZ8Ic4V5kjTRnSKM99CeL6KLHel/s1600/soorppanangu+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmwjKOD6FyMClJp2qt9C7X11zbQBlaUzVp4xRnGVjkfhWFOZ80-BIKuOFOCfz38ybCz4zWFAwgwRKyqqmh1l4F0OSXdNwgFoZWqoij0yjTSCZ8Ic4V5kjTRnSKM99CeL6KLHel/s400/soorppanangu+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624652369350019042" /></a><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNM2sOufa5ZaKmMJUUeivova7BTqurR41Xu3acWR_nsVccZSOUOuESB1GYxezQBmNA-SJfDltgqgIekA0rqPRfAAreoIgUnWCN8FahWz-Udmgp_Gd8Ggl1OrplSk9xUwNjCu7y/s1600/soorppanangu+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNM2sOufa5ZaKmMJUUeivova7BTqurR41Xu3acWR_nsVccZSOUOuESB1GYxezQBmNA-SJfDltgqgIekA0rqPRfAAreoIgUnWCN8FahWz-Udmgp_Gd8Ggl1OrplSk9xUwNjCu7y/s400/soorppanangu+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624653563862568498" /></a>லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28180212.post-9326650903104471352011-06-28T13:22:00.005+05:302011-06-28T13:44:55.094+05:30சூர்ப்பணங்கு நாடக நிகழ்வு - அழைப்பிதழ்சென்ற சனி மற்றும் ஞாயிறுகளில் (25, 26) சகோதரன் ஸ்ரீஜித் சுந்தரத்தின் இயக்கத்தில் பாமாவின் சிறுகதையான "மொளகாப்பொடி" நிகழ்த்தப்பட்டது. பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்ப்பும் கிடைத்தது.<br /><br />மரியாதைக்குரிய அண்ணன் ச. முருகபூபதியின் "சூர்ப்பணங்கு" நாடகம், அடுத்த மாதம் 10ம் தேதி, (ஜூலை 10) சென்னை, பெசன்ட் நகர், ஸ்பேசஸ்ஸில் மாலை 6.30 மணிக்கு நிகழ்த்தவுள்ளோம். தங்களின் வருகையையும் ஆதரவையும் எதிர்நோக்கி அழைக்கிறேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD0OmN6iOYTym0SeOL48519iGRSCPym79CEb58H8PJW75pl3FsgbnPlsA2TWz2SG58Vo46vJEwAhOTCBD2iWnUsrg3VxxDLDZL3SjkJ4Ty0zFHAVHrpFbrv4QzRtCTDVOBIzUR/s1600/soorppanangu+1.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgD0OmN6iOYTym0SeOL48519iGRSCPym79CEb58H8PJW75pl3FsgbnPlsA2TWz2SG58Vo46vJEwAhOTCBD2iWnUsrg3VxxDLDZL3SjkJ4Ty0zFHAVHrpFbrv4QzRtCTDVOBIzUR/s400/soorppanangu+1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5623177838497601650" /></a><br /><br />(அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும். மேலும் பெரிதாகப் பார்க்க மீண்டும் கிளிக் செய்யவும்.)<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-NLNSuCRInScmu47oM2E5wvCpx5wDaTCZbJyJseS0UMkVG4DamgWMNbUwgDrJ4lmiYYd0KCrnEyN-jmW8KATXIrjQo5q_fDQXZuhA6VPfBF-JqWLejfewn7gmmjnVkKxrIGof/s1600/soorppanangu02.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-NLNSuCRInScmu47oM2E5wvCpx5wDaTCZbJyJseS0UMkVG4DamgWMNbUwgDrJ4lmiYYd0KCrnEyN-jmW8KATXIrjQo5q_fDQXZuhA6VPfBF-JqWLejfewn7gmmjnVkKxrIGof/s400/soorppanangu02.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5623176890654325810" /></a><br />(அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும். மேலும் பெரிதாகப் பார்க்க மீண்டும் கிளிக் செய்யவும்.)<br /><br /><br />இதே நாடக நிகழ்வு மதுரையில் ஜுலை 8ம் தேதி மதுரா கல்லூரியிலும், திருவண்ணாமலையில் ஜீலை 9ம் தேதி சாரோன் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்கிறது.லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28180212.post-23462902248475052842011-06-12T11:09:00.004+05:302011-06-12T11:20:04.245+05:30மிளகாப்பொடி<span class="magazine">எ </span><br /><br />ழுத்தாளர் பாமாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான "மிளகாப்பொடி" என்னும் சிறுகதையை, சகோதரன், நண்பன் ஸ்ரீஜித்தின் இயக்கத்தில் "கட்டியக்காரிகள்" என்னும் அரங்கக்குழுவின் சார்பில் வரும் ஜூன் 25 மற்றும் 26ம் தேதிகளில் நிகழ்த்தவுள்ளோம்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9rWfANnZrBnBqmaF2fSrFeeGkylE_zb9xEyoscM-0hy6r9zeMEXFeku1LH4yWqD-P1QBfShUGqbcKetsSDT1IKEw73K1kUPPnmIoWgSRH1rD-0c_Ev2XGjeCXiRGpnEbRGkPb/s1600/Final-Tamil-Poster.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9rWfANnZrBnBqmaF2fSrFeeGkylE_zb9xEyoscM-0hy6r9zeMEXFeku1LH4yWqD-P1QBfShUGqbcKetsSDT1IKEw73K1kUPPnmIoWgSRH1rD-0c_Ev2XGjeCXiRGpnEbRGkPb/s400/Final-Tamil-Poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617205590056212418" /></a><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgKG4goHH2yCuCNduDyJBSf_X_NTTl1y5MRl9fBmKrVaQ3f_q7Rlnrnj7EwpOdV-rYSQLiI5OHziqj9PY9TRB7xKAM3UZxE9_Cu6dGtg2jOPlv4p-5By1YEIO21-C7iPgekgWr/s1600/Final-English-Poster.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgKG4goHH2yCuCNduDyJBSf_X_NTTl1y5MRl9fBmKrVaQ3f_q7Rlnrnj7EwpOdV-rYSQLiI5OHziqj9PY9TRB7xKAM3UZxE9_Cu6dGtg2jOPlv4p-5By1YEIO21-C7iPgekgWr/s400/Final-English-Poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617205995409154690" /></a><br /><br />அத்துடன் எனது சிறு ஓவிய முயற்சிகளையும் தங்களின் பார்வைக்காக வைத்துள்ளோம். <br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJp8EY8KHpUwk6FOPrZJ9_LfBw6ehNMxU4RqD3Au25pcHID3GrIwUETLMH0cp8eHlLxIbnFCNmV_AfQykImc5FIggZVqkF-fTehyphenhyphen6hqs_6BRfph4zgHfajS2RaZik9FG_VyOBB/s1600/Approved.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJp8EY8KHpUwk6FOPrZJ9_LfBw6ehNMxU4RqD3Au25pcHID3GrIwUETLMH0cp8eHlLxIbnFCNmV_AfQykImc5FIggZVqkF-fTehyphenhyphen6hqs_6BRfph4zgHfajS2RaZik9FG_VyOBB/s400/Approved.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617205330654448706" /></a><br /><br />அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!<br /><br />நன்றி!!!லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-28180212.post-79640256500497131922011-06-12T10:39:00.002+05:302011-06-12T11:05:35.089+05:30சூர்ப்பணங்கு<span class="magazine"> சூ</span>ர்ப்பணங்கு<br /><br />எனது மரியாதைக்குரிய சகோதரர் ச.முருகபூபதி இயக்கும் புதிய நாடக ஒத்திகை நேற்று முதல் 10-06- 2011 முதல் துவங்கியது. இம்முறை ஒத்திகையின் முதல்நாள் முதலே என்னை இணைத்துக்கொள்ள முடிந்ததில் பேருவகை கொள்கிறேன். ஆனபோதும், சகோதரன் ஸ்ரீஜித்தின் நாடகமான "மிளகாப்பொடி" ஒத்திகைக்கு இதன் பொருட்டு மட்டம் போட நேர்ந்ததில் வருத்தமே. சூர்ப்பணங்கு நாடகத்தின் பொருளடக்கம் உங்களின் பார்வைக்காக <br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjChFKTNf2f-IRSc0-2l_cLRQ2uRMgrCdHC05RLRmqDdi8BTmC5H9xtZyu2wfm9llowDiNfs6eU_sM5hFWBH8MAzX2lS0oKfbGwyQSUNb8RT5HLD-qR5z0Xkvpv9R_edpMH4bN0/s1600/SOORPPANANGU_2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjChFKTNf2f-IRSc0-2l_cLRQ2uRMgrCdHC05RLRmqDdi8BTmC5H9xtZyu2wfm9llowDiNfs6eU_sM5hFWBH8MAzX2lS0oKfbGwyQSUNb8RT5HLD-qR5z0Xkvpv9R_edpMH4bN0/s400/SOORPPANANGU_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617202505493685666" /></a>லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-28180212.post-76099769192863779302011-02-16T19:10:00.004+05:302011-02-18T21:57:36.653+05:30FUCK OFF INDIAIN BUREAUCRACY<span class="magazine"> பு</span>றக்கணிக்கப்படுவதும், அவமானப்படுவதும், வறுமையும் என் வரலாற்றின் நிரந்தர அடையாளங்கள். நாசகர இந்தியாவில் திருநங்கையாக பிறந்ததைவிட கண்ணியமாக வாழ நினைத்திடும் திருநங்கையாக பேராசை கொண்டதன் பின்விளைவு இவை. அதிலும் நாடக கலைஞராக வாழ்ந்திட ஏக்கம் கொண்டதன் உச்ச தண்டனையும்.<br /><br />இதுநாள் வரை இந்திய அரசாங்கத்தால் மட்டுமே பரிசளிக்கப்பட்ட புறக்கணிப்பும் இதர புண்ணாக்குகளும் இன்று பிரான்ஸ் அரசாங்கத்தாலும் வாரி வழங்கப்பட்டது.<br /><br />தோழர் ஷோபா சக்தியும், இதர இலக்கிய ஆர்வலர்களும் ஆண்டுதோறும் நடத்தும் 2011 இலக்கியக்கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். France Embassy எனது VISAவை மறுத்துவிட்டது. காரணம், நான் பிரான்ஸ் சென்றபின் திரும்பி வரவேன் என்ற உத்திரவாதம் இல்லையாம். ( சொந்த ஊர்லயே சோத்துக்கு வழியில்ல. பிரான்ஸ்க்கு போயி கவர்னர் ஆயிருவேன்னு பயப்படுறாங்க!! )<br /><br />அவநம்பிக்கைக்கு அவர்கள் தரும் காரணங்கள்<br /><br />1. திருமணமாகதவள்<br /><br />2. குடும்பப் பிண்ணனி இல்லாதவள்.<br /><br />3. நிரந்தர வருமானம் மற்றும் வேலையின்மை.<br /><br />4. மிகக் குறைவான வங்கிக் கணக்கு, மற்றும் என் பெயரில் குறிப்பிடும்படி சொத்து இன்மை.<br /><br />திருநங்கைகளை மனுஷியாகக்கூட பார்க்காத நாட்டில் என் திருமணம் எப்படி சாத்தியம்?<br /><br />எந்த குடும்பம் திருநங்கைகளை ஏற்றுக் கொள்ளும், என்ன படித்தும், என்ன தகுதி இருந்தும் இந்த புண்ணிய பூமியில் திருநங்கைகளுக்கு வேலை என்பது பிச்சையும்/பாலியல் தொழிலும்தான் என்று France Embassy யார் எடுத்து சொல்வது. வேலையில்லாத நிலையில் சொத்துக்கு எங்கே போவது.<br /><br />எத்தனை DOCUMENTS, எத்தனை RECOMMENDATION LETTERS, எத்தனை PAPER CUTTINGS, எத்தனை PHOTOS, எத்தனை அலைக்கழிப்புகள், இன்னும் எத்தனை, எத்தனை. போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை விழா குழுவினர் ஏற்றுக் கொள்ளும் நிலையிலும், மேற்படி காரணங்களுக்காக VISA மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நேரடியாக திருநங்கைகளுக்கு VISA கிடையாது என்றே சொல்லியிருக்கலாம். <br /><br />நண்பர்களே அந்நிய தேசம் போகமுடியாததல்ல... இத்தேசம் மட்டுமன்றி அந்நிய தேசமும் என்னை புறக்கணிக்கும் நிலை, என்னை ஆற்றா கோபத்தில் இருக்குகிறது. <br /><br />புரிதலுக்கு நன்றி!!<br /><br />எப்பொழுதையும் விட இப்பொழுது, இந்த நொடியில் இத்தேசத்தை ஆனமட்டும் சபிக்க விரும்புகிறேன்.<br /><br />எனது ஆற்றாமையில் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.<br /><br />அதே சமயம் இரண்டு விசயங்களை நீஙகள் சரியாக புரிந்துகொள்ள விரும்புகிறேன். <br /><br />1. சிலர் என் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள். இல்லை. <br /><br />பணவரத்து என்ற ஒன்றைதவிர, நான் மீண்டும் திரும்பி வருவேன் என்பதற்கான பல சான்று கலை தந்துள்ளேன். இயக்குநர் மிஷ்கினுடன் நந்தலாலாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து மற்றும் அவரது அடுத்த படம் சாமுராயிலும் பணிபுரிய இருப்பது என்பதற்கான சான்றுகளை அளித்துள்ளேன். அதேபோலவே இதுவரையிலான எனது நாடகப் பணிகள், இனியும் பங்காற்றவுள்ள நாடகப்பணிகள் அனைத்திற்குமான சான்றுகள். எழுத்தாளர், சமூகப் போராளி என்பதற்கான பல சான்றுகள், பரிசுகள், விருதுகள் என அனைத்தையும் தான் காட்டியுள்ளேன். கிட்டதட்ட 60, 70 டாகுமென்ட்ஸ் இருக்குமென நம்புகிறேன். இது போக எனது பொருட்செலவு அனைத்தையும் அமைப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதையும் காட்டியுள்ளென்.<br /><br /><br />பணமன்றி அவர்கள் சொல்லும் மற்ற காரணங்கள், திருமணமின்மை, குடும்பமின்மை, சொத்தின்மை.. <br /><br />இந்திய தேசத்தில் இம்மூன்றும் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது தானே காரணம். இந்தியாவில் எனக்குள்ள பணிகளையும், பல்வேறு தகுதிகளும், நான் திரும்பி வரவேண்டிய தேவையை நிறுவிய போதும், மேற்படி மூன்றினை மட்டுமே அவர்கள் கூறும் போது வேறு எது காரணமென்று கூறமுடியும். <br /><br /><br />2. நான் ப்ரான்ஸ் போகததில் எனக்கு வறுத்தமொன்றுமில்லை. அதேசமயம் , என் பாலின அடையாளம் காரணமாக நிகழும் எந்த புறக்கணிப்பையும் சகித்துக்கொள்ளும் பக்குவமின்மை மட்டுமே என்னை நிலைகொள்ளச் செய்கிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும். உங்கள் பார்வைக்கு இந்த அவலத்தை முன்வைப்பது மட்டுமே என் நோக்கம்.லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com27tag:blogger.com,1999:blog-28180212.post-82649489950881416062011-01-08T21:07:00.003+05:302011-01-08T21:14:26.438+05:30மிருக விதூஷகம்<span style="font-weight:bold;"> Manal magudi</span><br /><br /> Proudly Invites you for the theatre performance <br /><br /> MIRUGA VITHUSAGAM<br /><br />(A Tamil Play about Wild clowns’s search for Humanity)<br /><br />at International Theatre Festival of NSD<br /><br /><br /> Date<br /><br /> 11.1.2011, Tuesday<br /><br /> Time<br /><br /> 7 - 8.30 P.M<br /><br /> Venue<br /><br /> Open Air Statium<br /><br />National School of Drama,<br /><br /> Mandi House,<br /><br /> New Delhi.<br /><br /><br /><br /><br /> மணல்மகுடி வழங்கும்<br /><br /><br /> மிருக விதூஷகம்<br /><br />( மனிதம் தேடும் மிருக விதூசகர்களின் பயணம் )<br /><br /><br /> நாள்<br /><br /> 10.01.2011<br /><br /> நேரம்<br /> மாலை 8- 9<br /><br /> இடம் <br /><br /> திறந்தவெளி அரங்கம்,<br /><br />தேசிய நாடகப் பள்ளி வளாகம்,<br /> மண்டி Hஅவுஸ்,<br /><br /> புது தில்லி.<br /><br /><br /> <span style="font-weight:bold;">அனைவரும் வருக!</span>லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-28180212.post-47540655688528725552010-10-17T18:37:00.002+05:302010-10-17T19:24:54.342+05:30(ஆண் மன) சப்தங்கள்கடந்த சனி, ஞாயிறு மரியாதைக்குரிய நாடக இயக்குநர் கருணாபிரசாத அவர்களின் இயக்கத்தில் எங்களது "சத்தியலீலா" நாடகம் கலாசேத்ராவில் நிகழ்ந்தது. பொதுவாக நாடகம் முடிந்தவுடன் நண்பர்கள் மேடையிலேயே வந்து வாழ்த்துவது எனக்கு சற்று கூச்சமாக இருக்கும். அதைவிட நாடகம் முடிந்தவுடன் சற்று தனிமையில் இருக்கவே விரும்புவேன். <br /><br />அன்றும் நாடகம் முடிந்ததும் நண்பர்களுக்கு தென்படாமல் விரைந்து உடைமாற்றும் அறைக்கு சென்றுவிட்டேன். அப்போது என்னைத் தேடி வந்து வாழ்த்தினார் திருநங்கையொருவர். பெயர் ரம்யா. பொதுவாக நாடக நிகழ்வுகளுக்கு திருநங்கைகள் வருவது அரிதினும் அரிது என்பதால் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதேநேரம் திருநங்கையொருவர் நாடகம் காண வந்து எனக்கு சந்தோசமாகவும் இருந்தது. கூடுதலாக அடுத்த ஞாயிறு 16/10 ( நேற்று) ஜெயராவ் அவர்களின் நாடக நிகழ்வு இருப்பதாகவும் அதில் தான் நடித்திருப்பதாகவும் சொன்னபோது மேலும் உற்சாகமாக இருந்தது. <br /><br />நவீன நாடகத்தில் ஒரு திருநங்கை பங்கேற்பதை காணும் ஆவலுடன் நேற்று மாலை -ல் வைக்கம் முகம்மது பசீரின் "சப்தங்கள்"கதையை, நாடக இயக்குநர் ஜெயராவ் அவர்களின் இயக்கத்தில் பார்த்தேன். <br /><br />நிகழ்வு துவங்கும் சற்றைக்கு முன் சிறுமழை பெய்து நிகழ்வை மேலும் தாமதப்படுத்தியது. நிகழ்வு துவங்கி சில நிமிடத்தில் பெருமழை வந்து நிகழ்வை தொந்தரவு செய்தது. (அப்பவே எச்சரிக்கை செஞ்ரிருக்கு!)<br /><br />"சப்தங்கள்" பல வருடங்களுக்கு முன்பே ஏற்கனவே படித்த கதைதான். அப்போதே, அதில் திருநங்கையை குறித்த சொல்லாடல் சற்று வருத்தப்படச்செய்தது. ஆனாலும், மொழிபெயர்ப்பு என்பதாலும், பலருக்கும் அப்போது திருநங்கைகள் குறித்த புரிதல் இல்லாததாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. <br /><br />இன்ன்றைய இந்நவீன நாடகத்தில் கண்ணியமாகக் கையாளப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்த்த எனக்கு திருநங்கை ரம்யாவின் அறிமுகமே முகம்சுழிக்கும்படி செய்தது. Mid night masala அளவிற்கு அருவெறுப்பான ஒரு பாலியல் நடனம். நிலம்-ரத்தம் என கதைநாயகன் புலம்புவது, மற்ற பிறவற்றிக்கு பந்து, கைக்குட்டை, பலூன் போன்றவற்றை உருவகமாக வைத்து நாடகம் செய்தவற்கு, திருநங்கை தொடர்பான பாலியல் காட்சிக்கு அரைகுறை ஆடை, அருவெறுப்பான நடனம் சரியென பட்டது வருத்ததிற்குரியது. <br /><br />திருநங்கைகளின் தேவை, அரசியல் குறித்த பார்வை, திருநங்கை ரம்யாவிற்கும் இல்லை, இயக்குநர் ஜெயராவிற்கும் இல்லை என்பது அந்நடனக்காட்சிக்குப் பிறகு ரம்யா பேசிய நீண்ட வழக்கான திருநங்கைகள் இன்று மீடியாக்களுக்கு தரும் வழக்கமான வசனத்திலேயே தெரிகிறது. <br /><br /><br />அதுவரைக்கும் கூட பொறுத்துக் கொள்ள முடிந்த எனக்கு, அதன் பிறகு வந்த வசனங்கள் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக இருந்தது. சற்று முன்பு வரையான நீண்ட வசனத்தில் ரம்யா தன்னை மாய்ந்து, மாய்ந்து திருநங்கை என்று சொல்லிக்கொள்ள, அவரது காட்சி முடிந்து தொடர்ந்து வரும் காட்சியில் திருநங்கை ரம்யாவை ஆண் விபச்சாரி என்றே அழுத்தம் திருத்தமாக பலமுறை சொல்லி கொச்சிப்படுத்திக்கொன்டிருந்தனர் இரு முக்கிய கதாப்பாத்திரங்களும். அதிலும் பெண், இல்லை, ஆண் இல்லை அது என்று அநாகரீகமான வார்த்தை விளையாட்டும் கூட...<br /><br /><br />போதாதற்கு அத்திருநங்கையுடன் உடலுறவு கொன்டதாலேயே தனக்கு கொனேரியா என்ற பால்வினை நோய் வந்ததாகவும், அதானால் தான் மிகவும் மூச்சாப் போகப் படும் அவஸ்தையையும் விளக்குகிறார். அந்த ஒருநாளைக்கே அவர் அப்படி ஒருநோயாளியானரென்றால்.. ஏற்கனவே பாதிக்கப்பட்ட திருநங்கை மட்டும் எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும். <br /><br />இந்நாடகம் குறித்து சொல்ல பல இருந்தாலும் நேரமின்மையால் இம்மனவேதனையை மட்டும் தற்போது பகிர்ந்துகொள்கிறேன்.. <br /><br /><br />கடைசியாக...<br /><br />ஒருகாலத்தில் திருநங்கைகளின் உரிமை குறித்த விழிப்புணர்வு வலுவாக எழுந்த காலத்தில் அ.மங்கையின் "உறையாத நினைவுகள்" மு.இராமசாமியின் "வலியறுப்பு" போன்ற நாடகங்கள் அவசியமாய் இருந்தன. அவை போதுமான அளவிற்கு திருநங்கைகளின் உலகத்தை அரசியல், விழிப்புணர்வு கண்ணோட்டத்தோடு பேசின. <br /><br /><br />இன்று இந்த நாடகம் அதற்கு எதிர்மாறான போலித்தனமான அக்கறையுடன் ஆண்திமிருடனேயே இதை அனுகியுள்ளது. <br /><br />வன்மையாக கண்டிக்கிறேன்.லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-28180212.post-66059854159583066382010-08-05T19:39:00.008+05:302010-08-15T18:42:24.224+05:30பித்த நிலத்தில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXkJ3DEeKRL912k6U7DgBSmugUoObYgP2xxndw92bPj6LBYNXJFabvIU3I6FFa8QkOD8T7_voR3V6bGN03VlVAw_6vEoxNNlok1KRGmqE348DN0Yb888zYnmqPwsZ3FgebtjBo/s1600/vid1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXkJ3DEeKRL912k6U7DgBSmugUoObYgP2xxndw92bPj6LBYNXJFabvIU3I6FFa8QkOD8T7_voR3V6bGN03VlVAw_6vEoxNNlok1KRGmqE348DN0Yb888zYnmqPwsZ3FgebtjBo/s400/vid1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505622329738150226" /></a><br /><br />நானொரு நிலமற்றுத் திரியும் கானகப்பட்சி. இன்றிலிருந்து பின்னோக்கி என் பிறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் என் தேவை நான் உட்பட எவருக்கும் தெரியாமலே போனது. அன்பு கிடைத்த போதும் அன்பு கிடைக்காதவளாக, உறவுகள் இருந்தும் யாருமற்றவளாக, நண்பர்கள் இருந்தும் நண்பர்கள் இல்லாதவளாக, மனிதர்கள் சூழ இருந்தும் தனிமையாகவே இருந்து வருகிறேன். அம்மா வீரம்மாள் மட்டுமே எனக்கு முழு அம்மாவாக அரவணைத்தாள், வெறும் பத்து வயது வரை. வெயிலும், மழையும் பல்லிளித்த ஒரு தீ தினத்தில் தாயும், தாய்பாசம் என்ற சொல்லும் என் அகராதியிலிருந்து உதிரம் சிந்த வேருடன் என்னிடமிருந்து பிடுங்கியெறியப்பட்டார்கள்.<br /><br />இன்னொரு தாயான ராதாக்கா சில வருடங்களிலே இன்னொருவரின் மனைவியாக என்னிடமிருந்து பறிக்கப்பட்டாள். ஒரு சராசரி இந்திய ஏழை தலித் பெண்ணாக தன் இருப்பிற்காக போராடியே அவள் நேரம் வாதையுடன் கழிகிறது. இதில் எனக்கான இடம் அவள் கட்டளையை மீறி என்னிடமிருந்து பறிக்கப்பட்டது.<br /><br />குடும்ப கட்டமைப்பிலிருந்து நீங்கிய பின் தனிமையே சுதந்திரமாகவும், சுதந்திரமே வெவ்வேறு அனுபவமாகவும், அனுபவம் பாடுகளாகவும், பாடுகளே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே துர்சொப்பனமாகவும் கழிந்தது. எப்போதும் அன்பை எதிர்பார்த்து ஏங்கும் எனக்கு நோய் தீர்க்கும் அருமருந்தாக உள்ளமும், உடலும் ஏற்கும் ஒரு சூரணம் நடிப்புக் கலை.<br /><br />என்னளவில் நடிப்பென்பது உடலைவிட்டு பறவையாகப் பறந்து சிறகுகளால் என் வெற்றுடலை கைப்பாவையாக்கி வேறொரு உடலாக, பறவையாக, மிருகமாக, கீதமாக, போதையாக, நடனமாக உலுக்காட்டி உலுக்காட்டி கொண்டாடும் அருங்கலை. அதில் தான் தனிமை நீங்கி, பாடுகள் நீங்கி, உடல் என்னும் பொருளும் நீங்கி காற்றாய் மிதந்தலையும் அனுபவம் பெறுமுடியுமென நம்புகிறேன். இவ்வனுபவமே வலிநிரம்பிய வாழ்க்கையின் புறச்சிக்கலில் இருந்து என்னைக் காப்பாற்றுகிறது.<br /><br />என் நடிப்பில் தனிச்சிறப்போ, பக்குவமோ இல்லாத போதும், நடிப்புக்கலை மட்டுமே என் ஆத்மாவைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை என்னுள் ஆழ தங்கிவிட்டது. நைந்த என் வாழ்க்கை குறிப்பில் நாடகத்துடன் உறவாடிய நாட்கள் பரிதாபமாக வெகு குறைந்த நாட்களே.<br /><br />நடிப்பின் தீரா ஆசையில் எனக்கான நாடக வெளி தேடியலையும் என் கழுகுப் பார்வைக்கு முதல் தேர்வாக மயக்கும் மாந்திரீக நிலம் (ச.முருக)பூபதி அண்ணனின் பித்த நிலமே. அந்த வசீகர நிலவெளியில் என் உடல், எலும்பு, சதை, நாக்கு, விரலகளெல்லாம் அலைந்து அலைந்து வெறிகொண்டு பிரபஞ்ச நடனமாடத் துடிக்கிறது.<br /><br />இது முதுகலை நாட்களில் ஆரம்பித்த வெறி. பூபதி அண்ணனின் நாடகத்தை நேரடியாக பார்த்திராத போதும், அவரது சரித்திரத்தின் அதீத மியூசியம் நாடகப் பிரதியை வாசித்த அனுபவமே என் நாடக உடலை பூபதி அண்ணனுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்துவிட போதுமானதாக இருந்தது. நண்பர்கள் விஜியும், முருகனும் அவரது கூந்தல் நகரம் நாடகத்தில் நடித்த அனுபங்களை பகிர்ந்து கொள்வது மேலும் வேட்கைக்கு எரியூட்டியது. ஆனால் சரியான சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவேயில்லை.<br /><br />தஞ்சை பல்லகலையில், முதுகலை படித்த நாட்களில் சாம்பான், நடுவன், கலக்காரர் தோழர் பெரியார் போன்ற நாடகங்களில் பங்கேற்க முடிந்தது. உடல் மீதான குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆறுதலாக இருந்தது இத்தகைய நாடக அனுபவங்களே. நாடக வெளிக்கான ஆரம்பமாக அமைந்திருந்த அந்நாட்களில், எனக்கான உடலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு வருடமும், உடலை திருத்தியபின் மேலும் நான்கு வருடங்களும் என் உலகம், நாடகம் மறுக்கப்பட்ட பாலையாக தகிக்க தகிக்க வெம்மிக்கொண்டிருந்தேன். மரணவாடை வீசிய அந்நாட்களில் எதற்கு, யாரை தண்டிப்பது என்ற குழப்பத்தில் புத்தக வாசிப்பு மறுத்து என்னையே தண்டித்துக் கொண்டேன் (வேறு சில காரணமும் உண்டு அல்லது வெறும் சமாதானமாகவும் இருக்கலாம்). காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறு எனது, தண்டனையும் எனக்கே, தவிப்பும் எனக்கே.<br /><br />சில காலம் காதலும், சினிமாவும் ஓரளவு கைகொடுத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றோடு முழுமனதோடு பயணிக்க முடியவில்லை. நாடக வெளியன்றி வேறு எதுவும் என்னை காப்பாற்றாது என்பதை நான்கு வருட இடைவெளி தெளிவாக உணர்த்தியது. இப்பெரும் இடைவெளியில் மூச்சுத்திணறி தவிக்கும் மரணநொடிகளில் எங்கிருந்தோ வீரம்மாளே நாடக உருகொண்டு தாய்பால் பருகத்தந்து எனை மீட்டாள். சகோதரன் ஸ்ரீஜித்தின் என்.ராமயணம் வீதிநாடகமும், கவிதை வாசிப்பும், அன்பான அ.மங்கையின் பல்சான்றிரே மற்றும் யாது நம் ஊர் நாடக நிகழ்வும் இவ்விடைவெளியில் ஆசுவாசமளித்தது.<br /><br />திரைத்துறையில் உதவி இயக்குநராக ஒப்பேற்றிக் கொண்டிருந்த நாளில், பூபதி அண்ணனிடமிருந்து நடிக்க ஒருமுறை அழைப்பு வந்தது. அப்போதோ என் சிறகுகள் இயக்குநர் மிஷ்கினின் வசமிருந்த மாரிக்காலம். சினிமா வேலை விஸ்வரூபமெடுத்து பெருஞ்சுவராய் என்னை சிறை பிடித்திருந்தது. உடலெங்கும் பரவும் நடுக்கத்துடன் பூபதி அண்ணனின் அழைப்பை மறுதலிக்கும் நாவினை சினிமா வளர்த்திருந்தது (இதே நாவால் எத்தனையோ முறை வெவ்வேறு காலகட்டத்தில் அண்ணனிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட நச்சரித்ததுண்டு). அடுத்த நாடகத்திலாவது நடிக்க வரவேண்டும் இல்லையென்றால் எப்போதும் அவர் நடிக்க முடியாது என்று சொல்லி வைத்து விட்டார். பெருங்குற்ற உணர்ச்சியுடன், இந்த பாரத்தை சுமந்தபடி பழைய சோர்வான வாழ்க்கை தொடர்ந்தது.<br /><br />நந்தலாலா படம் முடிவடைந்த பிறகு அறுவை சிகிச்சை காரணமாக நீண்ட ஓய்விலிருந்தேன். அப்போது அடுத்த நாடகத்திற்கான அழைப்பு அண்ணனிடம் இருந்து வந்தது. திட்டவட்டமாக இன்ன நாள் ஒத்திகை துவங்கும் என தீர்மானமாகாத நிலையில் இந்தமுறை வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனாலேயே, உடல்நிலை தேறிய பிறகும், மீண்டும் சினிமாவின் புதிர்வட்டப்பாதைக்குள் நுழைய தயங்கி ஒதுங்கி நின்றேன்.<br /><br />கிட்டத்திட்ட முழு வருடம் எந்த கணம் அண்ணன் கூப்பிட்டாலும், கிளம்பத் தயாராகவே காத்திருந்தேன். இடையில் நண்பன் ஸ்ரீஜித்தின் என்.ராமாயணம், ஒரு கவிதை வாசிப்பு மற்றும் அ.மங்கையின் பல்சான்றீரே’, ‘யாது நம் ஊர்’ ஆகிய நாடகங்களில் நடிக்க முடிந்தது மேலும் புதுரத்தம் பாய்ச்சி நம்பிக்கையுடன் காத்திருப்பை அர்த்தமாக்கியது ஒருவகையில் மிக ஆறுதலாக இருந்தது. எப்படியோ பொருளாதார சிக்கலையும் ஒருவாறாக சமாளித்து கோரப்பசியோடே காத்திருந்தேன்.<br /><br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvBk1nBMl1mUOJGJQmvZ3tBIkx6VtHmdyHaPxVK-0i1bVxFQr_dAm8-yZx2tnaTP8cEFIzK3WOpEtMwhGTigHd3_paMlbpcBtz-I-g1Ri-UCdXSVlpsoRzRIEO8AWgBTXMMb0P/s1600/Vid4.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvBk1nBMl1mUOJGJQmvZ3tBIkx6VtHmdyHaPxVK-0i1bVxFQr_dAm8-yZx2tnaTP8cEFIzK3WOpEtMwhGTigHd3_paMlbpcBtz-I-g1Ri-UCdXSVlpsoRzRIEO8AWgBTXMMb0P/s400/Vid4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505622561858631778" /></a><br /><br />பல வருட தவப்பயனாக பூபதி அண்ணனில் நாடக நிலத்தில் கால் பதிக்கும் அரிய நாள் கடந்த மே மாத இறுதியில் அமைந்தது. சிலிர்ப்புடன் அந்த நொடிகளில் உடலின் மொத்த கணத்தை உணர்ந்தும், உடலை மறந்து இறகாகவும் பறந்தேன். கோவில்பட்டி, இந்திரா நகரிலுள்ள அந்தவீட்டை அடைந்த போது அமானுஷ்யமானதும், புராதனமுமான வனதேவதையின் கூட்டினை எட்டிப்பார்க்கும் சிலிர்ப்பு. மானசீகமாக மண்டியிட்டு ஒத்திகை நிலத்தை இதயக்கரம் கூப்பி மண்டியிட்டு வணங்கினேன். இதுவரை முட்டி முனகி ஒரு 6, 7 நாடகங்களில் நடித்திருந்த போதும், எப்போதும் என் மூளைக்குள் உதிக்காத மாண்பு கோவில்பட்டி நாடகநிலத்தில் என்னை மீறி இவ்வாறு கிளர்ந்தது.<br /><br />ஒத்திகை நிலத்தில் அமர்ந்து இரண்டுமுறை ஒரேமூச்சில் ‘மிருக விதூஷகம்’ நாடகப் பிரதியை வாசித்து முடித்தேன். பிரமிப்பு மட்டும் இன்னும் நீங்கவில்லை. இது நானே தானா? எனக்கேதான் இது வாய்த்துவிட்டதா? நானே தான் பூபதி அண்ணனின் நாடகநிலத்தில் ஒரு நடிகையாகிவிட்டேனா? இவ்வொத்திகை நிலத்தில் நடிகை என்ற அங்கீகாரத்துடன் அமர்ந்திருக்கும் இவ்வுடல் எனதே தானா? இக்குறுகுறுப்புடனே முதல் ஒத்திகைக்காக காத்திருந்தேன்.<br /><br />நாடகத்தில் நான் பங்கேற்கும் 2 காட்சிகள் நீங்கலாக மீதமுள்ள 11 காட்சிகளும் கடின ஒத்திகையுடன் முழுநாடக வடிவத்துடன் தயாராகவே இருந்தது. எனவே அன்று எனது முதல்நாள் ஒத்திகை எனக்கான ஒத்திகையாகவே இருந்தது.<br /><br />எனது entry அரைமண்டியில் நடந்துவந்து 6 நிமிடங்கள் தொடர்ந்து அதே நிலையில் நிகழ்த்த வடிவமைக்கப்பட்டது. மனதிற்கு ஆசையாக இனிய சவாலாக இருந்த போதும், முழுவருடமும் கடின உழைப்பு மறந்த எனது ப்ரேத உடல், நிகழ்விற்கு ஒத்துழைக்க மறுத்து அடம்பிடித்தது. கால்வலியில் நிற்கவும் கூடாமல் உடல் தடுமாறத் துவங்கியது. சிலசமயம் நாடகத்தில் இது மாதிரியான தர்மசங்கடமான சூழலில் சமாளிக்கும் வல்லமை (will power) இயல்பாகவே வந்துவிடும். அப்படியொரு பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளும் சக்திகூட இன்றி பாதியில் கைவிடுமாறு என் நிலை இருந்தது.<br /><br />உடல் ஒத்துழைக்க மறுத்ததைவிட பூபதி அண்ணனுக்கு என் மேல் அதிருப்தி வந்துவிடுமோ என்ற பயம் (இதையெல்லாம் கடந்த ஓர் உன்னதமான இடத்தில் அவர் இருக்கிறார் என்பதை பின்னாளில் உணர்ந்து கொண்டேன்). இயலாமையும், அலைக்கழிப்பிற்கும் என்னை தின்னக்கொடுத்து தள்ளிநின்றேன். முதுகலை வருடங்களில் நல்ல நணபனாய் இருந்த விஜி இந்நாடகத்தில் இருந்தான். பூபதி அண்ணனுடைய பிரதியில் இது அவனுக்கு 7வது நாடக அனுபவம். நான் வந்து சேர்த்த நாளில் வேறொரு நாடகத்திற்காக தவிர்க்க முடியாத சூழலில் தஞ்சையிலிருந்தான். அவனிடம் தொலைபேசியில் இயலாமையை பகிர்ந்து கொண்டது கொஞ்சம் உதவியது.<br /><br />சில நாட்கள் தொடர் ஒத்திக்கைப்பிறகு கொஞ்சம் உடல் பழகிவிட்டாலும் சரியான நடிப்பை கொடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். விஜி திரும்பி வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எனக்கிருந்து வெகு குறைந்த நல்ல நட்பில் விஜி தவிர்க்க முடியாத சகோதரன். ஆனால், சென்னை வந்தபின் எல்லாம் தொலைவோடிப்போனது. இந்த ஒத்திகை சமயங்களில் இடைப்பட்ட வருடத்தில் இழந்த நட்பின் நேசத்தையும், பகிர்வையும் தக்க வைத்துக் கொண்ட கணத்தை கண்ணீருடன் தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே.<br /><br />நாளுக்குள் நாள் மனச்சோர்விற்கு ஆளாகி என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இழந்துவிட்டேன். என் இருப்பின் மேல் வெறுப்புற்று தவித்தேன். அப்படி செய், இப்படி செய்யாதே என எதாவது சொல்லி சரிசெய்வார் என்று எதிர்பார்த்த பூபதி அண்ணனும் கருணை மறுத்து என்னிடம் தொடர்ந்து மவுனியாக இருந்தார். என் வேதனையும், ஆற்றாமையுமே என்னை சரிசெய்துவிடுமென தீவிரமாக அவர் நம்பியிருக்கக் கூடும். அலைக்கழிப்பும், நடுக்கமும் நாடகநிலத்தின் முன் என்னை ஒப்புக்கொடுத்து தொடர்ந்து மன்றாடச் செய்தது.<br /><br />உள்ளதே ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் நாடகத்தில் எனக்கு அதிக வேலையில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் உறுத்திக்கொண்டேயிருந்தது. மரபான நாட்டியக் கலையில் நவீனத்தை இணைத்து உடல்களை உடலிகளாக மேடையில் புகுத்தி வலிமையான, அழகான நடனக்கலையை வளர்ததவர் மறைந்த சந்திரலேகா. நாடக நிலத்தில் ஆண்/பெண் என்ற பார்வை உடைந்து வெறும் உடலியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டுமென்பது என் ஆசை. பூபதி அண்ணனுக்கும் இதே நிலைப்பாடுதான் என்பதை அறிவேன். இந்த எதிர்ப்பார்ப்போடு இருந்த எனக்கு சக நடிகர்களோடு சக உடலியாக ஊடாடும் வாய்ப்பில்லாதது சற்று ஏமாற்றமாகவெ இருந்தது. எனது பகுதியே கிட்டத்தட்ட solo performance போல் தனித்து விடப்பட்டது எனது தேடலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. அ.மங்கை “நடிப்பு என்பது பார்வையாளர்களுக்காக கிடையாது, சக நடிகர்களுக்காக” என்று சொல்வதுண்டு். ஒருவேளை அப்படியொரு சக நடிப்பு உடலுடன் ஊடாடும் வாய்ப்பில்லாததே எனக்கு தொந்தரவாக இருந்திருக்குமென நினைக்கிறேன்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJwEUO5k8nlSh-HumT3Gts3NDZbTkqmH3MOAAgsbnZN6zPqFLY70V9aLpFW4rsEugo8hKcJQzNGJMhAyaYurXRJWUdtChWmqITZOKJAKkLctYCas7UZPuecCkqsb_VSrrwAPOt/s1600/vid2.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJwEUO5k8nlSh-HumT3Gts3NDZbTkqmH3MOAAgsbnZN6zPqFLY70V9aLpFW4rsEugo8hKcJQzNGJMhAyaYurXRJWUdtChWmqITZOKJAKkLctYCas7UZPuecCkqsb_VSrrwAPOt/s400/vid2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505622822809815538" /></a><br /><br />நிம்மதியிழந்த எனதாத்மாவும் விஜியின் நட்பும், ஓவியர் பேய்காமனின் அறிமுகமும் கொஞ்சம் அருள் தந்து காப்பாற்றியது. விஜி மற்றும் பேய்க்காமனின் வழியாக நிலம் என்னிடம் கோபம் காட்டி, அன்பு கூட்டி மெல்ல மெல்ல நாடக வெளியில் என்னை சரிசெய்தது.<br /><br />எனது கல்லூரி நாட்களின் போது அண்ணன் தனது உறவினர் மகள்கள் இருவரை ஒவ்வொரு வயதிலுமாக குழந்தை பருவம் முதல் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியதை அறிவேன். அதில் சில புகைப்படங்களையும் நான் பார்த்தது வியந்ததுண்டு. அதனாலேயே குறிப்பிட்ட அவ்விரு சிறுமிகள் மீது ஒரு தனிப்பாசம் இருந்தது. அந்த புகைப்படத்தில் மலர்ந்த குட்டி தேவதைகளில் ஒருவர் ப்ரியா இன்று கல்லூரி மாணவி. அவரும் அவரது சகோதரி சத்யா இருவரும் (பூபதி அண்ணனின் அக்கா குழந்தைகள்) நடிகர்களுக்கு சமையல் செய்வதற்காக தினமும் வருவார்கள். பாசமும், இளகிய மனசும் அந்த வீட்டுப் பெண்களின் குடும்பச்சொத்துப் போல. அழகான பெண்கள், அவர்களுடன் கொஞ்ச நேரம் புழங்க முடிந்தது 15 ஆண் நடிகர்கள் மத்தியில் ஒற்றை பெண்ணாக இருந்த என் தனிமைக்கு தேவையாய் இருந்தது.<br /><br />நாடக அரங்கேற்றத்திற்கு இறுதி ஒரு வாரம் முன்பு, குறுமலை கிராமத்தில் ஒரு புராதன அய்யனார் கோயிலில் தேசாந்திரிகளாக தங்கியிருந்து ஒத்திகை பார்த்தோம். தமிழக பெண்களுக்கு எளிதில் கிடைத்து விட முடியாது அற்புத அனுபவம். விழுது தொங்கும் ஆலமரங்கள் (எனது முதல் வசனத்தின் ஒரு பகுதியும் கூட) சூழ நடுவில் ஒத்திகை நிலம் அமைத்து மயிலும், நாயும், மாடும், இன்ன பிற பட்சிக்கூட்டத்திற்கும், பூச்சி இனத்திற்கும் மத்தியில், அவர்கள் நிலத்தில் நாடகம் பழகி்னோம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அந்த வாழ்க்கையில் பெண்ணான எனக்கு சில அசௌகர்யங்கள் இல்லாமலும் இல்லை.<br /><br />வழக்கமாக காலை வெயில் வருமுன் ஒரு ஒத்திகை, மாலை இருள் வருவதற்கு முன்பு ஒரு ஒத்திகை பார்ப்பது எங்கள் வழக்கம். நிலத்தில் ஒத்திகை முடிந்ததும் அசதியும், புழுதியுமாக உடல் புழுங்கிக் கொண்டிருக்கும். குளிப்பதற்கு அங்கே அறை வசதி கிடையாது. நாங்கள் தங்கியிருந்த கோயிலுக்கும், நாடக நிலத்திற்கும் நடுவில் அழகான, அளவான தாமரைக் குளமொன்று கம்பீரமாக இருந்தது. ஒத்திகை முடிந்ததும் நடிகர்கள் அனைவரும் குளிக்க அங்கே சென்றுவிடுவார்கள். அந்த திறந்தவெளியில் என்னால் குளிக்க முடியாது. எனவே அதே அசதியோடும், வியர்வையோடும் மாலை ஒத்திகையையும் முடித்துவிட்டு, மீண்டும் நடிகர்கள் குளிக்க காத்திருப்பேன். கடின உழைப்பிற்கு பிறகு குதூகலமாய் குளித்ததில் நீந்திக் குளிக்கும் யாருக்குத்தான் வெளியேற மனம் வரும்.<br /><br />நல்ல கும்மிருட்டில் 8 மணி சுமாரில் நண்பர்கள், விஜி மற்றும் பேய் காமன் காவல் தெய்வங்களாய் குளக்கரையில் இசையுடன் அளவளாவிக் கொண்டிருக்க நான் அரைகுறையாக குளித்துக் கொள்வேன். அந்தக் குளத்திற்கு மேலும் இரண்டு கரைகள் இருந்ததால் பதற்றத்துடனே அவசர அவசரமாக துவைத்துக் குளித்து கரையேர வேண்டியிருக்கும். மாலதி மைத்ரியின் கவிதை ஒன்றில் ஒரு பெண்ணுடல் கிராம மனிதர்கள் அனைவரும் திருவிழா கொண்டாட்டத்திற்காக கோயிலில் குழுமியிருக்க, ஆளரவமற்ற ஊர்க்குளத்தில் அந்த பெண்ணுடல் முதன்முதலாக நிர்வாணமாக குளிக்கும் அனுபவத்தை எழுதியிருப்பார். ஒவ்வொரு இரவு குளியலிலும் அந்த கவிதை மட்டும் எனக்கு துணையாக என்னுடன் அமைதியாக குளித்துக் கொண்டிருந்தது. இது போன்ற சிறுசிறு பெண்ணுடல் சார்ந்த புறச்சிக்கல்கள் சில இருந்த போதும், விஜி மற்றும் பேய்க்காமனின் நட்பின் நேசக்கரம் அந்த இயற்கை சூழலையும், நாடக வெளியையும் ரசிக்க உதவியது மறக்க முடியாதது.<br /><br />****<br /><br />எது போதவில்லை, எது குறைகிறது என்று புரியாமலேயே மதுரை நிகழ்விற்கு சக நடிகர்களுடன் தயாரானேன். நாடக உடையும், இசையும், ஒளியும், காலகாலமாக கலைஞர்களின் வேர்வை பாவிய காந்தி ம்யூசியத்தின் திறந்த வெளி அரங்கமும் அவற்றிற்கேயுரிய இயல்புடன், ஒரு நடிகையாக என்னைத் தாங்க கொஞ்சம் ஒப்பேற்றினேன். தொடர்ந்து திருவண்ணாமலை நிகழ்வுகளிலும் அதே நிலை. என் உடல் மட்டுமன்றி என் குரலும் ஆரம்பம் முதல் எனக்கு தொடர்ந்து பாதகமாகவே இருந்து படுத்தியது. இன்னமும் நாடகத்தை புரிந்து கொள்ளமுடியாத எனக்கு சென்னை, ஸ்பேசஸ் அரங்கம் மேலும் என் சவாலை சிக்கலாக்கியது.<br /><br />நாட்டிய தேவதை சந்திரலேகாவின் அபிநயங்களும், பாதமும் பரவிய அந்த வளாகமும், தன்னிகரல்லா அக்கலைமகளின் மூச்சும், பயிற்சியும் தங்கிவிட்ட ஸ்பேசஸ் மேடையும் எனக்கு பலநாள் ஆதர்ஷ நிலம். ஏற்கனவே அந்நிலத்தில் ஸ்ரீஜித் புண்ணியத்தில் ஒருமுறை கால்பதித்திருந்த போதும். இது special. சந்திரலேகாவின் மேடையில், பூபதி அண்ணனின் நாடகம், அதில்நான் நடிகை என்பது எப்பேர்ப்பட்ட விடுதலையுணர்விற்கும் இணையானது.<br /><br />முந்தைய நிகழ்வுகளை விட கூடுதல் சிறப்பாக இந்த நாடக நிலத்தில் மறைந்த சந்திரலேகாவும் ஆலமரமாய் விழுது தொங்க எங்களுடன் நிகழ்வில் பங்கேற்றார். அம்மூதாயின் அரவணைப்பு எல்லா நடிகர்களுக்கும் கிடை<a href="http://lumpini.in/a_punaivu-018.html"></a>த்ததைப் போலவே பாரபட்சமின்றி எனக்கும் கிடைத்தது. எந்த சிக்கலும் இன்றி என் பணியை அவள் பார்வையில் செய்து முடித்தேன்.<br /><br />கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுதும் பூபதி அண்ணனின் நிழலில் கோணங்கி அண்ணனின் பார்வையில் விஜி-பேய்காமனின் நட்பில் சக நடிகர்களின் அருகாமையில் இருந்தது, கோவில்பட்டி முதல் குறுமலை, மதுரை, திருவண்ணாமலை, சென்னை வரை பயணம் செய்து நாடகம் செய்தது இத்தனை வருட காத்திருப்பின் பலனாக இருந்தது. எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது மனதிற்குள் ஏதோவொரு குறை அரித்துக்கொண்டிருக்க அயர்ச்சியுடனே நாடக வெளிக்கு மனமின்றி விடைகொடுத்தேன்.<br /><br />சென்னை வீட்டிற்கு திரும்பிவந்த பின்புதான் எனக்கு உண்மையான நடிப்பு தாகமே ஆரம்பித்தாகவே உணர்கிறேன். ஒரு மாத ஒத்திகை, சக நடிகர்களின் சுவாசம், உழைப்பு, நட்பு, கோணங்கி அண்ணன், அப்பா, ப்ரியா-சத்யா, கோடங்கி அண்ணன், விஜி, பேய்க்காமன் எல்லாமே நாளுக்கு நாள் ஏக்கத்தையே தொடர்ந்து விதைத்துக் கொண்டிருந்தன. வீட்டில் இருப்புக் கொள்ளாமல் கொஞ்சம் ஓவிய வெளியில் பயணம் செய்து என் ஆவலை அடக்கிக் கொண்டிருந்தேன்.<br /><br />மீண்டும் பாண்டிச்சேரி நாடக நிகழ்விற்காக கோவில்பட்டி சென்ற போது தான் மீண்டு வந்ததாக உணர்ந்தேன். இந்த முறையும் ஒத்திகையில் அதிக ஆற்றலுடன் உழைக்க முடியாத போதும் பழைய ஆற்றாமையோ பயமோ என்னிடம் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது. ஏதோவொரு உந்து சக்தி எனக்கு நம்பிக்கை கொடுத்ததை இந்தமுறை தீர்க்கமாக உணரமுடிந்தது. ஒத்திகை முடிந்து புதுவையில் எங்கள் நாடக மேடையை அடைந்த போதும் கூட வழக்கமாக அரங்கேற்றத்தின் போது நம்பிக்கையின்மையால் ஏற்படும் நடுக்கம் இந்த முறை அறவே இல்லாமல் இருந்தது.<br /><br />இந்த முறை நிகழ்விற்கு முன்பு நாடக நடிகர்களுக்கு செம்மண் குழைத்து உடலிலெங்கும் அரிதாரம் பூசுவதாக ஏற்பாடாகியிருந்தது. நடிகர்களுக்கு மட்டும். எனக்குரிய costume போட்டு தயாராகி நிற்கிறேன் புதிதாக ஒன்று என்னை தொந்தரவு செய்கிறது. ஏன் இது நடிகர்களுக்கு மட்டும் என்று கேள்வி, சரி பிரதியின்படி அவர்கள் கோமாளிகள் அவர்களுக்கு அரிதாரம் தேவை அது செம்மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது எனது பாத்திரத்திற்கு அது அவசியம் இல்லாமல் இருக்கலாம் என்று சுயசமாதானம் செய்து கொள்கிறேன். ஆனாலும் இருப்பு கொள்ளவில்லை.<br /><br />வழக்கமாக எனது காட்சி வரும் வரையிலும் எனக்கு சில பின்னரங்க பணிகளிருக்கும். நாடகம் துவங்கி 4 காட்சிகள் முடிந்து விட்டது, இன்னும் இரண்டு காட்சிகள் கழித்து எனக்கு வேலை நேரம் வந்துவிடும். அந்த செம்மண் குழைவின் நினைவு என்னை ஆக்கிரமித்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. அண்ண்னிடம் அனுமதி கேட்டு நானும் செம்மண் பூசிக்கொள்ளலாமா (கேட்பது சரியா என்ற குழப்பம்), அப்படியே கேட்க நினைத்தாலும் அதற்கான சூழலுமில்லை.<br /><br />எதையும் யோசிக்காமல் அந்த பின்னரங்க இருளில் செம்மண் குழவை இருந்த பாத்திரத்தைத் தேடி கால்களிலும், கைகளிலும் சிறு சிறு வரிகளிட்ட பின் தான் ஒருவாறு மனக்குதிரை ஓய்ந்து நின்றது. இப்போது என் காட்சிக்கான நேரம் (Its show time babe; and I did it). என்னை நானே வியந்து கொண்டிருந்தேன். வழக்கமாக நான் செய்யும் movements தான் ஆனால் இம்முறை உயிர்ப்புடன் இருந்தது. அதன் பிரதிபலிப்பை பார்வையாளர்களிடம் காண முடிந்தது. நான்கு அரங்கேற்றத்தில் முதல்முறையாக நான் மேடையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் என்னால் இதயத்தை வருடுகிறது. இறுதி காட்சியிலும் நாடகநிலத்தில் நின்று உயிர்ப்புடன், உத்வேகத்துடன் எனது பணியை செய்து கொண்டிருந்தேன். அப்பாடா, இதைத்தான் இந்த அனுபவத்தை தான் இத்தனை காலம் தேடிக்கொண்டிருந்தேன். நாடகம் முடிந்து பார்வையாளர்கள் பாராட்டிய போது வழக்கமான குற்றவுணர்வின்றி பெருமிதம் இருந்தது. இந்தமுறை அனைவரும் என் குரலையும் சிறப்பாக, boldஆக இருந்ததாக சொன்னதும் உண்மையிலேயே சந்தோசமாகத்தான் இருந்தது.<br /><br />எல்லாம் முடிந்து் வெளியேறாத கண்ணீருடன் நண்பர்கள் விஜி மற்றும் பேய்க்காமனின் ஆதரவான அரவணைப்பிற்காக காத்திருந்து.., காத்திருந்தேன். வழக்கமாக என்னை அதிகம் விமர்சிப்பதும், அதிகம் ஊக்குவிப்பதும் இவ்விருவரே. இம்முறை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செய்ததாக உணர்கிறேன் ஆனால், எப்போதும் நிகழ்வு முடிந்ததும் அரவணைத்து வாழ்த்து சொல்லும் இருவரும் இம்முறை அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு சக நடிகர்களுக்கு மட்டும் வெற்றியை பரிமாறிக்கொண்டிருந்தது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5XNM7H7wtkHJ-PL0C0fMV4FiqNRPs7qbBte1HLTah7qwmQk7VBm7slg-wzuYFzvtBMs_dvMdXMokOfd48HMvhRTm-b3xgjmaErPEJftQ6ozgx1ER4dGdK5c7JSVZjEK8Uhree/s1600/vid3.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5XNM7H7wtkHJ-PL0C0fMV4FiqNRPs7qbBte1HLTah7qwmQk7VBm7slg-wzuYFzvtBMs_dvMdXMokOfd48HMvhRTm-b3xgjmaErPEJftQ6ozgx1ER4dGdK5c7JSVZjEK8Uhree/s400/vid3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505623062955318866" /></a><br /><br />நிகழ்வு முடிந்து வழக்கமாக செய்து முடிக்கும் வேலைகளை ஒருங்கு செய்துவிட்டு தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மானசீகமாக பலருக்கு நன்றியை பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்த பட்டியலில் கோவில்பட்டி மற்றும் குறுமலை நாடக நிலம், பூபதி அண்ணன், கோணங்கி அண்ணன், விஜி, பேய்க்காமன், சக நடிகர்கள், சத்யா, ப்ரியா, என் அம்மா வீரம்மாள், அக்கா ராதா, நண்பர் ரூபன் பால் நத்தானியல், என்னுடல், என் கண்ணீர், என் வலிகள் எல்லாமே அடங்கும். முதன்முறையாக தன் கன்னித்தன்மைக்கு விடைகொடுக்கும் பெண் தன் உடலின் பரிபூரணத்தை உணரும் திருப்தியையும், மனஅமைதியையும் அன்றைய நாடக நிகழ்வு முடிந்த போது நானடைந்தேன். இன்னும் அந்த சாந்தம் என்னுள் ஒட்டிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.<br /><br />இறுதியாக பூபதி அண்ணனின் பித்த நிலம் எனக்கு துடிவரம் தந்துவிட்டதாக உணர்கிறேன். இனி வெறிகொண்டு் வாசிக்கவும், கலைக்குள் இயங்கவும் தீர்மானித்துள்ளேன். அற்பக் காரணங்களுக்கெல்லாம் தளர்வடைந்து போகும் இயல்புடைய எனக்கு இப்பித்தநிலம் மீட்டுத்தந்த சகோதர நேசமும், நட்பின் உத்வேகமும், காதலின் வனப்பூவும் தொடர்ந்து உற்சாகமும் உந்துதலும் தந்துகாக்க வேண்டுமென்று பிரபஞ்ச நாடக நிலத்தை வேண்டிக்கொள்கிறேன்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDCR0BDx-L0EhalRzQN4XBXMQsnd0ZRwoBtIvrTc5EYyxblNvuzghEb8SmKpkg-xmcFCHLUwlSid5vIUJ_JRz5ufFYhpdXT6NsEmO1zd-wJYR0BOz-1uGw5u9zApZEAMhAbWC9/s1600/boopathy.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgDCR0BDx-L0EhalRzQN4XBXMQsnd0ZRwoBtIvrTc5EYyxblNvuzghEb8SmKpkg-xmcFCHLUwlSid5vIUJ_JRz5ufFYhpdXT6NsEmO1zd-wJYR0BOz-1uGw5u9zApZEAMhAbWC9/s400/boopathy.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505623236663170594" /></a><br /><br />பி.கு. எனது அனுபத்தைப் பகிர்ந்து கொண்ட <a href="http://lumpini.in/a_punaivu-018.html">லுன்பினி</a>க்கு நன்றி.லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-28180212.post-25333891563007537532010-06-03T19:29:00.000+05:302010-06-03T19:31:52.689+05:30மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010<span class="magazine"> ப</span>ல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. சாதியத்தை எதிர்ப்பவர்கள், விரும்புபவர்கள் உட்பட பலரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்க, அரசோ திட்டமிட்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்காமல் மெத்தனமாக உள்ளது. சாதிக்கென தனிக் கணக்கெடுப்பு எடுக்கப்படுவதாக ஒரு சமாளிப்புக் கதையையும் சொல்கிறது. எதுக்கு இப்ப ஒரு கணக்கெடுப்பு ஒரு வருஷம் கழிச்சு இன்னொரு கணக்கெடுப்போ? (தண்டச்செலவு) புரியல.<br /><br /><br />இது குறித்து விவாதிக்கவும், போராடவும் பல தோழர்கள் உண்டு. இதில் வேறொரு பக்கத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. <br /><br /><br />திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் உதவுதல் போன்ற விஷயங்களில் தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இத்தகைய உதவிகளை குறித்து யோசித்து பார்த்தால் இது திருநங்கைகளின் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறமுடியாது. தெளிவாக சொல்வதென்றால் இத்தகைய முயற்சிகள் திருநங்கைகள் வெறும் சலுகைகளை எதிர்பார்த்து பிச்சை பாத்திரம் ஏந்துபவர்களாக வைத்திருக்க மட்டுமே இவை உதவுக்கூடும்.<br /><br /><br />குடும்ப ஆதரவு இன்றி வாழும் திருநங்கைகள் தன்னிறைவு பெற்றவர்களாக வாழ அவர்கள் சுயசார்புடையவர்களாக இருப்பது மட்டுமே அவசியம். பிச்சையும், பாலியல் தொழிலும், தொண்டு நிறுவன மூலம் எய்ட்ஸ் நிதி பெறுவது எல்லாம் இன்றைய தலைமுறை நங்கைகளுக்கு போதுமானதாக இருக்கலாம்.<br /><br /><br />ஆனால் இளையதலைமுறை திருநங்கைகளோ தன்னிறைவோடும், அதே சமயம் கண்ணியமாக எல்லா துறையிலும் தடம்பதித்து வாழவே ஆர்வமாய் உள்ளனர். அதற்கு வெறும் சலுகைப் பாத்திரங்கள் போதுமானதாக இருக்காது.<br /><br /><br />மருத்துவரீதியாகவும், உளவியல்ரீதியாகவும், மனித உரிமை சார்ந்தும் திருநங்கைகள் குறித்து புரிதலும், பரிவும் தமிழ் சமூகத்தில், இந்தியாவிலும் ஓரளவு வளர்ந்துள்ளது. இம்மாற்றம் திருநங்கைகளின் நிதர்சன வாழ்வை மெய்யாகவே மாற்ற திருநங்கைகள் கணக்கெடுப்பு அவசியம். எண்ணிக்கை அடிப்படையில் ஆண்டாண்டாய் மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பெற மிக அவசியமான ஆயுதம் இக்கணக்கெடுப்பு. <br /><br /><br />சில மாதங்களுக்கு முன்பு கணக்கெடுப்பில் திருநங்கைகளை others என்ற பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பளிக்கப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. சகமனிதர்களான திருநங்கைகளை விலங்கினத்தைப் போல குறிப்பிடும் இவ்வநாகரீகத்தை கண்டித்து பல திருநங்கைகள் பல்வேறு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். <br /><br /><br />இப்போது அதுவுமின்றி, கணெக்கெடுப்பு படிவத்தில் ஆண்/பெண் இருபாலினம் மட்டுமே உள்ளது. மேலும், திருநங்கைகளை ஆண்கள் பட்டியலில் சேர்க்கச் சொல்லியும் ஏற்பாடாகியுள்ளது. இத்தனை போராட்டங்கள், விழிப்புணர்வுகள், முயற்சிகளுக்குப் பிறகும் அரசின் இச்செயல் மிகவும் ஆபத்தானது. <br /><br />தமிழக முதல்வர் கணக்கெடுப்பில் திருநங்கைகளையும் கணக்கிலெடுக்கக் கூறி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அர்த்தம் பொருள் திருநங்களை அவர்களுக்குரிய பாலின அடையாளத்தோடா அல்லது வெறும் பத்தோடு பதினொன்றாக எண்ணிக்கைக்கு மட்டும் சேர்த்துக் கொள்ளச் சொன்னதா என்று புரியவில்லை. ஆனால் இது மத்திய அரசின் முடிவு என்று சொல்லிவிட முடியாது. <br /><br /><br />காரணம் சமீபத்தில் நடந்த திருநங்கைகளின் கலந்துரையாடலில் திருநங்கைகள் நலவாரிய பிரதிநிதிகள் ஜீவா, ப்ரியா பாபு இருவரும், மற்ற திருநங்கைகளிடம் இக்கணக்கெடுப்பில் ஆண்கள் என்ற கணக்கில் திருநங்கைகள் பதிவு செய்யலாம் என்றும். திருநங்கைகளுக்கென வெறொரு கணக்கெடுப்பு அடுத்த 2011ல் நடைபெறும் என்றும் இப்போது யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும் அறியுறுத்தியுள்ளார்கள்.<br /><br /><br />இப்படியிருக்க, எனது நண்பரும், பாலியல் சிறுபாண்மையினர் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக போராளி ஸ்ரீஜித் தனது சொந்த முயற்சியில் கணக்கெடுப்பு சார்ந்த அதிகாரியிடம் புகார் கொடுத்தப் பொழுது ”எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணை திருநங்கைகளை ஆண் என்று சேர்ப்பது என்பது தான். மேலும் இது குறித்து எந்த திருநங்கைகளும் இது குறித்து எந்த திருநங்கைகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை” என்று பதிலளித்துள்ளார்.<br /><br /><br />கேரளா வசம் இருக்கும் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இஙக இருந்தா மட்டும் blog செய்வதை விட வேறென்ன செய்துவிட முடியும்.<br /><br />எனது கேள்வி திருநங்கைகளுக்கு சலுகைகள் செய்ய தயாராய் இருக்கும் அரசு அவர்களின் வேலைவாய்ப்பிற்கு மட்டும் எந்த வாய்ப்பும் தராததேன்? அல்லது அதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தாததேன்? ப்ரியா பாபு போன்ற முன்னோடி திருநங்கை போராளிகள் எதற்காக திருநங்கைகள் நலனுக்கு போராடுவதை கைவிட்டு அரசுக்கு கைகட்டி நிற்க வேண்டாம். இத்தனை நாள் உங்களை நாங்கள் முன்னோடியாக ஏற்று நலவாரியத்தில் திருநங்கைகள் நலனுக்காக பங்காற்றுவீர்கள் என்ற நம்பிக்கைக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்?லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-28180212.post-29258490731939124492010-06-02T22:53:00.007+05:302010-08-15T18:48:56.588+05:30மிருக விதூஷகம் - நாடக அழைப்பிதழ்<span class="magazine"> ம </span>ணல் மகுடி வழங்கும்<br /><br /><br /><br /><br /><br /><br /><span style="font-weight:bold;"> மிருக விதூஷகம்<br /><br /><br />நாள் - இடம் - நேரம்</span><br /><br />ஜீன் 10 (வியாழன்) குருமலை – கோவில் பட்டி மாலை 6 மணி<br />ஜீன் 12 (சனி) காந்தி ம்யூசியம் – மதுரை மாலை 6 மணி<br />ஜீன் 13 (ஞாயிறு) திருவண்ணாமலை மாலை 6 மணி<br />ஜீன் 14 (செவ்வாய்) ஸ்பேசஸ் – சென்னை மாலை 6 மணி<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmGBkSG7-b7faij5XCVc9D06mvFAicDmOUTqpqkSxL8xPc5Aiq2WjKtbFCs0IOlbKYt1Hv_ZSudhH9JQ6-8xbchyrvKBQroNbBiK6MPFGU74wfIkUdHeaLHY8ylgyvqQzBp82A/s1600/mruga+vithusagam+2.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmGBkSG7-b7faij5XCVc9D06mvFAicDmOUTqpqkSxL8xPc5Aiq2WjKtbFCs0IOlbKYt1Hv_ZSudhH9JQ6-8xbchyrvKBQroNbBiK6MPFGU74wfIkUdHeaLHY8ylgyvqQzBp82A/s400/mruga+vithusagam+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478230579037890162" /></a><br /><br />நாங்கள் இப்பூமியின் கோமாளிகள். உறவுகளற்ற தாய்மார்கள். எங்களுக்கு உடல்கள் இல்லை. நிலமில்லை, திசைகளுமில்லை. வனப்பறவைகளாக மிதந்தலைகிறோம். எங்களிடமிருந்த தானியங்கள் களவாடப்பட்டுவிட்டன. பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம். கோமாளி எனும் அன்னை நாங்கள். வசை மொழியினையும் காழ்ப்புணர்ச்சிகளையும் பொறாமைகளையும் கருத்துருவமான பழி வாங்குதல்களையும் கலையாக உருமாற்றுகிறோம்.<br /><br /><br />மிருகங்களிடமிருந்தும் ஜந்துக்களிடமிருந்தும் கோமாளி மொழியைக் கற்று வந்துள்ளோம். துயரக்கண்களில் அரவணைப்பைக் காண்கிறோம். துன்பத்திலிருந்து விடுபட நினைத்து மறுதுன்பத்தால் அரவணைக்கப்படுகிறோம். இப்பிரபஞ்சத்திலுள்ள பார்வையாளர்கள் தம் கண்ணீரால் இந்த விதூஷகர்களைக் காப்பாற்றுவார்கள். கலையின் மொழி கண்ணீருக்குள் அலைவுறுகிறது. <br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp1HPQNDyCrSBpCpTv_WIyvjmYR2QQa_SJO7SpfisbjSTgUjsahT-u7hNc5obExy9-WGjEzq6du2Tgt_5mKC_iTbZbMsK_vRnpVEKF6u2numWcuBxbbKWTkiZAL5jiv3wtuNXr/s1600/mruga+vithusagam+1.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp1HPQNDyCrSBpCpTv_WIyvjmYR2QQa_SJO7SpfisbjSTgUjsahT-u7hNc5obExy9-WGjEzq6du2Tgt_5mKC_iTbZbMsK_vRnpVEKF6u2numWcuBxbbKWTkiZAL5jiv3wtuNXr/s400/mruga+vithusagam+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478234529811281186" /></a><br /><br /><br />நமக்கே தெரியாமல் நமக்குள் ஊடுருவிய கேமராவின் ஜெராக்ஸ் புத்தியை சுவிங்கம் போல் கண்களால் மெல்கிறோம். குருடாக்கப்படும் முழிகண்களுடன் குழந்தைமை. எல்லோருக்கும் கட்டாயப் பரிசுகளாக்கப்பட்ட மீடியாவின் தூக்குக்கயிறுகள்.<br /><br />எங்களுக்கு பூமியுருண்டையொத்த தலை, கரிசல் காடுகளின் நிலப்பரப்பைப் போன்ற அகன்ற நெற்றி, பட்சிகளைப்போல புருவங்கள். வேடிக்கை, அடிவாங்குதல், வசை சுமத்தல் இவை எங்கள் உதிரத்தில் கலந்து விட்ட விதிகள். தனியே நாங்கள் ஒருபோதும் சிரித்ததில்லை. நிலத்தில் முகமுரசி பனை விருட்சங்களில் இமைபதித்துச் சொல்கிறோம். மிருகவிதூஷக நிலையெடுத்து நாடக நிலத்திற்கு வருகிறோம்.லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-28180212.post-5645065356962325122010-04-12T13:11:00.004+05:302010-04-12T13:29:53.324+05:30கேரளா - கோடைகால குறுகிய வேலைவாய்ப்புகடந்த ஏப்ரல் 08ல் நடந்த "பல் சான்றீரே" மற்றும் "யாது நம் ஊர்?" நாடக நிகழ்விற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!. <br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgWtfpElqvYKb4d7kYLxvpdFp009lUF4eqLfzNQPRYR4MTJkFOz2TvcT_Nq-1AX9zW3ERDgWTXVdSRT8zKCTfXOKl7KMWupWcyY9MQHYlSRGr77VA7ZgAElBJ-0bvY5pHH6wo9/s1600/46.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgWtfpElqvYKb4d7kYLxvpdFp009lUF4eqLfzNQPRYR4MTJkFOz2TvcT_Nq-1AX9zW3ERDgWTXVdSRT8zKCTfXOKl7KMWupWcyY9MQHYlSRGr77VA7ZgAElBJ-0bvY5pHH6wo9/s400/46.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459156491725487954" /></a><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1GBpFy4NWar27cQ2w87xiB0ObnFJioKmxXsyAHeJuNDuPELzifcqOonDgZ90czfXvjWeeHYokxNI5Mi-tHWW1paVGS2yRd86BM3gVf7WojAtx3voweTY0dy-GJg1Vqn2L1FV8/s1600/p2.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1GBpFy4NWar27cQ2w87xiB0ObnFJioKmxXsyAHeJuNDuPELzifcqOonDgZ90czfXvjWeeHYokxNI5Mi-tHWW1paVGS2yRd86BM3gVf7WojAtx3voweTY0dy-GJg1Vqn2L1FV8/s400/p2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459156641495818850" /></a><br /><br /><br />நேரும் வர வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக நிகழ்வின் புகைப்படங்களை <a href="http://picasaweb.google.com/aramangai/ThePlay?authkey=Gv1sRgCIChm9bb546Rbg&feat=email#">இங்கே</a> சொடுக்கி காணலாம்.<br /><br />எனது மடிக்கணினி உதவிக்காக இதுவரை கிடைக்க பெற்ற தொகை, இரண்டாயிரம் ரூபாய். உதவிய நண்பர்கள் தண்டோரா, சாலமோன் மற்றும் நிகழ்விற்கு வந்து தனது பங்களிப்பை நேரில் தந்துதவிய நண்பர் கண்பத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!. (நண்பர் கண்பத் அவர்கள் என்னை மன்னிக்கவும். அடுத்த நாடகத்திற்கான முஸ்தீபில் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை.)<br /><br />அமீரகத்திலிருந்து, பாலராஜன் கீதா அவர்கள் எனக்கு தமது சென்னை பயன்பாட்டிற்கென வைத்திருந்த மடிக்கணினியை தந்து உதவியுள்ளார். அதை சர்வீஸ் செய்து தர உதவிவரும் நண்பர் உண்மைத் தமிழனுக்கும், விவேக் அவர்களுக்கும் நன்றி!<br /><br /><br /><br />இன்று மாலை நான் கேரளாவிற்கு தற்காலிக பணிகாரணமாக செல்கிறேன். திரும்பி வர ஒருமாதத்திற்கு மேல் ஆகும். <br /><br /><br />அதற்கும் வேண்டிய தொகை சேர்ந்தால் புது கணினியில் உங்களுக்கும் பதிவிடுகிறேன். அல்லது திரு. பாலராஜன் கீதா அவர்களின் உபயத்தில் உள்ள மடிக்கணினியில் சில மாற்றங்கள் செய்து உங்களை தொடர்புகொள்கிறென்.<br /><br />தங்களின் மேலான அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பர்களே.<br /><br />கொசுறு : கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு என்ன்னுடன் சில நாட்களை கழிக்க, என்னைத் தேடி என் குடும்பத்தார் சென்னை வருகிறார்கள். என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் மேலும் மகிழ்ச்சி கொள்கிறேன்.லிவிங் ஸ்மைல்http://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.com1