<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-28180212</id><updated>2012-01-11T08:57:14.626+05:30</updated><category term='எயிட்ஸ்'/><category term='பெண்ணியம்'/><category term='போட்டி'/><category term='புத்தகம்'/><category term='புகைப்படம்'/><category term='சாருநிவேதிதா'/><category term='உதவி'/><category term='குழந்தைகள்'/><category term='விமர்சனம்'/><category term='பொது'/><category term='சுயம்'/><category term='திரைப்பட விழா'/><category term='உலக சினிமா'/><category term='கேரளா'/><category term='சிறகு'/><category term='அரசு'/><category term='நாடகம்'/><category term='மிருக விதூஷகம்'/><category term='கவிதை'/><category term='சமூகம்'/><category term='கண்டனம்'/><category term='இலக்கியம்'/><category term='முத்துக்குமார்'/><category term='ஈழம்'/><category term='பால்மாற்று சிகிச்சை'/><category term='திருநங்கைகள்'/><category term='வயித்தெரிச்சல்'/><category term='அழைப்பிதழ்'/><category term='அனுபவம்'/><category term='திருநங்கை'/><category term='திரைப்படம்'/><title type='text'>ஸ்மைல் பக்கம்</title><subtitle type='html'>திருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>104</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-7506609056067399155</id><published>2011-07-02T12:48:00.005+05:30</published><updated>2011-07-02T12:59:47.256+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>Soorppanangu Inivitation 2</title><content type='html'>Here is the English Invitation of S.Muruaga boobathy's new Tamil Play Soorppanangu.  &lt;br /&gt;&lt;br /&gt;Please cherish the moment with us&lt;br /&gt;&lt;br /&gt;Thank you &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-F-TX4l-_FmM/Tg7Hh3wqx-I/AAAAAAAAAZY/m0sJrT9de9o/s1600/soorppanangu%2B1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="http://2.bp.blogspot.com/-F-TX4l-_FmM/Tg7Hh3wqx-I/AAAAAAAAAZY/m0sJrT9de9o/s400/soorppanangu%2B1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624652369350019042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-itsPHpbK-A8/Tg7InZqpzjI/AAAAAAAAAZo/EW4akRFAtds/s1600/soorppanangu%2B2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="http://3.bp.blogspot.com/-itsPHpbK-A8/Tg7InZqpzjI/AAAAAAAAAZo/EW4akRFAtds/s400/soorppanangu%2B2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5624653563862568498" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-7506609056067399155?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/7506609056067399155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=7506609056067399155' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7506609056067399155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7506609056067399155'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2011/07/soorppanangu-inivitation-2.html' title='Soorppanangu Inivitation 2'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-F-TX4l-_FmM/Tg7Hh3wqx-I/AAAAAAAAAZY/m0sJrT9de9o/s72-c/soorppanangu%2B1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-932665090310447135</id><published>2011-06-28T13:22:00.005+05:30</published><updated>2011-06-28T13:44:55.094+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>சூர்ப்பணங்கு நாடக நிகழ்வு - அழைப்பிதழ்</title><content type='html'>சென்ற சனி மற்றும் ஞாயிறுகளில் (25, 26) சகோதரன் ஸ்ரீஜித் சுந்தரத்தின் இயக்கத்தில் பாமாவின் சிறுகதையான "மொளகாப்பொடி" நிகழ்த்தப்பட்டது. பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்ப்பும் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மரியாதைக்குரிய அண்ணன் ச. முருகபூபதியின் "சூர்ப்பணங்கு" நாடகம், அடுத்த மாதம் 10ம் தேதி, (ஜூலை 10) சென்னை, பெசன்ட் நகர், ஸ்பேசஸ்ஸில் மாலை 6.30 மணிக்கு நிகழ்த்தவுள்ளோம். தங்களின் வருகையையும் ஆதரவையும் எதிர்நோக்கி அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-XzrBva0UpP4/TgmKc4R_mHI/AAAAAAAAAZQ/N4t0ghiWeDc/s1600/soorppanangu%2B1.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://2.bp.blogspot.com/-XzrBva0UpP4/TgmKc4R_mHI/AAAAAAAAAZQ/N4t0ghiWeDc/s400/soorppanangu%2B1.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5623177838497601650" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும். மேலும் பெரிதாகப் பார்க்க மீண்டும் கிளிக் செய்யவும்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-TdHCAczqcAM/TgmJltSi_DI/AAAAAAAAAZI/NoEkdhZ2PZk/s1600/soorppanangu02.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 283px;" src="http://4.bp.blogspot.com/-TdHCAczqcAM/TgmJltSi_DI/AAAAAAAAAZI/NoEkdhZ2PZk/s400/soorppanangu02.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5623176890654325810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(அழைப்பிதழை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும். மேலும் பெரிதாகப் பார்க்க மீண்டும் கிளிக் செய்யவும்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே நாடக நிகழ்வு மதுரையில் ஜுலை 8ம் தேதி மதுரா கல்லூரியிலும், திருவண்ணாமலையில் ஜீலை 9ம் தேதி சாரோன் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-932665090310447135?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/932665090310447135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=932665090310447135' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/932665090310447135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/932665090310447135'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2011/06/blog-post_28.html' title='சூர்ப்பணங்கு நாடக நிகழ்வு - அழைப்பிதழ்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-XzrBva0UpP4/TgmKc4R_mHI/AAAAAAAAAZQ/N4t0ghiWeDc/s72-c/soorppanangu%2B1.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-2346290224847505284</id><published>2011-06-12T11:09:00.004+05:30</published><updated>2011-06-12T11:20:04.245+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>மிளகாப்பொடி</title><content type='html'>&lt;span class="magazine"&gt;எ &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ழுத்தாளர் பாமாவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான "மிளகாப்பொடி" என்னும் சிறுகதையை, சகோதரன், நண்பன் ஸ்ரீஜித்தின் இயக்கத்தில் "கட்டியக்காரிகள்" என்னும் அரங்கக்குழுவின் சார்பில் வரும் ஜூன் 25 மற்றும் 26ம் தேதிகளில் நிகழ்த்தவுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ezruzEm_sas/TfRSuRGjl8I/AAAAAAAAAY4/TqDHRt9eM3g/s1600/Final-Tamil-Poster.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/-ezruzEm_sas/TfRSuRGjl8I/AAAAAAAAAY4/TqDHRt9eM3g/s400/Final-Tamil-Poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617205590056212418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-SdaFlzFWJA0/TfRTF3KOooI/AAAAAAAAAZA/XTZl-q8K-h4/s1600/Final-English-Poster.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 283px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-SdaFlzFWJA0/TfRTF3KOooI/AAAAAAAAAZA/XTZl-q8K-h4/s400/Final-English-Poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617205995409154690" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் எனது சிறு ஓவிய முயற்சிகளையும் தங்களின் பார்வைக்காக வைத்துள்ளோம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-8JxITpVBrHc/TfRSfKwWzEI/AAAAAAAAAYw/wPPLpEMQays/s1600/Approved.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/-8JxITpVBrHc/TfRSfKwWzEI/AAAAAAAAAYw/wPPLpEMQays/s400/Approved.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617205330654448706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-2346290224847505284?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/2346290224847505284/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=2346290224847505284' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2346290224847505284'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2346290224847505284'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2011/06/blog-post_12.html' title='மிளகாப்பொடி'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ezruzEm_sas/TfRSuRGjl8I/AAAAAAAAAY4/TqDHRt9eM3g/s72-c/Final-Tamil-Poster.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-7964025650049713192</id><published>2011-06-12T10:39:00.002+05:30</published><updated>2011-06-12T11:05:35.089+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>சூர்ப்பணங்கு</title><content type='html'>&lt;span class="magazine"&gt; சூ&lt;/span&gt;ர்ப்பணங்கு&lt;br /&gt;&lt;br /&gt;எனது மரியாதைக்குரிய சகோதரர் ச.முருகபூபதி இயக்கும் புதிய நாடக ஒத்திகை நேற்று முதல் 10-06- 2011 முதல் துவங்கியது.  இம்முறை ஒத்திகையின் முதல்நாள் முதலே என்னை இணைத்துக்கொள்ள முடிந்ததில் பேருவகை கொள்கிறேன்.  ஆனபோதும்,  சகோதரன் ஸ்ரீஜித்தின் நாடகமான "மிளகாப்பொடி" ஒத்திகைக்கு இதன் பொருட்டு மட்டம் போட நேர்ந்ததில் வருத்தமே. சூர்ப்பணங்கு நாடகத்தின் பொருளடக்கம் உங்களின் பார்வைக்காக &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-KLg4U9wxG_Q/TfRP6uNipaI/AAAAAAAAAYo/xkbRFIrNMz0/s1600/SOORPPANANGU_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 287px;" src="http://3.bp.blogspot.com/-KLg4U9wxG_Q/TfRP6uNipaI/AAAAAAAAAYo/xkbRFIrNMz0/s400/SOORPPANANGU_2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617202505493685666" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-7964025650049713192?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/7964025650049713192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=7964025650049713192' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7964025650049713192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7964025650049713192'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2011/06/blog-post.html' title='சூர்ப்பணங்கு'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-KLg4U9wxG_Q/TfRP6uNipaI/AAAAAAAAAYo/xkbRFIrNMz0/s72-c/SOORPPANANGU_2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-7609976919286377930</id><published>2011-02-16T19:10:00.004+05:30</published><updated>2011-02-18T21:57:36.653+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயித்தெரிச்சல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கை'/><title type='text'>FUCK OFF  INDIAIN BUREAUCRACY</title><content type='html'>&lt;span class="magazine"&gt; பு&lt;/span&gt;றக்கணிக்கப்படுவதும், அவமானப்படுவதும், வறுமையும் என் வரலாற்றின் நிரந்தர அடையாளங்கள். நாசகர இந்தியாவில் திருநங்கையாக பிறந்ததைவிட கண்ணியமாக வாழ நினைத்திடும் திருநங்கையாக பேராசை கொண்டதன் பின்விளைவு இவை.  அதிலும் நாடக கலைஞராக வாழ்ந்திட ஏக்கம் கொண்டதன் உச்ச தண்டனையும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுநாள் வரை இந்திய அரசாங்கத்தால் மட்டுமே பரிசளிக்கப்பட்ட புறக்கணிப்பும் இதர புண்ணாக்குகளும்  இன்று பிரான்ஸ் அரசாங்கத்தாலும் வாரி வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் ஷோபா சக்தியும், இதர இலக்கிய ஆர்வலர்களும் ஆண்டுதோறும் நடத்தும் 2011 இலக்கியக்கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். France Embassy எனது VISAவை மறுத்துவிட்டது. காரணம், நான் பிரான்ஸ் சென்றபின் திரும்பி வரவேன் என்ற உத்திரவாதம் இல்லையாம்.  ( சொந்த ஊர்லயே சோத்துக்கு வழியில்ல. பிரான்ஸ்க்கு போயி கவர்னர் ஆயிருவேன்னு பயப்படுறாங்க!! )&lt;br /&gt;&lt;br /&gt;அவநம்பிக்கைக்கு அவர்கள் தரும் காரணங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;1. திருமணமாகதவள்&lt;br /&gt;&lt;br /&gt;2. குடும்பப் பிண்ணனி இல்லாதவள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நிரந்தர வருமானம் மற்றும் வேலையின்மை.&lt;br /&gt;&lt;br /&gt;4. மிகக் குறைவான வங்கிக் கணக்கு, மற்றும் என் பெயரில் குறிப்பிடும்படி சொத்து இன்மை.&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளை மனுஷியாகக்கூட பார்க்காத நாட்டில் என் திருமணம் எப்படி சாத்தியம்?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த குடும்பம் திருநங்கைகளை ஏற்றுக் கொள்ளும், என்ன படித்தும், என்ன தகுதி இருந்தும் இந்த புண்ணிய பூமியில் திருநங்கைகளுக்கு வேலை என்பது  பிச்சையும்/பாலியல் தொழிலும்தான் என்று France Embassy யார் எடுத்து சொல்வது. வேலையில்லாத நிலையில் சொத்துக்கு எங்கே போவது.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை DOCUMENTS, எத்தனை RECOMMENDATION LETTERS, எத்தனை PAPER CUTTINGS, எத்தனை PHOTOS, எத்தனை அலைக்கழிப்புகள், இன்னும் எத்தனை, எத்தனை. போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை விழா குழுவினர் ஏற்றுக் கொள்ளும் நிலையிலும், மேற்படி காரணங்களுக்காக VISA மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நேரடியாக திருநங்கைகளுக்கு VISA கிடையாது என்றே சொல்லியிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே அந்நிய தேசம் போகமுடியாததல்ல... இத்தேசம் மட்டுமன்றி அந்நிய தேசமும் என்னை புறக்கணிக்கும் நிலை, என்னை ஆற்றா கோபத்தில் இருக்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;புரிதலுக்கு நன்றி!!&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதையும் விட இப்பொழுது, இந்த நொடியில் இத்தேசத்தை ஆனமட்டும் சபிக்க விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது ஆற்றாமையில் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே சமயம் இரண்டு விசயங்களை நீஙகள்  சரியாக புரிந்துகொள்ள விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;1. சிலர் என் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது மட்டுமே காரணமல்ல என்கிறார்கள்.  இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பணவரத்து என்ற ஒன்றைதவிர, நான் மீண்டும் திரும்பி வருவேன் என்பதற்கான பல சான்று கலை தந்துள்ளேன். இயக்குநர் மிஷ்கினுடன் நந்தலாலாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து மற்றும் அவரது அடுத்த படம் சாமுராயிலும் பணிபுரிய இருப்பது என்பதற்கான சான்றுகளை அளித்துள்ளேன். அதேபோலவே இதுவரையிலான எனது நாடகப் பணிகள், இனியும் பங்காற்றவுள்ள நாடகப்பணிகள் அனைத்திற்குமான சான்றுகள். எழுத்தாளர், சமூகப் போராளி என்பதற்கான பல சான்றுகள், பரிசுகள், விருதுகள் என அனைத்தையும் தான் காட்டியுள்ளேன். கிட்டதட்ட 60, 70 டாகுமென்ட்ஸ் இருக்குமென நம்புகிறேன். இது போக எனது பொருட்செலவு அனைத்தையும் அமைப்பாளர்கள் ஏற்றுக்கொள்வதையும் காட்டியுள்ளென்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணமன்றி அவர்கள் சொல்லும் மற்ற காரணங்கள், திருமணமின்மை, குடும்பமின்மை, சொத்தின்மை.. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய தேசத்தில் இம்மூன்றும் மறுக்கப்பட்டது நான் திருநங்கை என்பது தானே காரணம். இந்தியாவில் எனக்குள்ள பணிகளையும், பல்வேறு தகுதிகளும், நான் திரும்பி வரவேண்டிய தேவையை நிறுவிய போதும், மேற்படி மூன்றினை மட்டுமே அவர்கள் கூறும் போது வேறு எது காரணமென்று கூறமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. நான் ப்ரான்ஸ் போகததில் எனக்கு வறுத்தமொன்றுமில்லை.  அதேசமயம் , என் பாலின அடையாளம் காரணமாக நிகழும் எந்த புறக்கணிப்பையும்  சகித்துக்கொள்ளும்  பக்குவமின்மை மட்டுமே என்னை நிலைகொள்ளச் செய்கிறது.  அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும். உங்கள் பார்வைக்கு இந்த அவலத்தை முன்வைப்பது மட்டுமே என் நோக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-7609976919286377930?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/7609976919286377930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=7609976919286377930' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7609976919286377930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7609976919286377930'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2011/02/fuck-off-india.html' title='FUCK OFF  INDIAIN BUREAUCRACY'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-8264948995088141606</id><published>2011-01-08T21:07:00.003+05:30</published><updated>2011-01-08T21:14:26.438+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மிருக விதூஷகம்'/><title type='text'>மிருக விதூஷகம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;    Manal magudi&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt; Proudly Invites you for the theatre performance  &lt;br /&gt;&lt;br /&gt;            MIRUGA VITHUSAGAM&lt;br /&gt;&lt;br /&gt;(A Tamil Play about Wild clowns’s search for Humanity)&lt;br /&gt;&lt;br /&gt;at International Theatre Festival of NSD&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;         Date&lt;br /&gt;&lt;br /&gt;    11.1.2011, Tuesday&lt;br /&gt;&lt;br /&gt;         Time&lt;br /&gt;&lt;br /&gt;      7 - 8.30 P.M&lt;br /&gt;&lt;br /&gt;        Venue&lt;br /&gt;&lt;br /&gt;   Open Air Statium&lt;br /&gt;&lt;br /&gt;National School of Drama,&lt;br /&gt;&lt;br /&gt;     Mandi House,&lt;br /&gt;&lt;br /&gt;      New Delhi.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;     மணல்மகுடி  வழங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;         மிருக விதூஷகம்&lt;br /&gt;&lt;br /&gt;( மனிதம் தேடும் மிருக விதூசகர்களின் பயணம் )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;           நாள்&lt;br /&gt;&lt;br /&gt;        10.01.2011&lt;br /&gt;&lt;br /&gt;           நேரம்&lt;br /&gt;       மாலை 8- 9&lt;br /&gt;&lt;br /&gt;           இடம்  &lt;br /&gt;&lt;br /&gt;    திறந்தவெளி அரங்கம்,&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய நாடகப் பள்ளி வளாகம்,&lt;br /&gt;      மண்டி Hஅவுஸ்,&lt;br /&gt;&lt;br /&gt;        புது தில்லி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;span style="font-weight:bold;"&gt;அனைவரும் வருக!&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-8264948995088141606?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/8264948995088141606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=8264948995088141606' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8264948995088141606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8264948995088141606'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2011/01/blog-post.html' title='மிருக விதூஷகம்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-4754065568852872555</id><published>2010-10-17T18:37:00.002+05:30</published><updated>2010-10-17T19:24:54.342+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>(ஆண் மன) சப்தங்கள்</title><content type='html'>கடந்த சனி, ஞாயிறு மரியாதைக்குரிய நாடக இயக்குநர் கருணாபிரசாத அவர்களின் இயக்கத்தில்  எங்களது "சத்தியலீலா" நாடகம் கலாசேத்ராவில் நிகழ்ந்தது.  பொதுவாக நாடகம் முடிந்தவுடன் நண்பர்கள் மேடையிலேயே வந்து வாழ்த்துவது எனக்கு சற்று கூச்சமாக இருக்கும். அதைவிட நாடகம் முடிந்தவுடன் சற்று தனிமையில் இருக்கவே விரும்புவேன். &lt;br /&gt;&lt;br /&gt;அன்றும் நாடகம் முடிந்ததும் நண்பர்களுக்கு தென்படாமல் விரைந்து உடைமாற்றும் அறைக்கு சென்றுவிட்டேன். அப்போது என்னைத் தேடி வந்து வாழ்த்தினார் திருநங்கையொருவர். பெயர் ரம்யா. பொதுவாக நாடக நிகழ்வுகளுக்கு திருநங்கைகள் வருவது அரிதினும் அரிது என்பதால் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதேநேரம் திருநங்கையொருவர் நாடகம் காண வந்து எனக்கு சந்தோசமாகவும் இருந்தது.  கூடுதலாக அடுத்த ஞாயிறு 16/10 ( நேற்று) ஜெயராவ் அவர்களின் நாடக நிகழ்வு இருப்பதாகவும் அதில் தான் நடித்திருப்பதாகவும் சொன்னபோது மேலும் உற்சாகமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;நவீன நாடகத்தில் ஒரு திருநங்கை பங்கேற்பதை காணும் ஆவலுடன் நேற்று மாலை -ல் வைக்கம் முகம்மது பசீரின் "சப்தங்கள்"கதையை, நாடக இயக்குநர் ஜெயராவ் அவர்களின் இயக்கத்தில் பார்த்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வு துவங்கும் சற்றைக்கு முன் சிறுமழை பெய்து நிகழ்வை மேலும் தாமதப்படுத்தியது.  நிகழ்வு துவங்கி சில நிமிடத்தில் பெருமழை வந்து நிகழ்வை தொந்தரவு செய்தது. (அப்பவே எச்சரிக்கை செஞ்ரிருக்கு!)&lt;br /&gt;&lt;br /&gt;"சப்தங்கள்" பல வருடங்களுக்கு முன்பே ஏற்கனவே படித்த கதைதான்.  அப்போதே, அதில் திருநங்கையை குறித்த சொல்லாடல் சற்று வருத்தப்படச்செய்தது.  ஆனாலும், மொழிபெயர்ப்பு என்பதாலும், பலருக்கும் அப்போது திருநங்கைகள் குறித்த புரிதல் இல்லாததாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;இன்ன்றைய இந்நவீன நாடகத்தில் கண்ணியமாகக் கையாளப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்த்த எனக்கு திருநங்கை ரம்யாவின் அறிமுகமே முகம்சுழிக்கும்படி செய்தது. Mid night masala அளவிற்கு அருவெறுப்பான ஒரு பாலியல் நடனம்.  நிலம்-ரத்தம் என கதைநாயகன் புலம்புவது, மற்ற பிறவற்றிக்கு பந்து, கைக்குட்டை, பலூன் போன்றவற்றை உருவகமாக வைத்து நாடகம் செய்தவற்கு, திருநங்கை தொடர்பான பாலியல் காட்சிக்கு அரைகுறை ஆடை, அருவெறுப்பான நடனம் சரியென பட்டது வருத்ததிற்குரியது. &lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளின் தேவை, அரசியல் குறித்த பார்வை, திருநங்கை ரம்யாவிற்கும் இல்லை, இயக்குநர் ஜெயராவிற்கும் இல்லை என்பது அந்நடனக்காட்சிக்குப் பிறகு ரம்யா பேசிய நீண்ட வழக்கான திருநங்கைகள் இன்று மீடியாக்களுக்கு தரும் வழக்கமான  வசனத்திலேயே தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரைக்கும் கூட பொறுத்துக் கொள்ள முடிந்த எனக்கு, அதன் பிறகு வந்த வசனங்கள் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக இருந்தது.  சற்று முன்பு வரையான நீண்ட வசனத்தில் ரம்யா தன்னை மாய்ந்து, மாய்ந்து திருநங்கை என்று சொல்லிக்கொள்ள, அவரது காட்சி முடிந்து தொடர்ந்து வரும் காட்சியில் திருநங்கை ரம்யாவை ஆண் விபச்சாரி என்றே அழுத்தம் திருத்தமாக பலமுறை சொல்லி கொச்சிப்படுத்திக்கொன்டிருந்தனர் இரு முக்கிய கதாப்பாத்திரங்களும். அதிலும் பெண், இல்லை, ஆண் இல்லை அது என்று அநாகரீகமான வார்த்தை விளையாட்டும் கூட...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதாதற்கு அத்திருநங்கையுடன் உடலுறவு கொன்டதாலேயே தனக்கு கொனேரியா என்ற பால்வினை நோய் வந்ததாகவும், அதானால் தான் மிகவும் மூச்சாப் போகப் படும் அவஸ்தையையும் விளக்குகிறார்.  அந்த ஒருநாளைக்கே அவர் அப்படி ஒருநோயாளியானரென்றால்..  ஏற்கனவே பாதிக்கப்பட்ட திருநங்கை மட்டும் எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நாடகம் குறித்து சொல்ல பல இருந்தாலும் நேரமின்மையால் இம்மனவேதனையை மட்டும் தற்போது பகிர்ந்துகொள்கிறேன்..  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக...&lt;br /&gt;&lt;br /&gt;ஒருகாலத்தில் திருநங்கைகளின் உரிமை குறித்த விழிப்புணர்வு வலுவாக எழுந்த காலத்தில் அ.மங்கையின் "உறையாத நினைவுகள்" மு.இராமசாமியின் "வலியறுப்பு" போன்ற நாடகங்கள் அவசியமாய் இருந்தன.  அவை போதுமான அளவிற்கு திருநங்கைகளின் உலகத்தை அரசியல், விழிப்புணர்வு கண்ணோட்டத்தோடு பேசின.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று இந்த நாடகம் அதற்கு எதிர்மாறான போலித்தனமான அக்கறையுடன் ஆண்திமிருடனேயே இதை அனுகியுள்ளது.   &lt;br /&gt;&lt;br /&gt;வன்மையாக கண்டிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-4754065568852872555?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/4754065568852872555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=4754065568852872555' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4754065568852872555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4754065568852872555'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/10/blog-post.html' title='(ஆண் மன) சப்தங்கள்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-6605985415958306638</id><published>2010-08-05T19:39:00.008+05:30</published><updated>2010-08-15T18:42:24.224+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மிருக விதூஷகம்'/><title type='text'>பித்த நிலத்தில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfmVr-AQVI/AAAAAAAAAXQ/L2YE2qRuhrM/s1600/vid1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfmVr-AQVI/AAAAAAAAAXQ/L2YE2qRuhrM/s400/vid1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505622329738150226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானொரு நிலமற்றுத் திரியும் கானகப்பட்சி. இன்றிலிருந்து பின்னோக்கி என் பிறப்பு வரை ஒவ்வொரு கட்டத்திலும் என் தேவை நான் உட்பட எவருக்கும் தெரியாமலே போனது. அன்பு கிடைத்த போதும் அன்பு கிடைக்காதவளாக, உறவுகள் இருந்தும் யாருமற்றவளாக, நண்பர்கள் இருந்தும் நண்பர்கள் இல்லாதவளாக, மனிதர்கள் சூழ இருந்தும் தனிமையாகவே இருந்து வருகிறேன். அம்மா வீரம்மாள் மட்டுமே எனக்கு முழு அம்மாவாக அரவணைத்தாள், வெறும் பத்து வயது வரை. வெயிலும், மழையும் பல்லிளித்த ஒரு தீ தினத்தில் தாயும், தாய்பாசம் என்ற சொல்லும் என் அகராதியிலிருந்து உதிரம் சிந்த வேருடன் என்னிடமிருந்து பிடுங்கியெறியப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு தாயான ராதாக்கா சில வருடங்களிலே இன்னொருவரின் மனைவியாக என்னிடமிருந்து பறிக்கப்பட்டாள். ஒரு சராசரி இந்திய ஏழை தலித் பெண்ணாக தன் இருப்பிற்காக போராடியே அவள் நேரம் வாதையுடன் கழிகிறது. இதில் எனக்கான இடம் அவள் கட்டளையை மீறி என்னிடமிருந்து பறிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப கட்டமைப்பிலிருந்து நீங்கிய பின் தனிமையே சுதந்திரமாகவும், சுதந்திரமே வெவ்வேறு அனுபவமாகவும், அனுபவம் பாடுகளாகவும், பாடுகளே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே துர்சொப்பனமாகவும் கழிந்தது. எப்போதும் அன்பை எதிர்பார்த்து ஏங்கும் எனக்கு நோய் தீர்க்கும் அருமருந்தாக உள்ளமும், உடலும் ஏற்கும் ஒரு சூரணம் நடிப்புக் கலை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னளவில் நடிப்பென்பது உடலைவிட்டு பறவையாகப் பறந்து சிறகுகளால் என் வெற்றுடலை கைப்பாவையாக்கி வேறொரு உடலாக, பறவையாக, மிருகமாக, கீதமாக, போதையாக, நடனமாக உலுக்காட்டி உலுக்காட்டி கொண்டாடும் அருங்கலை. அதில் தான் தனிமை நீங்கி, பாடுகள் நீங்கி, உடல் என்னும் பொருளும் நீங்கி காற்றாய் மிதந்தலையும் அனுபவம் பெறுமுடியுமென நம்புகிறேன். இவ்வனுபவமே வலிநிரம்பிய வாழ்க்கையின் புறச்சிக்கலில் இருந்து என்னைக் காப்பாற்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் நடிப்பில் தனிச்சிறப்போ, பக்குவமோ இல்லாத போதும், நடிப்புக்கலை மட்டுமே என் ஆத்மாவைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை என்னுள் ஆழ தங்கிவிட்டது. நைந்த என் வாழ்க்கை குறிப்பில் நாடகத்துடன் உறவாடிய நாட்கள் பரிதாபமாக வெகு குறைந்த நாட்களே.&lt;br /&gt;&lt;br /&gt;நடிப்பின் தீரா ஆசையில் எனக்கான நாடக வெளி தேடியலையும் என் கழுகுப் பார்வைக்கு முதல் தேர்வாக மயக்கும் மாந்திரீக நிலம் (ச.முருக)பூபதி அண்ணனின் பித்த நிலமே. அந்த வசீகர நிலவெளியில் என் உடல், எலும்பு, சதை, நாக்கு, விரலகளெல்லாம் அலைந்து அலைந்து வெறிகொண்டு பிரபஞ்ச நடனமாடத் துடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது முதுகலை நாட்களில் ஆரம்பித்த வெறி. பூபதி அண்ணனின் நாடகத்தை நேரடியாக பார்த்திராத போதும், அவரது சரித்திரத்தின் அதீத மியூசியம் நாடகப் பிரதியை வாசித்த அனுபவமே என் நாடக உடலை பூபதி அண்ணனுக்கு அடிமையாக எழுதிக் கொடுத்துவிட போதுமானதாக இருந்தது. நண்பர்கள் விஜியும், முருகனும் அவரது கூந்தல் நகரம் நாடகத்தில் நடித்த அனுபங்களை பகிர்ந்து கொள்வது மேலும் வேட்கைக்கு எரியூட்டியது. ஆனால் சரியான சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை பல்லகலையில், முதுகலை படித்த நாட்களில் சாம்பான், நடுவன், கலக்காரர் தோழர் பெரியார் போன்ற நாடகங்களில் பங்கேற்க முடிந்தது. உடல் மீதான குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆறுதலாக இருந்தது இத்தகைய நாடக அனுபவங்களே. நாடக வெளிக்கான ஆரம்பமாக அமைந்திருந்த அந்நாட்களில், எனக்கான உடலை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு வருடமும், உடலை திருத்தியபின் மேலும் நான்கு வருடங்களும் என் உலகம், நாடகம் மறுக்கப்பட்ட பாலையாக தகிக்க தகிக்க வெம்மிக்கொண்டிருந்தேன். மரணவாடை வீசிய அந்நாட்களில் எதற்கு, யாரை தண்டிப்பது என்ற குழப்பத்தில் புத்தக வாசிப்பு மறுத்து என்னையே தண்டித்துக் கொண்டேன் (வேறு சில காரணமும் உண்டு அல்லது வெறும் சமாதானமாகவும் இருக்கலாம்). காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறு எனது, தண்டனையும் எனக்கே, தவிப்பும் எனக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;சில காலம் காதலும், சினிமாவும் ஓரளவு கைகொடுத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றோடு முழுமனதோடு பயணிக்க முடியவில்லை. நாடக வெளியன்றி வேறு எதுவும் என்னை காப்பாற்றாது என்பதை நான்கு வருட இடைவெளி தெளிவாக உணர்த்தியது. இப்பெரும் இடைவெளியில் மூச்சுத்திணறி தவிக்கும் மரணநொடிகளில் எங்கிருந்தோ வீரம்மாளே நாடக உருகொண்டு தாய்பால் பருகத்தந்து எனை மீட்டாள். சகோதரன் ஸ்ரீஜித்தின் என்.ராமயணம் வீதிநாடகமும், கவிதை வாசிப்பும், அன்பான அ.மங்கையின் பல்சான்றிரே மற்றும் யாது நம் ஊர் நாடக நிகழ்வும் இவ்விடைவெளியில் ஆசுவாசமளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைத்துறையில் உதவி இயக்குநராக ஒப்பேற்றிக் கொண்டிருந்த நாளில், பூபதி அண்ணனிடமிருந்து நடிக்க ஒருமுறை அழைப்பு வந்தது. அப்போதோ என் சிறகுகள் இயக்குநர் மிஷ்கினின் வசமிருந்த மாரிக்காலம். சினிமா வேலை விஸ்வரூபமெடுத்து பெருஞ்சுவராய் என்னை சிறை பிடித்திருந்தது. உடலெங்கும் பரவும் நடுக்கத்துடன் பூபதி அண்ணனின் அழைப்பை மறுதலிக்கும் நாவினை சினிமா வளர்த்திருந்தது (இதே நாவால் எத்தனையோ முறை வெவ்வேறு காலகட்டத்தில் அண்ணனிடம் நடிக்க வாய்ப்பு கேட்ட நச்சரித்ததுண்டு). அடுத்த நாடகத்திலாவது நடிக்க வரவேண்டும் இல்லையென்றால் எப்போதும் அவர் நடிக்க முடியாது என்று சொல்லி வைத்து விட்டார். பெருங்குற்ற உணர்ச்சியுடன், இந்த பாரத்தை சுமந்தபடி பழைய சோர்வான வாழ்க்கை தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நந்தலாலா படம் முடிவடைந்த பிறகு அறுவை சிகிச்சை காரணமாக நீண்ட ஓய்விலிருந்தேன். அப்போது அடுத்த நாடகத்திற்கான அழைப்பு அண்ணனிடம் இருந்து வந்தது. திட்டவட்டமாக இன்ன நாள் ஒத்திகை துவங்கும் என தீர்மானமாகாத நிலையில் இந்தமுறை வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனாலேயே, உடல்நிலை தேறிய பிறகும், மீண்டும் சினிமாவின் புதிர்வட்டப்பாதைக்குள் நுழைய தயங்கி ஒதுங்கி நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்திட்ட முழு வருடம் எந்த கணம் அண்ணன் கூப்பிட்டாலும், கிளம்பத் தயாராகவே காத்திருந்தேன். இடையில் நண்பன் ஸ்ரீஜித்தின் என்.ராமாயணம், ஒரு கவிதை வாசிப்பு மற்றும் அ.மங்கையின் பல்சான்றீரே’, ‘யாது நம் ஊர்’ ஆகிய நாடகங்களில் நடிக்க முடிந்தது மேலும் புதுரத்தம் பாய்ச்சி நம்பிக்கையுடன் காத்திருப்பை அர்த்தமாக்கியது ஒருவகையில் மிக ஆறுதலாக இருந்தது. எப்படியோ பொருளாதார சிக்கலையும் ஒருவாறாக சமாளித்து கோரப்பசியோடே காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfmjMr1uGI/AAAAAAAAAXY/hHZK7KEGB_8/s1600/Vid4.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfmjMr1uGI/AAAAAAAAAXY/hHZK7KEGB_8/s400/Vid4.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505622561858631778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல வருட தவப்பயனாக பூபதி அண்ணனில் நாடக நிலத்தில் கால் பதிக்கும் அரிய நாள் கடந்த மே மாத இறுதியில் அமைந்தது. சிலிர்ப்புடன் அந்த நொடிகளில் உடலின் மொத்த கணத்தை உணர்ந்தும், உடலை மறந்து இறகாகவும் பறந்தேன். கோவில்பட்டி, இந்திரா நகரிலுள்ள அந்தவீட்டை அடைந்த போது அமானுஷ்யமானதும், புராதனமுமான வனதேவதையின் கூட்டினை எட்டிப்பார்க்கும் சிலிர்ப்பு. மானசீகமாக மண்டியிட்டு ஒத்திகை நிலத்தை இதயக்கரம் கூப்பி மண்டியிட்டு வணங்கினேன். இதுவரை முட்டி முனகி ஒரு 6, 7 நாடகங்களில் நடித்திருந்த போதும், எப்போதும் என் மூளைக்குள் உதிக்காத மாண்பு கோவில்பட்டி நாடகநிலத்தில் என்னை மீறி இவ்வாறு கிளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒத்திகை நிலத்தில் அமர்ந்து இரண்டுமுறை ஒரேமூச்சில் ‘மிருக விதூஷகம்’ நாடகப் பிரதியை வாசித்து முடித்தேன். பிரமிப்பு மட்டும் இன்னும் நீங்கவில்லை. இது நானே தானா? எனக்கேதான் இது வாய்த்துவிட்டதா? நானே தான் பூபதி அண்ணனின் நாடகநிலத்தில் ஒரு நடிகையாகிவிட்டேனா? இவ்வொத்திகை நிலத்தில் நடிகை என்ற அங்கீகாரத்துடன் அமர்ந்திருக்கும் இவ்வுடல் எனதே தானா? இக்குறுகுறுப்புடனே முதல் ஒத்திகைக்காக காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடகத்தில் நான் பங்கேற்கும் 2 காட்சிகள் நீங்கலாக மீதமுள்ள 11 காட்சிகளும் கடின ஒத்திகையுடன் முழுநாடக வடிவத்துடன் தயாராகவே இருந்தது. எனவே அன்று எனது முதல்நாள் ஒத்திகை எனக்கான ஒத்திகையாகவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது entry அரைமண்டியில் நடந்துவந்து 6 நிமிடங்கள் தொடர்ந்து அதே நிலையில் நிகழ்த்த வடிவமைக்கப்பட்டது. மனதிற்கு ஆசையாக இனிய சவாலாக இருந்த போதும், முழுவருடமும் கடின உழைப்பு மறந்த எனது ப்ரேத உடல், நிகழ்விற்கு ஒத்துழைக்க மறுத்து அடம்பிடித்தது. கால்வலியில் நிற்கவும் கூடாமல் உடல் தடுமாறத் துவங்கியது. சிலசமயம் நாடகத்தில் இது மாதிரியான தர்மசங்கடமான சூழலில் சமாளிக்கும் வல்லமை (will power) இயல்பாகவே வந்துவிடும். அப்படியொரு பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ளும் சக்திகூட இன்றி பாதியில் கைவிடுமாறு என் நிலை இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் ஒத்துழைக்க மறுத்ததைவிட பூபதி அண்ணனுக்கு என் மேல் அதிருப்தி வந்துவிடுமோ என்ற பயம் (இதையெல்லாம் கடந்த ஓர் உன்னதமான இடத்தில் அவர் இருக்கிறார் என்பதை பின்னாளில் உணர்ந்து கொண்டேன்). இயலாமையும், அலைக்கழிப்பிற்கும் என்னை தின்னக்கொடுத்து தள்ளிநின்றேன். முதுகலை வருடங்களில் நல்ல நணபனாய் இருந்த விஜி இந்நாடகத்தில் இருந்தான். பூபதி அண்ணனுடைய பிரதியில் இது அவனுக்கு 7வது நாடக அனுபவம். நான் வந்து சேர்த்த நாளில் வேறொரு நாடகத்திற்காக தவிர்க்க முடியாத சூழலில் தஞ்சையிலிருந்தான். அவனிடம் தொலைபேசியில் இயலாமையை பகிர்ந்து கொண்டது கொஞ்சம் உதவியது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் தொடர் ஒத்திக்கைப்பிறகு கொஞ்சம் உடல் பழகிவிட்டாலும் சரியான நடிப்பை கொடுக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். விஜி திரும்பி வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. எனக்கிருந்து வெகு குறைந்த நல்ல நட்பில் விஜி தவிர்க்க முடியாத சகோதரன். ஆனால், சென்னை வந்தபின் எல்லாம் தொலைவோடிப்போனது. இந்த ஒத்திகை சமயங்களில் இடைப்பட்ட வருடத்தில் இழந்த நட்பின் நேசத்தையும், பகிர்வையும் தக்க வைத்துக் கொண்ட கணத்தை கண்ணீருடன் தரிசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;நாளுக்குள் நாள் மனச்சோர்விற்கு ஆளாகி என்னால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இழந்துவிட்டேன். என் இருப்பின் மேல் வெறுப்புற்று தவித்தேன். அப்படி செய், இப்படி செய்யாதே என எதாவது சொல்லி சரிசெய்வார் என்று எதிர்பார்த்த பூபதி அண்ணனும் கருணை மறுத்து என்னிடம் தொடர்ந்து மவுனியாக இருந்தார். என் வேதனையும், ஆற்றாமையுமே என்னை சரிசெய்துவிடுமென தீவிரமாக அவர் நம்பியிருக்கக் கூடும். அலைக்கழிப்பும், நடுக்கமும் நாடகநிலத்தின் முன் என்னை ஒப்புக்கொடுத்து தொடர்ந்து மன்றாடச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளதே ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் நாடகத்தில் எனக்கு அதிக வேலையில்லை என்ற வருத்தம் ஒரு பக்கம் உறுத்திக்கொண்டேயிருந்தது. மரபான நாட்டியக் கலையில் நவீனத்தை இணைத்து உடல்களை உடலிகளாக மேடையில் புகுத்தி வலிமையான, அழகான நடனக்கலையை வளர்ததவர் மறைந்த சந்திரலேகா. நாடக நிலத்தில் ஆண்/பெண் என்ற பார்வை உடைந்து வெறும் உடலியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டுமென்பது என் ஆசை. பூபதி அண்ணனுக்கும் இதே நிலைப்பாடுதான் என்பதை அறிவேன். இந்த எதிர்ப்பார்ப்போடு இருந்த எனக்கு சக நடிகர்களோடு சக உடலியாக ஊடாடும் வாய்ப்பில்லாதது சற்று ஏமாற்றமாகவெ இருந்தது. எனது பகுதியே கிட்டத்தட்ட solo performance போல் தனித்து விடப்பட்டது எனது தேடலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. அ.மங்கை “நடிப்பு என்பது பார்வையாளர்களுக்காக கிடையாது, சக நடிகர்களுக்காக” என்று சொல்வதுண்டு். ஒருவேளை அப்படியொரு சக நடிப்பு உடலுடன் ஊடாடும் வாய்ப்பில்லாததே எனக்கு தொந்தரவாக இருந்திருக்குமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfmyYzcyfI/AAAAAAAAAXg/NGrXCgO9LtA/s1600/vid2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfmyYzcyfI/AAAAAAAAAXg/NGrXCgO9LtA/s400/vid2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505622822809815538" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிம்மதியிழந்த எனதாத்மாவும் விஜியின் நட்பும், ஓவியர் பேய்காமனின் அறிமுகமும் கொஞ்சம் அருள் தந்து காப்பாற்றியது. விஜி மற்றும் பேய்க்காமனின் வழியாக நிலம் என்னிடம் கோபம் காட்டி, அன்பு கூட்டி மெல்ல மெல்ல நாடக வெளியில் என்னை சரிசெய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கல்லூரி நாட்களின் போது அண்ணன் தனது உறவினர் மகள்கள் இருவரை ஒவ்வொரு வயதிலுமாக குழந்தை பருவம் முதல் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியதை அறிவேன். அதில் சில புகைப்படங்களையும் நான் பார்த்தது வியந்ததுண்டு. அதனாலேயே குறிப்பிட்ட அவ்விரு சிறுமிகள் மீது ஒரு தனிப்பாசம் இருந்தது. அந்த புகைப்படத்தில் மலர்ந்த குட்டி தேவதைகளில் ஒருவர் ப்ரியா இன்று கல்லூரி மாணவி. அவரும் அவரது சகோதரி சத்யா இருவரும் (பூபதி அண்ணனின் அக்கா குழந்தைகள்) நடிகர்களுக்கு சமையல் செய்வதற்காக தினமும் வருவார்கள். பாசமும், இளகிய மனசும் அந்த வீட்டுப் பெண்களின் குடும்பச்சொத்துப் போல. அழகான பெண்கள், அவர்களுடன் கொஞ்ச நேரம் புழங்க முடிந்தது 15 ஆண் நடிகர்கள் மத்தியில் ஒற்றை பெண்ணாக இருந்த என் தனிமைக்கு தேவையாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடக அரங்கேற்றத்திற்கு இறுதி ஒரு வாரம் முன்பு, குறுமலை கிராமத்தில் ஒரு புராதன அய்யனார் கோயிலில் தேசாந்திரிகளாக தங்கியிருந்து ஒத்திகை பார்த்தோம். தமிழக பெண்களுக்கு எளிதில் கிடைத்து விட முடியாது அற்புத அனுபவம். விழுது தொங்கும் ஆலமரங்கள் (எனது முதல் வசனத்தின் ஒரு பகுதியும் கூட) சூழ நடுவில் ஒத்திகை நிலம் அமைத்து மயிலும், நாயும், மாடும், இன்ன பிற பட்சிக்கூட்டத்திற்கும், பூச்சி இனத்திற்கும் மத்தியில், அவர்கள் நிலத்தில் நாடகம் பழகி்னோம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்த அந்த வாழ்க்கையில் பெண்ணான எனக்கு சில அசௌகர்யங்கள் இல்லாமலும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக காலை வெயில் வருமுன் ஒரு ஒத்திகை, மாலை இருள் வருவதற்கு முன்பு ஒரு ஒத்திகை பார்ப்பது எங்கள் வழக்கம். நிலத்தில் ஒத்திகை முடிந்ததும் அசதியும், புழுதியுமாக உடல் புழுங்கிக் கொண்டிருக்கும். குளிப்பதற்கு அங்கே அறை வசதி கிடையாது. நாங்கள் தங்கியிருந்த கோயிலுக்கும், நாடக நிலத்திற்கும் நடுவில் அழகான, அளவான தாமரைக் குளமொன்று கம்பீரமாக இருந்தது. ஒத்திகை முடிந்ததும் நடிகர்கள் அனைவரும் குளிக்க அங்கே சென்றுவிடுவார்கள். அந்த திறந்தவெளியில் என்னால் குளிக்க முடியாது. எனவே அதே அசதியோடும், வியர்வையோடும் மாலை ஒத்திகையையும் முடித்துவிட்டு, மீண்டும் நடிகர்கள் குளிக்க காத்திருப்பேன். கடின உழைப்பிற்கு பிறகு குதூகலமாய் குளித்ததில் நீந்திக் குளிக்கும் யாருக்குத்தான் வெளியேற மனம் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கும்மிருட்டில் 8 மணி சுமாரில் நண்பர்கள், விஜி மற்றும் பேய் காமன் காவல் தெய்வங்களாய் குளக்கரையில் இசையுடன் அளவளாவிக் கொண்டிருக்க நான் அரைகுறையாக குளித்துக் கொள்வேன். அந்தக் குளத்திற்கு மேலும் இரண்டு கரைகள் இருந்ததால் பதற்றத்துடனே அவசர அவசரமாக துவைத்துக் குளித்து கரையேர வேண்டியிருக்கும். மாலதி மைத்ரியின் கவிதை ஒன்றில் ஒரு பெண்ணுடல் கிராம மனிதர்கள் அனைவரும் திருவிழா கொண்டாட்டத்திற்காக கோயிலில் குழுமியிருக்க, ஆளரவமற்ற ஊர்க்குளத்தில் அந்த பெண்ணுடல் முதன்முதலாக நிர்வாணமாக குளிக்கும் அனுபவத்தை எழுதியிருப்பார். ஒவ்வொரு இரவு குளியலிலும் அந்த கவிதை மட்டும் எனக்கு துணையாக என்னுடன் அமைதியாக குளித்துக் கொண்டிருந்தது. இது போன்ற சிறுசிறு பெண்ணுடல் சார்ந்த புறச்சிக்கல்கள் சில இருந்த போதும், விஜி மற்றும் பேய்க்காமனின் நட்பின் நேசக்கரம் அந்த இயற்கை சூழலையும், நாடக வெளியையும் ரசிக்க உதவியது மறக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;எது போதவில்லை, எது குறைகிறது என்று புரியாமலேயே மதுரை நிகழ்விற்கு சக நடிகர்களுடன் தயாரானேன். நாடக உடையும், இசையும், ஒளியும், காலகாலமாக கலைஞர்களின் வேர்வை பாவிய காந்தி ம்யூசியத்தின் திறந்த வெளி அரங்கமும் அவற்றிற்கேயுரிய இயல்புடன், ஒரு நடிகையாக என்னைத் தாங்க கொஞ்சம் ஒப்பேற்றினேன். தொடர்ந்து திருவண்ணாமலை நிகழ்வுகளிலும் அதே நிலை. என் உடல் மட்டுமன்றி என் குரலும் ஆரம்பம் முதல் எனக்கு தொடர்ந்து பாதகமாகவே இருந்து படுத்தியது. இன்னமும் நாடகத்தை புரிந்து கொள்ளமுடியாத எனக்கு சென்னை, ஸ்பேசஸ் அரங்கம் மேலும் என் சவாலை சிக்கலாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டிய தேவதை சந்திரலேகாவின் அபிநயங்களும், பாதமும் பரவிய அந்த வளாகமும், தன்னிகரல்லா அக்கலைமகளின் மூச்சும், பயிற்சியும் தங்கிவிட்ட ஸ்பேசஸ் மேடையும் எனக்கு பலநாள் ஆதர்ஷ நிலம். ஏற்கனவே அந்நிலத்தில் ஸ்ரீஜித் புண்ணியத்தில் ஒருமுறை கால்பதித்திருந்த போதும். இது special. சந்திரலேகாவின் மேடையில், பூபதி அண்ணனின் நாடகம், அதில்நான் நடிகை என்பது எப்பேர்ப்பட்ட விடுதலையுணர்விற்கும் இணையானது.&lt;br /&gt;&lt;br /&gt;முந்தைய நிகழ்வுகளை விட கூடுதல் சிறப்பாக இந்த நாடக நிலத்தில் மறைந்த சந்திரலேகாவும் ஆலமரமாய் விழுது தொங்க எங்களுடன் நிகழ்வில் பங்கேற்றார். அம்மூதாயின் அரவணைப்பு எல்லா நடிகர்களுக்கும் கிடை&lt;a href="http://lumpini.in/a_punaivu-018.html"&gt;&lt;/a&gt;த்ததைப் போலவே பாரபட்சமின்றி எனக்கும் கிடைத்தது. எந்த சிக்கலும் இன்றி என் பணியை அவள் பார்வையில் செய்து முடித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஒரு மாதம் முழுதும் பூபதி அண்ணனின் நிழலில் கோணங்கி அண்ணனின் பார்வையில் விஜி-பேய்காமனின் நட்பில் சக நடிகர்களின் அருகாமையில் இருந்தது, கோவில்பட்டி முதல் குறுமலை, மதுரை, திருவண்ணாமலை, சென்னை வரை பயணம் செய்து நாடகம் செய்தது இத்தனை வருட காத்திருப்பின் பலனாக இருந்தது. எல்லாம் முடிந்து வீடு திரும்பும் போது மனதிற்குள் ஏதோவொரு குறை அரித்துக்கொண்டிருக்க அயர்ச்சியுடனே நாடக வெளிக்கு மனமின்றி விடைகொடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வீட்டிற்கு திரும்பிவந்த பின்புதான் எனக்கு உண்மையான நடிப்பு தாகமே ஆரம்பித்தாகவே உணர்கிறேன். ஒரு மாத ஒத்திகை, சக நடிகர்களின் சுவாசம், உழைப்பு, நட்பு, கோணங்கி அண்ணன், அப்பா, ப்ரியா-சத்யா, கோடங்கி அண்ணன், விஜி, பேய்க்காமன் எல்லாமே நாளுக்கு நாள் ஏக்கத்தையே தொடர்ந்து விதைத்துக் கொண்டிருந்தன. வீட்டில் இருப்புக் கொள்ளாமல் கொஞ்சம் ஓவிய வெளியில் பயணம் செய்து என் ஆவலை அடக்கிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் பாண்டிச்சேரி நாடக நிகழ்விற்காக கோவில்பட்டி சென்ற போது தான் மீண்டு வந்ததாக உணர்ந்தேன். இந்த முறையும் ஒத்திகையில் அதிக ஆற்றலுடன் உழைக்க முடியாத போதும் பழைய ஆற்றாமையோ பயமோ என்னிடம் இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது. ஏதோவொரு உந்து சக்தி எனக்கு நம்பிக்கை கொடுத்ததை இந்தமுறை தீர்க்கமாக உணரமுடிந்தது. ஒத்திகை முடிந்து புதுவையில் எங்கள் நாடக மேடையை அடைந்த போதும் கூட வழக்கமாக அரங்கேற்றத்தின் போது நம்பிக்கையின்மையால் ஏற்படும் நடுக்கம் இந்த முறை அறவே இல்லாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை நிகழ்விற்கு முன்பு நாடக நடிகர்களுக்கு செம்மண் குழைத்து உடலிலெங்கும் அரிதாரம் பூசுவதாக ஏற்பாடாகியிருந்தது. நடிகர்களுக்கு மட்டும். எனக்குரிய costume போட்டு தயாராகி நிற்கிறேன் புதிதாக ஒன்று என்னை தொந்தரவு செய்கிறது. ஏன் இது நடிகர்களுக்கு மட்டும் என்று கேள்வி, சரி பிரதியின்படி அவர்கள் கோமாளிகள் அவர்களுக்கு அரிதாரம் தேவை அது செம்மண்ணிலிருந்து எடுக்கப்படுகிறது எனது பாத்திரத்திற்கு அது அவசியம் இல்லாமல் இருக்கலாம் என்று சுயசமாதானம் செய்து கொள்கிறேன். ஆனாலும் இருப்பு கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக எனது காட்சி வரும் வரையிலும் எனக்கு சில பின்னரங்க பணிகளிருக்கும். நாடகம் துவங்கி 4 காட்சிகள் முடிந்து விட்டது, இன்னும் இரண்டு காட்சிகள் கழித்து எனக்கு வேலை நேரம் வந்துவிடும். அந்த செம்மண் குழைவின் நினைவு என்னை ஆக்கிரமித்து தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது. அண்ண்னிடம் அனுமதி கேட்டு நானும் செம்மண் பூசிக்கொள்ளலாமா (கேட்பது சரியா என்ற குழப்பம்), அப்படியே கேட்க நினைத்தாலும் அதற்கான சூழலுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதையும் யோசிக்காமல் அந்த பின்னரங்க இருளில் செம்மண் குழவை இருந்த பாத்திரத்தைத் தேடி கால்களிலும், கைகளிலும் சிறு சிறு வரிகளிட்ட பின் தான் ஒருவாறு மனக்குதிரை ஓய்ந்து நின்றது. இப்போது என் காட்சிக்கான நேரம் (Its show time babe; and I did it). என்னை நானே வியந்து கொண்டிருந்தேன். வழக்கமாக நான் செய்யும் movements தான் ஆனால் இம்முறை உயிர்ப்புடன் இருந்தது. அதன் பிரதிபலிப்பை பார்வையாளர்களிடம் காண முடிந்தது. நான்கு அரங்கேற்றத்தில் முதல்முறையாக நான் மேடையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது பார்வையாளர்களிடமிருந்து கைதட்டல் என்னால் இதயத்தை வருடுகிறது. இறுதி காட்சியிலும் நாடகநிலத்தில் நின்று உயிர்ப்புடன், உத்வேகத்துடன் எனது பணியை செய்து கொண்டிருந்தேன். அப்பாடா, இதைத்தான் இந்த அனுபவத்தை தான் இத்தனை காலம் தேடிக்கொண்டிருந்தேன். நாடகம் முடிந்து பார்வையாளர்கள் பாராட்டிய போது வழக்கமான குற்றவுணர்வின்றி பெருமிதம் இருந்தது. இந்தமுறை அனைவரும் என் குரலையும் சிறப்பாக, boldஆக இருந்ததாக சொன்னதும் உண்மையிலேயே சந்தோசமாகத்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் முடிந்து் வெளியேறாத கண்ணீருடன் நண்பர்கள் விஜி மற்றும் பேய்க்காமனின் ஆதரவான அரவணைப்பிற்காக காத்திருந்து.., காத்திருந்தேன். வழக்கமாக என்னை அதிகம் விமர்சிப்பதும், அதிகம் ஊக்குவிப்பதும் இவ்விருவரே. இம்முறை வழக்கத்திற்கு மாறாக சிறப்பாக செய்ததாக உணர்கிறேன் ஆனால், எப்போதும் நிகழ்வு முடிந்ததும் அரவணைத்து வாழ்த்து சொல்லும் இருவரும் இம்முறை அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு சக நடிகர்களுக்கு மட்டும் வெற்றியை பரிமாறிக்கொண்டிருந்தது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfnAXamXlI/AAAAAAAAAXo/4LLZBJvS9gE/s1600/vid3.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfnAXamXlI/AAAAAAAAAXo/4LLZBJvS9gE/s400/vid3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505623062955318866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வு முடிந்து வழக்கமாக செய்து முடிக்கும் வேலைகளை ஒருங்கு செய்துவிட்டு தனியாக ஒரிடத்தில் அமர்ந்து மானசீகமாக பலருக்கு நன்றியை பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்த பட்டியலில் கோவில்பட்டி மற்றும் குறுமலை நாடக நிலம், பூபதி அண்ணன், கோணங்கி அண்ணன், விஜி, பேய்க்காமன், சக நடிகர்கள், சத்யா, ப்ரியா, என் அம்மா வீரம்மாள், அக்கா ராதா, நண்பர் ரூபன் பால் நத்தானியல், என்னுடல், என் கண்ணீர், என் வலிகள் எல்லாமே அடங்கும். முதன்முறையாக தன் கன்னித்தன்மைக்கு விடைகொடுக்கும் பெண் தன் உடலின் பரிபூரணத்தை உணரும் திருப்தியையும், மனஅமைதியையும் அன்றைய நாடக நிகழ்வு முடிந்த போது நானடைந்தேன். இன்னும் அந்த சாந்தம் என்னுள் ஒட்டிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக பூபதி அண்ணனின் பித்த நிலம் எனக்கு துடிவரம் தந்துவிட்டதாக உணர்கிறேன். இனி வெறிகொண்டு் வாசிக்கவும், கலைக்குள் இயங்கவும் தீர்மானித்துள்ளேன். அற்பக் காரணங்களுக்கெல்லாம் தளர்வடைந்து போகும் இயல்புடைய எனக்கு இப்பித்தநிலம் மீட்டுத்தந்த சகோதர நேசமும், நட்பின் உத்வேகமும், காதலின் வனப்பூவும் தொடர்ந்து உற்சாகமும் உந்துதலும் தந்துகாக்க வேண்டுமென்று பிரபஞ்ச நாடக நிலத்தை வேண்டிக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfnKehx1iI/AAAAAAAAAXw/5ybzHrEVZGs/s1600/boopathy.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfnKehx1iI/AAAAAAAAAXw/5ybzHrEVZGs/s400/boopathy.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5505623236663170594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு. எனது அனுபத்தைப் பகிர்ந்து கொண்ட &lt;a href="http://lumpini.in/a_punaivu-018.html"&gt;லுன்பினி&lt;/a&gt;க்கு நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-6605985415958306638?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/6605985415958306638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=6605985415958306638' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6605985415958306638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6605985415958306638'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/08/blog-post_05.html' title='பித்த நிலத்தில் சிறகு விரிக்கும் கானகப்பட்சி'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TGfmVr-AQVI/AAAAAAAAAXQ/L2YE2qRuhrM/s72-c/vid1.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-2533389156300753753</id><published>2010-06-03T19:29:00.000+05:30</published><updated>2010-06-03T19:31:52.689+05:30</updated><title type='text'>மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010</title><content type='html'>&lt;span class="magazine"&gt; ப&lt;/span&gt;ல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியுள்ளது.  சாதியத்தை எதிர்ப்பவர்கள், விரும்புபவர்கள் உட்பட பலரும் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்க, அரசோ திட்டமிட்டு சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.  சாதிக்கென தனிக் கணக்கெடுப்பு எடுக்கப்படுவதாக ஒரு சமாளிப்புக் கதையையும் சொல்கிறது. எதுக்கு இப்ப ஒரு கணக்கெடுப்பு ஒரு வருஷம் கழிச்சு இன்னொரு கணக்கெடுப்போ? (தண்டச்செலவு) புரியல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து விவாதிக்கவும், போராடவும் பல தோழர்கள் உண்டு. இதில் வேறொரு பக்கத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், கலைஞர் காப்பீட்டு திட்டம் மூலம் உதவுதல் போன்ற விஷயங்களில் தமிழ்நாடு அரசு முன்னுதாரணமாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.  ஆனால் இத்தகைய உதவிகளை குறித்து யோசித்து பார்த்தால் இது திருநங்கைகளின் அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கூறமுடியாது. தெளிவாக சொல்வதென்றால் இத்தகைய முயற்சிகள்  திருநங்கைகள் வெறும் சலுகைகளை எதிர்பார்த்து பிச்சை பாத்திரம் ஏந்துபவர்களாக வைத்திருக்க மட்டுமே இவை உதவுக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப ஆதரவு இன்றி வாழும் திருநங்கைகள் தன்னிறைவு பெற்றவர்களாக வாழ அவர்கள் சுயசார்புடையவர்களாக இருப்பது மட்டுமே அவசியம். பிச்சையும், பாலியல் தொழிலும், தொண்டு நிறுவன மூலம் எய்ட்ஸ் நிதி பெறுவது எல்லாம் இன்றைய தலைமுறை நங்கைகளுக்கு போதுமானதாக இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இளையதலைமுறை திருநங்கைகளோ தன்னிறைவோடும், அதே சமயம் கண்ணியமாக எல்லா துறையிலும் தடம்பதித்து வாழவே ஆர்வமாய் உள்ளனர். அதற்கு வெறும் சலுகைப் பாத்திரங்கள் போதுமானதாக இருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவரீதியாகவும், உளவியல்ரீதியாகவும், மனித உரிமை சார்ந்தும் திருநங்கைகள் குறித்து புரிதலும், பரிவும் தமிழ் சமூகத்தில், இந்தியாவிலும் ஓரளவு வளர்ந்துள்ளது.  இம்மாற்றம் திருநங்கைகளின் நிதர்சன வாழ்வை மெய்யாகவே மாற்ற திருநங்கைகள் கணக்கெடுப்பு அவசியம். எண்ணிக்கை அடிப்படையில் ஆண்டாண்டாய் மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பெற மிக அவசியமான ஆயுதம் இக்கணக்கெடுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன்பு கணக்கெடுப்பில் திருநங்கைகளை others என்ற பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற தீர்ப்பளிக்கப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. சகமனிதர்களான திருநங்கைகளை விலங்கினத்தைப் போல குறிப்பிடும் இவ்வநாகரீகத்தை கண்டித்து பல திருநங்கைகள் பல்வேறு பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அதுவுமின்றி, கணெக்கெடுப்பு படிவத்தில் ஆண்/பெண் இருபாலினம் மட்டுமே உள்ளது. மேலும், திருநங்கைகளை ஆண்கள் பட்டியலில் சேர்க்கச் சொல்லியும் ஏற்பாடாகியுள்ளது.  இத்தனை போராட்டங்கள், விழிப்புணர்வுகள், முயற்சிகளுக்குப் பிறகும் அரசின் இச்செயல் மிகவும் ஆபத்தானது.  &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வர் கணக்கெடுப்பில் திருநங்கைகளையும் கணக்கிலெடுக்கக் கூறி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதன் அர்த்தம் பொருள் திருநங்களை அவர்களுக்குரிய பாலின அடையாளத்தோடா அல்லது வெறும் பத்தோடு பதினொன்றாக எண்ணிக்கைக்கு மட்டும் சேர்த்துக் கொள்ளச் சொன்னதா என்று புரியவில்லை. ஆனால் இது மத்திய அரசின் முடிவு என்று சொல்லிவிட முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காரணம் சமீபத்தில் நடந்த திருநங்கைகளின் கலந்துரையாடலில் திருநங்கைகள் நலவாரிய பிரதிநிதிகள் ஜீவா, ப்ரியா பாபு இருவரும், மற்ற திருநங்கைகளிடம் இக்கணக்கெடுப்பில் ஆண்கள் என்ற கணக்கில் திருநங்கைகள் பதிவு செய்யலாம் என்றும். திருநங்கைகளுக்கென வெறொரு கணக்கெடுப்பு அடுத்த 2011ல் நடைபெறும் என்றும் இப்போது யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடாது என்றும் அறியுறுத்தியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியிருக்க, எனது நண்பரும், பாலியல் சிறுபாண்மையினர் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சமூக போராளி ஸ்ரீஜித் தனது சொந்த முயற்சியில் கணக்கெடுப்பு சார்ந்த அதிகாரியிடம் புகார் கொடுத்தப் பொழுது ”எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணை திருநங்கைகளை ஆண் என்று சேர்ப்பது என்பது தான். மேலும் இது குறித்து எந்த திருநங்கைகளும் இது குறித்து எந்த திருநங்கைகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை”  என்று பதிலளித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேரளா வசம் இருக்கும் எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இஙக இருந்தா மட்டும் blog செய்வதை விட வேறென்ன செய்துவிட முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கேள்வி திருநங்கைகளுக்கு சலுகைகள் செய்ய தயாராய் இருக்கும் அரசு அவர்களின் வேலைவாய்ப்பிற்கு மட்டும் எந்த வாய்ப்பும் தராததேன்? அல்லது அதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்தாததேன்?  ப்ரியா பாபு போன்ற முன்னோடி திருநங்கை போராளிகள் எதற்காக திருநங்கைகள் நலனுக்கு போராடுவதை கைவிட்டு அரசுக்கு கைகட்டி நிற்க வேண்டாம். இத்தனை நாள் உங்களை நாங்கள் முன்னோடியாக ஏற்று நலவாரியத்தில் திருநங்கைகள் நலனுக்காக பங்காற்றுவீர்கள்  என்ற நம்பிக்கைக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-2533389156300753753?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/2533389156300753753/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=2533389156300753753' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2533389156300753753'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2533389156300753753'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/06/2010.html' title='மக்கள் தொகை கணக்கெடுப்பு 2010'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-2925849073193912449</id><published>2010-06-02T22:53:00.007+05:30</published><updated>2010-08-15T18:48:56.588+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழைப்பிதழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மிருக விதூஷகம்'/><title type='text'>மிருக விதூஷகம் - நாடக அழைப்பிதழ்</title><content type='html'>&lt;span class="magazine"&gt;                 ம &lt;/span&gt;ணல் மகுடி வழங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;              மிருக விதூஷகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாள்          -               இடம்             -             நேரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜீன் 10  (வியாழன்)   குருமலை – கோவில் பட்டி     மாலை 6 மணி&lt;br /&gt;ஜீன் 12  (சனி)        காந்தி ம்யூசியம் – மதுரை      மாலை 6 மணி&lt;br /&gt;ஜீன் 13  (ஞாயிறு)           திருவண்ணாமலை      மாலை 6 மணி&lt;br /&gt;ஜீன் 14  (செவ்வாய்)  ஸ்பேசஸ் – சென்னை          மாலை 6 மணி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TAaVr808ZnI/AAAAAAAAAV8/1b00M03un3Y/s1600/mruga+vithusagam+2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TAaVr808ZnI/AAAAAAAAAV8/1b00M03un3Y/s400/mruga+vithusagam+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478230579037890162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இப்பூமியின் கோமாளிகள். உறவுகளற்ற தாய்மார்கள்.  எங்களுக்கு உடல்கள் இல்லை.  நிலமில்லை, திசைகளுமில்லை.  வனப்பறவைகளாக மிதந்தலைகிறோம்.  எங்களிடமிருந்த தானியங்கள் களவாடப்பட்டுவிட்டன. பதுங்கு குழிக்குள் ஒரு தானியம் விதைத்துள்ளோம். கோமாளி எனும் அன்னை நாங்கள்.  வசை மொழியினையும் காழ்ப்புணர்ச்சிகளையும் பொறாமைகளையும் கருத்துருவமான பழி வாங்குதல்களையும் கலையாக உருமாற்றுகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிருகங்களிடமிருந்தும் ஜந்துக்களிடமிருந்தும் கோமாளி மொழியைக் கற்று வந்துள்ளோம்.  துயரக்கண்களில் அரவணைப்பைக் காண்கிறோம்.  துன்பத்திலிருந்து விடுபட நினைத்து மறுதுன்பத்தால் அரவணைக்கப்படுகிறோம். இப்பிரபஞ்சத்திலுள்ள பார்வையாளர்கள்  தம் கண்ணீரால் இந்த விதூஷகர்களைக் காப்பாற்றுவார்கள். கலையின் மொழி கண்ணீருக்குள் அலைவுறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TAaZR6muNSI/AAAAAAAAAWE/3_v9qrlQJpk/s1600/mruga+vithusagam+1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 290px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TAaZR6muNSI/AAAAAAAAAWE/3_v9qrlQJpk/s400/mruga+vithusagam+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5478234529811281186" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கே தெரியாமல் நமக்குள்  ஊடுருவிய கேமராவின் ஜெராக்ஸ் புத்தியை சுவிங்கம் போல் கண்களால் மெல்கிறோம். குருடாக்கப்படும் முழிகண்களுடன் குழந்தைமை. எல்லோருக்கும் கட்டாயப் பரிசுகளாக்கப்பட்ட மீடியாவின் தூக்குக்கயிறுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு பூமியுருண்டையொத்த தலை, கரிசல் காடுகளின் நிலப்பரப்பைப் போன்ற அகன்ற நெற்றி,  பட்சிகளைப்போல புருவங்கள். வேடிக்கை, அடிவாங்குதல், வசை சுமத்தல் இவை எங்கள் உதிரத்தில் கலந்து விட்ட விதிகள். தனியே நாங்கள் ஒருபோதும் சிரித்ததில்லை. நிலத்தில் முகமுரசி பனை விருட்சங்களில் இமைபதித்துச் சொல்கிறோம்.  மிருகவிதூஷக நிலையெடுத்து நாடக நிலத்திற்கு வருகிறோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-2925849073193912449?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/2925849073193912449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=2925849073193912449' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2925849073193912449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2925849073193912449'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/06/blog-post.html' title='மிருக விதூஷகம் - நாடக அழைப்பிதழ்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/TAaVr808ZnI/AAAAAAAAAV8/1b00M03un3Y/s72-c/mruga+vithusagam+2.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-564506535696232512</id><published>2010-04-12T13:11:00.004+05:30</published><updated>2010-04-12T13:29:53.324+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>கேரளா - கோடைகால குறுகிய வேலைவாய்ப்பு</title><content type='html'>கடந்த ஏப்ரல் 08ல் நடந்த "பல் சான்றீரே" மற்றும் "யாது நம் ஊர்?" நாடக நிகழ்விற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S8LR58aQv1I/AAAAAAAAAVo/lldThc0mFCs/s1600/46.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S8LR58aQv1I/AAAAAAAAAVo/lldThc0mFCs/s400/46.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459156491725487954" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S8LSCqWSomI/AAAAAAAAAVw/lwNQPHQ4E24/s1600/p2.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S8LSCqWSomI/AAAAAAAAAVw/lwNQPHQ4E24/s400/p2.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5459156641495818850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரும் வர வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக நிகழ்வின் புகைப்படங்களை &lt;a href="http://picasaweb.google.com/aramangai/ThePlay?authkey=Gv1sRgCIChm9bb546Rbg&amp;feat=email#"&gt;இங்கே&lt;/a&gt; சொடுக்கி காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது மடிக்கணினி உதவிக்காக இதுவரை கிடைக்க பெற்ற தொகை, இரண்டாயிரம் ரூபாய். உதவிய நண்பர்கள் தண்டோரா, சாலமோன் மற்றும் நிகழ்விற்கு வந்து தனது பங்களிப்பை நேரில் தந்துதவிய நண்பர் கண்பத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!. (நண்பர் கண்பத் அவர்கள் என்னை மன்னிக்கவும். அடுத்த நாடகத்திற்கான முஸ்தீபில் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;அமீரகத்திலிருந்து, பாலராஜன் கீதா அவர்கள் எனக்கு தமது சென்னை பயன்பாட்டிற்கென வைத்திருந்த மடிக்கணினியை தந்து உதவியுள்ளார். அதை சர்வீஸ் செய்து தர உதவிவரும் நண்பர் உண்மைத் தமிழனுக்கும், விவேக் அவர்களுக்கும் நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாலை நான் கேரளாவிற்கு தற்காலிக பணிகாரணமாக செல்கிறேன். திரும்பி வர ஒருமாதத்திற்கு மேல் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் வேண்டிய தொகை சேர்ந்தால் புது கணினியில் உங்களுக்கும் பதிவிடுகிறேன். அல்லது திரு. பாலராஜன் கீதா அவர்களின் உபயத்தில் உள்ள மடிக்கணினியில் சில மாற்றங்கள் செய்து உங்களை தொடர்புகொள்கிறென்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களின் மேலான அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;கொசுறு : கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு என்ன்னுடன் சில நாட்களை கழிக்க, என்னைத்  தேடி என் குடும்பத்தார் சென்னை வருகிறார்கள். என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் மேலும் மகிழ்ச்சி கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-564506535696232512?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/564506535696232512/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=564506535696232512' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/564506535696232512'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/564506535696232512'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/04/blog-post_12.html' title='கேரளா - கோடைகால குறுகிய வேலைவாய்ப்பு'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S8LR58aQv1I/AAAAAAAAAVo/lldThc0mFCs/s72-c/46.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-1397585074154159940</id><published>2010-04-05T13:29:00.005+05:30</published><updated>2010-04-05T13:53:00.897+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாடகம்'/><title type='text'>மரப்பாச்சி வழங்கும் இரு நாடகங்கள்</title><content type='html'>நீண்ட நாட்களுக்கு பிறகு அழகான இரண்டு நாடகங்களில் பங்கேற்று நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வாய்ப்பளித்த அ.மங்கை அவர்களுக்கு இங்கே நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் கண்டிப்பாக வந்திருந்து தங்கள் ஆதரவையும், வளமான கருத்தையும் தெரிவுக்குமாறு வேண்டுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S7mcHXEwZzI/AAAAAAAAAVE/7IxUHx7nF_M/s1600/Two+paly.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S7mcHXEwZzI/AAAAAAAAAVE/7IxUHx7nF_M/s400/Two+paly.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5456564073803048754" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தெளிவாக வாசிக்க படத்தின் மீது சொடுக்கவும்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்வில் சந்திப்போம். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-1397585074154159940?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/1397585074154159940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=1397585074154159940' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/1397585074154159940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/1397585074154159940'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/04/blog-post.html' title='மரப்பாச்சி வழங்கும் இரு நாடகங்கள்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S7mcHXEwZzI/AAAAAAAAAVE/7IxUHx7nF_M/s72-c/Two+paly.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-6089765263408655688</id><published>2010-03-03T20:46:00.015+05:30</published><updated>2010-03-23T10:46:35.363+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டனம்'/><title type='text'>கண்டனம் : Drag Queen Rose Vengatesan</title><content type='html'>எனது வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு பாலியல் சிறுபாண்மையினர்களான (LGBT-Lesbian, Gay, Bisex and Transgenders) குறித்த புரிதல் இருக்கும் என்று நம்புகிறேன். இல்லை என்பவர்களுக்கு  இப்பத்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவே படிக்காமல் கடந்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகள் போல பால்மாற்று விளைவு எதும் இன்றி, அதே சமயம் சமபால ஈர்ப்பு உடையவர்கள் போன்றும் இன்றி இன்னதென்று புரிந்து கொள்ள முடியாத சிலர் உள்ளனர். அவர்கள்  Drag Queen என்று அழைக்கப்படுபவர்கள். மேலும் அறிய &lt;a href="http://en.wikipedia.org/wiki/Drag_queen"&gt;இங்கே &lt;/a&gt;சொடுக்கவும். இன்னதென்று வகைப்படுத்த முடியாத தான் தோன்றித்தனமானவர்கள். இவர்களை சமபால் ஈர்ப்புடையவர்கள் என்று சொல்ல முடியாது.  ஏனெனில் சமயங்களில் பெண்ணுடை  அணிந்து கொள்வார்கள், அதேசமயம் ஆண் போலவும் நடந்து கொள்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகள் போல் தோன்றினாலும் பால்மாற்று சிகிச்சை செய்து கொள்ளமாட்டார்கள். மார்பக சிகிச்சை மட்டும் மேற்கொன்டு, ஆண்களுடன் உடலுறவு கொள்வார்கள். அப்போது தங்களையே பெண்ணாகவும், தன் பெண்ணுடலுடன் போகம் கொள்ளும் ஆணாகவும் சரியாக சொல்வதென்றால், சுய புணர்ச்சி கொள்வது போன்ற மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.  ஆண்/பெண் பேதமின்றி யாருடனும் உடலுறவு கொள்ளும் பாலியல் விரும்பிகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S5-h9L-tl3I/AAAAAAAAAU8/vfOLQwaaFjg/s1600-h/drag.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 225px; height: 171px;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S5-h9L-tl3I/AAAAAAAAAU8/vfOLQwaaFjg/s400/drag.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5449252146701506418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, இது போன்ற ட்ராக் குயின்களையும் திருநங்கைகள் என்றே அனைவரும் கருதுவதுண்டு.   இதனால் பெரிய நஷ்டம் இல்லை என்பதால்  நான் உட்பட யாரும் இவர்களைக் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், தற்போது இந்த கண்றாவியைப் பற்றி பேச வேண்டிய  சூழ்நிலையில் இருக்கின்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;நம் அனைவராலும், திருநங்கை என்று அறியப்பட்டு, ஊடகத்தில் புகழ்பெற்று வரும் ட்ராக் குயின் ரோஸ். பலருக்கு இது அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆரம்பத்தில் எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. தனிப்பட்ட முறையில் தனது நண்பர்களுடனும், தன்னுடன் பாலியல் தொடர்பு கொள்ளும் பல நண்பர்களிடமும் ரோஸ் எனப்படும் ரமேஷ் தன்னை ஒரு ட்ராக் குயின் என்றும், சில சமயங்களில் தன்னை ஒரு கே என்றும் வெளிப்படையாகவே கூறிக்கொள்வதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளுக்கான சமூக மாற்றம் என்பது, பல மனித உரிமை ஆர்வலர்களாலும், ப்ரியா பாபு முதல் ரேவதி, லிவிங் ஸ்மைல், நூரி, அருணா, ரம்யா, ஆல்கா, கல்கி வரை பல திருநங்கைகளாலும்  முன்னெடுத்து செல்லப்பட்டது. இவர்கள் அனைவரது ஆரம்பக் கட்ட முயற்சியும் வெற்றியுமே   ரோஸ் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக வளர  அடித்தளமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.topnews.in/pakistani-begum-nawazish-ali-host-indian-tv-28801"&gt;2007ல் பாகிஸ்தானில் பேகம் என்னும் ட்ராக் குயின் 9X தனியார் தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றினை தொகுத்து வழங்கினார்.&lt;/a&gt;  தமிழகத்தில்,  திருநங்கைகளுக்கான சமூக மாற்றம் துவங்கிய நாட்களில் ட்ராக் குயினான ரமேஷ் வெங்கடேசன் பேகம் போல் தொலைக்காட்சி ஊடகத்தில் செலிபிரிட்டியாக வளர தன்னை திருநங்கையாக அறிவித்துக் கொண்டு தமிழ் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் திருநங்கை இல்லையென்றாலும், திருநங்கை என்று அறியப்படுவதாலும் அதனால் திருநங்கைகள் குறித்த நல்ல விவாதம் அமைந்ததால் மற்ற் திருநங்கைகள் அனைவரும் மௌனமாக வரவேற்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S452bNlX6wI/AAAAAAAAAU0/zPc2GMsZLes/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 94px; height: 118px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S452bNlX6wI/AAAAAAAAAU0/zPc2GMsZLes/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444419209412471554" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், புகழ் மயக்கத்தில் இன்னும் சாதிக்க நிறைய உள்ள நிலையில் திருநங்கைகள் குறித்த அடிப்படை புரிதல் இன்றி ஏனோதானோ-வென இவர் பரப்பி வரும் அவதூறுகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது.   தன்னை பேச அழைக்கும் இடங்களில், பத்திரிக்கை நேர்காணலில் தன்னை உயர்வாகவும் எல்லாத் திருநங்கைகளையும் மட்டமாகவே தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒரு பத்திரிக்கை ஒன்றில் அளித்த நேர்காணலில் அளவு மீறி அவதூறாகப் பேசி  வருகிறார்.  அதன்  சாராம்சம்  சுருக்கமாக எல்லாத் திருநங்கைகளும் பிச்சை மற்றும் பாலியல் தொழிலாளிகளுமாகவே இருப்பாதக கூறிவருகிறார்.  திருநங்கைகள் உழைக்கத் தயாராக இல்லை என்கிறார். இதுவரை ஏற்பட்ட திருநங்கைகள்  சமூகபுரிதல் மற்றும் மாற்றங்களுக்கு தான் ஒருவரே காரணம் என்றும் கூறுகிறார். தன்னையும் திருநங்கைகள் பிச்சை/பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயப்படுத்தியாகவும் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;நிஜத்தில் இவருடன் எந்த திருநங்கைக்கும் தொடர்பில்லை. உண்மையில் இவர் பிரபலமாவதற்கு முன்பு, தன்னை கே என்றே அனைவரிடமும் கூறிக்கொன்டு சமபால் ஈர்ப்பு கொண்ட தோழர்களுக்கான தொன்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். மட்டுமன்றி மற்ற திருநங்கைகள் மீது இவர் வைக்கும் அதே குற்றச்சாட்டிற்கும் இவரே உரியவர் தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற திருநங்கைகள் பணத்திற்காக பாலியல் தொழில செய்தால் இவர் வெறும் பாலியல் தேவைக்காகவே ஆண்கள் கழிப்பறை, ECR Road, Beach என்று வெறியுடன் சுத்தியவர்தான். இன்று ரோஸாக பிரபலமடைந்த போதும் அதில் எந்த மாற்றமும் இன்றி அலைபவர்தான். ரோஸ் நேரம் என்னும் தனது நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநர்கள் தேர்வு செய்யும் தகுதியான ஆட்களை விட்டு தன்னுடன் உடலுறவு கொன்ட ஆண்களை  நிகழ்ச்சிக்கு பயன்படுத்தும் அற்ப பாலியல் வெறியர் தான் ரோஸ். இத்தகைய கீழ்தரமான செயலை உதவி இயக்குநர்களே நேரில் கன்டு எரிச்சலடைந்ததும் உன்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனது அலுவலகத்திலேயே பலரையும் வரவைத்து இத்தகைய கருமத்தை செய்பவர் தான். எனக்கும் ரோஸுக்கும் பொதுவான சில நண்பர்கள் இதை நேரடியாக கண்டு என்னிடம் கூறி வருந்தியதும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தைகைய கீழ்த்தரமான இவர் பொருளாதார தேவைக்காக பாலியல் தொழில் செய்யும் நிஜ திருநங்கைகளை விமரசனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நான் உட்பட பலரும் கண்டிப்பாக திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வேன்டும் என்று தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இவர் எப்போதும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவ்வாறு சொல்வதில்லை ஆனால் திருநங்கைகள் மீது மட்டும் பலி போட்டு அதன் மூலம் தன்னை உயர்ந்தவராக காண்பித்துக் கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜ திருநங்கைகள் பலரால அவர்களது சூழல், காரணமாக தொடர்ந்து மேற்படிப்பு மேற்கொள்ள முடிவதில்லை. அதையும் தாண்டி படித்த பல திருநங்கைகள் உண்டு. அவர்கள் குறைந்த பட்சம் தொன்டு நிறுவனங்களிலாவது பணிபுரிவதுன்டு.  இவர் பிரபலமடைவதர்கு முன்பிருந்தே பல திருநங்கைகள் பூ கட்டுதல், சமையல் என சுயதொழில் செய்தும், சித்தாள் வேலை போன்று சுயதொழில் செய்தும் கண்ணியமாக வாழ்வதுண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளின் சமூக அவலம் குறித்த அரசியல் இன்றி, தனது சுயலாபத்திற்காக, பேர் புகழ்  அடைவதற்காகவும் முட்டாள் தனமாக தனக்கு கிடைத்திருக்கும் கௌரவத்தை இழந்து வருகிறார்.  நிஜத்தில் இவர் ட்ராக் குயின் என்பதால் திருநங்கைகள் யாரும் இவரை ஒரு பொருட்டாக மதிக்காக நிலையில் தன் மீது அனைவரும் பொறாமைப்படுவதாகவும் கூறுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த சமூக அங்கீகாரமும் இல்லாத நிலையிலே ப்ரியாபாபு போன்ற பல திருநங்கைகள் பல சாதனைகள் செய்தபோதும் திருநங்கைகள் மத்தியில் அவருக்கோ, என்னை போன்ற மற்ற தோழிகளுக்கோ பொருளாதாரரீதியில் எளியவர்கள் என்ற காரணத்தால்  எந்த தனி மரியாதையும் கிடைத்ததில்லை. யார் மீதும் எந்த பொறாமையும் இருந்ததில்லை. யாரும் யார் மீதும் பொறாமை கொண்டதுமில்லை.  எங்களைப் போன்ற சமூக போராளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த மரியாதையும் இருந்ததில்லை. இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை ஒரு பெரும் சகாப்தமாக கருதி, கற்பனை வாழ்க்கையில் மிதக்கும் ரோஸ் எனப்பட்டும் ரமேஷ் வெங்கடேஷனுக்கு அனைத்து திருநங்கைகள் சார்பாக  இதை ஒரு நேரடி எச்சரிக்கையாக பதிவு செய்கிறேன்.&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;பி.கு.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;தயவுசெய்து, யாரும் இதை தனிநபர் வஞ்சம் என்று தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது குறித்து மேலும் விளக்கம் தர தயராகவே உள்ளேன் (விரைவில் கணினி பெற்றதும். அவர் ட்ராக் குயினாகவே இருந்தலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மேது எனக்கு எந்த விமர்சனமும் கிடையாது. அவர் திருநங்கை என்ற அடையாளத்தை பயன்படுத்தி வளர்ந்து விட்டு, எங்களையே கேவலப்படுத்துவதை கண்டிப்பதே இந்த பதிவின் நோக்கம். அதோடு, இது ஒட்டு மொத்த திருநங்கைகளின் குரலும் ஆகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-6089765263408655688?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/6089765263408655688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=6089765263408655688' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6089765263408655688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6089765263408655688'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/03/track-queen.html' title='கண்டனம் : Drag Queen Rose Vengatesan'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S5-h9L-tl3I/AAAAAAAAAU8/vfOLQwaaFjg/s72-c/drag.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-7915856144398821469</id><published>2010-03-03T20:02:00.003+05:30</published><updated>2010-08-31T13:46:32.772+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>உதவி</title><content type='html'>இது குறித்து கேட்கலாமா? கூடாதா? என்று தெரியவில்லை. இருந்தாலும், எதுக்கும் இருக்கட்டும் என்று நண்பர்களிடம் கேட்கிறேன் ஒரு உதவி. பகுதி நேர சுய தொழில் போல, என்னால் DTP பணிகள் செய்ய முடிவதாலும், தனிப்பட்ட முறையில் எனது எழுத்துப் பணி மற்றும் சமூகப் பணிகளுக்கும் கணினி அல்லது மடிக்கணினி வாங்கும் எண்ணம் நீண்ட நாட்களாக உள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே சொன்னது போல், கடந்த ஆண்டு முழுவதும் நிரந்தர வேலையின்றி, உடல்நிலையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன். மடிக்கணினி/கணினி வாங்கும் தேவையை நிறைவேற்ற முடியவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;பல நண்பர்கள் முன்பு எனக்கு உதவி செய்ய தயாராக உள்ளதாக சொல்வதுண்டு. யார் யாரென்று நினைவில்லை.     எனக்கு உதவத் தயாராக உள்ள யார்வேண்டுமானாலும் தயங்காமல் எனக்கு உதவ வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தங்களால் முடியாத போதும், தங்களுக்கு தெரிந்த நண்பர்களோ, அமைப்புகளோ உதவ தயாராக இருப்பினும் தகவல் தெரிவிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதவ          Name    : Living Smile Vidya,&lt;br /&gt;               Acct No . 862 137 740&lt;br /&gt;               Bank    : Indian Bank, &lt;br /&gt;               Branch  : Saida pet, &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பிற்கு  : +91 99944 36973&lt;br /&gt;&lt;br /&gt;               livsmile@gmail.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-7915856144398821469?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/7915856144398821469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=7915856144398821469' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7915856144398821469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7915856144398821469'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/03/blog-post.html' title='உதவி'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-8605754745312924258</id><published>2010-03-03T18:11:00.011+05:30</published><updated>2010-03-03T20:50:26.961+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பகிர்வுகள் : 2010</title><content type='html'>&lt;span class="magazine"&gt; க&lt;/span&gt;டந்த வருடம், பொருளாதார மற்றும் ஆரோக்கியம் சார்ந்து மிக கடுமையான வருடமாக அமைந்து விட்டது. அதற்கு பொறுப்பும் நானே. 2010 எனக்கு நல்ல மாற்றம் தரும் நம்பிக்கையோடு துவங்கியுள்ளேன். புதுவருடம் துவங்கி மார்ச் மாதமே வந்த பிறகு புத்தாண்டு குறித்து எழுதுவதற்கு சிறப்பாக ஒன்றும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வலைப்பூவில் பகிர்ந்து கொள்ள பல விசயங்கள் உள்ளன.  அவற்றை சுருக்கமாக சொல்லிச் செல்ல விரும்புகிறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாடகம் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி நாட்களில் என் மனதிற்கு நெருக்கமாக இருந்தது நாடகமும் நாடகம், சார்ந்த நண்பர்களும். கல்லூரி முடிந்து பின் வாழ்க்கைப் புயலில் பல நெருக்கடிகள், அனுபவங்களுக்கிடையே நாடகம் என்னிடம் இருந்து விலகி விட்டது. அல்லது நான் நாடகத்திடமிருந்து விலகிவிட்டிருந்தேன். மதுரை, சென்னை, சுயம், உதவி இயக்குநர் என பல தடங்களில் சென்ற பயணத்தில் நாடகத்திடமிருந்து அந்நியப்பட்டு போனேன். &lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடம் 2009 முழுவதும் வேலையின்றியும், உடல்நிலை சரியின்றியும் மன உளைச்சலில் சிக்கி தவித்தேன். அந்நிலையில் நண்பர் ஸ்ரீஜிதின் அறிமுகம் நாடகத்தில் மீண்டும் பங்குபெறும் வாய்ப்பிற்கு வழிகாட்டியது. ஊடக பயங்காரவாதம் குறித்த அரைமணிநேர நாடகம் என்.ராமயணத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று முறை மேடையேறி இந்நாடகத்திற்குப் பிறகு, தற்போது அ.மங்கையின் நாடகமொன்றில் நடிக்கும் வாய்ப்பும் வந்து ஒத்திகை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மீட்டுருவாக்கம் என்பதை பொருள்கொள்ளும் வகையில் என்னை நான் நாடகத்தில் நிரப்பவும், மன நிறைவு கொள்ளவும் அ.மங்கையுடனான தோழமை உதவிவருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இடையில், நண்பர் ஸ்ரீஜித்தின் இயக்கத்தில் கவிதை வாசுப்பு (நாடக நிகழ்த்து வடிவில்) நிகழ்வும் நடந்தது. இதில் கவிஞர் மாலதி மைத்ரியின் கவிதை ஒன்றும், எனது இரண்டு கவிதைகளும் பாடுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.  என்றோ ஒருநாள் மழை பெய்வது போல, ஏதோ ஒருநாள் கவிதை(என்று நான் நம்புவது) எழுதும் பழக்கமுள்ளவள். கவிதை எழுதுவது குறித்து எந்து உற்சாகமும் எனக்கு இருந்ததில்லை.   ஆரம்பத்தில் கவிதை வாசிப்பில் எனது கவிதையை எடுத்துக் கொன்டதாக ஸ்ரீஜித் சொன்ன போது எனக்கு பெரிய ஆர்வமில்லை.  ஆனால், நிகழ்வு சிறப்பாக முடிந்த பிறகு எனது கவிதை குறித்தும், என்னை குறித்தும் கொஞ்சம் பெருமிதமாக உணர்ந்தேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரைப்படங்கள் &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று திரைப்படங்கள் குறித்து பேச விரும்புகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S45lu0iVNSI/AAAAAAAAAUc/eUkOSlVutms/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 132px; height: 85px;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S45lu0iVNSI/AAAAAAAAAUc/eUkOSlVutms/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444400854588536098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஆயிரத்தில் ஒருவன் -&lt;/em&gt; அநேகமாக எல்லோரும் பேசி முடித்தது தான். நல்ல முயற்சி என்றும் சொல்லலாம். படத்தில்  குறிப்பாக பாராட்ட விரும்புவது. சோழர்கள், புலி அடையாளம், தங்களை மீட்க  சோழர்கள் வருவார்களா என, இறக்கும் தருவாயில் கடல் தாயை ஏக்கத்டுடன் பார்க்கும் சோழ மன்னன். ஈழத்தை நினைவுபடுத்தும்  எல்லாம் சரி.  ஆனால், கதை? கதை குறித்தோ, சோழ/பாண்டியர்கள் குறித்தோ இயக்குநருகு  தெளிவில்லாதௌ ஏன்?  சோழ நாடு சோறுடைத்து, ஆனால்  எங்கள் சோழர்களை சோத்துக்கு விதியில்லாமல் ஆக்கியது சொல்லுங்கோள்  ஆக்க்செல்வராகவன், ஏன்?  பயங்கர திட்டமிடளுடன் அதிபயங்கரமாக ஏழு பொறி வைக்க முடிந்த சோழர்களால் சோத்துக்கு வழி செய்யமுடியாது என  எப்படி யூகித்தீர்கள்? போதாததற்கு சோழ அரசன் நரபலி கொள்வதும், குரங்கு சேட்டை செய்வதும் ஏன்? கட்டட, விவசாய, இலக்கிய வளம் நிறைந்த ஒரு இனத்தை நாகரீகமற்ற சமூகமாகக் காட்டியது என்ன நாகரீகம்? &lt;br /&gt;&lt;br /&gt;அடப் போங்கயா!!   நீங்களும்,  உங்க புதுமையும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சொட்சி என்ற யோகி&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S45nalMS8SI/AAAAAAAAAUk/XyYmLgWrFiA/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 85px;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S45nalMS8SI/AAAAAAAAAUk/XyYmLgWrFiA/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444402705895452962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகப் படம் / எதார்த்தப்படம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட பொறுக்கித்தனமான படம் யோகி.  பின்ன என்னங்க, எதார்த்தம்னற பேர்ல, சேரி, அதுல  (சகல ஹீரோரோயிஸத்துடன் கூடிய)  ஹீரோ. காப்பியடிச்சாலும், தெளிவா காப்பியடிச்சிருக்காங்கப்பா. ஒரிஜினல் யோகியோட  முத  சீன்ல எல்லாரும் சேர்ந்தும் செய்றது கூட்டு கொல முயற்சி தான். நான் நம்ம யோகி வானத்துலர்ந்து குதிச்ச லாடு லபக்குதாஸாச்சே, அவரே தனியாள வெறப்பா, கொல பண்ண்டிட்டு, டெய்லா வருவாரு. ஆனா ஒரிஜினல்ல கொல பண்றதே ப்ரென்டுங்கள்ள ஒருத்தன் தான். &lt;br /&gt;&lt;br /&gt;சரி Hஈரோயிசன்னாலும் பரவால்ல. ஒரிஜினல்ல நண்பர்கள் சண்ட போட்டுக்கிட்டாலும், அவங்களுக்குள்ள அழகான நட்பும், அவங்க  வாழ்க்க  நெலம பத்தின பரிதாபமும் சூப்பரா சொல்லிரிப்பாங்க. இங்க,  நாலு பேரும் பணத்துக்காக மட்டும் யோகிகூட பழகுற மாறியும், கொஞங்க்கூட ப்ரண்சிப்போட மதிப்பே தெரிய பொறுக்கிங்க மாறிதான் காட்டிருப்பாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாவுடுங்க, தொட்சி அந்த பாப்பா வீட்டுக்குப் போயி பொம்மைய எடுக்கும் போது, தான் கொழந்தய இருந்த வீட்டோட வறுமையையும், இந்த வீட்டோட வசதிவாய்ப்பையும் நெனச்சு பாக்கும் போது, அந்த சமூக ஏற்றத் தாழ்வு அழகா காட்டிருப்பாங்க. இங்க, "உன்ன டாக்டர் ஆக்குறேன், கலெக்டர் ஆக்குறேன்னு" ஈரோவ, வெள்ளந்தியா காட்டுறேன் ஈரோயிஸம் காட்டுறாங்க.  ஒன்னுல்ல, அந்த கைப்புள்ளய எடுத்துக்கிட்டு சின்ன வயசுல தொட்ஸி இருந்த எடத்துக்கு கூட்டிட்டுப் போற சீன் இருக்கே என்ன பொருத்த வரை அதுதாங்க மொத்தப்படமே. எவ்வளவு அழகா அந்த ஆயிஅப்பன் இல்லாத பிள்ளங்க வாழ்க்கைய பொய்யா பச்சாதாபம் சேக்காம காட்டிருப்பாங்க, நம்ம தமில் யோகிக்கு பரிதாபமா ஒரு ப்ளாஸ்பேக்.  &lt;br /&gt;&lt;br /&gt;மதுரையோ, மெட்ராஸோ எதார்த்த படம்னா, சேரி ஆளுக, பொறுக்கியா ரவுடித்தனமா திரியிறது தான் உங்க எதார்த்தம்.  போய்யா... போய் நெஜ  சேரியும், சேரி ஜனங்களும்  எப்பிடி இருப்பாங்கன்னு போயி நேர்ல பாரு.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;விண்ணைத்தாண்டி வருவாயா&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S45vxPdQYGI/AAAAAAAAAUs/GuVIJ89_qQ8/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 121px;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S45vxPdQYGI/AAAAAAAAAUs/GuVIJ89_qQ8/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444411891291021410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படம் நல்லா இருக்கா, இல்லை என்பது என் பிரச்சனை அல்ல. ஆனால், அலைகள் ஓய்வதில்லை முதல் இன்றைய (கோயில், மும்பை உட்பட) விண்ணைத்தாண்டி வருவாயா வரை கலப்பு காதல் கதைகளில் எனக்கு சில சந்தேகங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஏன் எப்பவும் நாயகன் இந்துவாகவும், நாயகி கிறிஸ்தவள்/முஸ்லீமாகவே இருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் எப்பவும் இந்து நாயகனின் அப்பா/குடும்பம் நல்லவர்களாகவும், இந்துஅல்லாத நாயகியின் அப்பா/அண்ணன் வில்லனாகவும் இந்துக்களை வெறுப்பவர்களாகவுமே இருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் நாயகனின் தங்கை நாய்கனின்  காதலுக்கு ஆதரவாகவும், நாயகியின் அண்ணன் காதலுக்கு வில்லாதி வில்லனாகவும் இருக்கிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணை தாண்டி வருவது இருக்கட்டும். முதலில், உங்கள் ஸ்டீரியோ டைப் ஆணாதிக்க/மதவாத சிந்தனையை தாண்டி நீங்கள் வாருங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;புத்தகம்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுகாறும் எழுதி வந்த கட்டுரைகளை தொகுத்து, கட்டுரை தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் (நோ, அழக்கூடாது) கொன்டுவரும் எண்ணம் இருந்தது. முயற்சியில்லை. தற்போது அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். விரைவில் வரக்கூடும். இது போக, கவிஞர் குட்டிரேவதியின் ஊக்குவிப்பில், தமிழ் இலக்கியத்தில் திருநங்கைகள் குறித்த  பதிவுகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை எழுதும் எண்ணமும் உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-8605754745312924258?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/8605754745312924258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=8605754745312924258' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8605754745312924258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8605754745312924258'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2010/03/2010.html' title='பகிர்வுகள் : 2010'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/S45lu0iVNSI/AAAAAAAAAUc/eUkOSlVutms/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-8821943445240845539</id><published>2009-11-19T14:53:00.033+05:30</published><updated>2010-03-03T18:46:35.855+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு'/><title type='text'>திருநங்கைகள் அடிப்படை உரிமையும், அடையாள அட்டையும்.</title><content type='html'>&lt;span class="magazine"&gt; இ&lt;/span&gt;ந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் 5/10 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படக்கூடிய பல மாற்றங்கள் திருநங்கைகள் விசயத்தில் தமிழ்நாட்டில்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்மாற்றத்திற்கு பல்வேறு மட்டங்களில் அவரவர் தளத்தில் தொடர்ந்து உழைத்த திருநங்கைகள் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமென  2002ல் திருநங்கை ப்ரியா பாபு அவர்களும், வழக்கறிஞர் ரஜினியும்  உயர்நீதி மன்றத்தில் ரிட்(Writ) பதிவு செய்தனர். அம்முயற்சி நல்ல பலன் அளித்தது. அதே ஆண்டு திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.அதேசமயம் அவர்களது பாலினத்தில் ஆண்ணா பெண்ணா என்பதை திருநங்கைகள் அவரகள் விருப்பத்திற்கேற்ப நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தெளிவிள்ளாததாக இருந்தது. திருநங்கைகள் குறித்த அரசு இயந்திரத்தின் முதல் அசைவாக இதை எடுத்துக்கொள்ளலாம். இது திருநங்கைகள் நலன் குறித்த முக்கியமான கவனஈர்ப்பை ஊடகமத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. 2006ல் வழக்கறிஞர் ரஜினியின் உதவியுடன் முழுதாக ஒருவருட உழைப்பிற்குப் பிறகு  என் பெயரை லிவிங் ஸ்மைல் வித்யா என்றும் பாலினம் பெண் எனவும் கெஜட்டில் மாற்ற முடிந்தது. பாலின மாற்றம் குறித்து அரசு ஆவணங்களில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் இவை. &lt;br /&gt;&lt;br /&gt;இவற்றின் தொடர்ச்சியாக பலரது போராட்டத்தால் கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான திருமிகு. கனிமொழி அவர்களின் பெருமுயற்சியாலும், திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய செயல்பாடாக சமீபத்தில் திருநங்கைகளுக்கு முதலகட்டமாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மேலோட்டமாக இவை நல்ல மாற்றங்களாக இருந்தாலும், திருநங்கைகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு திருநங்கைகளின் தேவை குறித்து முழுபுரிதலோடு செயல்படவில்லையோ என்று தோன்றுகிறது. எனது நோக்கம் அரசைக் குறைசொல்வதில்லை. உண்மையில் அரசை நெருங்கும் நிலையிலுள்ள மூத்த திருநங்கைகள் முறையாக இப்புரிதலை ஏற்படுத்தவில்லை என்பதே என் கருத்து. &lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு அடையாள அட்டை விசயத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு குடிமகளாக திருநங்கைகளுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் தேவை. அதை முழுமையாக அடைவதே திருநங்கைகள் நலத்திட்டங்களின் அடிப்படை நொக்கமாக இருக்கவேண்டும். இவ்வாறு அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெற திருநங்கைகளும் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதற்கு ஆதாரம் தேவை. இது அடையாள அட்டையின் மூலமே சாத்தியப்படும். திருநங்கைகளோ தங்கள் பாலினதிரிபு காரணமாக எந்த அடையாளமும் இன்றி தாய்நாட்டு அகதிகளாக சட்டத்தால் கைவிடப்பட்டோர் ஆகின்றனர். எனவே திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் என்பது அடையாள அட்டை மூலமே சாத்தியப்படும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அடையாள அட்டை என்பது தற்போது திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இந்த அடையாள அட்டை அன்று. அனைத்து ஆண்/பெண்ணிற்கு உள்ளது போல் குடும்ப அட்டையாக, வாக்காளர் அடையாள அட்டையாகவும், ஓட்டுநர் உரிமமாகவும் இன்ன பிறவாகத்தான் இருக்க வேண்டும். சொல்லப்போனால் பெரும்பாலான திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் இருக்கவே செய்கிறது.  சிலருக்கு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் நிரந்தர குடியுறுப்பு (வாடகைவீடாகக்கூட) இருப்பதில்லை. அல்லது அடையாள அட்டை பெருவதற்காக இதுவரை முயற்சிக்காமல் இருப்பது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து மேலும் விவாதிக்கும் முன் தற்போது வழங்கப்பட்டுள்ள இவ்வடையாள அட்டையை ஒரு பார்வை பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SwUjzBkuFUI/AAAAAAAAATo/UhchVRfBJRI/s1600/id+02.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 352px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SwUjzBkuFUI/AAAAAAAAATo/UhchVRfBJRI/s400/id+02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405766287230899522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SwUkDUlaCJI/AAAAAAAAATw/LuW-_gOPKi0/s1600/id+01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 336px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SwUkDUlaCJI/AAAAAAAAATw/LuW-_gOPKi0/s400/id+01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405766567211960466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வடையாள அட்டையில் உள்ள தகவல்கள் புகைப்படத்துடன் சேர்த்து&lt;br /&gt;&lt;br /&gt;அந்நபரின்   இயற்பெயர் : ........... &lt;br /&gt;       தற்போதைய பெயர் : ...........&lt;br /&gt;                       முகவரி : ...........&lt;br /&gt;           உறுப்பினர் எண் : ...........  அவ்வளவே.  இதிலுருந்து பெறக்கூடிய பயன் என்ன? அல்லது இந்த அட்டை இல்லாததால் இழக்கப்போவது என்ன? பொதுவாக, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் அனைத்து அடிப்படை உரிமைகளும் பெற ஆதாரமாக அக்குடிமகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை சான்றுகள் சில உண்டு. &lt;br /&gt;             பெயர் மற்றும் பெற்றோர் பெயர் சான்றிதழ்,&lt;br /&gt;             முகவரி சான்றிதழ்,&lt;br /&gt;             வயது சான்றிதழ்,&lt;br /&gt;             கல்வி சான்றிதழ்,&lt;br /&gt;             சாதி (மத) சான்றிதழ், &lt;br /&gt;             புகைப்பட சான்றிதழ் இது போக தனித்திறமை ஏதேனும் இருந்து, விளையாட்டு போன்றவற்றில் பெற்ற சான்றுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் பெயர் மற்றும் முகவரி தவிர இதர முக்கிய சான்றுகளான வயது, பெற்றோர், கல்வி, சாதி சான்றுகள் குறிப்பிடப்பட வில்லை. இவை எதுவும் குறிப்பிடாத பட்சட்த்தில்  ஒரு குடிமகனுக்குரிய எந்த சலுகைகளும் பெறமுடியாது. குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு. வெறும் முகவரி அடையாள அட்டையை வைத்து திருநங்கைகள் பழையபடி பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் தான் முடியும். யோசித்துப் பாருங்கள் இது திருநங்கைகள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகள் பாலின மாற்றம் பெறுபவர்களாக இருப்பதால் நியாயமாக அவர்களின் பாலின மாற்றத்தைக் குறிக்கும் &lt;strong&gt;மருத்துவ சான்றிதழே &lt;/strong&gt;வழங்கப்பட வேண்டும். அதாவது ராசிபலன்/மதமாற்றம் போன்ற காரணத்தால்  பெயர்மாற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழைப் போல திருநங்கைகளின் பாலின மாற்றம் குறித்த சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இதில் பெயர் மாற்றுச் சான்றிதழில் குறிக்கப்படுவதைப் போல &lt;strong&gt;இன்ன முகவரியில், இன்ன தேதியில், இன்னாருக்கு மகனாக பிறந்த இன்னார் அவரது பாலினதிரிபு காரணமாக இன்ன தேதியிலுருந்து இனி இன்னாராக, இன்ன (திருநங்கை அல்லது மாறியபாலினம் -பெண்)  பாலினமாக அறியப்படுவார் &lt;/strong&gt;என்று சான்றளிக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அனைத்து அடிப்படை குறிப்புகளும் அடங்கிய பால்மாற்றுமருத்துவ சான்றிதழ் மூலமாக திருநங்கைகள் தம் பாலின அடையாளம் மாறினாலும், தமது பழைய குடும்ப அட்டையில் (திருநங்கை / மாறிய பாலினம் பெண்) என மாற்றிக் கொண்டு சராசரியாக வாழமுடியும். குடும்பம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் குடும்ப அடையாள அட்டையிலிருந்து நீக்கல் சான்றிதழ் பெற்று தனியாக குடும்ப அட்டையும், தொடர்ந்து மற்ற அடையாள அட்டைகளும் பெறமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;முக்கியமாக ஆண் அடையாளத்தில் பெற்றிருந்த  கல்விச்சான்றிதழ், பணியாற்றியிருப்பின் அந்நிறுவனத்திடம்  பெற்ற பணி அனுபவச்சான்றிதழ்/நன்னடத்தை சான்றிதழ் என அனைத்துயும் தொடர்ந்து பெண் அடையாளத்திலும் பயன்படுத்த  முடியும். தங்கள் படிப்பை பாதியில் விட்டவர்கள் தற்போது விரும்பினால் தொடர்ந்து படிக்கவும், அல்லது அவர்களது மேற்படிப்பிற்கும் இந்த மருத்துவ சான்று ஆதாரமாக உதவும். இதுபோலவே  வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும்  உதவும். மற்ற அடையாள அட்டைகளான வங்கி கணக்கு, பாஸ்போர்ட் போன்றவையும் தொடர்ந்து பயன்படுத்த முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;இது பிறப்பால் ஆணாக இருந்து இயற்கையின் விளைவால் பெண்மையை உணர்ந்து பெண்ணாக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமன்றி, பெண்ணாக பிறந்து ஆணாக வாழ்பவர்களுக்கும்  பொருந்தும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல. ஆண்/பெண் இருவருக்கும் சளைத்தவர்கள் திருநங்கைகளும் அல்ல எனபதை அனைவரும் உணர வேண்டும்.  திருநங்கைகளில் உள்ள பல படித்த, படிக்காத திருநங்கைகளுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ், பாலினத்திரிபு காரணமாக குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்படும் திருநங்கைகள்  தொடர்ந்து தங்கள் குடும்பத்துடன் வாழ தகுந்த வழி செய்ய வேண்டும்.  சில குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும்  அக்கம்பக்கத்தினரின் ஏச்சிற்கு அஞ்சிய  திருநங்கைகளை  விலக்கி வைக்கும் நிர்பந்ததிற்கு ஆளாகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, சமூகம் திருநங்கைகளை மருத்துரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் புரிந்து கொள்ள அரசு மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, தண்ணீர்/ பெர்ரோல் போன்ற இயற்கை வளங்கைகளை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்த, வரதட்சணை, ஈவ்டீசிங் போன்ற குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தெல்லாம் பொது நலன் கருதிய விளம்பரங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல், திருநங்கைகள் குறித்தும், அவர்களையும் சகமனிதர்களாக பார்க்கவேண்டும் என்ற பொது நலன் விளம்பரங்களை அரசு செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்களில் திருநங்கைகளை தவறாக சித்தரிப்பதை தணிக்கை துறை தடை செய்யவேண்டும். இவ்வாறு முறையான அடையாள அட்டை பெறுவதோடு மேலும் எத்தனையோ பல ஆக்கப்பூர்வமான காரியங்கள் திருநங்கைகள் நலனுக்காக செய்ய வேண்டியுள்ளது.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதுள்ள அரசு திருநங்கைகளின் நலனில் அக்கறையும், கனிவும் கொண்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி முன்னேறுவது நம் கையில்தான் உள்ளது. எனவே, ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் அரசு நிர்வாகத்தை நெருங்கும் இடத்தில் உள்ள திருநங்கைகள் வெறும் இனாம்களையும், சலுகைகளையும் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல்,  மாறாக சராசரி குடிமகனுக்குள்ள அனைத்து உரிமைகளையும் திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும் எனபதை அரசிற்கு புரியவைத்து  அவற்றை அடைவதற்கான சீரிய முயற்சியில் ஈடுபட வேண்டும். இதுவே, இதுநாள் வரை உரிமைகள் மறுக்கப்பட்ட,  சமூக ஒருங்கிலிருந்து விலகப்பட்ட திருநங்கைகளுக்கு  சரியான வலிநிவாரணியாகும். இனிவரும் தலைமுறைகள் தன்னம்பிக்கையோடும், சுயகௌரவத்தோடு தலைநிமிர்ந்து வாழ உதவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகள் மைய நீரோட்டத்தில் கலக்க தேவையான அனைத்து முயற்சிகளும் அரசால் எடுக்கப்பட வேண்டும். தன் குழந்தை ஒரு திருநங்கை என்பதை  எண்ணி பெற்றோரும், உடன்பிறப்புகளும் வருந்தும் நிலை இனி மாற  வேண்டும். சமூகமும் திருநங்கைகளை ஒரு வேடிக்கை பொருளாக அன்றி சக மனிதர்களாக பார்க்கும் நிலை வரவேண்டும். அதற்காக அரசின் உதவியோடு மனம் திறந்து ஒன்றாகப் போராடுவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-8821943445240845539?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/8821943445240845539/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=8821943445240845539' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8821943445240845539'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8821943445240845539'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2009/11/510.html' title='திருநங்கைகள் அடிப்படை உரிமையும், அடையாள அட்டையும்.'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SwUjzBkuFUI/AAAAAAAAATo/UhchVRfBJRI/s72-c/id+02.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-2134406997466023391</id><published>2009-09-24T13:16:00.015+05:30</published><updated>2010-03-03T18:47:04.806+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><title type='text'>திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்</title><content type='html'>&lt;span class="magazine"&gt;த‌ &lt;/span&gt;னிப்பட்ட முறையில் எனக்கு திருமணம் என்ற சடங்கில் உடன்பாடு இல்லை என்றபோதும், ஒவ்வொரு தனிநபருக்கும்  குறிப்பிட்ட கட்டத்திற்குப்பின் வாழ்க்கையின்  அனைத்து சூழ்நிலையிலும் ஆத்மபலமாக நிற்கும் துணையொன்று நிச்சயம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர், உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்கள் சூழ வாழும் சராசரி ஆண்/பெண்ணுக்கே வாழ்க்கைத் துணை தேவை என்னும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட உறவுப்புல‌மும், பொருளாதார பலமும் இன்றி கேள்வியாய் குறுகி நிற்கும் திருநங்கைகளுக்கு வாழ்க்கைத்துணை நிச்சயம் தேவைதானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Srs8g6Ojs4I/AAAAAAAAATY/UohXvYkc7HY/s1600-h/marriage.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 139px; height: 111px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Srs8g6Ojs4I/AAAAAAAAATY/UohXvYkc7HY/s400/marriage.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5384964315535356802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகள் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, திருநங்கைகள் பொது இடங்களில் சமூக ஒழுங்குகளுக்கு கட்டுப்படாமல் இருக்கிறார்கள் என்பதாகும். இதுவே மற்றவர்களுக்கு அவர்கள் மீது அசூசை ஏற்படுத்தி அவர்களை கண்டால் கலவரப்பட்டு ஒதுங்கி நிற்கவும், அறுவெறுத்து ஒதுக்கவும் காரணமாக அமைவ‌தாக  சொல்லப்படுவதுண்டு. சற்று கரிசனையோடு அதன் உளவியல் பிண்ணனியை ஆய்ந்தால், நானறிந்த வரையில் அதற்கு காரணம், தங்களை மனிதர்களாகவே பொருட்படுத்தாத இச்சமூகத்தின் மீது இயலாமையின் இறுதிப்பிடியில் ஏற்படும் காழ்ப்புணர்வு/கலகத்தின் வெளிப்பாடாகும். பிறருடைய கேலி, வன்முறைகளிடமிருந்து தப்பிக்க உதவும் ஆயுதமும் இதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக, ஒருசில திருநங்கைகள் அவ்வாறன்றி மற்ற ஆண்/பெண் பாலினத்தவர்களைப் போன்று இயல்பானவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. ( நான் அந்தமாதிரி யாரையும் பாத்ததிலைன்னு சொல்லாதிங்க. ஏன்னா, சராசரி பெண் மாதிரி இயல்பா இருக்கும் திருநங்கைகளை நீங்கள் கடக்கும் போது அவர்கள் திருநங்கை என்பதே உங்களால இனம் காண முடியாது.) அதற்கு காரணம் அவர்கள் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பெற்றோர் அரவணைப்பில் வாழ்பவர்களாக இருப்பார்கள். அல்லது, சமூக அந்தஸ்துடன், ஓரளவேனும் சமூக அங்கீகாரம் பெற்றவர்களாகவேணும்  இருப்பதைக் காணமுடியும்.  ஆக, தங்களது உடல்மொழி, ஆடை அலங்காரத்தில்  கண்ணியம் காக்க தேவையாய் இருப்பது ஏதோவொரு அரவணைப்பும், அனுசரனையான சூழலும் தான். எல்லா பெற்றோர்களும் திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள முன்வராத இச்சூழலில் எது திருநங்கைகள் சமூக பிரக்ஞையுள்ளவர்களாக, பிறரை கலவரப்படுத்தாதவர்களாக வழிநடத்தும்?&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கைத்துணை?!  ஆம், வாழ்க்கைத் துணையாக ஒருவன் வந்தால்! தன்னை முழுதாய் புரிந்து, முழு அன்பையும் கொட்டி அரவணைக்க ஒருவன் வந்தால்! அப்படி ஒருவன் தனக்கென ஒருவன் தன் வாழ்க்கையில் வரமாட்டானா? என ஏங்காத திருநங்கைகள் யாரும் இல்லை. வாழ்க்கைத் துணையென்று வரும் ஒருவனால் திருநங்கைகளில் வாழ்க்கைத்தரம் பல விசயங்களில் மாறும். அவ்வாறு அமையப்பெற்ற சில திருநங்கைகளில் வாழ்க்கை முறை மாறிய உதாரணங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Srs8r2irlLI/AAAAAAAAATg/fNqcP1GtoHY/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 130px; height: 87px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Srs8r2irlLI/AAAAAAAAATg/fNqcP1GtoHY/s400/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5384964503524578482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி கேக்க நல்லாதான் இருக்கு, அதுக்காக எவன் போயி.... உங்களையெல்லாம்.. புரியுது...  நீங்க‌ வேண்டாம். என்னால‌ ஒரு திருந‌ங்கைய‌ வாழ்க்கைத் துணையா பார்க்க‌ முடியாதுன்னா க‌ண்டிப்பா நீங்க‌ வேண்ட‌வே வேண்டாம். அப்ப யாருதான்...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருக்காங்க, சிலர் இருக்காங்க.  திருநங்கைகளை சக மனுஷியாக பார்க்கத் தயாரா, நட்புடன் பழகத் தயாரா சிலர் இருக்காங்க. இன்னும் சிலர், மனதால் இணைந்து மணம்புரிய தயாரகவும் இருக்காங்க. ஆனால், அவர்களில் ஒருசிலர் தான் சமூகத்தின் முன்பாக துணிந்து தங்களை ஒரு திருநங்கையின் கணவனாக வெளிப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளனர். அவர்களிடம் மட்டும் தான் வேண்டுகிறேன். மறைவாக திருட்டுக் கணவனாக வாழாமல் மனமுவந்து வெளிப்படையான உண்மையான கணவனாக வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனெனில் இவ்வாறு திருநங்கைகளை மறைமுகமாக மணந்துகொண்டுள்ள ஆண்கள் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டு, திருநங்கையை துணைவி போலவே வைத்துக் கொள்கின்றனர். இவர்கள், மனையாள் ஒருத்தி இருக்க குறிப்பிட இடைவெளியில் அல்லது விரும்பும் போதெல்லாம் வந்து போகும் ரெகுலர் கஸ்டமர் போலத்தான் திருநங்கைகளை ஏற்றுக் கொள்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்கள், ஆரம்பத்தில் திருநங்கையை மனைவியாக நடத்தினாலும், குடும்ப மற்றும் சமூக வற்புருத்தலின் பேரில் வேறொரு பெண்ணை மணந்து கொள்கின்றனர். இவர்களும் திருநங்கைகளை துணைவியாகவும் நாட்பட அந்த உறவையும் உதறி விட்டுச் செல்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்தபட்சம் துணைவியாக ஏற்றுக் கொள்பவர்களும், முழுத்துணைவியாகவாவது ஏற்றுக் கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. குறிப்பிட்ட நபருக்கு பெயரளவில் மனைவி/துணைவியாக் இருந்தாலும் அவர்களும் மற்ற திருநங்கைகளைப் போலவே பிச்சையெடுத்தோ / பாலியல் தொழில் செய்த்தோதான் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. கொடுமையிலும் கொடுமை, திருநங்கைளை துணைவியாகக் கொள்ளும் போர்வையில் திருநங்கைகள் பிச்சையெடுத்தோ, பாலிய‌ல் தொழில் செய்தோ கொண்டு வ‌ரும் ப‌ண‌த்தை இதுபோன்ற போலிக் கணவர்கள் த‌ங்க‌ள் சுய‌லாப‌த்திற்கும், த‌ன‌து குடும்ப‌ செல‌விற்கும் பய‌ன்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌ர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான‌ திருநங்கைகள் தெரிந்தே இந்த ஏய்ப்பிற்கு உடன்படுகின்றனர். பொய்யாகவேனும் ஒருவன் தன்னை காதலித்தால் போதும் , பெயரளவிலாவது தன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டானே அதுவே பொதும் என்று நினைப்பர்களே அதிகம். அத்தகைய திருநங்கைகள் அவர்களே தங்கள் காதல் கணவனுக்கு வேறொரு பெண்ணைத் தானே திருமணமும் செய்துவைப்ப‌து, அவர்களுடைய‌ குடும்ப செல்விற்கு திருநங்கைகள்  சம்பாத்தித்து கொடுப்ப‌து என‌தெரிந்தே ஜோக்கர்களாக வாழ்கின்றனர். ஏதோவொரு பெயரளவு அன்பிற்கே இத்தனை இழக்கும் திருநங்கைகளின் மாளாத் தனிமையையும், தீராக் காதலையும் யார் அறிவார்?&lt;br /&gt;&lt;br /&gt;விரல்விட்டு எண்ணக்கூடிய‌ ஒருசிலர் உண்மையான காதலுடன், திருநங்கையை ஏற்றுக் கொண்டு, இருவரும் பரஸ்பர அன்புடன், நேர்மையுடன் வாழ்ந்தாலும், இச்சமூகம் அதாதவது நீங்கள் அந்நபருக்காக தயாரக வைத்திருக்கும் கல்லடிகள் பலப்பல. திருநங்கைகள் பெறும் சராசரி அவமரியாதையைவிட அவர்களின் கணவர்கள் அடையும் அவமரியாதை அதிகம். &lt;br /&gt;&lt;br /&gt;   " இவன் ஏன் இதுகூட சுத்துரான் ஒருவேளை இவனும்...." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   " அந்த மேட்டர்ல  இவன் வீக்கு போல அதான் பொம்பளய கட்டிக்காம இதப் போயி..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய இழிச்சொற்களை, ஒரு சரசாரி ஆண் சில நாட்கள், சில முறை சகித்துக் கொள்ளலாம். வாழ்க்கை முழுவதும் ?!.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இதுதான், இதுமட்டும் தான் குறிப்பாக உங்களிடன் நான் வைக்கும் கோரிக்கை,  யாரோ, எவரோ ஒரு திருநங்கையை துணையாக ஏற்று வாழும் போது வாழ்த்த வேண்டாம். வாழ வழிவிடுவோம்.  ஏனெனில் ஆண்மை என்பது மீசையும், குழந்தைபேறும் அல்ல, பெண்மையை மதிப்பது. அதிலும் தன் பெண்மையை உணர்ந்து அதை அடைய உடலாலும், மனதாலும் காயங்கள் பல சுமந்து, உற்றார் உறவை இழந்து நிற்கும் திருநங்கைகளை மதிப்பது பேராண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலுடன் திருநங்கைகளை ஏற்பவர்கள் கணவர்களாகட்டும். குறைந்த பட்சம் அத்தம்பதிகளை மதித்து நடக்கும் பேராண்மையுடயவர்களாக நீங்கள் இருப்பீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகள் நலனில் தொடர் அக்கறை காட்டி வரும் தமிழக அரசும், அவ்வழியே இந்திய அரசும், ஆண்கள் திருநங்கைகளை மணந்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும். இத‌னால், சாத‌க‌ பாத‌க‌ங்க‌ளை ஆராய்ந்து, தெளிவாய் முடிவெடுக்க ‌ ஆண்க‌ளுக்கு உத‌வும். அவ்வாறு துணிந்து ம‌ண‌ம் புரியும் ஆண்க‌ள் மீதும் திருந‌ங்கைக‌ளுக்கு ந‌ம்பிக்கையும், பாதுகாப்பும், நல்ல வாழ்க்கை முறையும் அமையும்.  &lt;br /&gt;போலியாக‌ ம‌ண‌முடித்து திருநங்கைகளை சுர‌ண்டிப்பிழைக்கும் ந‌ப‌ர்க‌ளுக்கு த‌ண்டனையை பெற்றுத் தரவும், திருமணம் முடித்து பாதியில் விட்டுச் செல்ல நினைப்பர்களிடம் முறையாக‌ போராடி த‌ங்க‌ள் உரிமையை நிலை நிறுத்தவும் திருநங்கைகள் திருமணச்சட்டம் உதவும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா‍‍‍ பாகிஸ்தான் பிரிவினையின் போது பல பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர். அப்போது காந்தி இந்திய‌ இளைஞர்களிடம், பாதிக்கப்பட்ட பெண்களை (கணவினை இழந்த பெண்களையும் என்று நினைக்கிறேன்) மணமுடித்துக்கொள்ள முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே, திருநங்கைகளையும் மணமுடிக்கமென காந்தி சொல்லாவிட்டாள் என்ன, வேண்டுகோள் விடுத்தார் என்று எடுத்துக் கொண்டு சமூக மாற்றத்திற்கு முன்வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் திருநங்கைகள் மணமுடித்துக்கொள்ள தயாரகவுள்ள ஆண்களுக்கு அழைப்புவிடுத்து தோழி கல்கி ஒரு &lt;a href="http://sahodari.org/thirunangai/index.html"&gt;வலைப்பக்கத்தை&lt;/a&gt; அமைத்துள்ளார். வரவேற்போம். அதே சமயம், &lt;a href="http://sahodari.org/thirunangai/index.html"&gt;இவ்வலைப்பக்கம்&lt;/a&gt; தவறான நபர்களால் பாதிக்கப்படாத வகையில் கவனமாக கையாள வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-2134406997466023391?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/2134406997466023391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=2134406997466023391' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2134406997466023391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2134406997466023391'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2009/09/blog-post.html' title='திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Srs8g6Ojs4I/AAAAAAAAATY/UohXvYkc7HY/s72-c/marriage.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-8361128517911463796</id><published>2009-02-18T21:14:00.009+05:30</published><updated>2009-02-18T23:19:32.241+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>நான் கடவுள்</title><content type='html'>&lt;span class="magazine"&gt; பா&lt;/span&gt;லா, தமிழ் சினிமாவின் அழிக்கமுடியாத பெயர். பாலாவை மதிப்பவர்கள், வெறுப்பவர்கள் என இருபிரிவினரும் தெளிவாக உணர்ந்திருக்கும் தமிழ்சினிமாவின் மறுக்கமுடியாத ப்ரம்மா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZwwL_fqZaI/AAAAAAAAAR8/2BDPhvDm8EQ/s1600-h/11.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 79px; height: 124px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZwwL_fqZaI/AAAAAAAAAR8/2BDPhvDm8EQ/s400/11.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304167443716531618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்மைத் திரட்சி கொண்ட கல்லூரி வாலிபனின் அடாவடிக்காதல், அராஜகமான சகோதர பாசம் என ஆரம்பத்தில் எரிச்சலூட்டிய சேது திரைப்படம், மனநிலை காப்பக இறுதி காட்சிகளால் என்னை கவர்ந்தது. அதேபோல், ஆண்மைத் திரட்சி கொண்ட சிறுவனுக்கு தாய் மீதான வெறுப்பு, தாய்க்கு மகன் மீதான வெறுப்பு என்ற மைய புள்ளி கொண்டு, கோபம்/வீரம்/பராக்கிரமம் கொண்ட ஆணை மையமாகப் பேசியது நந்தா. ஈழத்தமிழ் அகதிகளின் பகுதியையும் தொட்டுச் சென்றதில் என் மனதையும் தொட்டுச் சென்றது. மூன்றாவது பிதாமகனில் அதே ஆண், அதே கோபம், அதே வீரம், அதே பராக்கிரமம், அதே பித்து நிலை என அயர்ச்சி தட்டியபோதும். லோக்கல் களவானியின் களவானித்தனம், திருட்டுத்தனம், வெள்ளந்தி பாசம், நட்பு என சிறுக அன்பையும் சூர்யா பாத்திரம் மூலம் கொண்டு சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பாலாவின் மூன்று படங்களும் பராக்கிரம, ஆண்மைத் திமிர் திரண்ட கட்டழகன்களை மையமாக கொண்ட ஆணாதிக்க படமாக, பார்வையாளர்களின் பைத்தியநிலையை, மிருகத்தை தூண்டிவிடும் வேலையையே செய்தது. இது போக வேறுசில விமர்சனங்களும் அப்படங்கள் மீது உண்டு. ஆனாலும், சராசரி திரைக்கழிவுகளுக்கு மத்தியில் மாற்று முயற்சி என்ற அளவில் பாலாமீதும், அவரது படங்களின் மீதும் எனக்கு மரியாதை உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZw3kj9tFBI/AAAAAAAAASE/4QN9mohVBQs/s1600-h/4.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 143px; height: 95px;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZw3kj9tFBI/AAAAAAAAASE/4QN9mohVBQs/s400/4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304175562404467730" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருடக்கணக்காய் காத்திருந்து, காந்திருந்து &lt;span style="font-weight:bold;"&gt;நான் கடவுள்&lt;/span&gt; பார்த்தவர்கள் அனைவருமே கதை குறித்து, தங்கள் விமர்சனங்களை வைத்து தீர்த்தாயிற்று. எனவே, இதுவரை, பொதுவாக அனைவரும் வைத்த விமர்சனங்கள் போக சில கருந்துகளை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZw8NbM2NLI/AAAAAAAAASM/qXQcVZLp1wA/s1600-h/1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 124px;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZw8NbM2NLI/AAAAAAAAASM/qXQcVZLp1wA/s400/1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304180662473209010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடவுளின் அகோரி வழக்கமான அதே ஆண்மைத் திரட்சியின் நான்காவது பதிப்பாக இருந்த போதும், அதைக் கடந்து வேறெந்த நாயகத்தனமும் ருத்ரனுக்கு இல்லை. உண்மையில் படத்தில் நாயகன் ருத்ரனில்லை. பிச்சை எடுக்கும் விளிம்புகளின் பிரதிநிதியாக, படத்தின் மையப்பாத்திரமாக கதையை நகர்த்துவது அம்சவள்ளி பாத்திரமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ருத்ரன் பாத்திரம் மூலமாக, அகோரிகளின் சடலம் சூழ்ந்த அமானுஷ்ய வாழ்க்கையை மட்டும் தொட்டுச் செல்லாமல் "நானே கடவுள்" என்ற தத்துவத்தை (கண்டிப்பாக ஆன்மீகம் அல்ல),  நமக்குள் நாமே கடவுள், கடவுள் என்று தனித்து வெளியில் எதுவும் இல்லை என்பதையே இயக்குநர் பாலா முன்னிறுத்துவதாக நான் உணர்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZxFRYu2N4I/AAAAAAAAASU/SWVf5yvP78I/s1600-h/6.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 116px; height: 110px;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZxFRYu2N4I/AAAAAAAAASU/SWVf5yvP78I/s400/6.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304190626134636418" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளை கேவலமாக தொடர்ந்து முன்னிறுத்தி வரும் திரைக்கோமாளித்தனங்களுக்கு மத்தியில் திருநங்கை கீர்த்தனாவின் பாத்திரம் ஆறுதலானது. திருநங்கைகள் குறித்த செயற்கை பிம்பங்கள் எதுவுமன்றி, இயல்பான நீரோட்டமாக பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றிகள். நன்றியைக் கடந்து இரு நெருடலகள். விளிம்புகள் அதிலும், பிச்சை எடுப்பவர்கள் என்று ஆனபின் ஒரு திருநங்கையையும் சேர்த்துக் கொள்வோமே என்று யோசித்து சேர்த்த பாத்திரமாகமே இத்திருநங்கை பாத்திரம் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கீர்த்தனாவின் உடை சேது-ஈஸ்வரி ராவ் பாத்திரத்தின் உடையைப் போல (ஆண்சட்டை, பாவாடை) இருப்பது ஆரம்பத்தில் நெருடலாக இருந்தாலும், பிச்சைத் தொழில் முதலாளியிடம் பணிபுரியும் திருநங்கையாக வரும் இப்பாத்திரத்திற்கு இவ்வுடை பொருத்தமாகவே உள்ளது. (புடவை/சுடிதார் கட்டி முழு பெண்நிலையில் வாழும் பெண்கள் இத்தகைய சூழலில் வாழும் வாய்ப்பில்லை என்பது நிதர்சனம்) வாய்ப்பை பயன்படுத்தி, கூட்டாமல் குறையாமல் இயல்பாக தன் பணியை செய்து முடித்த திருநங்கை தோழி கீர்த்தனாவிற்கு வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்படி திருநங்கையை கண்ணியமாக காட்ட இப்பாத்திரம் தேவை என்று சந்தோசப்படும் வேலையில், நயந்தாரா வேடம் கடுப்பேற்றுகிறது.  அப்பாத்திரம் திருநங்கை அல்ல என்ற போதும், குறிப்பாக எண்விளையாட்டில் சிக்கிக் கொள்ளும் விதமாக நயந்தாரா என்ற பாத்திரப் பெயரும், சுருக்கமாக நயன் என்று அலைக்கப்படுவதும் தேவையற்ற குழப்பதை, அதன் மூலம் அருவெறுப்பையுமே ஏற்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட என்னை மேலும் குழப்பமடையச் செய்யும் மிகப்பெரிய கேள்வியொன்று உள்ளது. இத்திரைப்படத்தின் அடிநாதமே விளிம்புகளை சுற்றி அமையும் நிலையில், அறுவெறுப்பான முகத்தோற்றம் கொண்ட ஒருவனை, அவனக்கு இருக்கும் இயல்பான பாலியல் தேவையை ஆபாசமானதாக, குற்றமாகக் காட்டியது ஏன்?  தன் முகம் அசிங்கமாக இருப்பவனுக்கு காமம் மறுக்கப்படதாக சொல்வது எந்தவிதத்தில் நியாயமாக முடியும்? தன் முகம் இப்படி இருக்கும் நிதர்சனம் உணர்ந்து, கண்பார்வையற்ற ஒரு பெண்ணை மணக்க நினைப்பதிலும் என்ன குற்றம் இருக்க முடியும்?  நியாயமாக, கண்தெரியாமல் பிச்சை எடுத்து வாழும் அம்சவள்ளி பிச்சை எடுப்பதைவிட அப்பணக்கார, தோற்றத்தில் அருவெருப்பான முகம் கொண்டவரை திருமணம் செய்வதில் என்ன ஆபத்து உள்ளது? பொற்காலம் படத்தில் இறுதிக்காட்சியில் வடிவேல் "கறுப்பான எனக்கெல்லாம் உன் தங்கச்சியக் குடுக்கக்கூடாதுன்னுதான நினெச்ச?" என்று கேட்பது நினைவிற்கு வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZxG1GIVh_I/AAAAAAAAASc/arkaecb7cYA/s1600-h/3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 121px; height: 80px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZxG1GIVh_I/AAAAAAAAASc/arkaecb7cYA/s400/3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5304192339128190962" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படத்தின் முடிவு மிகவும் ஆபத்தான அரசியலை முன்வைக்கிறது. அகோரி ஆங்காரம் கொண்டு தீயவர்களை அழிக்க, தீயவை அழிய வேண்டும் என்று தெளிவாக சொல்லப்பட்ட பின்பும் வாழமுடியாதவர்களும் இறந்து போகவேண்டும் என்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாத அநியாயம். எத்தனை காரணங்கள் சொன்னாலும், ஆன்மிகத்தளத்தில் விளக்கமளித்தாலும் திரைப்படத்தின் முடிவும், தீர்வும் மிகவும் கண்டனத்திற்குரியது.  இதை இயக்குநர் பாலா உணர்ந்துதான் செய்துள்ளாரா என்பதை பேட்டியெடுக்கும் நிருபர்கள் கேட்டு சொன்னால் கொஞ்சம் உதவியா இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, தனது வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு மிருகமல்லாத, மானுடம் பேசும் மாற்றுப் படமொன்று தரவேண்டுமென்று இயக்குநர் பாலாவின் சராசரி ரசிகையாக நம்பிக்கையுடன்  எதிர்பார்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-8361128517911463796?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/8361128517911463796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=8361128517911463796' title='37 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8361128517911463796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8361128517911463796'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2009/02/blog-post_18.html' title='நான் கடவுள்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZwwL_fqZaI/AAAAAAAAAR8/2BDPhvDm8EQ/s72-c/11.jpg' height='72' width='72'/><thr:total>37</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-6366175711913821745</id><published>2009-02-17T22:05:00.009+05:30</published><updated>2009-02-17T22:52:58.759+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழத் தமிழர் தோழமைக் குரல் - பாராளுமன்ற முற்றுகை நிகழ்பதிவு</title><content type='html'>&lt;span class="magazine"&gt;அ &lt;/span&gt;ப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான புவியியல் வன்முறையை, சிங்கள ராணுவரசின் தமிழின சுத்தீகரிப்பு கொடுமையை, இந்திய அரசின் நிழல் போரை, ஆயுத உதவி மற்றும் இராணுவ பயிற்சியை நிறுத்தக் கோரி பிப்ரவரி 12, 13, 14 ஆகிய மூன்று தினங்களும் இந்திய நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் சிறப்பாக நடந்தேறியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZrtfDu8CRI/AAAAAAAAARk/fLy8Bc4R4LY/s1600-h/DSC02044%5B5%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 332px; height: 253px;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZrtfDu8CRI/AAAAAAAAARk/fLy8Bc4R4LY/s400/DSC02044%5B5%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303812629016086802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர்கள்/கவிஞர்கள் தலைமையில், மாணவர்கள், மீனவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், திருநங்கைகள் மொத்தம் 100 பேர் இணைந்து அரசியல் கட்சி சார்பற்று மனிதம் காக்க வேண்டும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையுடன் நடத்திக்காட்டினர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இம்மூன்று நாள் போராட்டத்தில் அம்மை நோயின் காரணமாக முதல் இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் பங்குபெறமுடிந்தது. முதல் இரண்டு நாட்களும் நடந்த அறப்போர் வெறும் மனத்திருப்தியன்றி தீர்க்கமான பலன் அளிக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் நாள் இலங்கை தூதரகம் முன்பாக 28 பேர் கொண்ட குழு நடத்திய இரகசிய போராட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. &lt;span style="font-weight:bold;"&gt;ராணுவ ரத்தவெறியன் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு, ராஜபக்சே உருவப்படத்தில் செறுப்படி, போர் நிறுத்தம் மற்றும் இந்திய, இலங்கை அரசுக்கெதிரான முழக்கம்&lt;/span&gt; என அதிதீவிர போராட்டமாக அமைந்தது.  2 நிமிடத்திற்கு மேல் எந்த போராட்டமும் நிகழ்த்த முடியாத அப்பாதுகாப்புப் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடம் தீவிரம் குறையாமல் ஒரு சடங்கியல் நிகழ்வு போல, மொத்த ஈழமக்களின் ஆக்ரோசமும், கண்ணீரும், வலியும் வழிநடத்தியது போல, யாரும் யாருடைய கட்டுப்பாடும் இன்றி முழு அர்ப்பணிப்போடு அப்போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கினர். இதுவரை, தேசிய அரசு ஊடகங்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த ஈழப்பிரச்சனை அன்று சிறிதளவேனும் கவனம் பெற்றதும் அதையொட்டிய சில அரசியல் நிகழ்வுகள் ஏற்பட்டதும் இப்போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZrvEkmt56I/AAAAAAAAAR0/gIU29J9dwNE/s1600-h/DSCN0806%5B5%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 384px; height: 292px;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZrvEkmt56I/AAAAAAAAAR0/gIU29J9dwNE/s400/DSCN0806%5B5%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303814373006763938" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி சார்பின்றி முழு அர்ப்பணிப்போடு, தூயமையான உள்ளத்தோடும் போராடிய அக்குழுவை தீண்டவும் அஞ்சி நின்றது தில்லி காவலர்கள் குழு. மிக கண்ணியாமாக, சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு இரவு 7 மணியளவில் சேர்த்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZrtvo176tI/AAAAAAAAARs/JGrxNgNNNTg/s1600-h/DSCN0818%5B5%5D.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 385px; height: 293px;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZrtvo176tI/AAAAAAAAARs/JGrxNgNNNTg/s400/DSCN0818%5B5%5D.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5303812913855458002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத் தமிழர் தோழமைக் குரல் என்ற குடையின் கீழ் நடந்த இவ்வறப்போரட்டத்தை குறித்த முழு தகவல்களும் &lt;a href="http://voiceforeelamtamils.blogspot.com/"&gt;இங்கே&lt;/a&gt; பதிவிடப்பட்டுள்ளது. தமிழின விடுதலை வேண்டிய நிகழ்ந்த தாமதமான முயற்சி என்றாலும், மிக மிக அவசியமான முன்னுதாரணமான சுயலாபமற்ற முயற்சி இது. பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இதன் அமைப்பாளர்களான திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மற்றும் கவிஞர்கள் மாலதி மைத்ரி, சுகிர்தராணி மூவருக்கும் என் மனமார்ந்த தீரவாழ்த்துக்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போராட்டம் முழு அர்த்தம் பெற தொடர்ந்து மக்கள் புரட்சியாக மாறவேண்டும். மாநிலம் முழுவதும் இப் போர் நிறுத்தப் போராட்டத்தை நாம் அனைவருமாக முன்னடத்திச் செல்ல வேண்டும். சோம்பலை, தடைகளைக் கடந்து பங்காற்றுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் ஈழம் வெல்லட்டும்! மானுடம் வெல்லட்டும்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-6366175711913821745?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/6366175711913821745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=6366175711913821745' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6366175711913821745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6366175711913821745'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2009/02/blog-post_17.html' title='ஈழத் தமிழர் தோழமைக் குரல் - பாராளுமன்ற முற்றுகை நிகழ்பதிவு'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SZrtfDu8CRI/AAAAAAAAARk/fLy8Bc4R4LY/s72-c/DSC02044%5B5%5D.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-2127700232401453320</id><published>2009-02-01T17:55:00.008+05:30</published><updated>2009-02-01T19:08:08.889+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்துக்குமார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்</title><content type='html'>&lt;span style="font-weight:bold;"&gt;என் சுரணையை சுண்டியெழுப்பிய சகோதரன் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1970, 80களில் இருந்த மாணவர்களிடையேயான தன்னெழுச்சி ஒரு சிறு அலையாக இப்போது மீண்டும் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. இது நாம் எதிர்பார்க்காத நல்ல ஆரம்பம்.  விடலை விளையாட்டிலும், பொழுதுபோக்கு களியாட்டத்திலும் இளமையை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இம்மாற்றம் காலத்தில் கட்டாயம் ஏற்படுத்திய நல்மாற்றம். ஆனால், அதையும் வளரவிடாமல் தடுக்க காலவரையற்ற விடுமுறையளித்து, விடுதி மாணவர்களை கட்டாயமாக ஊருக்கு அடித்துத் துரத்தி தன் ஜனநாயக அத்துமீறலை நடத்துகிறது தமிழக அரசு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனசாட்சியால் உந்தப்பட்ட மானமுள்ள பெருவாரி மனிதக்கூட்டம் நேற்று முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அணி திரண்டது. அது குறித்த செய்தியோ பெரும்பான்மை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து தன் பாசிச முகத்தை பள்ளிளுத்து காட்டியது. தமிழகம் அல்லாத வேறு எந்த மாநிலத்திலும் இம்மக்கள் எழுச்சி ஊடக கவினம் பெறாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது. (விதிவிலக்கு ஆஜ்தக்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போதாக்குறைக்கு, மாணவர்களின் ஒற்றுமையை போர்க்குணத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாய் கல்லூரிகளுக்கு, காலவரையற்ற கட்டாய விடுமுறையும், விடுதி வெளியேற்றமும் செய்துள்ளது தமிழக அரசு.  இங்கே நாம் யோசிக்கவேண்டியது உங்களையும் என்னையும் போன்ற மனிதர்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதையும் விட, சகமனிதர்கள் என்ற நிலையில் அவர்கள் சந்திக்கும் அல்லல்களில் ஒரு சதவீதம் எமக்கு ஏற்பட்டால் என்ன செய்வோம்? தப்பு, வேண்டாம் அதுகுறித்து நான் எந்தக் கேள்வியும் கேக்கப்போவதில்லை. எனக்கும் உங்களுக்கும் அது தெரியாமல் இல்லை. தெரிந்தேதான் கையறு நிலையில் வெறும் அமைதி காக்கிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்க விரும்புவது சுரணை, கோபம், இயலாமை மிஞ்ச நம் கற்பனைக்கு மீறி தன் உடலை பொசுக்கிக் கொண்ட சகோதரன் முத்துக்குமாரனின் மரணவாக்குமூலம் நம் மீது காறி உமிழ்வது எதனை?  முத்துக்குமாரின் சுரணையில் ஒரு துளி, கோபத்தில் ஒரேயொரு புள்ளி அளவாவது நம்மிடம் இருக்குமானால் நாம் என்ன செய்யலாம்...?&lt;br /&gt;&lt;br /&gt;********&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது என்று யோசித்த சில படைப்பாளிகள், மனித உரிமைப் போராளிகள், மாணவர்கள், உழைப்பாளிகள் என்று பலதரப்பட்ட அன்பர்கள் ஒன்றுகூடி நாடுதளுவிய எழுச்சிப் போராட்டத்தை இந்தியத் தலைநகரத்தில், நாடாளுமன்றத்தின் முன்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;ஏன் நாடாளுமன்றம் முன்பு?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாடாளுமன்ற இறுதிக் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி துவங்கவுள்ளது.  தமிழக அரசு கள்ள மௌனம் சாதிப்பதை நாம் அனைவரும் வெளிப்படையாக அறிந்திருக்கையில், தமிழகத்தில் நமது போராட்டம் புல்லுக்கு இறைக்கும் நீராய் வீணாகிக் கொண்டிருக்கிறது. நமது இலக்கு நாமே மத்திய அரசின் கவனத்தை நேரடியாக பெறுவது.  மாநில அளவில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே தன்னெழுச்சி அலை தீவிரமாக இருக்கும் இந்நிலையில் நாடு தழுவிய தீவிர போராட்டம் மத்திய அரசின் கவனத்தையும், அயல்நாடுகளின் கவனத்தையும் பெறவேண்டியது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈழமக்கள் மீதான இனப்படுகொலைக்கு (சிங்கள ராணுவத்திற்கு) இந்திய அரசு அளித்துவரும் ஆதரவையும், ஆயுதங்களையும் திரும்பிப்பெற வேண்டும். தடைசெய்யப்பட்ட இயக்கமான  விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கி அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது.  தனித்தனி இயக்கங்கள் ஏதோவொரு நாளில் தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக அல்லாமல் அனைவரும் ஒன்று கூடி பெருந்திரளாக அணிதிரண்டு தில்லியிலுள்ள மாணவர்கள், மனித உரிமை போராளிகள் அனைவருடன் ஒன்றுகூடி இந்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பேரணியில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்பமுள்ள அன்பர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;&lt;br /&gt;+91 98410 43438&lt;br /&gt;&lt;br /&gt;+91 97897 12488&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அயல்நாடுகளில் அல்லது கலந்து கொள்ள வாய்ப்பில்லாத ஆர்வமுள்ள நண்பர்கள் இப்பேரணி சென்றுவர, சில தினங்கள் அங்கே தங்க தேவைப்படும் பொருளாதார உதவியும்,  இம்முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளும் அளித்து உதவ வேண்டுகிறோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;தன் மரணம் நிச்சயமாக ஒரு அதிர்வை, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்க்கமாக அறிந்தே தன் இன்னுயிரையும், தன் கனவுகளையும், தன் உறவுகளையும் தீயிடம் அர்ப்பணித்தான் நம் சகோதரன் முத்துக்குமாரன்.&lt;/span&gt; அவனது மரண வாடை கருகித் தீர்வதற்குள் மேலும் மரணங்கள் ஈழத்தில் நிகழாமல் தடுப்போம்.  மனிதர்களாய் சகமனிதர்களை நேசிப்போம்... மனிதம் காப்போம்.  நன்றி!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-2127700232401453320?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/2127700232401453320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=2127700232401453320' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2127700232401453320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2127700232401453320'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2009/02/blog-post.html' title='ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-42676046854266490</id><published>2009-01-13T22:09:00.012+05:30</published><updated>2009-10-10T09:58:55.752+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>2009 - புத்தகக் கணக்கு</title><content type='html'>கடந்த வருடத்தில் அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களில் மேலோட்டமான கருத்துகணிப்பில், எனது புத்தகம் இரண்டாவது இடம் பிடித்ததாக ஒரு வார இதழ் பட்டியலிட்டிருந்தது.  கவனம் நன்றாக விற்பனையானது என்று தான், சிறந்த புத்தகம் என்றல்ல(அதான் எனக்கே தெரியுமேன்னு சொல்றிங்களா!).  &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரைக்கும் எனது புத்தகம் குறித்து நான் எப்போதும் பேசிக்கொள்ளாததற்கு காரணம் தன்னடக்கம்னு தப்பா நெனச்சிங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல.  உண்மையான காரணம், ஒரு முழு பெண்ணா ஸ்மைலியாகவே என்னைப் பார்த்து பழகிவிட்ட என் தோழமைகளிடம் என் கடந்த காலத்தின் இருளை காண்பித்துக் கொள்ள இருந்த மனத்தடை. அப்புறம் எதுக்கு புத்தகம்? இணையம் அல்லாது பொது வாசகர்களுக்கும் ஒரு புரிதல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அதிலும், கிழக்கு எனது சொந்த வாழ்க்கைக் கதையையே அத்தியாமாகச் சொன்னால் நம்பகமான சாட்சியமாக இருக்குமே என்று கேட்டுக்கொண்டதன் விளைவு தான் இந்த புத்தகம். இதில் எனது சந்தோசம் ஓரளவு விற்பனை இனிவரும் மாதங்களில் வரும் பொருளாதார பிரச்சனைக்கு துணையாக உதவும் என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      *    *    *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக வாசிப்பின் அதீத எல்லையை சற்றேறக்குறைய அடைந்தவர் எனது வணக்கத்திற்குரிய ஆசான் திரு. மிஷ்கின்.  சமீபத்தில் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் சினிமாவிற்கு முன்பு கண்டிப்பாக படிக்க வேண்டிய 11 புத்தகங்களை பட்டியலிட்டிருந்தார். குறிப்பாக எனக்கு, வடிவேல் மற்றும் ஈஸ்வரிக்கு எந்த தமிழ்புத்தகத்தையும் (பட்டியலிலுள்ள இரண்டினைத் தவிர) தற்காலிகமாக தொடக்கூடாது என்றும் கூறிவிட்டார்.  தமிழ்துரோகியெல்லாம் கிடையாது அதற்கான காரண காரியம் வேறு.  இதுபோக, Richard Bachன் Jonathan Livingston Seagull என்ற புத்தகத்தையும் தனிப்பட்ட முறையில் எனக்கே எனக்கென வாசிக்கத் தந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பரிந்துரைத்த புத்தகங்கள் தனிப்பட்ட முறையிலும், சினிமா ஆர்வமுள்ள இளையவர்களுக்கும் உதவுமென்றே கருதுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1.  SIDDARTHA                          -   Herman Hesse, Penguin publishers&lt;br /&gt;&lt;br /&gt;2.  DOLL'S HOUSE                       -   Ibson &lt;br /&gt;&lt;br /&gt;3.  THE SOUND OF WAVES                 -   Yukio Mishima, Vintage books USA (ISBN:9780 6797 52684)&lt;br /&gt;&lt;br /&gt;4.  பஞ்சதந்திரக் கதைகள் (தமிழில்)       &lt;br /&gt;&lt;br /&gt;5.  ஒரு வடக்கன் வீர கதை Script (தமிழில்)  -    சுரா, காவ்யா பதிப்பகம்&lt;br /&gt;&lt;br /&gt;6.  GRIMM'S FAIRY TALE                 -   Jacob Ludwig Carl Grimm, Pantheon Books (ISBN:9780 3947 09307)&lt;br /&gt;   &lt;br /&gt;    * Rose But&lt;br /&gt;&lt;br /&gt;    * The Queen Bee&lt;br /&gt;&lt;br /&gt;    * The Frog Prince போன்ற குறிப்பிட்ட சில கதைகள் மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;7.  ON DIRECTING FILM                 -   David Mamet, Penguin, (ISBN:9780 1401 27226)&lt;br /&gt;&lt;br /&gt;8.  CRONICALS OF DEATH FORETOLD       -   Gabrial Garcia Marquez&lt;br /&gt;&lt;br /&gt;9.  OUTSIDER                          -   Albert Camus, Penguin, (ISBN:9780 1411 82506, 9780 1402 74172)&lt;br /&gt;&lt;br /&gt;10. LONE WOLF AND CUB, VOL(1)         -   Kazuo Koike&lt;br /&gt;&lt;br /&gt;11. METAMORPHOSIS                     -   Franz Kafka, Penguin, (ISBN:9780 1431 05244, 9780 1402 83365)     &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எண் (7) டேவிட் மேமத் எழுதிய ON DIRECTING FILM தவிர மற்ற புத்தகங்கள் சினிமாவிற்கு நேரடி தொடர்பில்லாதவை போல தோன்றலாம்.  ஆனால் ஒரு திரைக்கலைஞருக்கு தீவிர இலக்கிய பிண்னணி கட்டாயம் வேண்டும் என்பது அவரது அறிவுரை. மேலும் அயல் இலக்கியங்களை கூடுமானவரை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிப்பதையே அவர் பரிந்துரைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட புத்தகங்களில் எண் வரிசை 3, 4, 6, 7, 10, 11 புத்தகங்கள் எனது முயற்சிகள் எதிலும் கிடைக்கவில்லை.  நண்பர்கள் முன்வந்து இப்புத்தகங்களை எனக்கு பெற்றுத்தந்தால் பேருதவியாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      *    *    *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் மோகிக்கும் நாடக வல்லரசு ச.முருகபூபதி. இந்த ஆண்டிற்கான தேசிய நாடக பள்ளி நடத்தும் நாடக விழாவிற்கான பயணத்திற்கு வழியனுப்பிவிட்ட சென்னை சென்ட்ரலில் நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்தேன். நாடகம் மீதான, கலை இலக்கியத்தின் மீதான என் இரசனையில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்.  அவரது அறிமுகம் கிடைத்த நாள் முதல் அவருடைய நாடகங்களில் பங்கேற்க முயன்று பல காரணங்களால் கூடாமல் போனது. இப்போது நாடகத்திற்கான அத்தனை செட் ப்ராப்பர்ட்டீசுடன், நடிக நண்பர்கள் செல்ல நான் மட்டும் வழியனுப்பிவிட ரணமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பயணநேரத்தின் அவசரகதியில் இருந்தவர்களை ஏக்கமாக வேடிக்கை பார்த்தபடி மனதைத் தேற்றிக்கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக, அவரது &lt;span style="font-weight:bold;"&gt;"செம்மூதாய்"&lt;/span&gt; நாடக நூல் தொகுப்பினை பையிலிருந்து நீட்டினார். புது புத்தகத்தின் வாசத்தை நுகர்ந்துகொண்டிருக்கும் போது, "இப்பத்தான் கைக்கே புக்கு வந்துச்சு, முத பிரதிய உனக்கு தான் தரேன்" என்று ஆனந்த அதிர்ச்சியூட்டினார். இவ்வருடத்தின் மிக முக்கிய பரிசு இப்புத்தகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பில், செம்மூதாய் உட்பட ஆறு நாடகங்கள், யவனிகா ஸ்ரீராம், குட்டி ரேவதி, பாண்டி முனி,  ஆகியோரின் விமர்சனங்கள் இவற்றுடன் அவரது நீண்ட தெளிவான நேர்காணல் ஆகியவை உள்ளது.  முருகபூபதியின் நாடகங்களை பார்ப்பதற்கு/படிப்பதற்கு முன் இந்நேர்காணல் படிப்பது அவ்வனுபவத்தை முழுமையாக்க உதவும். நேர்காணலையும், விமசர்னங்களையும் மட்டும்  படித்தாச்சு. நாடகங்களை இனிதான் படிக்க வேண்டும்.  அழகான அச்சாக ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்புத்தக கண்காட்சியில் முதல் புத்தகமாக, குமரன் தாஸ் எழுதிய கட்டுரைத் தொகுப்பான "தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும்" வாங்கினேன். படித்தேன். நூறு சதவீதம் என் கருத்துகளோடு ஒன்றிப்போன கருத்துகள். அனைத்தும் நான் எழுத நினைத்து, எழுதாமல் விட்டவை. மனநெருக்கத்தை ஏற்படுத்திய இப்புத்தகம் தோழமை பதிப்பகத்தின் சிறந்த வெளியீடு. இளம் சினிமா உதவி இயக்குநர்கள் படித்து தங்களை சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியமான புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா பதிப்பகம் வெளியுட்ட திருநங்கை ப்ரியா பாவுவின், "மூன்றாம் பாலின முகம்" என்ற  நாவலை எனது ஆவணக் காப்பகத்திற்காக வாங்கிக் கொண்டேன். கூடவே சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக, எனது அபிமான எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின் "எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்" நூலையும் வாங்கிக் கொண்டேன். மேலே குறிப்பிட்ட 11 புத்தகங்களையும் வரிக்குவரி டிக்சனரி வைத்து படிக்கவே இந்த ஆண்டு பத்துமான்னு தெரியாது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;      *    *    *&lt;br /&gt;&lt;br /&gt;              &lt;br /&gt;இதுவரை வலைப்பூவில் ஓரளவு தேறும் விதமான சில கட்டுரைகளையும், மற்ற இதழ்களில் வந்த கட்டுரைகளையும் தொகுத்து புத்தகமாக போட முயற்சித்தேன். பட வேலைகளில் அது முடியவில்லை. பிப்ரவரிக்கு பின்பு அதற்கான பணியில் இறங்குவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-42676046854266490?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/42676046854266490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=42676046854266490' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/42676046854266490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/42676046854266490'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2009/01/2009.html' title='2009 - புத்தகக் கணக்கு'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-6393290296443389141</id><published>2009-01-01T09:13:00.010+05:30</published><updated>2009-01-01T10:17:31.102+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு'/><title type='text'>புத்தாண்டு - புன்னகை பார்வையில்</title><content type='html'>அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்ந்த்துக்கள்.  இவ்வருடம் தாங்கள் வேண்டிய காரியங்கள், திட்டங்கள் அனைத்தும் வெற்றி காண எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SVxIGuXpJ_I/AAAAAAAAAQU/LhhyCnf-Q8s/s1600-h/nyear.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 133px; height: 86px;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SVxIGuXpJ_I/AAAAAAAAAQU/LhhyCnf-Q8s/s320/nyear.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5286179342989731826" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2008 திருநங்கைகளுக்கு மிகவும் சாதகமானதாகவே அமைந்த்து. கல்லூரியில் திருநங்கைகள் சேர்க்கை, திருநங்கைகள் நலவாரியம், திருநங்கைகள் கணக்கெடுப்பு, வாக்காளர் /அடையாள அட்டை என பல நல்ல மாற்றங்கள் அரசு தரப்பில் ஏற்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளிடமும் பல நல்ல மாறுதல்களைக்காண முடிந்தது. திருநங்கை சகோதரி ரம்யா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் அரசியல் கட்சியில் இணைந்து கட்சிப்பணியை சிறப்பாக செய்து வருகிறார். இவர் தொடர்ந்து அதிகாரத்திற்கு வரவேண்டும் திருநங்கைகளுக்கான பிரதிநிதியாக பல அரசியல் மாற்றங்களை கொண்டுவர வாழ்த்துவோம். இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது வீட்டிற்கும் வெள்ளிதோறும் விஜயம் செய்து வெற்றி பெற்றுவருகிறார் திருநங்கை ரோஸ். திருநங்கை என்ற அங்கீகாரத்துடன் சென்னைப் பலகலைக்கழகத்தில் முதுகலை பத்திரிக்கையியல் பயின்று வருகிறார் கிளாடி என்னும் இளைய தலைமுறை திருநங்கை. இப்படி இன்னும் பல வெற்றி சான்றுகளை 2008 தமிழகத்திற்கு தந்து தன் கடமையை செவ்வனே செய்து முடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SVxIpOUH9OI/AAAAAAAAAQc/oX8k2GdXhBQ/s1600-h/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 111px; height: 89px;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SVxIpOUH9OI/AAAAAAAAAQc/oX8k2GdXhBQ/s320/images.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5286179935680460002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி 2009 செய்யவேண்டியதெல்லாம்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசு, திருநங்கைகளுக்கு எது சரியான தேவை என்பதை முழுதாக உணர்ந்து வேலைவாய்ப்பு, முழு கல்வி வாய்ப்பு, பெற்றோர் உதவியின்றி படிக்கும் திருநங்கைகளுக்கு உள்ள பொருளாதார, தங்குமிட சிக்கல்கள் தீரும் வண்ணம் பகுதி நேர வேலைவாய்ப்பு,தங்குமிட வசதி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், இவை அனைத்திலும் மிக முக்கியமாக குடும்ப மற்றும் சமூக அங்கீகாரம் பெற்றுத்தருதல் ஆகியவற்றில் சிந்தனை செலுத்தவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது வருகின்ற திரைப்படங்களில் திருநங்கைகளை நல்லவிதமாக காட்டவேண்டும் என்ற பிரக்ஞை இருக்கின்ற அளவில் சரியான புரிதல் இல்லை உதாரணமாக தெனாவெட்டு. (இன்னும், சிலம்பாட்டம் போன்ற சில்லறை படங்களில் திருநங்கைகளை அசிங்கப்படுத்தும் ஈனச்செயலையும் நிறுத்தவில்லை-வெறுத்துப் போயிட்டேன், ஒன்னும் சொல்றதுக்கில்லை)அவ்வாரில்லாமல் சரியான புரிதலோடு, மிகையில்லாத கதாப்பாத்திரங்களாக திருநங்கைகள் திரையில் வலம்வர இப்புத்தாண்டு உதவ வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் சில திருநங்கைகள், தங்களது உரிமை / தேவைகளாக இலவச வீடு, அடையாள அட்டை, திருநங்கைகளுக்கு தனி கழிப்பிடம் என மொக்கையான வேண்டுகோள் வைப்பதை விட்டுவிட்டு, தெளிவாக கல்வி வாய்ப்பு, வேலைவாய்ப்பு, சமூக அங்கீகாரம், குடும்ப அங்கீகாரம் அதற்கான விழிப்புணர்வு இவற்றை முன்மொழிய வேண்டும் என்பது எனது புத்தாண்டு வேண்டுகோள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;****&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் சென்னையில் நடைபெற்று வரும் ஜெமினி சர்க்கஸ் காட்சியை பார்த்தேன். சிறுவயது முதல் பார்த்தவை என்றாலும் இப்போதும் பார்ப்பதற்கு பரவசமாக இருந்த்து. சில ரிஸ்கான சாகஸத்தின் போது பார்க்க பயமாக சீக்கீரம் முடிந்திடாதா என்றும் தோன்றியது. சிலச்சில தவிர்க்கமுடியாத குறைகளைத் தாண்டி பெரும்பாலான சாகஸங்கள் ரசிக்கும்படியாக சிறப்பாகவே இருந்தது. எனது மனவருத்தமெல்லாம் ஒவ்வொரு சாகசம் முடிந்தபின்னும் அக்கலைஞசர்கள் பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டல்களை பெருமித்துடன் எதிர்பார்க்க அங்கங்கு ஒருசிலரே கைத்தட்டுவதை காணமுடிந்த்து. பார்வையாளர்களில் பலர் மெய்மறந்து ரசிக்கவில்லை அதனால், அவர்களது கலையை அங்கீகரிக்கவும் இல்லை. ஏதோ ஒரு விடுமுறையை, சில மணித்துளையை செலவு செய்யத்தான் இப்படிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள் என்ற எண்ணம் நம்மில் பெரும்பான்மையோரிடம் உள்ளது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலையை கொண்டாடுங்க, அங்கீகரிங்க இல்லைன்னா இருக்கவே இருக்க உங்க வீட்டு முட்டாள் பொட்டி. வானத்தில் பொய்யாய் பறந்து, ஒரு குச்சி பல குண்டாந்தடியை அநாஸ்யமாய் தாக்கும் காமிடியையே பார்த்து பொழுத போக்குங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதோ புத்தாண்டுக்கு என்னால முடிஞ்ச கருத்து....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே திருநங்கைகள் குறித்த தங்களது சந்தேகங்கள் அல்லது அவர்கள் மீதான தங்களது விமர்சனங்கள் ஏதேனும் இருந்தால் எனக்கு &lt;span style="font-weight:bold;"&gt;சந்தேகம் / விமர்சனம்&lt;/span&gt; என தலைப்பிட்டு பின்னூட்டமிடவும். அவற்றை தொகுத்து, பயன்படும் கேள்விகளுக்கு என் பதிலை தனிப்பதிவாக தருகிறேன்.  நன்றி!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-6393290296443389141?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/6393290296443389141/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=6393290296443389141' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6393290296443389141'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6393290296443389141'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2009/01/blog-post.html' title='புத்தாண்டு - புன்னகை பார்வையில்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SVxIGuXpJ_I/AAAAAAAAAQU/LhhyCnf-Q8s/s72-c/nyear.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-5328016661766551237</id><published>2008-10-04T09:43:00.007+05:30</published><updated>2008-10-05T08:03:40.359+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><title type='text'>நன்றி " WELCOME TO SAJJANPUR "</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SObw_GNHlPI/AAAAAAAAAM4/BBy1Y8X6-W4/s1600-h/welcome+to+sajj.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SObw_GNHlPI/AAAAAAAAAM4/BBy1Y8X6-W4/s400/welcome+to+sajj.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5253150982162322674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளை மனிதர்களாக காட்டிய இந்தியத் திரைப்படங்கள் வெகு சில என்பது நாம் அறிந்ததே.  தமிழில் கூட வெளிவரக் காத்திருக்கும் சில படங்களில் திருநங்கைகளை கௌரவமாக காட்டும் பணிகள் நடந்து வருகின்றன.  நந்தலாலா, பால், நான் கடவுள், தெனாவெட்டு, கருவறைப் பூக்கள் என சிலவற்றைக் கூறலாம். ஹிந்தியில் தமன்னா, ட்ராபிக் சிக்னல் மற்றும் சில படங்கள் கண்ணியமான முயற்சிகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பான கிராமத்தையும், போகிரபோக்கில் அக்கிராமத்தின் வன்முறையையும் சொல்லி சொல்லும் எளிமையான படம் " WELCOME TO SAJJANPUR ".  படத்தில் நல்ல விசயங்கள் பல இருந்தாலும் அதைச் சொல்வதற்கல்ல இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருசிலரைத் தவிர எழுத்தறிவு முற்றாய் அற்ற சாஜன்பூர் கிராமத்தில் &lt;span style="font-weight:bold;"&gt;முன்னிபாய்&lt;/span&gt; என்ற 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை கதாபாத்திரம்.  உத்திரப்பிரதேசத்து typical திருநங்கையாக வரும் முன்னிபாய் அக்கிராமத்தின் அதிகாரமிக்க பணக்காரன் &lt;span style="font-weight:bold;"&gt;ராம் சிங்கின் மனைவி ஜமுனா தேவியை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார்&lt;/span&gt;. ஆரம்பத்தில், வழக்கமான திருநங்கைகள் போல கைதட்டி பாட்டுப்பாடி தெருக்களில் அலப்பரையாக வலய வரும் முன்னிபாய் மற்றும் குழுவினரை பார்த்து பயந்து அசூசையுடனே எதிர்கொள்கிறான் நாயகன் மகாதேவ் (பார்வையாளர்களின் சார்பில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SOb4KDLyRCI/AAAAAAAAANA/LUq4TzCmifo/s1600-h/munni+tg.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SOb4KDLyRCI/AAAAAAAAANA/LUq4TzCmifo/s400/munni+tg.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5253158866911380514" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் பிரசாரத்திற்கு பணங்களை வாரியிரைத்து வசதியாக வலம் வரும் ராம் சிங்கிற்கு எதிராக எளிய முன்னிபாய் உற்சாகமாய் பாட்டுப் பாடி அனைவரையும் கவர்கிறார். ( பாடலின் பொருள் தெரியவில்லை, தெரிந்தவர்கள் அறியத்தரலாம். ) தனது கிராமத்து தேர்தலில் ஒரு திருநங்கை போட்டியிடுவதை அவமானமாக கருதும் ராம்சிங், கடிதம் எழுதித்தரும் மகாதேவிடம் கலெக்டரிடம் முன்னி பாய் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யுமாறு மனுபோடச் சொல்கிறான். அப்போது மகாதேவ் சொல்கிறான் இது கலியுகம் இனி திருநங்கைகளும் போட்டியிடலாம் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணபலத்தாலும், ஆள்பலத்தாலும் முன்னிபாயை மிரட்ட முயற்சி செய்கிறான் ராம்சிங். ஒரு இரவில், மகாதேவ் டி.வியில் மாதுரி தீட்சித்தை ரசித்துக்கொண்டிருக்கும் போது, அவன்  வீட்டை தட்டுகிறார் முன்னிபாய். வீட்டிற்குள் வரவும் தயங்கி நிற்கும் முன்னிபாயை தர்மசங்கடத்துடன் உள்ளே வர அனுமதிக்கிறான் மகாதேவ். அதுவரை உற்சாகமாக வலயவந்த முன்னிபாய், கண்ணீருடன் பேசும் நீண்ட வசனம் பொருள் தெரியாவிட்டாலும் புரிந்து கொள்ளமுடிந்தது. தானும் மனிதப்பிறவிதானே என தன் தரப்பு நியாயத்தை கேட்கும் முன்னிபாய்க்கு உதவுகிறான் மகாதேவ். அவன் எழுதித் தரும் மனுவின் பயனால் முன்னிபாய்க்கு போலிஸ் பாதுகாப்பும் கிடைக்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது, ராம் சிங் தனது மனுவிற்கு கைநாட்டு வைக்கிறார். முன்னிபாய் தனது மனுவில் கையெழுத்து போடுகிறார். அழகான கௌரவம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலிலும் பல வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெருகிறார் நம் முன்னிபாய்... ஆனால், சில நாட்களிலேயே முன்னிபாய் ராம்சிங்கால் கொல்லப்படுகிறார். படத்தில் இறுதியில், மகாதேவ் எழுத்தாளனாக தன் அனுபவங்களை வைத்து நாவலாக இவற்றை எழுதியுள்ளான் என்று தெரிகிறது. மேலும், நாவலில் மட்டுமே முன்னிபாய் கொல்லப்படுகிறார். நிஜத்தில் M.L.A. ஆகி தன் பணியைத் தொடர்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகள் ஏற்றம் பெருவதில் உள்ள நிதர்சன தடைகளை காட்டியிருந்தாலும், படம் முடிக்கும் போது விளிம்புகளுக்கும் மனிதாபிமானிகளுக்கும் நம்பிக்கை தரும்படியும் திரைக்கதையை புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் ஷியாம் பெனகல். &lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!! என் சார்பிலும், ஒட்டுமொத்த திருநங்கைகள் சார்பிலும்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-5328016661766551237?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/5328016661766551237/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=5328016661766551237' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/5328016661766551237'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/5328016661766551237'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2008/10/welcome-to-sajjanpur.html' title='நன்றி &quot; WELCOME TO SAJJANPUR &quot;'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SObw_GNHlPI/AAAAAAAAAM4/BBy1Y8X6-W4/s72-c/welcome+to+sajj.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-1531918075841257051</id><published>2008-09-13T20:51:00.005+05:30</published><updated>2008-09-13T21:06:50.619+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><title type='text'>WALL - E</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SMvdxk1KxoI/AAAAAAAAALY/sdYapjjppak/s1600-h/wall-e1.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SMvdxk1KxoI/AAAAAAAAALY/sdYapjjppak/s400/wall-e1.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245530034773083778" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Waste Allocation Load Lifter - Earth Class என்பதன் ரத்தின சுருக்கம் WALL-E. 1969ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் Out there / There's a world outside of Yonkers என்ற பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது.  நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான ஆபத்தை முதல் காட்சியிலே கன்னத்தில் அறைந்து சொல்கிறது PIXER நிறுவனம். பின்னர் தான் தெரிகிறது, அவை கட்டிடம் அல்ல குப்பைக் குவியல் என்று. மனிதர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை அள்ளியெடுத்து சிறு சிறு சதுரகட்டிகளாக்கி, அவற்றை கட்டிடம் போல அடுக்கி வைப்பது WALL-E என்ற தனியொரு ரோபா. இன்றிலிருந்து 700 வருடங்கள் கழித்து மனிதர்கள் நுகர்வு கலாச்சரத்திற்கும், அதீத தொழில்நுட்பத்திற்கும் அடிமைப்பட்டு இயற்கை வளங்களையும், மனிதத்தன்மையும் இழந்து எந்திரமயமாகியிருக்க, WALL-E அவர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்றும் அழகான கவிதை WALL-E.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;யாருமற்ற பூமியில் WALL-E க்கு துணையாய் இருப்பது ஒரேயொரு கரப்பான் பூச்சியும், பாடல் காட்சி கொண்ட பழைய வீடியோ டேப்பும் தான். பாடல் காட்சியின் இறுதியில் காதலர்கள் கைகோர்க்கும் தருணத்தில் துணையற்ற WALL-E தன் இரு கையையும் ஏக்கத்தோடு பற்றிக்கொள்வது நூற்றாண்டுத் தனிமையின் சோக கீதம். தினந்தோறும், குப்பைகளை அள்ளி சீர் செய்யும் போது தென்படும் வித்தியாசமான பொருட்களை தனது தனி அறையில் சேகரிக்கும் பழக்கம் கொண்டது WALL-E.  அழிந்து போன உலகத்தின் கடைசி மூச்சாய் முளைவிட்ட சிறு செடி ஒன்றை அவ்வாறு கண்டெடுக்கும் WALL-E, அதை ஷீ ஒன்றில் வைத்து பாதுக்காப்பது அழகு.  அழகிய iPod வடிவத்தில்  அதிரடியாய் பூமியை சோதனையிட வரும் ஈவா (நாயகி) எனும் மற்றொரு ரோபோவிடம் காதல் கொள்ளும் WALL-E அதற்கு செடியை பரிசாய் அளிக்கிறது. அச்செடியை ஆசையாய் பெற்றுக் கொண்டதும் ஈவா செயலிழந்து விடுகிறது. ஈவாவை பூமியில் இறக்கிவிட்ட எந்திரம் மீண்டும் அதை எடுத்துச் செல்லும் பொது அதைத் தொடர்ந்து WALL-E செல்லும் போது துவங்குகிறது கதை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SMvd4om_-NI/AAAAAAAAALg/IU3ebPvp4PQ/s1600-h/wall-e2.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SMvd4om_-NI/AAAAAAAAALg/IU3ebPvp4PQ/s400/wall-e2.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245530156046481618" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;BUY LARGE என்ற நிறுவனம், வாண்வெளியில் பிரம்மாண்டமான விமானம் ஒன்றில் மனிதர்களை குடியமர்த்துகிறது. அங்கே அதீத நவீன வசதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறார்கள். நவீனம் என்றால் அங்குள்ள மனிதர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அந்தரத்தில் மிதக்கும் சொகுசு இருக்கை ஒன்றில் அமர்ந்தபடியே அவர்கள் வேண்டும் பொருட்களை அவர்கள் அருகில் எடுத்துவர ரோபோ பணியாட்கள்.  முகத்திற்கு நேரே உள்ள Virtual Monitorல் வேண்டியவர்களின் முகத்தை பார்த்தப்டியே பேசிக்கொள்ளலாம். உண்ணும் உணவு, உடையின் நிறம் அனைத்தையும் கூட தேர்வு தீர்மானிப்பது BUY LARGE நிறுவனம் தான்.   விளைவு மனிதர்கள் உடல் பருமனடைந்து, நடக்கக் கூடத்தெரியாதவர்களாய், ஸ்வ்விம் பூலில் நீந்தத் தெரியாதவர்களாய், கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரியும் நட்சத்திரங்களையும், அண்ட வெளியையும் ரசிக்கத்தெரியாதவர்களாய் கிட்டத்தட்ட ஜடமாய் ஆகியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;700 வருட விண்வெளி சொகுசு வாழ்க்கையில் மனிதர்கள் மெல்ல மெல்ல பொம்மைகளைப் போல மாறிவருவதை காலவரிசைப்படி தொங்கவிடப்பட்டுள்ள அவ்விமான கேப்டன்களின் புகைப்படங்களில் தெரிகிறது. பழுதடைந்த ஈவாவை சரி செய்யும் போது அதனுள் உயிருள்ள செடியைக் கண்டெடுக்கிறார்கள். முதன்முதலாக செடியைப்பார்க்கும் விமான கேப்டன் தனது கம்யூட்டரிடம் விளக்கம் கேட்டு செடிகளைப் பற்றிய புத்தகத்தைப் பெறுகிறான். புத்தகத்தை எப்படி பிரித்து படிக்க வேண்டும் என்பதைக் கூட அக்கம்யூட்டர் தான் சொல்லித்தருகிறது. செடியைப் பற்றி அறியும் போது, நடனம் என்னும் புது வார்த்தையையும் கேள்விப்படுகிறான். நடனம் என்றால் என்ன என்பதைக்கூட கம்ப்யூட்டர் தான் வீடியோவுடன் விளக்குகிறது. தனது முன்னோர்களின் நடனக் காட்சியைப் பார்த்து வியக்கும் கேப்டன் தன்னால் நடக்கக் கூட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறான். தொடர்ந்து முன்னோர்களைப் பற்றி அறியும் போது, பூமியைக் குறித்தும், தண்ணீர், கடல், தாவரம் இன்ன பிறவற்றை பற்றியும் தெரிந்து கொள்கிறான். இதுவரை, மனித குலம் இழந்த இயற்கையோடு இயைந்த வாழ்வை உணர்ந்து, மீண்டும் தாய்பூமிக்கு திரும்ப முயற்சிக்கிறான்.   தாயகம் திரும்ப விரும்பும் கேப்டனை அதுவரை அடிமாய் சேவகம் செய்த கம்ப்யூட்டர் அவர்களை பூமிக்கு திரும்பவிடாமல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது. பசுமை பூத்த அச்செடியை சாவியாய் கொண்டு அனைவரும் பூமி திரும்ப WALL-Eயும், ஈவாவும் உதவுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SMvd_U6bopI/AAAAAAAAALo/EQx-MyJUgzM/s1600-h/wall-e3.jpeg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SMvd_U6bopI/AAAAAAAAALo/EQx-MyJUgzM/s400/wall-e3.jpeg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5245530271018361490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமி திரும்பும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல், வீடு கட்டுதல் என உடல் உழைப்புடன் வாழ்வதைப் பார்க்கும் போது, நாம் அனைவரும் நகரமயமாக்கலின் அபாயத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிளாஸ்டிக், ரசாயனக்கழிவுகள், தொழில்நுட்ப உபகரணங்களின் கழிவுகள் சேர்ந்து பூமியை கொஞ்சம் கொஞ்சமாக குப்பைக் கூடமாக்கி வருகிறது.  அதன் அபாயத்தை வெகு அழுத்தமாக, அழகாக கற்பனை கலந்து சொல்லியிருக்கிறது WALL-E. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்குமான இப்படத்தை செம்மையாக எடுத்து சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது PIXER இனி  செய்ய வேண்டியது நாமதானே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-1531918075841257051?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/1531918075841257051/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=1531918075841257051' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/1531918075841257051'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/1531918075841257051'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2008/09/wall-e.html' title='WALL - E'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SMvdxk1KxoI/AAAAAAAAALY/sdYapjjppak/s72-c/wall-e1.jpeg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-711458070573645862</id><published>2008-05-15T21:50:00.005+05:30</published><updated>2008-05-16T10:29:56.494+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு'/><title type='text'>திருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றியும், சில கோரிக்கையும்</title><content type='html'>இந்தியாவில் முதன் முறையாக, அதுவும் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு கல்வி கற்பதில் வாய்ப்பு அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  நலவாரியம் அமைத்தலை தொடர்ந்து திருநங்கைகளின் நலனுக்கான அடுத்த படிக்கட்டாக இது கருதப்படுகிறது.  ஆனால், இதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களை அறிந்து அதற்கும் அரசு ஆவண செய்தால் மட்டுமே அதன் முழு பலனும் கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, திருநங்கைகள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறும் பொழுது வயது 16 முதல் 22 ஆகிறது.  தான் ஒரு ஆணல்ல, திருநங்கை என்பதை முழுதாக உணர்ந்து அதனால் ஏற்படக்கூடிய அனைத்து பின் விளைவுகளையும் அறிந்து, தீர்க்கமான முடிவெடுக்கும் வயது இது. ஆனால், அதற்குப்பின் அவர்கள் தொடர்ந்து குடும்பத்துடன் தொடர்ந்து வாழ்வது அரிதினும் அரிது.  குடும்பத்தை விட்டு வெளியேறிய பின் திருநங்கைகளின் வாழ்க்கை முறை என்னவென்பதும் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சை எடுத்தோ அல்லது பாலியல் தொழில் செய்தோ  வாழ வேண்டியுள்ள திருநங்கைகள் அதனை விட்டுவிட்டு கல்லூரி செல்வது என்பது நடைமுறையில் சாத்தியமல்ல.  பெற்றோருடன் வாழும் பட்சத்தில் கல்லூரிக் கட்டணம், தங்குமிடம், உணவு, பாதுகாப்பு இவற்றை அவர்களே பொறுப்பேற்றுக் கொள்வர்.  ஆனால், அன்றாட செலவிற்கே பிச்சை எடுக்கும் திருநங்கைகள் கல்லூரி செல்ல ஆரம்பித்தால் அவர்களின் கல்விக்கான அடிப்படை தேவைகளுக்கு பொறுப்பேற்க யாரும் இல்லை என்பதே நிஜம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே கற்பதற்கு பொருளாதார தடையேதும் இல்லாதபோதும், தொன்றுதொட்டு திருநங்கைகளுக்கிடையேயுள்ள அர்த்தமற்ற சட்டதிட்டங்களுக்கிடையே சிக்கிக் கொண்டு கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் திருநங்கைகள் இந்த அரசானையை கேள்விப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வமும் காட்டப்போவதில்லை.  திருநங்கைகளில் பலர் 10-ம் வகுப்பு கூட தேராதவர்கள். சிலர் M.A., M.Sc., M.B.A., M.Phil கூட முடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அதிகம் படிக்காத திருநங்கைகளுக்கு கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. நன்கு படித்தவர்களுக்கோ, படித்தும் வேலையில்லாத நிலையில், தொடர்ந்து படிப்பு அவசியமற்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய காரணங்களால், இம்முயற்சி தோல்வியடைவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது. பிறகு,  திருநங்கைகளுக்கு அரசு உதவ முன்வந்தாலும்,  திருநங்கைகள் அதனை முறையாக பயன்படுத்துவதில்லை என்ற அர்த்தமற்ற பழிச்சொல் தான் மிஞ்சும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவேண்டுமெனில் முதலில் அவர்களை குடும்பம் ஏற்றுக் கொள்ள ஆவண செய்ய வேண்டும்.  குடும்பம் ஏற்றுக் கொள்ள சமூகத்திற்கு திருநங்கைகள் குறித்த சரியான புரிதலை பரவலாக்க வேண்டும். மற்ற ஆண் / பெண் அனைவருக்கும் வாய்த்த இயல்பான குடும்பச் சூழல் திருநங்கைகளுக்கும் ஏற்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதரவற்ற நிலை, பிச்சையெடுத்தல், மற்ற தகாத சூழல் போன்றவற்றை சந்திக்காத வாழ்க்கை முறை திருநங்கைகளுக்கு அமைய வேண்டும். அப்பொழுது மற்றவர்களைப் போலவே திருநங்கைகளாலும், இவ்வரசானையைப் பயன்படுத்தி படிக்க முடியும். அதைவிட முக்கியம் இப்பொழுதுள்ள படித்த / படிக்காத திருநங்கைகளுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தகுந்த வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் இவ்வரசானையை பயனுள்ளதாக்கவும் முடியும்.   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரசானையின் கூறப்பட்டுள்ள சில நிபந்தனைகள் அங்கீகாரத்திற்கிடையே ஒதுக்குதலாகவும்  உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரசானை அரசு கல்லூரிகளில் அதுவும் கலை / அறிவியல் ( Arts and Science )பாடங்களுக்குத்தான் பொருந்துமாம். தனியார் கல்லூரிகளிலோ, மற்ற உயர் கல்விகளுக்கோ இந்த அரசானை பொருந்தாதாம்.  தமிழக அரசு தாயுள்ளத்துடன் இதனை பரிசீலித்தேயாக வேண்டும். திருநங்கைகளுக்கு அரசு அளிக்கும் கல்வி வாய்ப்பென்பது முழுமுற்றானதாக இருக்க வேண்டும். அதில் பாகுபாடென்பது பொருளற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதோடு, இருபாலர் கல்லூரிகளில் (Co-education ) மட்டும், அதும் கடைசி பெஞ்சில் தான் அமர வேண்டும் என்ற தடைகளையும், கருணையோடு பரிசீலிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசின் நல்முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வந்தனமும்; அம்முயற்சி ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கமுமே திருநங்கைகளின் சார்பாக எனது இப்பதிவின் நோக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-711458070573645862?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/711458070573645862/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=711458070573645862' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/711458070573645862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/711458070573645862'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2008/05/blog-post.html' title='திருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றியும், சில கோரிக்கையும்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-5155596016198908406</id><published>2008-02-12T10:25:00.001+05:30</published><updated>2008-04-13T20:14:51.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பெயரில் என்ன இருக்கிறது</title><content type='html'>இந்த உலகமும் அதன் அனைத்து மூலக்கூறும்&lt;strong&gt;பெயர்களால்&lt;/strong&gt; அறிந்து கொள்ளவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரையிலும், ஏழை முதல் கோடிஸ்வரன் வரையிலும் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரவர்க்கென்று ஒரு பேராவது இருக்கும்.  பெயரிடல் போக (நல்ல) பேருக்கா உழைப்பவர்கள், உயர்ந்தவர்களும் உண்டு.  தன் பணியை ஏதோ (கடமைக்கு) பேருக்கு செய்பவர்களும் உண்டு.  &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நானோ எந்த பேருக்கும் இன்றி சொந்த பேருக்காவே போராடி வருகிறேன்.  பெற்றோர்களால் இடப்பட்ட பெயரையும் மறுத்து என் தேவை, என் பாலுணர்வு, என் உரிமை, என் வலிகளுக்காய் என் அடையாளத்தை மீட்டெடுத்து, சில கைதட்டுகளோடும் பல கல்லடிகளோடும் என்னை ஸ்திரபடுத்திக் கொண்டு வந்தாலும், பெயரால், பாலின அடையாளத்தால் நான் இழந்தவை பல.&lt;br /&gt;&lt;br /&gt;நூலக அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு, சிம் கார்ட்டு என சகல விதத்திலும் அங்கீகாரமின்றியும், அறுவெறுப்புக்குள்ளாகியும். கடந்த 3 வருடங்களை தாய்நாடு ஈன்றெடுத்த அகதியாய் வலம் வருகிறேன்.  அடையாளமின்றி வாழ்வது துறவறத்திற்கு பொருந்தலாம். மனிதத் திரளின் மத்தியில் சக மனுஷியாய் நேர்கொண்டு நிற்க இயலாதவளாய் என் நிலை நிர்கதியற்று இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்டோபர் 2005ல் எனக்கு பணியும், தங்குமிடம் கிடைத்து ஒரு பாதுகாப்பான platform கிடைத்தபின் நான் செய்ய வேண்டிய முக்கியமான அடுத்த பணி பெயர் மற்றும் பாலின மாற்றம் பெறுவது.  ஆனால், அதை எவ்வாறு செய்வது என்பதில் தெளிவிருக்கவில்லை. எனவே, முதலில் பெயரையாவது மாற்றிக் கொள்வோம் என்று பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை, சென்னைக்கு விண்ணப்பப்படிவம் அனுப்பினேன். பெயர் மாற்றத்திற்கென சில காரணங்கள் குறிக்கப்பட்டிருந்தது. உ.ம். மதமாற்றம், Astrology, Neumorology, என்கிற ரீதியில் சில..&lt;br /&gt;&lt;br /&gt;நானோ எனது பாலின சிக்கலை எதுவும் குறிப்பிடமால் பொதுவாக "I want my name with no regional, religious and gender identity" என்று குறிப்பிட்டிருந்தேன். சரியாக 15வது நாளில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வந்தது. அதில் நிராகரிப்பிற்கான காரணமாக கொடுக்கப்பட்ட பட்டியலில் அனைத்தையும் பேனாவால் அடித்துவிட்டு. ஒரு மூலையில் பென்சிலால் "இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்" என்று எழுதியிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆத்திரம், அழுகை எல்லாமே இருந்தாலும் என்ன செய்வதென்று தெரியாத நிலை.  நண்பர் ஒருவரின் அறிவுரையின் படி மதுரையில் உள்ள பெண்ணிய ஆர்வலரும், வழக்கறிஞருமான ரஜினி அவர்களை சந்தித்து என் பிரச்சனையை விளக்கினேன்.  (இவர் ஏற்கனவே 2002ல் திருநங்கைகளுக்கான வழக்கு ஒன்றில் பங்காற்றியவர்).  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வழிநடத்தலின் கீழ் பிப்ரவரி 2005ல், நான் பிறந்த ஊரான திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், நாங்கள் வசித்த பகுதியை சார்ந்த தாசில்தார் அவர்களுக்கும், இவற்றோரு தலைமைச் செயலகத்திற்கும் எனது பிரச்சனையை தெளிவாகக் கூறி அனைவருக்கும் மனு ஒன்றினை அனுப்பி எனக்கு பெயர் மற்றும் பாலின மாற்றம் ஏற்படுத்தித் தர வேண்டிக்கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்கள் கழித்து திருச்சி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. மூன்று முறை நேர்முகத் தேர்வும், சில விசாரணைகளும் முடித்தபின் எனது பெயர் மற்றும் பாலின மாற்ற விண்ணப்பத்தினை தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னைக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர். எனக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது.  ஆனால், பதில் வரவேயில்லை. பிறகு நேரில் சென்ற பிறகு கடிதம் அனுப்புவதாக சொன்னார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாத இடைவெளிக்குப் பின், பால்மாற்று அறுவை சிகிச்சை மாற்று மேற்கொண்டதன் மருத்துவ சான்றிதழ் அனுப்பக் கோரி பதில் வந்தது.  எனது பால்மாற்று சிகிச்சையோ அங்கீககாரமின்றி மேற்கொள்ளப்பட்டது.  மேலும், அதற்கான அங்கீகாரமோ, புரிதலோ கூட இல்லாத சூழலில் நான் என்ன செய்வது?  அதற்கும் என்னிடம் வழி இருந்தது.  பால்மாற்று சிகிச்சை முடித்த சில மாதங்களில் குடல்வால் வளர்ச்சி காரணமாக எனக்கு வேறொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  அச்சிகிச்சை முடிந்து நான் வெளியேறிய போது discharge குறிப்பில் எனக்கு ஏற்கனவே, பால் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை ஆதரமாக எடுத்துக்கொள்ளுமாறு அனுப்பியிருந்தேன்.  ஏற்கனவே அனுப்பிய விண்ணப்பத்திலும் அப்பிய போதும். மீண்டும் தனியாக கடிதத்தோடு அனுப்பியிருந்தேன்.  ஆனால், பால்மாற்று சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தான் சான்றிதழ் தரவேண்டுமென மீண்டும் மறுத்துவிட்டனர். இதிலேயே அரையாண்டு கழிந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அனுப்பிய மறுப்புகளை அடிப்படையாக கொண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ரஜினியின் உதவியுடன் வழக்கு பதிவு செய்தேன்.  நான்கு மாதங்கள் கழித்து எனது பெயர் மாற்றத்தினை 7 வாரங்ளுக்குள் மேற்கொள்ள வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது.   சந்தோசத்தின் உச்சியில், மிகப்பெரிய வெற்றியடைந்த களிப்போடு காத்திருந்தேன்.  7 வாரங்களை அதிகபட்சம் 2 மாதங்களாக கொண்டு காத்திருந்தேன்.  3 மாதங்கள் ஆனது பதிலே இல்லை பொறுக்க முடியாமல் சென்னை வந்து நேரடியாக அலுவலகத்தில் விசாரத்த போது, தீர்ப்பில் பரிந்துரைக்கதான் சொன்னார்கள் நாங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என்று முடித்துக் கொண்டனர்.  அடக்கமுடியாத ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு என் நிலையை விளக்கி, பரிந்துரையை ஏன் ஏற்றுக் கொள்ளமுடியாது அதற்கான காரணம் வேண்டும் என சண்டையிட்ட பின் மருத்துவ சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாற்றித்தர முடியும் என்றார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவ சான்று வேண்டுமெனில் அதற்கான வழியை மேற்கொள்ளுங்கள் இல்லையெனில் கோர்ட் அவமதிப்பு மற்றும் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று பூச்சாண்டி காட்டியின் கடிதம் அனுப்புவதாக சொன்னார்கள்.  பல நாட்களுக்குபின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவனையிலிருந்து மருத்துவ சான்றிதழ் பெருமாறு எனக்கும், என்னை சோதித்து சான்றழிக்குமாறு மருத்துவமனைக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனையில் சென்று சான்றிதழ் வாங்குவதற்கு 3 வாரங்கள் ஆனது. அலுவலகத்தில் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின் மருத்துவர்களால் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்டேன்.  அதைவிட கொடுமை அங்குள்ள சில அலுவலர்களால் ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் ஆளானது. அனைத்தையும் பொருமையுடன் சகித்துக் கொண்டு ஒரு வழியாக மருத்துவசான்றிதழும் சாதாக கிடைக்க "எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மிக மிக முறையான, சரியான வகையில் காரியம் முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கையும், இது ஒரு முன்மாதிரியாக அனைவருக்கும் உதவும் என்ற பூரிப்போடு" காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காத்திருப்பு, அதீத தாமதம், சென்னை விஐயம். ஆவலோடு கேட்டால், "எங்களுக்கும், காப்பி வந்துச்சு.  ஆனா, அதுல Medical examination seems she can reared as Female ன்னு தான் இருக்கு. she is female அப்பிடின்கு வரல. அதனால மாத்த முடியாது". இப்போதும், பொருத்துக் கொண்டு "அதெப்பிடி பிறப்பால் நான் பெண்ணு இருந்தா அத எங்க அப்பா, அம்மா ஆரம்பத்திலேயே பாலினம்னு குறிச்சிருப்பாங்களே...  இப்படி பெறக்கப்போயிதானே இந்த கஷ்டமெல்லாம். அப்ப டாக்டருங்களும் அதான சொல்ல முடியும். எப்பிடி மாத்த முடியும்னு" விவாதம் நடந்தது.  பிறகு பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்கள்.  ஒருவழியாக பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்கள் என நிம்மதி பெருமூச்சு விட்ட போது செப்டம்பர் 2006. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு டீனிடம் பேசணும், அங்க கேக்கணும், G.O. வரலைன்னு ஏகப்பட்ட சமாளிப்புகள்.  பொறுத்தவரை பொறுத்து நேரடியாக ஒருநாள் அலுவலுகம், மேலதிகாரி அனைவர் முன்பாகவும் கொதித்தெளுந்து சண்டை போட்டதன் பயனாக "பேர் மட்டும் மாத்துரதுன்னா பரவால்ல பாலினம் வேற மாத்தனும்ல அதனால் எப்படின்னு பேசிட்டு இருக்கும் அதான் லேட்டு" என்று உயரதிகாரி ஒருவர் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் காத்திருந்தேன்.  இதற்கிடையில் மதுரையை விட்டு சென்னைக்கு மாறி வந்தாச்சு. சென்னைக்கு நான் வந்ததன் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. முகவரி மாற்றத்தை நேரில், போனில், கடித்தில் தெரிவித்தும் தொடர்ந்து வந்த கடிதங்களோ ஆரம்ப மதுரை முகவரிக்கே தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மீண்டும் என்னை அடைய சில நாட்கள் என எல்லாமே தாமதம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு பெயர் மாற்ற குறிப்பினை குறிப்பிட்டு ரூ.1,645/-னை கட்டுமாறும் கடிதம் கிடைத்தது. வழக்கமான பெயர்மாற்றத் தொகையோ வெறும் 410 தான். தொகையோ பல மடங்கு கூடுதல் மேலும், பெயர் மாற்றம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் நேரில் சண்டை போட்டும் பயனில்லை.  சரி பெயராவது மாறட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டாலும் அவ்வளவு என்னிடம் இருந்ததோ 500 பிறகு அதற்கு மேல் பணம் திரட்ட முயன்று, தோற்று ஒரு வழியாக சென்னை பல்கலைகழக கன்னட துறை பேராசிரியர் திருமதி.தமிழ்செல்வி அவர்கள் கொடுத்து உதவினார்கள். (ஒருமுறை தொலைபேசியிலும், ஒருமுறை நேரிலும் மட்டுமே அறிமுகம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணம் கட்டி முடித்து ஐனவரி 2008 புது வருடம் புத்தம் புதியாய் எனக்கு தொடரும் என்று காத்திருந்தேன். ஐனவரி சோர்வாய் சென்று முடிந்தது. பிப்ரவரியும் வந்து, பெயர் மாற்றம் என் மனதை அறித்துக் கொண்டிருப்பது நின்றுவிட்ட மதுரையிலிருந்து நேற்று ஆன்ட்டி கால் செய்து என் பெயர் மாற்ற அறிவிப்பு கடிதம் கிடைத்த செய்தியை சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே என் வாழ்நாளின் தீர்க்க முடியாத சிக்கில் ஒரு பாதியை தீர்த்து விட்ட மகிழ்ச்சியை உங்களுக்கு சொல்லாமல் யாரிடம் சொல்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உபரி : பேர் மாற்றத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்ததற்கு கின்னஸ் கிடைக்குமான்னு விசாரிச்சு சொல்லுங்கப்பா....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-5155596016198908406?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/5155596016198908406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=5155596016198908406' title='55 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/5155596016198908406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/5155596016198908406'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2008/02/blog-post.html' title='பெயரில் என்ன இருக்கிறது'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>55</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-6036968564776696754</id><published>2008-01-24T11:51:00.001+05:30</published><updated>2008-05-20T18:35:16.898+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசு'/><title type='text'>ஆளுநர் உரை-தமிழக அரசு - நன்றி</title><content type='html'>நேற்று சட்டசபையில் தமிழக கவர்னர் திரு.சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாண்டில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பும் உள்ளடங்கியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://customersrock.files.wordpress.com/2007/05/thank-you.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://customersrock.files.wordpress.com/2007/05/thank-you.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அளவில் திருநங்கைகளுக்கான சில நல்முயற்சிகள் தமிழகத்தில் அதிகபட்சம் நடைபெறுவதும், சில கதவுகள் திறப்பதும் மகிழ்ச்சிகரமாக உள்ளது. தமிழக அரசின் இம்முடிவுக்கு திருநங்கைகள் சார்பில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நல வாரியம் நிதர்சனத்தில் சாத்தியப்பட வேண்டும். கூடுமான முறையில் திருநங்கைகளே இவ்வாரியத்தில் பணியாற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், இதன் அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம், வேலைவாய்ப்பு, குடும்ப - சமூக பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றை இன்றே செய்- என்பது வள்ளுவர் வாக்கு, வள்ளுவர்க்கு சிலை வைத்த தமிழக அரசு அவர் சொல்படி இந்நற்செயலை துரிதமாகவும், துள்ளியமாகவும் செய்து முடிக்கும் என்று நம்பிக்கையோடு மீண்டும் சொல்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!  நன்றி!  நன்றி!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-6036968564776696754?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/6036968564776696754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=6036968564776696754' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6036968564776696754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6036968564776696754'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2008/01/blog-post_24.html' title='ஆளுநர் உரை-தமிழக அரசு - நன்றி'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-4021284742446474455</id><published>2008-01-19T17:55:00.001+05:30</published><updated>2008-04-13T20:28:29.714+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>நானே நானா..? ஐந்தே தானா?!</title><content type='html'>எனது பதிவுகளில் வத்தலும் சொத்தலும் போக பதிவு என்றவகையில் ஒரு 60 தேரும் என்று வைத்துக் கொள்ளலாம். அதில் கவிதைகள் ஒரு பத்து போக 50 பதிவுகள் தேரலாம். தேரலாம் என்பது என்னளவில் தான்.  கட்டற்ற  சுதந்திரந்திரத்தின் உச்சம் நம் வலைப்பூ எனவே யார்  மறுக்க முடியும்?  ஆனால் நம்மை நாமே தேர்விற்குள்ளாக்கி 5 பதிவுகளை தேர்வு செய்யும் போதுதான் தெரிகிறது இந்த ஐம்பது கூட தேறாது என்பது. &lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் &lt;a href="http://balabharathi.net"&gt;வலையுலக தாதாவே&lt;/a&gt; வரவேற்கும் போது மறுக்க முடியுமா? எனவே, கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சு ஐந்து பட்டியலிட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;***&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவான ஒரு சொலவடை ஒன்று உண்டு.  இன்னார் ஒரு பேருக்கு ஆசைப்படுபவர்.  வெறும் பேருக்காகத்தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்ற ரீதியில்...  நான் நிஐமாகவே பேருக்காக (பாலினத்திற்காகவும்) கிட்டதட்ட ரெண்டு வருடமா போராடிக்கொண்டிருக்கிறேன். இது குறித்து தனி பதிவு விரைவில் தனி பதிவும் வரும். இப்படியிருக்க ஏன் லிவிங் ஸ்மைலுன்னு கேக்காத புண்ணியவான்/வதி இல்ல. இதற்கான விடையாய், மீள்பதிவாய், என் முதல் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://livingsmile.blogspot.com/2006/05/blog-post.html"&gt;1.  ஏன் லிவிங் ஸ்மைல்?&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R5H0CR5m7hI/AAAAAAAAAJk/gycZZxEWN1Q/s1600-h/untitled.bmp"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R5H0CR5m7hI/AAAAAAAAAJk/gycZZxEWN1Q/s200/untitled.bmp" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5157171368317873682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானறிந்து பெயர் மாற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை முயற்சி செய்து கொண்டிருக்கும்  பெண்மணி நானாகத்தான் இருக்க முடியும் (கின்னஸ்க்கு விண்ணப்பிக்கும் அய்டியாவும் உள்ளது)என்று நினைக்கிறேன். குறிப்பாக பெயர் மாற்றத்திற்கான முயற்சிக்காகவே புலம் பெயர்ந்த உலகின் முதல் பெண்ணும் நானாகத்தான் இருக்கமுடியும்.  தலைநகர் தேடி அடைந்து நான்கு மாதங்காக தனியார் (அ) அரசு பணிக்காகவும், தங்குமிடத்திற்ககாகவும் முயற்சித்துக் கொண்டிருக்கும் இநந்நிலையில் இப்பதிவை படிக்கும் போது எனக்கே ஏக்கமாகத்தான் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://livingsmile.blogspot.com/2006/06/blog-post_08.html"&gt;2. நம்புங்கள் நாம் வசிப்பது தமிழ்நாட்டில் தான்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.macidol.com/i4/rock.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.macidol.com/i4/rock.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகுஐன திரைஇசை ரசனையிலிருந்து ராக் இசைக்கு என்னை வழிநடத்திய ஆசான் பாப் மார்லி. இசையினூடாக தனிமைக்கான சிறந்த மாற்றையும் ஏற்படத்தியவை ராக் இசை சமீபகாலமாக எனது வலைப்பக்கத்தில் சில பாடல்கள் வருவதும் தாங்கள் அறிந்ததே. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த கலைஞன் குறித்த எனது குட்டி அறிமுகம் &lt;a href="http://livingsmile.blogspot.com/2006/08/blog-post_14.html"&gt;விழித்தெழு எழந்து போராடு உன் உரிமைக்காய்&lt;/a&gt; என்னும் இந்த பதிவில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குரிய இளமையில் நான் நானாக கொண்டாட முடியாததன் தொடர்ச்சி அல்லது முற்றப் பெறாமையின் காரணமாகவே என்னிடம் குழந்தைத்தனம் ஓங்கி இருப்பதுண்டு.  அதன் இன்னொரு வடிவம் குழந்தைகளின் மீதான தீராக் காதலும்.  எங்கேயும், எப்போதும் சுட்டிக் குழந்தைகளை கொஞ்சுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளின் மீது ஆசை, கொஞ்சல், ஏக்கம், மகிழ்ச்சி, மழலை உலகம் எல்லாமே என் குணங்களில் ஒன்று. குழந்தைகளில் உலகை அழகாக விவரித்து வந்த நாவலை குறித்த என் வாசிப்பு அனுபவமாக இந்த பதிவும் -&lt;a href="http://livingsmile.blogspot.com/2006/09/blog-post_13.html"&gt;டோட்டோ சான் ஐன்னலில் ஒரு சிறுமி&lt;/a&gt;- எனக்கு நிறைவான பதிவுகளில் ஒன்று. நாவலில் வரும் ரயில் பள்ளி போன்ற பள்ளியில் படிக்கவி்ல்லை என்றாலும், கிட்டதட்ட இதைப் போலவே, பாடத் திட்டம் கொண்ட &lt;a href="http://siragu.org"&gt;சிறக மாண்டசோரி பள்ளி&lt;/a&gt;யில் பணிபுரிவதும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://daphne.blogs.com/photos/uncategorized/totto_1.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://daphne.blogs.com/photos/uncategorized/totto_1.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில், புதிய காற்று இதழ் சார்பாக தமிழ் சினிமா அகமம் புறமும் என்றொரு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றிற்காக தயார் செய்த கட்டுரை.  எனது மற்ற பதிவுகளோடு ஒப்பிடுகையில் கட்டுரை என்னும் வடிவத்தற்கு சற்று நெருங்கி வந்துள்ள பதிவாக இது அமைந்துள்ளது மற்றும் அவசியமானதும் கூட என்பதால் என் தேரிவிலிருந்து விலக்க முடியாததாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;a href="http://livingsmile.blogspot.com/2007/02/blog-post.html"&gt;தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைளின் நிர்வானம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களாக தமிழ்மணம் பக்கம் அடிக்கடி தலைகாட்ட முடியவில்லை. எனவே யாரெல்லாம் எழுதியுள்ளார்கள், யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற வரலாறும் எனக்கு தெரியாது. எனவே, இப்பதிவை படிக்கும் பதிவர்களில் இன்னும் எழுதாதோர்  இதனை எனது நேரடி அழைப்பாக ஏற்று தொடரை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-4021284742446474455?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/4021284742446474455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=4021284742446474455' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4021284742446474455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4021284742446474455'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2008/01/blog-post_19.html' title='நானே நானா..? ஐந்தே தானா?!'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R5H0CR5m7hI/AAAAAAAAAJk/gycZZxEWN1Q/s72-c/untitled.bmp' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-4719449393325851201</id><published>2008-01-08T09:34:00.000+05:30</published><updated>2008-01-10T09:07:12.714+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாருநிவேதிதா'/><title type='text'>என் வாசிப்பு அனுபவம் :  தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்</title><content type='html'>சிறுவர் மலர், அம்புலிமாமா, முல்லா/பீர்பால்/ராமன் கதைகள் என வளர்ந்து வந்த நான் பத்தாம் வகுப்பும் படிக்கும் நாட்களில்  கண்மணி, ரமணி சந்திரன்,  ராஜேஸ்குமார், சுபா என இலக்கிய சோலையில் மயங்கிக் கிடந்தேன். இளங்கலை சேர்ந்த சில நாட்களில் தமிழ் வாத்தியார் ஒருவா ஒரு முறை "சில நேரங்களில் சின மனிதர்கள்" என்னும் நாவல் குறித்து சிலாகித்ததில் கல்லூரி நூலகத்தில் தேடினேன். தேடியது கிடைக்காத போதும் அதே ஜெயகாந்தனின் "ரிஷி மூலம்" கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது அப்படியே தொடர்ந்து, ஜி.நாகராஐன், ப்ரேம் ரமேஷ், அசோகமித்ரன், சு.ரா., தஞ்சை பிரகாஷ், தி,ஜானகிராமன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று வளர்ந்து பின்னர் லியோ டால்ஸ்டாய், அன்டன் செக்காவ்,  தஸ்தாயவெஸ்கி, மக்சிம் கார்க்கி, மிகயில் ஷோலகவ் ரஷ்ய மொழிபெயர்ப்பின் பால் திரும்பியது.  மற்ற நூல்கள் எல்லாம் நூலகம் மூலமாகவே பெற முடிந்த எனக்கு, NCBHன் புண்ணியத்தில் மலிவு விலைபதிப்புகளாக ரஷ்ய சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் கிடைத்தன.  ரஷ்ய பனியும், பயணமும், கதைகளும் என் கனவுகளை நிறைத்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல மெல்ல இலக்கிய போதைக்கு அடிமையாய் இருந்தேன்.  முதுகலை சேர்ந்த சிலநாட்களில் நாடக பேராசிரியர் மு.ராமசாமியின் அறிமுகம் மற்றும் முருகுபூபதியின் நட்பு இயல்பாகவே எனக்கிருந்த நடிப்பாசையை முறையான தீயின் கதகதப்பில் செழுமையாக்கிக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைகளோடு அதிகம் பரிச்சயம் இன்றி இருந்த வந்த எனக்கு முருகுபூபதியின் நட்பும் அவருடன் கொண்ட உரையாடல் அல்லது முருகுபூபதி, கோணங்கி, குமார் அம்பாயிரம், வியாகுலன், யவனிகா ஸ்ரீராம் போன்ற அதிதீவிர கவிஞர்ளின் உரையாடல்களை வாய் பார்த்த நாட்களிலிருந்து கவிதையின் சுவை மீது மோகம் வரத்துவங்கியது.  கவிதை எழுதுவதற்கும் முயற்சித்தேன் (வரவில்லை விட்டுவிட்டேன்)  &lt;br /&gt;&lt;br /&gt;முருகுபூபதி வகையராக்களின்  கவிதைமொழி கடினமானது என்பதால் அவற்றைக் கடந்து  கல்யாண்ஜி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, மதிவண்ணன, தேவேந்திர பூபதி, தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் என்னைக் கவர்ந்த கவிஞர்களாக என் தேர்வில் இருந்தார்கள். முதுகலை இறுதியாண்டு வரும் சமயம், உயிர்மை இதழ் முதலாக வர ஆரம்பித்திருந்த சமயம்.  மாதம் தவறாமல் ஒரு இலக்கிய புத்தகமாவது வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தெருந்த சமயத்தில் உயிர்மை சரியாக பட்டது.  உயிர்மையை தேர்ந்தெடுத்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது.  அப்போது திருச்சியில் நான் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் நடித்த நண்பர் செந்தில் உயிர்மையோடு அப்போது நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தற்போது உயிர் எழுத்து நடத்தி வருகிறார்.  தொடர்ந்து ரிகசர்ல் நடந்த அந்நாட்களில் அவரிடம் பெரும்பாலும் ஓசியிலேயே உயிர்மை இதழ்கள் கிடைத்தன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிர்மை இதழில் அறிமுகமான சாருநிவேதிதா அந்நாட்களில் எனக்கு மிகவும் சிறந்த எழுத்தாளராக பட்டார்.  துணிச்சலான, வெளிப்படையான, பல்பரிமாண எழுதுத்தாக அவரது படைப்புகள் என்னனை கவர்ந்தன. இது போது இணையத்திலும் அவரது &lt;a href="http://www.charuonline.com/"&gt;இணையபக்கத்தை&lt;/a&gt;யும், வெப்உலகம், திண்ணை என்று கொஞ்சம் மேய்ந்து கொண்டிருந்தேன்.  நிஐத்தில் எழுத வேண்டும் என்ற நப்பாசையை மட்டும் எனக்கு அவ்வப்போது எழுப்பிக்கொண்டிருந்த நெருக்கமான தோழனாக சாருவின் எழுத்துக்கள் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போக சிறு சிறு புத்தக கண்காட்சிகள். நண்பர்களின் பரிசு, நூலகம் என மேலும் கொஞ்சம் வாசிப்போடு தொடர்பிலிருந்தேன்.  ஒரு வகையில் அல்லது முழுக்க முழுக்க இந்த வாசிப்பே என் தனிமைக்கு உற்ற தோழியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்சை எடுக்க ஆரம்பித்த சில நாட்களில் முழுக்கவும் நின்றுவிட்டது. இயல்பு வாழ்க்கையின் இன்னல்களும், கோரங்களும் நேரமின்மையொடு கைகோர்த்து இலக்கியங்களின் மீது எனக்கிருந்த இனம்புரியாத தேடலை நீர்த்துப் போகச் செய்தது. &lt;br /&gt;&lt;br /&gt;****************&lt;br /&gt;&lt;br /&gt;புனேவிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து புது மனுஷியாய் வாழ்க்கை மீதான அவநம்பிக்கையும், அதிருப்தி மற்றும் பயத்தோடு தமிழகம் திரும்பினேன்.  முன்பிருந்த இலக்கிய ஆர்வம் இப்போது இல்லை.  என் தேவையெல்லாம், தங்குமிடம், பாதுகாப்பு, வேலை, நிம்மதி இவை மட்டுமு. என் முயற்சிகளுக்கு ஆதாரமாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது முருகபூபதி மற்றும் பிற இலக்கிய நண்பர்களின் நட்புதான். நேரடியாக உதவ முடியாத சூழ்நிலையிலும் பல கவிஞர்கள் என் நிலைக்காக வருத்தமும் நல்லது நடக்க வேண்டும் என்ற அக்கரையும் கொண்டிருந்தனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கு அப்பாற்பட்டு எனக்கு தெரிந்த பல நண்பர்களிடம் சகட்டு மேனிக்கு வேலை வேலை என நச்சரித்துக் கொண்டிருந்தேன்.  அந்நிலையில், தோன்றிய யோசனைகளுள் ஒன்று சாருநிவேதிதாவிடமும் உதவி கேட்கலாம் என்பது.  மிகச் சரியாக சொல்வதென்றால் அது ஒரு முட்டாள் தனமான யோசனையும் தான். எனக்கு சாருவைத் தெரியும் ஆனால் சாருவிற்கோ என்னைத் தெரியாது.  அதனால் என்ன?  விளிம்புகளின் அவலத்திற்காக கொதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளன். வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை கொண்ட  எழுத்தாளன், பல பெரிய புள்ளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளன் எனவே முயற்சி என்ற அளவில் என்ன தவறு என் தயக்கத்தை உடைத்துக் கொண்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt;ஒரு திருநங்கை. அதுவும் கொளரவமாக வேலை செய்ய வேண்டும் என ஆசைபடும் நியாயமான நோக்கம். இதற்காகவெல்லாம் தன்னாலான சிறுமுயற்சி கூடவா ஒரு எழுத்தாளர் எடுக்க மாட்டார்?! ஒருவேளை இம்முயற்சியின் பலனாக நல்ல வேலை கிடைத்துவிடாதா என்ற நப்பாசை என்னை விடாமல் துரத்தியது.  இவற்றையெல்லாம் கடந்து என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளரிடம் பேசப் போகும் மகிழ்ச்சியும்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல முயற்சிகளோடு ஒரு முயற்சியாய் நண்பர்கள் மூலமாக சாருவின் எண் கிடைக்கப் பெற்று, தொலைபேசியில் உரையாடினேன்.  என்னை பற்றிய சுய அறிமுகம் செய்து கொண்டேன். குரலும், பேசும் விதமும் பாந்ததமாக, அன்பாகவே இருந்தது.  பிறகு எனது உதவியை முன் வைத்தேன். எதிர்பார்த்த ரியாக்சனோ, பதிலோ இல்லை.  தொடர்ந்து தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம், தவிர்க்கப்பட்டேன். ஒருவேளை தன்னிடம் யாரோ  விளையாடவதாக தவறாக நினைத்துக் கொண்டாரோ அல்லது ஒரு இலக்கிய ஐாம்பவானிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறை இதுவல்லவோ என்று என்னை நானே சமாதனப்படுத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அதற்குள் எனக்கும் வேலை கிடைத்து ஓரளவு செட்டிலாகி விட்டிருந்தேன்.  எனக்கு திருநங்கைகளுக்கான ஆவண மையம் நடத்த வேண்டும் என்ற உபலட்சியம் ஒன்றிருந்தது. அற்காக திருநங்கைகள் தொடர்புடைய புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது கோணல்பக்கங்களின் சில பகுதிகளில் திருநங்கைகள் குறித்த சாருவின் பார்வை, அனுபவங்கள் எனக்கு சந்தேகத்தை, விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.  அது குறித்து விவாதிக்கலாம் என்று சாருவுடன் தொடர்பு கொண்டபோது, ஒரு நேரம் கொடுத்து அந்த நேரத்தில் பேசலாம் என்றார்.  அவர் குறிப்பிட்ட நேரத்தில் தொடர்புகொண்ட போது பிறகு பேசுவோம் என்றார்.  அப்படியே தவிர்த்துக் கொண்டுவந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் இணைய உலாவி என்று அறிந்திருந்ததால், அவரது ஹாட்மெயில் / யாஹீ சரியாக நினைவில் இல்லை முகவரிக்கு சாட் செய்ய அழைப்பு ஒன்று விடுத்திருந்தேன்.  சில நாட்கள் கழித்து அந்த அழைப்பிற்கு பதிலிளித்தார்.  அதில் நான் யார் என்று கேட்டிருந்தார்.  என்னை யாரென்று தெரியாமல் ஏதோவொரு வித்யா என்றுதான் வந்துள்ளார் என்று அறிந்து.  முன்பு தொலைபேசியில் பேசியவற்றை நினைவு படுத்தினேன்.  சட்டென சாட்டிலிருந்து மாயமானார். அதற்குள் சில இலக்கிய, சிந்தனை சிற்பிகளின் போலிமுகங்களை தெரிந்து கொண்டதாலும், இலக்கிய ஜாம்பவான்களின் மேலிருந்த பிரேமை நீங்கியதாலும், சாருவின் சிறுமையை  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து அவரது எழுத்துக்களை மறுவாசிப்பு செய்ததில் பல கட்டுரைகளை ரசிக்க முடிந்தது.  அதே பகடி, கோபம், தகவல் திரட்டு எல்லாம் ஆச்சரியப்படுத்தினாலும். சில தகவல்கள் போலியானது, நாடகத்தனமானது என்பதையும் என்னால் யூகிக்க முடிந்தது. கிட்டதட்ட ஒரு வருடங்கள் கழித்து ஒருவருடம் கழித்து உயிர்மையில் எழுதிய &lt;a href="http://www.charuonline.com/kp239.html"&gt;கட்டுரையை&lt;/a&gt; படித்து பயங்கர ஆத்திரம் எழுந்தது.  அதிமேதாவியாக தோன்றினாலும் சில கட்டுரைகள் மிக எரிச்சலூட்டுவதாக அமையும் சாருவின் சில கட்டுரைகளுக்கிடையே இந்த திரைக்கட்டுரையையும் அதன் அபத்தததையும் ஏற்கனவே &lt;a href="http://livingsmile.blogspot.com/2007/04/blog-post.html"&gt;இங்க&lt;/a&gt;ே எழுதியுள்ளேன். அதோடு அதை மறந்தும் விட்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 6 ஐனவரியன்று நியூ உட்லான்ட்ஸ் ஹோட்டலில் சாருவின் மூன்று புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன்.  இவ்விழாவில் பார்லிமெண்ட் உறுப்பினர் கனிமொழி வருவதால் முடிந்தால் அவரை நேரில் சந்தித்து, பெயர், பாலின மாற்றத்திற்கு உதவக்கோரியும், வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் முயற்சிக்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம்.  அடடா, எங்க வேல கேக்குறதுன்னா விவசத்த இல்லயான்னு மட்டும் கேக்காதிங்க. முறையான பெயர் மற்றும் பாலின அங்கீகாரமின்மையால் தினசரி வாழ்க்கையில் அடையும் நேரடிச் சிக்கல்கள் அனுபவத்தால் மட்டுமே புரியும்.  மனிதாபிமானம் கொண்டு ஒருவரின் உரிமைக்காக உதவுவதன் முனபு இலக்கியமோ, நாகரீகமோ எனக்க பெரிதாக படவில்லை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக நிகழ்ச்சிக்கு சென்ற எனக்கு அங்கே மற்றொரு ஆனந்த அதிர்ச்சியாக,  திருநங்கைத் தோழிகளான ப்ரியா பாபுவும், ரோசும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். &lt;br /&gt;கண்டிப்பாக இருவருமே சாருவை, சாருவை மட்டுமன்றி யாரையும் படித்ததில்லை என்பது தெரியும்.  பிறகு இங்கே எப்படி என்பதே என் ஆச்சரியம்.  அவர்களிடமே கேட்டபோது,  "அவரைத் தெரியும் " என்றார்கள்.  சரியென்று கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.  விழாவிற்கு வந்த பல முண்ணனி கலையுலக, எழுத்தாளர்களில் அழகிய பெரியவன்,பாரதி கிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பாலு மகேந்திராவின் உரை நன்றாக இருந்தது. பாலு மகேந்திரா தாமதித்து தாமதித்து பேசினாலும், உரையாடலின் சில பகுதிகள் நன்றாகவே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பார்த்தபடியன்றி, கனிமொழி தனது உரையை விரைவாக முடித்துக் கொண்டு, அடுத்த கூட்டத்திற்கு சென்றுவிட்டார். ஆனாலும், ஆறுதலாக இருந்தது மற்றவர்களின் உரை. "வரம்பு மீறிய பிரதிகள்" குறித்து அழகிய பெரியவனின்  அலசல் நன்றாக இருந்தது. மொழிபெயர்ப்பு கதைகள் குறித்து பல தகவல்களும் பிற கூடுதல் செய்திகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் உரையில் கிடைத்தது.  சுவைபட பேசுவதில் வல்லவரான பாரதி கிருஷ்ணனின் உரையும் ரசிக்கும் படி இருந்தது. ஏற்கனவே தன் பல கட்டுரைகளில் சொன்னவற்றின் சாராம்சத்தோடு வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி சுவையான ஏற்புரையை சாருவும் தந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R4WSfx5m7eI/AAAAAAAAAJQ/_YdTpq46vjA/s1600-h/DSC00046.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R4WSfx5m7eI/AAAAAAAAAJQ/_YdTpq46vjA/s200/DSC00046.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5153686423263964642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழா முடிந்த உடன், பல நாட்களாக கைகுழுக்க வேண்டுமென்று ஆசையாய் இருந்த அழகிய பெரியவனிடம் என்னை அறிமுகம் செய்து கைகுழுக்கிக் கொண்டேன்.  அவ்வாறே விழாவிற்கு வந்திருந்த கல்லூரி பட இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பாராட்டுதல் தெரிவித்து கூடவே, அவரது அடுத்த படத்தில் திருநங்கைகளை நேர்மறையாக காண்பிக்குமாறு சில காட்சிகளாவது வையுங்கள் என வேண்டுகோளும் விடுத்தேன்.  பெரும்பான்மை திரைவிமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட காதல் படம் எனக்கும் பிடித்திருந்தாலும், கல்லூரி படமே எனக்கு மிகவும் சிறந்த படமாக, இந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்படமாக பட்டது.  எனது வாழ்த்தை அவரிடம் நேரடியாக சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சியும் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரும் போது, திரைத்தொடர்பாக சாரு எழுதிய ஒரு புத்தகத்தையும் அங்கேயே வாங்கிக் கொண்டேன்.  ஏற்கனவே உயிர்மையிலும், இணையபக்கத்திலும் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பு தான் என்றாலும், இதில் திருநங்கைகள் குறித்த சொற்கள் இடம் பெற்றதால்.  எனது ஆவண சேகரிப்பு உதவுமென்பதால் வாங்கிக்கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசிப்பில் தீவிரமாக இருந்த ஆரம்பநாட்களில் எழுதவேண்டும் என்ற கொஞ்சநஞ்ச ஆசையை  எழுப்பி எழுதுவதில் இருந்த தடையை உடைக்க உதவியவை சாருவின் எழுத்து என்பது மறுக்க முடியாதது.  இலக்கிய கூட்டம், வாசிப்பு என கடந்த இரண்டு வருடங்களாக விலகியே இருந்த எனக்கு சாருவின் புத்தக வெளியீட்டு விழா மீண்டும் உற்சாகத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தியது உண்மை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-4719449393325851201?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/4719449393325851201/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=4719449393325851201' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4719449393325851201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4719449393325851201'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2008/01/blog-post_08.html' title='என் வாசிப்பு அனுபவம் :  தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R4WSfx5m7eI/AAAAAAAAAJQ/_YdTpq46vjA/s72-c/DSC00046.JPG' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-3020419030586149269</id><published>2007-12-16T11:22:00.000+05:30</published><updated>2008-01-07T13:44:14.561+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட விழா'/><title type='text'>IFFK-2007 :என்னை கவர்ந்த உலக படங்கள்</title><content type='html'>இந்த வருடம் IFFK-2007 நிஐமாகவே ஸ்பெசல். Retrospective வரிசையில் பெத்ரோ அல்மதோரின் 13 படங்கள் திரையிடப்பட்டன.  All about my mother, Bad Education, இரண்டும் ஏற்கனவே திருநங்கைகள் திரைப்பட விழாவிற்கான தேர்வின் போதும் கடந்த IFFK-2006ல் Volverம் பார்த்தாயிற்று.  Flowers of my Secret சப் டைட்டில் இல்லாததால் மலையாள மைந்தர்கள் எழுப்பிய கோசத்தில் அதற்கு பதிலாக அவரது மற்றொரு படமான Law of Desire பார்க்க முடிந்தது. Art of Crying என்ற டேனிஷ் மொழி படத்திற்காக KIKA என்னும் பெத்ரோ படத்தை பார்க்க முடியாமல் போனது சிறு வருத்தமே.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://graphics8.nytimes.com/images/promos/magazine/almodovar.583.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://graphics8.nytimes.com/images/promos/magazine/almodovar.583.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது போக. Dark Habits, High Heels, Labyrinth of passion, Law of Desire, Live Flesh, Talk to her, What have I done to Deserve this?, Women on the Verge of a Nervous Breakdown ஆகிய எட்டு பெத்ரோ படங்கள் பார்க்க முடிந்ததில் மிகவும் திருப்பி கரமாக இருந்தது இவ்வருட திரைப்படவிழா.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.offoffoff.com/film/2002/images/talktoher.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.offoffoff.com/film/2002/images/talktoher.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;                              (Talk to herல்)&lt;br /&gt;மொத்த படங்களிலிருந்தும் என்னால் சுருக்கமாக சொல்ல முடிவதெல்லாம் பெத்ரோவின் எந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலும் உலக சினிமா ரசிகர்கள் எவரும் மிஸ் செய்யவே கூடாது என்பது தான்.  திரைக்கதை, இசை, வசனம் எதுவுமே கொஞ்சமும் அவசியமற்றதாகவே இருக்காது.  அத்தனையும் கதையோடு ஒன்றி காரணத்தோடே அமைக்கப் பெற்றிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்கால திரை இயக்குநர்கள் பலமுறை பார்க்க வேண்டிய திரைப்பாடம் பெத்ரோவின் படங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Retrospectives வரிசையில் திரையிடப்பட்ட மற்ற இயக்குநர்கள் Jiri Menzel, Im Kwon-teak(South korea), P.Baskaran (malayalam)&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://cache.viewimages.com/xc/76967683.jpg?v=1&amp;c=ViewImages&amp;k=2&amp;d=17A4AD9FDB9CF193861A1C1D75ABE90B2FBCA77DCFE68223284831B75F48EF45"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://cache.viewimages.com/xc/76967683.jpg?v=1&amp;c=ViewImages&amp;k=2&amp;d=17A4AD9FDB9CF193861A1C1D75ABE90B2FBCA77DCFE68223284831B75F48EF45" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விழாவிற்கான துவக்கவிழா படமாக  17 வயது Hanna Makhmalbafன் படமான Buddha Collapsed Out of Shame திரையிடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://easyweb.easynet.co.uk/~iany/photos/bamian_buddha_caves.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://easyweb.easynet.co.uk/~iany/photos/bamian_buddha_caves.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படம் குறித்து IFFK 2007, Hand Bookல் உள்ளபடி " Amidst the wreckage beneath the ruined statue of the Buddha, thousands of families struggle to survive.  Baktay, a six-year-old Afghan girl is challenged to go to school by her neighbour's son who reads alphabets in front of their cave.  Having found the money to buy a precious notebook, and taking her mother's lipstick for a pencil, Baktay sets out.  On her way, She is harassed by boys playing games that mimic the terrible violence they have witnessed, that has always surrounded them.  The boys want to sone the little girl, to blow her up as the Taliban blew up the Buddha, to shoot her like Americans.  Will Baktay be able to escape these violent war games and reach the school?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.blogger.com/post-edit.g?blogID=28180212&amp;postID=3020419030586149269"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.blogger.com/post-edit.g?blogID=28180212&amp;postID=3020419030586149269" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.cinebel.be/portal/resources/movie/1002598/b10025981.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.cinebel.be/portal/resources/movie/1002598/b10025981.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல விருதுகளைப் பெற்ற இப்படத்தில் வரும் குழந்தைகள் முலமாக ஆப்கானின் போர்ச்சூழலையும், தீவிரத்தையும் பெண்கள் மீதான வன்முறையையும் தெளிவான குறியீடாக புரிந்து கொள்ள முடிகிறது. பக்தேயின் வெகுளித்தனமும், உறுதியும் பதற்றத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்தும் கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;**********&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Meisie&lt;/strong&gt; (South Africa, 80 mins, 2007)&lt;br /&gt;Dir/Screenplay : Daryl Roodf&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2TP9x5m7WI/AAAAAAAAAHA/4Qc7fneWBNI/s1600-h/Meisie.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2TP9x5m7WI/AAAAAAAAAHA/4Qc7fneWBNI/s320/Meisie.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5144465334637882722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;A Young Girl, Meisie, with an astonishing talent for mathematics is prevented by her father from going to the local school.  Instead she is forced to tend the goats.  She practices her Maths with stones on the desert sand.  The arrival of Miss September. an inspitational new teacher at the small town, could well change Meisie's life forever.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருட துவக்கவிழா படமான Sounds of Sand யை நினைவு படத்தியது இப்படம். மொத்த கிராமத்திலும் நாம் வாழ்ந்த உணர்வையும், மெய்ஸியின் மீது கனிவும் ஏற்படுத்தும் படம் ஒரு கட்டத்தில் அக்கிராமத்தில் நிலவிய நிஐத்தையே நமக்கு சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Mirage&lt;/strong&gt; (Macedonia-Austria, 104', 2004)&lt;br /&gt;Direction :Svetozar Ristovski&lt;br /&gt;Screenplay : Grace Lea Troje, Svetozar Ristovski&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://media.bestprices.com/dvd/cov150/drt800/t834/t83450u3qgv.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://media.bestprices.com/dvd/cov150/drt800/t834/t83450u3qgv.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;In the Macedonian rallroad town of Vence young Marko endures a rotten home life that includes a drunk father Lazo: Mother, Angla, and older sister, Fanny.  At school the boy is routinely led by Levi, son of a local Cop. Marko spends most of his free time reading or playing chess at the local rail yard.  The one glimmer of light for him is Marko's Bosnian-born teacher, who encourages the boy to write bpoems as he finds hope in his writting.  With the arrival in the rail yard of a friendly  soldier of fortune coincidentally names Paris, Marko's life begins to change.  paris, teahces the boy to smoke, drink, steal and shoot.  These lessons prove prophetic as a chain of events turns Marko's life upside down.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://home.planet.nl/~dijl0002/beelden/iffr/mirage.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://home.planet.nl/~dijl0002/beelden/iffr/mirage.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர்கள் மீதான வன்முறையையும், புறக்கணிப்பையும் மார்கோவின் அங்கலாய்ப்பு ஏமாற்றம் எல்லாமே பார்வையாளர்களை பதற்றத்திற்கு கொண்டு செல்கின்றன.  உலகின் பல மூலையில் சிறுவர்கள் வன்முறையாளர்களாக மாறிவரும் எதார்த்தையை சொல்லும் படம். இவ்வனுபவத்தை எதிர்கொள்ளவது சிரமம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Moolaade&lt;/strong&gt;(Senegal/Bembara-French, 120', 2004)&lt;br /&gt;Direction, production, Screeplay : Ousmane Sembene&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;In the little village of Djerisso, in Burkino Faso, an ancient ceremony is about to take place. Six young girls are about to be 'purified' through the tradition of female circumcision.  But this time,  events take a different turn; the girls escape before they can be cut.  Two apparently make their way to the city; the other four seek the protection of Mama colle, the second wife of Cire Bathily.  Mama colle opposes the practice of female circumcision and has not allowed her daughter, Amsatou, to undergo the process.  She takes the four girls int her house and protects them with a coloured cord stretched across the entrance- this represents 'moolaade', or sanctuary, and neither the women who are eager to perform the circumcision ceremony, nor the male elders, dare break the cord.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.giornalisti.it/binarioloco/archives/moolade465.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.giornalisti.it/binarioloco/archives/moolade465.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றோடு மேலும் நான் மிகவும் ரசித்த படங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;4 Months 3 Weeks and 2 Days&lt;/span&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.fipresci.org/festivals/archive/2007/cannes/photos/4months3weeks2days_2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.fipresci.org/festivals/archive/2007/cannes/photos/4months3weeks2days_2.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;The Art of Crying&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.fipresci.org/festivals/archive/2007/istanbul/images/art_of_crying_01.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.fipresci.org/festivals/archive/2007/istanbul/images/art_of_crying_01.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Because of Love&lt;br /&gt;&lt;br /&gt;Blind&lt;br /&gt;&lt;br /&gt;Casket for Hire&lt;br /&gt;&lt;br /&gt;Chirgu&lt;br /&gt;&lt;br /&gt;Falcons&lt;br /&gt;&lt;br /&gt;Four women&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.tiff07.ca/images/films2007/707101313381293.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.tiff07.ca/images/films2007/707101313381293.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Snow Drop Festival&lt;br /&gt;&lt;br /&gt;WWW. What a wonderful World &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.cinemagora.co.uk/images/films/77/85077-b-what-a-wonderful-world.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://www.cinemagora.co.uk/images/films/77/85077-b-what-a-wonderful-world.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-3020419030586149269?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/3020419030586149269/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=3020419030586149269' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/3020419030586149269'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/3020419030586149269'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/12/iffk-2007.html' title='IFFK-2007 :என்னை கவர்ந்த உலக படங்கள்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2TP9x5m7WI/AAAAAAAAAHA/4Qc7fneWBNI/s72-c/Meisie.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-1816793672903081698</id><published>2007-12-16T10:08:00.000+05:30</published><updated>2007-12-16T11:17:17.677+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கேரளா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட விழா'/><title type='text'>International Film Festival in Kerala  2007</title><content type='html'>வருடந்தோரும் கேரளா அரசு நடத்தும் திரைப்படவிழா (IFFK 2007)இவ்வாண்டு டிசம்பர் 7-14 எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டது.  9 திரையரங்குகளில் உலக சினிமா, ஆவணப்படங்கள், குறும்படங்கள், போட்டிப்படங்கள், இந்திய (இந்தி), மலையாள மற்றும் சில தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S4-x5m7OI/AAAAAAAAAGA/ZZcUKsoMuXo/s1600-h/DSC01256.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S4-x5m7OI/AAAAAAAAAGA/ZZcUKsoMuXo/s320/DSC01256.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5144440063050312930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் நடத்தும் திரைப்பட விழாக்களில் கேரளா திரைப்பட விழா தனி.  முதல் நாளில் திரைப்படங்களின் அட்டவணை, திரையரங்குளின் பெயர், நேரம், ருட் மேப், படங்கள் குறித்து குறிப்பு மற்றும் கதைக்களன், அனைத்தும் அடங்கிய புத்தகம், சிறு கைப்பை, அடையாள அட்டை அனைத்தும் கொடுத்துவிடுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S6wR5m7QI/AAAAAAAAAGQ/KdDbwGB3UX8/s1600-h/DSC01263.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S6wR5m7QI/AAAAAAAAAGQ/KdDbwGB3UX8/s320/DSC01263.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5144442012965465346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு காட்சியில் குறைந்தது 8 படங்கள் இதில் சிறந்தது என்று ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்க்க முடிகிறது.  போட்டிப்படங்களும், மலையாள மற்றும் சில உலகப்படங்களும் இரண்டு அல்லது முன்று முறை திரையிடப்படுகிறது.  இருப்பினும் பல அரிய நல்ல படங்களை இழக்க நேரிடுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மட்டுமன்றி, நஸ்ருதின் ஷா, கமல் என திரைபிரபலங்களோடு முக்கிய திரைவல்லுநர்களின் கலந்துரையாடல், கருத்தரங்குகளும் நடைபெற்றன. தினசரி இந்து, மனோரமா, இந்தியன் எக்ஸ்பிரஸ் அனைத்தும் IFFK-2007க்கு தனி பக்கம் ஒதுக்கி எழுதுகிறது. அனைத்து திரையரங்குளிலும், daily bulletin ஒன்றினை தந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S7oB5m7RI/AAAAAAAAAGY/DjTTUBQgPNQ/s1600-h/DSC01312.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S7oB5m7RI/AAAAAAAAAGY/DjTTUBQgPNQ/s320/DSC01312.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5144442970743172370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா மற்றும் அயல்நாடுகள் சேர்த்து கிட்டதட்ட 8,000 பார்வையாளர்களின் வருகையால் சிலமுறை இடம் கிடைக்காமல் ஹவுஸ் புல்லாகி வெளியில் நின்ற கதையும் உண்டு.  படம் முடிந்து வெளியே வந்தால் கைரளி, ஏசியாநெட், மற்றும் லோக்கல் சேனல்கள் அனைத்தும் மைக்கும் கையுமாக பேட்டி, லைவ் சோ, கவரேஜ் என வெளியே தயாராக காத்திருக்கிறார்கள். கிட்டதிட்ட திருவனந்தபுரத்திற்கே கொண்டாட்டமாக திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கேரள அரசால் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்திரைவிழால் எங்கேயும் முதலமைச்சரின் படமோ, பெயரோ, பேனரோ காணமுடியவில்லை.  சென்னை சில்க்ஸ், ஜோய் ஆலுக்காஸ் என எந்த விளம்பர உபாதைகளும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S5zx5m7PI/AAAAAAAAAGI/AVTqO1kW08k/s1600-h/DSC01255.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S5zx5m7PI/AAAAAAAAAGI/AVTqO1kW08k/s320/DSC01255.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5144440973583379698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாளர்களுக்கான இலவச ஆட்டோக்களையும் பார்க்க முடிந்தது.  ஆனால், பெரிதாக உபயோகம் இல்லை.  மீராஜ், மெஸ்ஸி போன்ற முக்கியமான அரிய உலகத் திரைப்படங்களை ஒரே ஒரு முறையும், ஒரேகடல் நாலு பெண்கள் என இதர திரையரங்குளில் திரையிடப்பட்டு வரும் மலையாளப்படங்களை இரண்டு, முன்று முறை திரையிடுவது ஒரு குறையாகும்.  இதனால் தவிர்க்கக் கூடாத சில படங்களை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு நாட்களை பத்து நாட்களாகவும் பத்து நாட்கள் முழுமையாகவும் வைத்தால் இன்னும் நிறைய படங்கள் பார்க்க வாய்ப்பாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதர :&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் அசைவ ஹோட்டலை தேடிதேடித் தேடி பிடிக்க வேண்டும். கேரளாவில் அநேகமாக எல்லாமே அசைவ ஹோட்டல்கள் தான். அதிலும் பீப் பிரியர்களுக்கு உகந்த நாடு கேரளா, அனைத்து அசைவ ஹோட்டல்களிலும் பீப் உறுதியாக கிடைக்கும். காரசாரமான சுவையும் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் விலையும் குறைவு.  &lt;br /&gt;&lt;br /&gt;பார்த்தில் மிகவும் என்னை கவர்ந்த படங்களின் குறிப்பை அடுத்த பதிவில் தருகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-1816793672903081698?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/1816793672903081698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=1816793672903081698' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/1816793672903081698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/1816793672903081698'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/12/international-film-festival-in-kerala.html' title='International Film Festival in Kerala  2007'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/R2S4-x5m7OI/AAAAAAAAAGA/ZZcUKsoMuXo/s72-c/DSC01256.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-2237168598521910139</id><published>2007-12-01T00:22:00.001+05:30</published><updated>2008-01-07T12:43:54.798+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எயிட்ஸ்'/><title type='text'>உலக எயிட்ஸ் தினம்</title><content type='html'>சமீபத்தில் ஒரு பத்திரிக்கை நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார் &lt;br /&gt;&lt;br /&gt;"மேடம் நான், இன்ன பத்தரிக்கையில இருந்து பேசுறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம் சொல்லுங்க சார்"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களப் பத்தி ஒரு கவர் ஸ்டோரி எழுதலாம்னு இருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்., ஓ.கே. சார்..."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஏதாவது செய்திருக்கிங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"...?!" , "இல்ல.. ஏன் கேக்குறிங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல இன்னும் கொஞ்ச நாள்ல உலக எய்ட்ஸ் தினம் வரப்போகுதில்லையா.. அதான் நீங்க அது தொடர்பா ஒர்க் பண்ணிறிப்பிங்கள்ளயா... அதான் .."&lt;br /&gt;&lt;br /&gt;"ம், இல்லை சார், எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை..   அது தொடர்பா ஒர்க் பண்ற திருநங்கைகள் இருக்காங்க அவங்க நம்பர் தரேன் வேணும்னா நோட் பண்ணிக்கோங்க..."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க மேடம்..."&lt;br /&gt;&lt;br /&gt;()&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக, என்னை குறித்து கட்டுரையோ, பேட்டியோ பெற விரும்பும் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் என் பணி நிமித்தம் அவர்களாக யூகித்து கொண்டிருப்பது நான் எயிட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பணிபுரிகிறேன் என்பது தான். இது நான் அவர்கள் மீது வைக்கும் குறையோ, குற்றமோ கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் அப்படி யூகிப்பதற்கும் காரணம் உண்டு.  பெரும்பாலான திருநங்கையர் தோழிகள் எயிட்ஸ் விழிப்புணர்வு என்னும் சமூக சேவையிலேயே தங்களை முழுமையாக வைத்திருப்பது தான்.  வெகு சமீபமாக ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றிருந்த போது கூட அவர்கள் நாளைந்து குறும்படங்கள் எடுத்து வைத்திருப்பதை பார்த்தேன்.  எனது டாக்குமெண்டேசனக்கு உதவுமே என்று சாம்பிளுக்கு பார்க்கலாமென்று பார்க்கையில் படத்தின் அடிநாதம் முழுதும் எயிட்ஸ் விழிப்புணர்வு என்னும் பெயரில் திருநங்கைகள் தங்களைத் தாங்களே பாலியல் தொழிலாளிகளாகவும், கண் துடைப்பிற்கு சிறு வியாபாரிகளாகவும் காண்பிக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனம் நடத்தும் முதலாளி ஒருவர் தனது பத்திரிக்கை செய்தி ஒன்றில், எயிட்ஸ் விழிப்புணர்விற்காக களம் இறங்கிய போதுதான் திருநங்கைகள் இருப்பதையும், இதனால் அவர்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்றும் அறிகிறேன் என்றார். அவர்களுக்கு உதவுவதற்கா இத்தொண்டு நிறுவனம் செயல்படுவதாகவும் கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகு சில திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு சுயதொழில் வாய்ப்பளிப்பதாக கூறுவதும் கூட அந்த தொண்டு நிறுவனத்திற்குள்ளேயே ஒரு ப்யூட்டி பார்லர், கரகாட்டம் என்ற அளவிலேயே உள்ளது.  குறைந்த பட்சம் இத்தகைய மாற்றுத் தொழிலாவது செய்ய வாய்ப்பளிக்கபடுகிறார்கள்.  அவர்களும் அதனை பயன்படுத்துகின்றார்களே என்றும் சந்தோசப்படவும் முடியவில்லை. ஏனெனில் இந்த சுயதொழில் ஒரு கண்துடைப்பாகவும், மற்ற நங்கைகளைப் போன்ற பாலியல் தொழிலையுமே அவர்கள் செய்கிறார்கள் என்பதே வறுத்தத்திற்குரிய செய்தி.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செக்ஸ், பாலியல் தொழில், பணம் சம்பாதித்தல் எதற்கும் நான் எப்போதும் எதிரி அல்ல. இது சரி, இது தவறு என்பதை விட அது அது அவர்களது தனிப்பட்ட விருப்பம் (உரிமை)என்பதிலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  ஆனால், திருநங்கைகளை எயிட்ஸிற்கான ஐகனாக பயன்படுத்தும் தொண்டு நிறுவனங்களின் இந்த ஆபத்தான அரசியலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததன் ஆதங்கமே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை உணர வேண்டுமெனில் தமிழ்நாடு முழுவதும் திருநங்கைகளுக்காக, திருநங்கைகளோ (அ) மற்றவர்களோ நடத்தும் அத்தனை தொண்டு நிறுவனங்களின் ப்ராஐக்ட் எயிட்ஸ், எயிட்ஸ் விழிப்புணர்வு.  திருநங்கைகளின் தொழிலாக கருதத்தக்கது பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுத்தல்.  ஆனால், பிச்சை எடுப்பதில் பாதுகாப்பு, முன்எச்சரிக்கை, தொழில் நுட்பம் அல்லது பிச்சை எடுப்பதை முற்றிலும் அழித்தல் என்ற ரீதியில் இவற்றை மையமாக கொண்டு எந்த நிறவனமும் செயலாற்றுவதில்லை.  (இங்கே கண்துடைப்புகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;சரி பாலியில் தொழிலுக்காகத்தான் செயல்படுகிறார்கள் என்றால், அதுவும் பாலியல் தொழிலிருந்து மீள்வதற்காக இல்லை.  நீ அதையே செய்.., ஆனா பாதுகாப்பா செய்,  எனக்கு கொஞ்சம் ப்ராஐக்ட் கிடைக்கும் என்பது தான் தொண்டு நிறவனங்களின் தெளிவுநிலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட...  ஒரு நிமிடம், நீங்கள் எண்ண நினைக்கிறீர்கள்.  ஆனால், திருநங்கைகளை திட்டிக்கொண்டிருக்கிறேன் என்றா... இல்லை.  இல்லவே இல்லை.. ஏனெனில், நானும் இளவயதில் இதைப் போலவே அலங்காரப்படுத்திக் கொள்வது, அதை ரசிப்பது, மற்றவர் என்னை பார்க்கும் படி நடந்து கொள்ள வேண்டும் என்று மிகையாக நடித்துக் கொள்வது என எல்லாமே உண்டு.  ஆனால்,  அது ஒரு பருவம், ஒரு கட்டம் அவ்வளவே. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பெரும்பாலும் திருநங்கைகள் அதோடு நின்றுவிடுகிறார்கள். எது பெண்மை, எப்படி பெண்மையை நிருபிப்பது என்ற தெளிவின்றி அழகியியல் என்னும் பெயரில் கவர்ச்சியில் மதிமயங்கி கிடக்கின்றனர்.  இதையே அவர்களை வைத்து தொண்டாற்றிவரும் நிறுவனங்களும் வாகாக பயன்படுத்தி கொளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு உதாரணமாக மிஸ். கூவாகம் என்னும் ஓப்பன் செக்ஸ் வல்காரிட்டியை சொல்லலாம். மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் தொண்டு நிறுவனங்களின் அடுத்தகட்ட முற்போக்கு முயற்சி தான் இந்த மிஸ்.கூவாகம் என்னும் கூத்து.   அழகி போட்டி என்ற பெயரில் அரைகுறை ஆடைகளை வருவதும்,  அறிவுச் சுற்று என்பதில் "எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி?" என்ற கேள்வி, அதற்கு "பாதுகாப்பான உடலுறவு" என்ற பதில். பலத்த கைத்தட்டல் முதல் பரிசு இத்யாதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கூத்தைத்தான் "நவரசா" என்னும் படத்திலும்  சந்தோஷ் சிவன் என்னும் அரைவேக்காடு கலைபித்தன் இடைவேளைக்குப் பின் தேர்ந்த கலைப்படைப்பாய் காண்பித்திக் கொண்டிருப்போர்.  ஒவ்வொரு கூவாகம் திருவிழாவிற்கும் தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாடு என்னும் அரசுசார் நிறுவனம் காண்டம் வடிவ வேன் ஒன்றை நிறுத்தி அதில் எயிட்ஸ் விழிப்பணர்வோடு, இலவச ஆணுறை விநியோகமும் செய்து கொண்டிருக்கும்.  சுற்றியுள்ள காட்டில் .. சீ!..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கத்திய நாடுகளில் கூட இந்தளவிற்கு அரசே காமிடி பண்ணுமா என்பது தெரியாது. எல்லாவற்றையும் விட எனக்கிருக்கும் குழப்பம்.  நாட்டில், இதய நோய், கிட்னி பெயிலியர், புற்று நோய், லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் வியாதிகள் இருக்க எயிட்ஸின் மீது மட்டும் இத்தனை கரிசனம், விளக்குகள் ஏன்..?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓருவேளை நோயின் மூலகாரணம் கவிர்ச்சியானதாக இருப்பது என்று சொல்லலாமா அல்லது, கலாச்சார போர்வைக்குள் பெருமூச்சுவிட்டு காத்திருக்கும் நம் மனோ விகாரத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க.. உங்க கருத்த பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-2237168598521910139?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/2237168598521910139/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=2237168598521910139' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2237168598521910139'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2237168598521910139'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/12/blog-post.html' title='உலக எயிட்ஸ் தினம்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-4782245616516419143</id><published>2007-10-27T12:22:00.000+05:30</published><updated>2008-01-07T13:44:54.765+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறகு'/><title type='text'>HELPNESS</title><content type='html'>Dear Friends,  &lt;br /&gt;&lt;br /&gt;Our School (SIRAGU MOTESSORI SCHOOL) Students Kumar(14), Mahalakshmi(10), Nanthini(9), Nithish Kumar(10) and Poongodi(8) were wrote a story together.   All this pupil had already worte story few times in our School Activities.  Here I would like to show you one of their story here. As a purpose of giving intro about Internet and blogging to our children. Hope you don't mind the Grammer mistakes of their story.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RyLtXIg4G6I/AAAAAAAAAEw/fXKbtD10RKE/s1600-h/P1010076.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RyLtXIg4G6I/AAAAAAAAAEw/fXKbtD10RKE/s320/P1010076.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5125920307579198370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"HAPPINESS"&lt;br /&gt;&lt;br /&gt;Ramu, Somu and Raja are brothers.  One day Ramu, Somu and raja's Grand Father dead. Ramu, Somu and Raja Father dead. Ramu, somu scolded Raja. Ramu, Somu outside Raja.  Raja thinging his father.  He feeling, he miss Father. Raja was sad.  Raja was hungry. Ramu and Somu give loaf bread only. They send out raja from house.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;He walk to forest. He sit under the tree and eating the loaf. He was thinking I am built the house. He walk in the train track. He eating the mango. He see the sparrow and sparrow leg was broken.  He take the dsparrow and get to the house and he gives the medicine to sparrow. Three days the sparrow leg was alright. The sparrow fly and pumpkin seed to Raja.  Sparrow tell thank you. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RyLtuog4G7I/AAAAAAAAAE4/o_dTK5iefrw/s1600-h/P1010077.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RyLtuog4G7I/AAAAAAAAAE4/o_dTK5iefrw/s320/P1010077.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5125920711306124210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Pumpkin seed to sand. He sleeping  in the house and he wake in the moring and see the house. There are lots of pumpking. He got the pumpkin and get knife and see there are gold.  He got the 2 pumpkins to Ramu, Somu.  Ramu, Somu acting.  Ramu, Somu ask Raja, where you this 2 Gold pumpkins. He said, I am help the sparrow and sparrow gives the gold pumpkin seed.  Ramu, Somu, outside the Raja outside. Somu tell to Ramu you see the sparrow and pick the leg Ramu tell.  I get the sparrow, Somu tell.  They broken the leg. Somu help the Sparrow and give the medicine to sparrow th three day.Its fly and give the Pumpkin seed and Ramu, Sopmu and get the Seedd in the sand. He cut the pumpkin.  There is a Reptiles.  Ramu, Somu go to the Raju and peoples go to the Raju. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;end.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-4782245616516419143?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/4782245616516419143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=4782245616516419143' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4782245616516419143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4782245616516419143'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/10/helpness.html' title='HELPNESS'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RyLtXIg4G6I/AAAAAAAAAEw/fXKbtD10RKE/s72-c/P1010076.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-3295515094361420693</id><published>2007-10-19T16:13:00.000+05:30</published><updated>2007-10-20T11:03:47.347+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறகு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>WINGS OF EVOLUTION</title><content type='html'>&lt;a href="http://acchor.blogspot.com//"&gt;ACCESSIABLE HORIZON FILMS&lt;/a&gt; நிறுவனம் சார்பாக, ரமேஷ் மூர்த்தி, ரகு ஜெகந்நாதன் இயக்கத்திலும், கௌசல்யா ஜெகந்நாதனின் எடிட்டிங்கிலும் ஸ்ரீகாந்த் தேவராஜன் இசையிலுமான கூட்டு முயற்சியில் உருவான 40 நிமிட ஆவணப் படம் &lt;strong&gt;விங்ஸ் ஆஃப் எவெல்யூசன் &lt;/strong&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RxmTC-eIInI/AAAAAAAAAEo/vv4tOMbUJSY/s1600-h/woeposter.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RxmTC-eIInI/AAAAAAAAAEo/vv4tOMbUJSY/s320/woeposter.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5123287730449031794" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;நம் &lt;a href="http://siragu.org"&gt;சிறகு மாண்டஸோரி பள்ளி &lt;/a&gt;குறித்த அழகிய ஆவணப் படம் இது கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.  மெயின் பிட்சர் டௌன்லோட் செய்ய முடியவில்லை.  வேறு வாய்ப்பிற்காக யூ டூயூபின் உதவியை நாடிய போது படத்தின் ட்ரைலரும், அது தொடர்பான மற்றொரு ட்ரைலரும் கிடைத்ததன. நண்பர்களின் பார்வைக்காக தந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;                         &lt;strong&gt;விங்ஸ் ஆஃப் எவல்யூசன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/sTzQIuXg8xM"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/sTzQIuXg8xM" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                     &lt;strong&gt; WORLD WIDE POST CARD SHARING&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/oKE73hRn7SQ"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/oKE73hRn7SQ" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வளர வாழ்த்துவோம்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;PEACE&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-3295515094361420693?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/3295515094361420693/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=3295515094361420693' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/3295515094361420693'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/3295515094361420693'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/10/wings-of-evolution.html' title='WINGS OF EVOLUTION'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RxmTC-eIInI/AAAAAAAAAEo/vv4tOMbUJSY/s72-c/woeposter.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-4191399813972068175</id><published>2007-10-08T12:46:00.000+05:30</published><updated>2008-01-07T12:51:13.371+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறகு'/><title type='text'>AWAKE, EDUCATE LETS SPREAD PEACE EVER</title><content type='html'>நண்பர்களுக்கு வணக்கம்,&lt;br /&gt;&lt;br /&gt;எனது &lt;a href="http://livingsmile.blogspot.com/2007/09/260.html"&gt;முந்தைய பதிவில்&lt;/a&gt; குறிப்பிட்டதன் தொடர்ச்சியாகவே இப்பதிவினை எழுதுகிறேன். நன்நோக்கோடு பணியாற்றும் &lt;a href="http://suyam.org"&gt;சுயம்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://siragu.org"&gt;சிறகு&lt;/a&gt; ன் பணிக்கு தங்களால் எந்த வகையிலெல்லாம் உதவ கூடும் என்பதற்கான பட்டியலை &lt;a href="http://docs.google.com/Doc?id=dg6c2xzn_3f25xs2"&gt;இங்கு &lt;/a&gt;இணைத்துள்ளேன். அதற்கு முன் சில குறிப்புகள் :  &lt;br /&gt;                                          &lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;SUYAM :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RwnekOeIIlI/AAAAAAAAAEY/YQ9cxB6fcsA/s1600-h/activity+centre-nagai.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RwnekOeIIlI/AAAAAAAAAEY/YQ9cxB6fcsA/s320/activity+centre-nagai.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5118867165424394834" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;SUYAM Charitable Trust started and formally registered under Trust Act in August 1999 by a group of young college students experienced social workers (below 30 years of age) who were in this service field for the past 18 years since 1987. &lt;br /&gt;&lt;br /&gt;SIRAGU :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RwneaueIIkI/AAAAAAAAAEQ/piKTDELo2Rc/s1600-h/siragu+stud.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RwneaueIIkI/AAAAAAAAAEQ/piKTDELo2Rc/s320/siragu+stud.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5118867002215637570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;SIRAGU Montessori School&lt;/em&gt; is a unit of Suyam started in June 2003. It was started especially for children of the scheduled tribes (pavement dwellers and mendicants). Traditionally carrying on the practice of begging, this community never had any real opportunities for breaking out of their situation. Siragu was started with the objective of providing quality education to first-generation learners. SIRAGU started not only for street children but also for children from various parts of the society. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Rwnes-eIImI/AAAAAAAAAEg/QTWUZaMXmI8/s1600-h/siragu-tour-taj.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Rwnes-eIImI/AAAAAAAAAEg/QTWUZaMXmI8/s320/siragu-tour-taj.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5118867315748250210" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Appeal &lt;br /&gt;&lt;br /&gt;We request your support towards &lt;br /&gt;&lt;br /&gt;1st priority – Financial support to meet the operational expenses of our Organisation &lt;br /&gt;&lt;br /&gt;2nd priority – Financial support to meet the operational expenses of our school &lt;br /&gt;&lt;br /&gt;3rd priority – Financial support or contributions in kind as per the requirements listed in further pages of this letter. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;We will submit the copies of financial audit reports, trust deed copy, 80G certificate copy once we hear from you. &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்களது தேவை தங்களது பார்வைக்கு வைத்துள்ளேன்&lt;a href="http://docs.google.com/Doc?id=dg6c2xzn_3f25xs2"&gt;இங்கே&lt;/a&gt;  கிளிக்கிப் பெறலாம் அல்லது இந்த http://docs.google.com/Doc?id=dg6c2xzn_3f25xs2 உரலில் பெறலாம். மேலும், தங்களது நண்பர்களுக்கும் அரியத் தந்தும் உதவலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்களது மேலான உதவிகளை எதிர்பார்த்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;லிவிங் ஸ்மைல்.&lt;br /&gt;&lt;br /&gt;PEACE&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-4191399813972068175?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/4191399813972068175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=4191399813972068175' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4191399813972068175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4191399813972068175'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/10/awake-educate-lets-spread-peace-ever.html' title='AWAKE, EDUCATE LETS SPREAD PEACE EVER'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RwnekOeIIlI/AAAAAAAAAEY/YQ9cxB6fcsA/s72-c/activity+centre-nagai.JPG' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-8545205537565906313</id><published>2007-09-18T15:23:00.000+05:30</published><updated>2008-01-07T12:46:59.023+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறகு'/><title type='text'>சிறகு விரிக்கும் ஸ்மைலியின் சுயத்திற்கு 260 குழந்தைகள்</title><content type='html'>செப்டம்பர் 5, 2007 சென்னை வந்து சேர்ந்த சில தினங்களுக்கு வேலை, தங்குமிடம், பாதுகாப்பு என அல்லலுற்ற நான் நண்பர் செந்திலின் வழிகாட்டுதலின் படி சேர்ந்த இடம் &lt;a href="http://www.suyam.org"&gt;சுயம்.&lt;/a&gt; சுயம் எனக்கு வேலைவாய்ப்பும், தங்குமிடமும் தந்துதவிய வழக்கமான தொண்டு நிறுவனம் என்றெல்லாம் சொல்லி சிறுமைப்படுத்தி விடமுடியாது.  ஆம், நிச்சயமாக முடியாது. தொண்டு நிறுவனம் என்ற பெயரில் வியாபாரம் செய்து கொழிக்கும் அற்ப எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் தாயுள்ளத்தோடு உதவும் ஒரு குடும்பம்.  இன்னார் என்றில்லாம் அடைக்கலம் வேண்டி கதவைத் தட்டும் அனைவருக்கும் யோசனையின்றி உதவும் மாய உலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இக்குடும்பத்தின் பெற்றோர்களான திரு. முத்துராமன்  திருமதி. உமா தம்பதியினர் பாரம்பரிய ஆட்சாரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். குடும்பத்தின் ஆச்சாரங்களை கடந்து தங்கள் இளம்வயதிலியே பிறருக்கு உதவும் உள்ளத்தோடு வளர்ந்தவர்கள். கல்லூரி காலத்திலேயே (2002) தங்களால் முடிந்த வரை ஒரு சில ஆதரவற்ற சிறார்கள் நல்ல கல்வி பெற உதவி வந்தனர். படிப்படியாக தங்கள் பணியின் மூலம் கிடைக்கப்பெற்ற தொகை மற்றும் மற்ற சமூகஆர்வலர்களின் உதவியுடன் மிகச் சிறிய அளவில் தரமான முற்றிலும் இலவசமான ஆரம்பக்கல்வி தரும் நோக்கத்தில் சிறு பள்ளி ஒன்றினை ஆரம்பித்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வறுமை,  ஆதரவின்மை மற்றும் குடும்ப வற்புருத்தலால் பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட சிறார்களை கல்வியின் பால் திசை திருப்ப செய்துவரும் இப்பள்ளியின் பெயர் &lt;a href="http://siragu.org/"&gt;சிறகு மாண்டசொரி பள்ளி&lt;/a&gt;. இப்பள்ளி சென்னை, ஆவடியை கடந்த புறநகர் பகுதியான பாழவேடுபேட்டையில் அமைந்துள்ளது.  இவ்வூரைச் சுற்றியுள்ள பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 260 குழந்தைகள் இப்பள்ளியால் பயனைடைந்து வருகின்றனர்.  அவர்களுள் குடும்ப ஆதரவற்று அங்கேயே தங்கி படிக்கும் 50 மாணவமணிகளும் அடங்குவர்.  அன்பு, சுதந்திரம், விளையாட்டு மூலம் கற்றல்/கேட்டல் திறன் வளர்க்கும் ஆக்கப்பூர்வமான முறையில் இப்பள்ளியின் பாடத்திட்டம் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RwUrxOeIIjI/AAAAAAAAAEI/-aabPSnyQkE/s1600-h/P1170979.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RwUrxOeIIjI/AAAAAAAAAEI/-aabPSnyQkE/s320/P1170979.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5117544676274479666" /&gt;&lt;/a&gt; &lt;br /&gt;(பள்ளிக் குழந்தையொன்றின் கைவண்ணம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமி பேரலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை கிராமத்தில் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கேற்ப முதன்முதலாக &lt;strong&gt;டிஜிட்டல் நூலகம் &lt;/strong&gt;ஒன்றினை வெகுசமீபமாக அமைத்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மட்டுமன்றி சென்னை மற்றும் நாகப்பட்டினம் சுற்றியுள்ள பகுதியில் 10, 12 ஆம் வகுப்பு படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு ஊக்கமமளித்து, அவர்களது கல்விக்கான மொத்த செலவேற்று படிக்க வைத்து வருகின்றனர்.  இவை அத்தனையும், வெற்றிகரமாக சாத்தியப்படுவது நண்பர்கள் மற்றும் சமூக சிந்தனை கொண்ட ஆர்வலர்களின் உதவியால் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக தகவலுக்கு பின்வரும் முகவரிகளை பார்வையிடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;http://suyam.org&lt;br /&gt;http://siragu.org&lt;br /&gt;http://siragukides.blogspot.com&lt;br /&gt;http://suyamprojects.blogspot.com&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையோடும், நேர்மையோடும் பணியாற்றி வரும் இவர்களுக்கு நமது வலையுலக நண்பர்கள் நிச்சயம் உதவ வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தங்களின் விருப்பம், வாய்ப்பிற்கேற்ப எந்த வகையிலும் உதவலாம். அதற்கு suyam.awake07@gmail.com என்ற முகவரிக்கு மெயில் தட்டவும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்பள்ளியில் பணிபுரியும் வாய்ப்பினை பெற்றுத்தந்த நண்பர் செந்திலுக்கு என் மனமார்ந்த நன்றி. இங்கு பயிலும் பிள்ளைகள் அனைவரும் தான் ஸ்மைலியின் பிள்ளைகள். அவர்களின் வாழ்வு வளம் பெற உங்களோடு சேர்ந்து நான் வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேரமின்மையால் பட்டும் படாமல் எழுதியுள்ளேன் விரைவில் தொடர்ந்து எழுதுவேன்.  நண்பர்களின் அன்பிற்கும், தொடருதவிக்கும் நன்றிகள் பல....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிவிங் ஸ்மைல் வித்யா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-8545205537565906313?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/8545205537565906313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=8545205537565906313' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8545205537565906313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8545205537565906313'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/09/260.html' title='சிறகு விரிக்கும் ஸ்மைலியின் சுயத்திற்கு 260 குழந்தைகள்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RwUrxOeIIjI/AAAAAAAAAEI/-aabPSnyQkE/s72-c/P1170979.JPG' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-7232834124128382404</id><published>2007-08-16T16:05:00.000+05:30</published><updated>2007-08-16T16:29:43.604+05:30</updated><title type='text'>விடைபெறுகிறேன்</title><content type='html'>நண்பர்களே!! எனது இரண்டு வருட மதுரை வாழ்க்கையில் குறிப்பிடும்படி எதுவும் செய்துவிட முடியவில்லை.  குறைந்தபட்சம் எனது பெயரை கூட சட்டரீதியாக மாற்ற முடியவில்லை.  சட்ட ரீதியாகவும், சமூகரீதியாகவும் முழு அங்கீகாரம் பெற தலைநகர வாசமே சிறந்தது என்பதால் செப்டம்பர் 5 அன்று சென்னை வருகிறேன். என் முகவரியின் முதல் இரண்டு வரிகள் தீர்மானமாகாத போதும் மூன்றறாவது வரி நிச்சயம் சென்னையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RsQt-XBdUbI/AAAAAAAAAD4/wjYZeNw4yV0/s1600-h/Saying_Goodbye.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RsQt-XBdUbI/AAAAAAAAAD4/wjYZeNw4yV0/s320/Saying_Goodbye.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5099251227445514674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வருடங்களுக்கு முன் வெறும் துணி மூட்டையுடன் கையில் ஆயிரம் ரூபாயுடன்  (தொகை சரியாக ஞாபகம் இல்லை) எந்த உத்திரவாதமும் இன்றி சில ஆனால், முக்கியமான நண்பர்களை நம்பி மதுரை பேருந்தை ஒரு அதிகாலையில் பிடித்தேன்.  இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையோடு (தொகையில் பெரிய வித்தாயசமில்லை)சென்னை செல்கிறேன்.  ஆனால், நண்பர்களையும் நம்பிக்கையையும் வளர்த்துள்ளேன். இதே நம்பிக்கையோடு அடுத்த மாதம் சென்னை ரயில் ஏறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றோடு என் பணி இவ்வலுகலகத்தில் முடிவடைகிறது. அநேகமாக இதுவே எனது இறுதி பதிவாகவும் இருக்கலாம்.   அடுத்த பணி, தங்குமிடம் எதுவும் உறுதியாகாததால். மீண்டும் எப்போது அடுத்த பதிவு போடுவேன் என்று எனக்கே தெரியாது. கணினி பயன்படுத்தக்கூடிய அலுவலுகமோ, மடிக்கணினியோ வாய்க்கும் காலத்தில் மீண்டும் நிச்சயம் எழுத்தை தொடர்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://this-is-and.co.uk/images/goodbye.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px;" src="http://this-is-and.co.uk/images/goodbye.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களுக்கு நன்றி!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;&lt;br /&gt;லிவிங் ஸ்மைல்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-7232834124128382404?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/7232834124128382404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=7232834124128382404' title='40 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7232834124128382404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/7232834124128382404'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/08/blog-post_16.html' title='விடைபெறுகிறேன்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RsQt-XBdUbI/AAAAAAAAAD4/wjYZeNw4yV0/s72-c/Saying_Goodbye.jpg' height='72' width='72'/><thr:total>40</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-6966676232824092598</id><published>2007-08-02T13:43:00.000+05:30</published><updated>2008-01-07T12:52:04.276+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழைப்பிதழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>பெண்திரை 2007 - அழைப்பிதழ்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrGTMOSC7II/AAAAAAAAADw/nnGu2V8uZF4/s1600-h/invtn1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrGTMOSC7II/AAAAAAAAADw/nnGu2V8uZF4/s200/invtn1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5094014491734240386" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrGS--SC7HI/AAAAAAAAADo/w3Bm-9WDvO4/s1600-h/invtn2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrGS--SC7HI/AAAAAAAAADo/w3Bm-9WDvO4/s200/invtn2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5094014264100973682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறக்காம வந்துருங்க!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-6966676232824092598?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/6966676232824092598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=6966676232824092598' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6966676232824092598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/6966676232824092598'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/08/2007.html' title='பெண்திரை 2007 - அழைப்பிதழ்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrGTMOSC7II/AAAAAAAAADw/nnGu2V8uZF4/s72-c/invtn1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-3837132747859270167</id><published>2007-08-01T12:08:00.000+05:30</published><updated>2007-08-01T12:18:52.827+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புகைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><title type='text'>புகைப்பட போட்டிக்காக</title><content type='html'>போட்டி யார் நடத்துறாங்க? எதுக்கு நடத்துறாங்க? என்ன பரிசு எதுவும் தெரியாது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் புது கேமரா மொபைல் வாங்குனத எப்பிடிதான் மக்களுக்கு சொல்றது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrArEuSC7AI/AAAAAAAAACw/kKluuRToyn4/s1600-h/Picture%26(3).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrArEuSC7AI/AAAAAAAAACw/kKluuRToyn4/s200/Picture%26(3).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093618538699222018" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேண்டினில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தம்பி டைகர் எட்டி பார்த்தது?  என்னை அதிரவைக்கும் அலர்ஜிகளில் ஒன்றென்றாலும் பார்க்க பரிதாபமாக இருந்தது அவர் கண்.  பார்க்க அடுத்த படம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrArjeSC7BI/AAAAAAAAAC4/-aq8yjvUTf4/s1600-h/Picture%26(4).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrArjeSC7BI/AAAAAAAAAC4/-aq8yjvUTf4/s200/Picture%26(4).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093619066980199442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெரராயிடாதிங்க!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrAr8-SC7DI/AAAAAAAAADI/PKQlnIrtfgI/s1600-h/Picture%26(26).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrAr8-SC7DI/AAAAAAAAADI/PKQlnIrtfgI/s200/Picture%26(26).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093619505066863666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrAsD-SC7EI/AAAAAAAAADQ/0-FrmuRw9S4/s1600-h/Picture%26(19).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrAsD-SC7EI/AAAAAAAAADQ/0-FrmuRw9S4/s200/Picture%26(19).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093619625325947970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலத்திற்கும் அழுத்தே போகாத இந்த கடற்கரை நாங்க மட்டும் விட்ருவோமா?!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrAsM-SC7FI/AAAAAAAAADY/qkp-ESG8xKs/s1600-h/Picture%26(87).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrAsM-SC7FI/AAAAAAAAADY/qkp-ESG8xKs/s200/Picture%26(87).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093619779944770642" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடற்கரைய கண்டா ரிலாக்ஸாயிட வேண்டியதுதானே? ரிலாக்ஸாக என் வாழ்க்கை துணை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrAsquSC7GI/AAAAAAAAADg/qCVmkhovR-g/s1600-h/Picture%26(83).jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrAsquSC7GI/AAAAAAAAADg/qCVmkhovR-g/s200/Picture%26(83).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5093620291045878882" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-3837132747859270167?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/3837132747859270167/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=3837132747859270167' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/3837132747859270167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/3837132747859270167'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/08/blog-post.html' title='புகைப்பட போட்டிக்காக'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RrArEuSC7AI/AAAAAAAAACw/kKluuRToyn4/s72-c/Picture%26(3).jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-4176455121775501383</id><published>2007-07-23T17:24:00.000+05:30</published><updated>2008-01-09T16:34:35.458+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலக சினிமா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட விழா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>பெண் திரை~2007 :: International Film Festival ::</title><content type='html'>Dear friends,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Greetings from Koodu. We attach herewith a notice for the PENTHIRAI -2007  (International Film Festival - films by Women directors) to be held in Madurai on 4th &amp; 5th Aug`07. Kindly download and pl pass on this message to your friends. Friend, we expect your presence for this festival.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RqSX6uSC6_I/AAAAAAAAACo/sEMT9lG69NU/s1600-h/pennthirai1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RqSX6uSC6_I/AAAAAAAAACo/sEMT9lG69NU/s200/pennthirai1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5090360513947429874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;( Click on picture to see bigger )&lt;br /&gt;&lt;br /&gt;Salai Selvam&lt;br /&gt;Coordinator Koodu&lt;br /&gt;6, Allied Home&lt;br /&gt;Airport road&lt;br /&gt;Perungudi&lt;br /&gt;Madurai - 625 022&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;Contact persons:&lt;/b&gt; Salai Selvam-9443881701, Varthini - 9443856061,Geeta - 9443918808&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;E-mail: &lt;/b&gt;koodumdu@yahoo.co.in&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-4176455121775501383?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/4176455121775501383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=4176455121775501383' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4176455121775501383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/4176455121775501383'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/07/2007-international-film-festival.html' title='பெண் திரை~2007 :: International Film Festival ::'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/RqSX6uSC6_I/AAAAAAAAACo/sEMT9lG69NU/s72-c/pennthirai1.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-2927860113036013709</id><published>2007-06-28T10:49:00.000+05:30</published><updated>2007-06-28T11:25:05.086+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி</title><content type='html'>திருச்சியில் வசித்து வரும் தோழரும்,  &lt;strong&gt;"நாளை விடியும்"&lt;/strong&gt; இதழாசிரியருமான திரு.அரசெழிலன் அனுப்பிய கவிதை மற்றும் கட்டுரை போட்டி குறித்த அறிவிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைப்பு     : கடவுளுக்குப் பெண் தீட்டா?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடைசி நாள்  : 30.09.2007&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதை  : 24 வரிகளுக்கு மிகாமல் எந்தப் பா இனத்திலும் (புதுப்பா, மரபுப்பா) இருக்கலாம்  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரை : தட்டச்சிலோ, கணினி அச்சிலோ A4 அளவில் 4 பக்கங்களுக்கு மிகாமல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பரிசு       : உருவா 250/-க்கான நூல்கள்&lt;br /&gt;இரண்டாம் பரிசு    : உருவா 150/-க்கான நூல்கள்&lt;br /&gt;மூன்றாம் பரிசு     : உருவா 100/-க்கான நூல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இரு போட்டிகளுக்கும் தனித்தனியே மூன்று பரிசுகள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொடர்புக்கு :&lt;/strong&gt; நாளை விடியும், தமிழ்ச்சுடர் இல்லம், 7ஆ எறும்பீசுவரர் நகர், (காவேரி சிற்றங்காடி எதிரில்), மலைக்கோயில் தெற்கு, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி 620 013. பேசி : 94433 80139.&lt;br /&gt;&lt;br /&gt;                                * * * * *&lt;br /&gt;&lt;strong&gt;ஏன் இந்தப் போட்டி ?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்ணை இழிவானவளாக மதங்கள் போதிக்கின்றன. சபரிமலையில் பெண்கள் உள்ளே வரக்கூடாது என்ற அடாவடித்தனமும், இந்து அறநிலையத்துறை அலுவலராகப் பெண்கள் வரக் கூடாது என்ற கூக்குரலும் காலந்தோறும் ஓங்கி ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.  பார்ப்பனியம் சூத்திரனை இழிவாகக் கேவலப்படுத்தினாலும் சூத்திரனுக்கு மான உணர்ச்சி வந்து பார்ப்பனியக் கருத்தியல்களுக்கு எதிரான கோபாவேசம் கொள்வதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போன்றே இந்துமதப் பார்ப்பனியக் கருத்தியல் பெண்களைக் கேவலப் படுத்துகிறது;  கொச்சைப்படுத்துகிறது; ஒடுக்குகிறது என்ற உண்மை தெரியாமல் பெண்கள் முடங்கி போய்க்கிடக்கிறார்கள்.  பெண்ணை இழிவுபடுத்தும் இதுபோன்ற கருத்துகள் நம் சமகால நிகழ்வுகளாய் இருக்கையில் இது தொடர்பான கவிதை கட்டுரைப் போட்டி நடத்தும் எண்ணத்தில் தான் இந்த அறிவிப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-2927860113036013709?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/2927860113036013709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=2927860113036013709' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2927860113036013709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2927860113036013709'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/06/blog-post_28.html' title='கவிதை மற்றும் கட்டுரைப் போட்டி'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-8055210875403466312</id><published>2007-06-08T11:11:00.000+05:30</published><updated>2008-01-07T12:54:59.556+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>திறக்காத கதவு</title><content type='html'>தீவிர பெண்ணியம் பேசும் போது கற்பப்பை பெண்களுக்கு தேவையற்றது,  பெண்களின் கற்பை அளக்கும் கருவியாக, பெண்களை அடக்க ஆண்களின் ஆயுதமாக இருப்பதும் இந்த கற்பப்பையே எனவே அதை நீக்கவேண்டும் என்று வாதாடியவர் தந்தை பெரியார்.  அப்படியிருக்க, பனிக்குடம் என்பதை பெண்ணுக்கான குறியீடாக "பனிக்குடம்" இதழ் வருகிறது.  ஏற்கனவே இது குறித்து அம்பையின் கருத்தையும் பொடிச்சி எழுதியுருந்தார் ( லிங்க் தெரியவில்லை பொடிச்சியே பின்னூட்டத்தில் வந்து தருவார் என்று எதிர்பார்க்கிறேன் ). இதில் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், குழந்தை பேறு இல்லாத பெண்கள், அல்லது கர்ப்பப்பையில் நோய்யுள்ள பெண்கள் குழந்தை பேறு பெறுவதில் இருக்கும் சிக்கல் ஒருபுறம் இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநங்கைகளுக்கு குழந்தைப் பேறு இயல்பாக கிடையாது என்ற வகையில் இதற்காக மனம் வருந்தி பல திருநங்கைகள் புலம்பவும், குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதும் நடந்து வருகிறது.  ஆனால், இது குறித்து எனக்கு ஒருபோதும் கவலை இருந்ததில்லை, கேள்வி கேட்கும் அன்பர்களிடமும் " நாங்கள்ளாம் பெரியார் முன்னிறித்தும் (இயல்பாகவே வாய்க்கப்பட்ட) கலகக்காரிகளாக்கும்"னு சமாளித்து வருகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மொத்தப் பிண்ணனியில் எழுதிய கவிதை ஒன்றுதான் பின்வருவது (என்ன லக்கி, இதுக்கு மேலயும் அர்த்தம் புரியல்லன்னு பின்னூட்டம் போடமாட்டிங்களே!).  இதில் மேலும் சிறப்பு இக்கவிதை அதே "பனிக்குடம்" இதழில் வெளியானதுதான்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rbspartan.net/smf/avatars/abstracts/abstract8.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://rbspartan.net/smf/avatars/abstracts/abstract8.gif" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மயானம்         &lt;br /&gt;&lt;br /&gt;தனித்தன்மையது&lt;br /&gt;&lt;br /&gt;அகால அமைதியினாலும்&lt;br /&gt;&lt;br /&gt;அதன் தத்துவ இயல்பினாலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்மம் தாங்கும் கோயில்களின்&lt;br /&gt;&lt;br /&gt;கதவுகள் திறப்பதும் &lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பதும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மயானத்தின்&lt;br /&gt;&lt;br /&gt;தேவை&lt;br /&gt;&lt;br /&gt;என் கதவிற்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றென்றைக்கும் இல்லை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-8055210875403466312?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/8055210875403466312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=8055210875403466312' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8055210875403466312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/8055210875403466312'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/06/blog-post.html' title='திறக்காத கதவு'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-434121680034935286</id><published>2007-05-14T10:33:00.000+05:30</published><updated>2008-01-07T12:55:34.474+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>உனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா?</title><content type='html'>&lt;a href="http://www.trevorromain.com/blog/archives/girl&amp;dove.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px;" src="http://www.trevorromain.com/blog/archives/girl&amp;dove.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயங்களில் உனக்கு தெரிவதில்லை     &lt;br /&gt;&lt;br /&gt;சிறிய எறும்புகளை மிதித்தபடி நீ நடந்து போவதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில சமயங்களில் நீ உணர்வதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;பசும்புல்லை நசுக்கியபடி கடந்து போவதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெரிந்தும், உணர்ந்தும்&lt;br /&gt;&lt;br /&gt;கடந்து போகிறாய் என் அந்தரங்கத்தை மிதித்தபடி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யார் எவர் என்று தெரியாமல்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து மிதிபட்டே வருகிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;நானும் இருண்ட என் எதிர்காலமும்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-434121680034935286?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/434121680034935286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=434121680034935286' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/434121680034935286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/434121680034935286'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/05/blog-post_14.html' title='உனக்கு தெரிவதில்லை / தெரிவதில்லையா?'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-2563941538195080962</id><published>2007-05-07T10:22:00.000+05:30</published><updated>2008-01-07T12:56:02.959+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>முரண்நகையாய்</title><content type='html'>குறுகுறு பார்வையாலும், &lt;br /&gt;&lt;br /&gt;வேசை சொற்களாலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரூப வன்மத்தில் கூசி நின்றவளின் &lt;br /&gt;&lt;br /&gt;நிர்வாணம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றாமையின் விளிம்பில், &lt;br /&gt;&lt;br /&gt;ஓர் அதிர்ச்சியூட்டும் நேரடி காட்சிப்படுத்தலால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூசச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே வன்முறையையும், &lt;br /&gt;&lt;br /&gt;அதன் உப வக்கிரங்களையும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதார்த்தத்தின் எளிய முரண்நகையாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/28180212-2563941538195080962?l=livingsmile.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://livingsmile.blogspot.com/feeds/2563941538195080962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=28180212&amp;postID=2563941538195080962' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2563941538195080962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/28180212/posts/default/2563941538195080962'/><link rel='alternate' type='text/html' href='http://livingsmile.blogspot.com/2007/05/blog-post_07.html' title='முரண்நகையாய்'/><author><name>லிவிங் ஸ்மைல்</name><uri>http://www.blogger.com/profile/08543078629215446931</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/SxPQa8oBSPI/AAAAAAAAAT4/f3TTK9ujCkw/S220/smile_docu_pic.JPG'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-28180212.post-6881518089110634960</id><published>2007-05-02T16:00:00.000+05:30</published><updated>2008-01-07T13:40:49.133+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கண்டனம்'/><title type='text'>இலக்கியம்,  எதார்த்தம், அமீர் மற்றும் அலிகளின் மல ஜலம்.</title><content type='html'>தீராநதி மே இதழில் எதார்த்த இயக்குநர், அமீர் அவர்களின் &lt;a href="http://baavaa.blogspot.com/2007/05/blog-post.html"&gt;பேட்டி&lt;/a&gt;(நன்றி : மோகன்தாஸ்) வெளிவந்துள்ளது.  அதில் கவிஞர் கடற்கரய் கேட்ட கேள்விகளும், இயக்குநர் தந்த பதில்களும்...&lt;br /&gt;&lt;br /&gt;////&lt;strong&gt;தீராநதி: விளிம்பு நிலை மக்களான அரவாணிகளை ஒரு இசைக் கலைஞர்களாகவே காட்டி இருக்கிறீர்கள். அது வரைக்கும் அது பெருமிதம் கொள்ளத் தக்கது. ஆனால் நீங்களும் அதில் சில இடங்களில் 'சின்னத் தனமான' வார்த்தைகளை எழுதி இருக்கிறீர்களே ஏன்? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Rjl_L-Q4c2I/AAAAAAAAAB0/G2qF8audlVU/s1600-h/pari-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Rjl_L-Q4c2I/AAAAAAAAAB0/G2qF8audlVU/s400/pari-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5060215499996558178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இங்கே கடற்கரய்யின் கேள்வியே அடிப்படையில்ல் தவறு. காட்சிப்படி அதில் வரும் திருநங்கைகள் யாரும் இசைக்கலைஞசர்கள் கிடையாது. பொதுவாக, இசைக்கலைஞசர் என்று யாரைக் குறிப்பிடுவோம் என்றால் குரலிசைப்பவர்களையோ, வாத்திய கருவி வாசிப்பவர்களையோ கூறலாம்.  ஆனால், காட்சிப்படி வயதான கிராமிய பாடகி ஒருவர் பாட அய்ந்தாறு கரகாட்டக்கலைஞசர்கள் (ஒரு ஓரத்தில் கண்ணியமாக)ஆட, கூட சேர்ந்து, டப்பாங்குத்து ஆடுபவர்களே இப்படத்தில் வரும் திருநங்கைகள்.  அதாவது இவர்கள் தொழில்முறை (professional) பாடகர்களோ, வாத்தியக் கருவி வாசிப்பவர்களோ கிடையாது.  அப்படி இருக்க, இதில் திருநங்கைகளை இசைக்கலைஞசர்களாக காட்டப்படுகிறார்கள் என்பது "கேப்பவன் கேனைன்ன எரும மாடு ஏரோப்ளேன் ஓட்டு" ங்கற கதையால்ல இருக்கு!! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே மதுரையில் ப்ரொபசனல் கரகாட்டக் கலைஞசர் மதனம்மா என்னும் திருநங்கையும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அவர்களை முறையாக பயன்படுத்தியிருந்து,  அவர்களை கலைஞசர்கள் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும்.  ஆனால், இலக்கியவாதிகளுக்கு ரெக்கார்ட் டான்ஸர்களூம் கலைஞசர்களாகவே தெரிவதால் நாமும் அதனை ஏற்றுக் கொள்வோம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;/////&lt;strong&gt;அமீர்: அது மாதிரி ஏன் வைத்தேன் என்றால், அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அதனால் அதை வைத்தேன். அதை வைத்து காசு பண்ண வேண்டும் என்பதற்காக அதை நான் செய்திருந்தால் அது தவறு. நான் அப்படிச் செய்யவில்லை.&lt;/strong&gt; //// &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;அவர்கள் நிஜத்தில் அப்படித்தான் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள்.  அப்படியா அமீர், அப்படியென்றால் நிஜத்தில் மதுரை மண்ணின் மக்கள் (நீங்கள், உங்கள் நாயகன்,  நாயகனின் வழித்தோன்றல்கள் உட்பட) திருநங்கைகள் மீது கட்டவிழ்க்கும் ஒடுக்குமுறை, பாலியல் வன்முறை இவையெல்லாம் நிஜம் இல்லையா?  அல்லது தங்களது புனிதக்காமாளை கண்களுக்கு இதுகாறும் இந்த நிஜங்கள் எதுவும் புலப்படவில்லலயா? மகா சண்டியனா நாயகன் திருநங்கைகள் மீது இத்தகைய வன்முறை செய்பவனாக காட்டவேண்டியது தானே?   அதுவும் தானே நிஜம், அதில் காட்ட வேண்டியது தானே உங்கள் நிஜத்தை!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவேளை,  திருநங்கைகள் மேல் பொதுமக்கள் செலுத்தும் சொல் வன்முறை பாலியல் வன்முறை, இவற்றையெல்லாம் தாங்கள் கண்டிருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டீர்கள்.   வேண்டுமென்றால்,  நான் கடந்து செல்லும் பாதையில் பத்து வயது வாண்டுகள் கூட உங்களது எதார்த்த கிராமிய இசையை ரசித்து பாடி என் முகத்தில் சிறுநீர் கழிப்பதைக் பார்த்து விட்டாவது தங்களின் எதார்த்தத அறிவை வளர்த்துக் கொள்ளுங்களேன்.  ஆனால், எங்களுக்கோ இத்தகைய பாடல்களும், ரசிகர்களின் கலைவெறி கூத்தும் புதியதில்லை.   இன்னும் மூனு மாசம் போனா வேறொரு படம், வேறொரு பாட்டு, வேறொரு அனுபவம், உங்களுக்கும் வேறொரு வெற்றி, வேறொரு பேட்டி, கேள்வி, பதில் etc.,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி அப்படி நிஜத்தைத்தான் எதார்த்தமாக காட்டுவேன் என்ற பிடிவாதம் இருந்தால், உங்கள் துறை சார்ந்தே எத்தனை எத்தனை அசிங்கள் இருக்கின்றன!! அதை படங்களில் காட்டவேண்டியது தானே?  அங்கே நிருப்பிக்கவேண்டியது தானே உங்கள் எதார்த்தம் மீதான காதலை?!  இளைத்தவர்கள் (அலிகள்)தான் உங்கள் எதார்த்ததின் கைத்தடியா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே, எதார்த்தம் என்னும் போது இன்னொன்றையும் குறிப்பிட வேண்டியுள்ளது,   எதார்த்ததின் மீது இத்தனை காதல் கொண்ட தாங்கள் பாடல் காட்சியில் நான்கு  (மேற்படி சின்னத்தனமான வசனம் பேசுபவர் உட்பட)ஆண்களுக்கு  அலிவேடம் போட்டு ஆடவைக்க வேண்டிய தேவையென்ன?  எதார்த்தம் மீதான தங்களின் அக்கறை அப்போது எதை மேய சென்றுவிட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Rjl_i-Q4c3I/AAAAAAAAAB8/5QxqyHikpBg/s1600-h/pari-3.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Rjl_i-Q4c3I/AAAAAAAAAB8/5QxqyHikpBg/s400/pari-3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5060215895133549426" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பம், சமூகம், அங்கீகாரம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு என எல்லா கதவும் சாத்தப்பட்டு,  புறக்கணிப்பின் எல்லையில் நின்று வாழ்க்கையை ஓட்டும் திருநங்கைகளின் நிர்வானத்தின் மீது தங்களின் ஆதிக்க/நாகரீக மதிப்பீட்டின்  மலஜலத்தை மறைமுக களித்துவிட்டு,  அவர்களின் அம்மணத்தில் மீதேறி ஆனந்த நர்த்தனமாடி கலையை வளர்க்கிறார்கள் இக்கலையுலக சேவகர்கள்.  அன்றைய "கோடான கோழி கூவுற வேலை', முதல் இன்றைய "தலைப்பு செய்தி வாசிப்பது கிரிஜாக்கா, கோமளம்" வரை  திருநங்கைகள்  மீதான இந்த திரை கற்பழிப்புகளுக்கும் முன்வைக்கப்படும் ஒரே சப்பைக் கட்டு இந்த "எதார்த்தவாதம்" மட்டுமே.  அதையே இந்த மரபுமீறியும் வழிமொழிகிறார்.   வாழ்க எதார்த்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Rjl_teQ4c4I/AAAAAAAAACE/GX-mxVtepv0/s1600-h/pari-1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_ZA2VK0Cnn-8/Rjl_teQ4c4I/AAAAAAAAACE/GX-mxVtepv0/s400/pari-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5060216075522175874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;/////// &lt;strong&gt;தீராநதி: சரி, நிஜத்தில் இருக்கிறதைச் சொல்லி இருக்கிறேன் என்கிறீர்கள். ஆனால் பொத
