ஈழத் தமிழர் தோழமைக் குரல் - பாராளுமன்ற முற்றுகை நிகழ்பதிவு

ப்பாவி ஈழத் தமிழர்கள் மீதான புவியியல் வன்முறையை, சிங்கள ராணுவரசின் தமிழின சுத்தீகரிப்பு கொடுமையை, இந்திய அரசின் நிழல் போரை, ஆயுத உதவி மற்றும் இராணுவ பயிற்சியை நிறுத்தக் கோரி பிப்ரவரி 12, 13, 14 ஆகிய மூன்று தினங்களும் இந்திய நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் சிறப்பாக நடந்தேறியது.



எழுத்தாளர்கள்/கவிஞர்கள் தலைமையில், மாணவர்கள், மீனவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கலைஞர்கள், திருநங்கைகள் மொத்தம் 100 பேர் இணைந்து அரசியல் கட்சி சார்பற்று மனிதம் காக்க வேண்டும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒற்றை சிந்தனையுடன் நடத்திக்காட்டினர்.



இம்மூன்று நாள் போராட்டத்தில் அம்மை நோயின் காரணமாக முதல் இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் பங்குபெறமுடிந்தது. முதல் இரண்டு நாட்களும் நடந்த அறப்போர் வெறும் மனத்திருப்தியன்றி தீர்க்கமான பலன் அளிக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் நாள் இலங்கை தூதரகம் முன்பாக 28 பேர் கொண்ட குழு நடத்திய இரகசிய போராட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ராணுவ ரத்தவெறியன் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு, ராஜபக்சே உருவப்படத்தில் செறுப்படி, போர் நிறுத்தம் மற்றும் இந்திய, இலங்கை அரசுக்கெதிரான முழக்கம் என அதிதீவிர போராட்டமாக அமைந்தது. 2 நிமிடத்திற்கு மேல் எந்த போராட்டமும் நிகழ்த்த முடியாத அப்பாதுகாப்புப் பகுதியில் தொடர்ந்து 45 நிமிடம் தீவிரம் குறையாமல் ஒரு சடங்கியல் நிகழ்வு போல, மொத்த ஈழமக்களின் ஆக்ரோசமும், கண்ணீரும், வலியும் வழிநடத்தியது போல, யாரும் யாருடைய கட்டுப்பாடும் இன்றி முழு அர்ப்பணிப்போடு அப்போராட்டத்தை அர்த்தமுள்ளதாக்கினர். இதுவரை, தேசிய அரசு ஊடகங்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த ஈழப்பிரச்சனை அன்று சிறிதளவேனும் கவனம் பெற்றதும் அதையொட்டிய சில அரசியல் நிகழ்வுகள் ஏற்பட்டதும் இப்போராட்டத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.





கட்சி சார்பின்றி முழு அர்ப்பணிப்போடு, தூயமையான உள்ளத்தோடும் போராடிய அக்குழுவை தீண்டவும் அஞ்சி நின்றது தில்லி காவலர்கள் குழு. மிக கண்ணியாமாக, சிறைபிடிக்கப்பட்டு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு இரவு 7 மணியளவில் சேர்த்தனர்.




ஈழத் தமிழர் தோழமைக் குரல் என்ற குடையின் கீழ் நடந்த இவ்வறப்போரட்டத்தை குறித்த முழு தகவல்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளது. தமிழின விடுதலை வேண்டிய நிகழ்ந்த தாமதமான முயற்சி என்றாலும், மிக மிக அவசியமான முன்னுதாரணமான சுயலாபமற்ற முயற்சி இது. பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய இதன் அமைப்பாளர்களான திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மற்றும் கவிஞர்கள் மாலதி மைத்ரி, சுகிர்தராணி மூவருக்கும் என் மனமார்ந்த தீரவாழ்த்துக்கள்.


இப்போராட்டம் முழு அர்த்தம் பெற தொடர்ந்து மக்கள் புரட்சியாக மாறவேண்டும். மாநிலம் முழுவதும் இப் போர் நிறுத்தப் போராட்டத்தை நாம் அனைவருமாக முன்னடத்திச் செல்ல வேண்டும். சோம்பலை, தடைகளைக் கடந்து பங்காற்றுவோம்.

தமிழ் ஈழம் வெல்லட்டும்! மானுடம் வெல்லட்டும்!!

3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

i am subash, i came to know about u from http://nesakumar.blogspot.com/, nice to hear, u r doing a good job, excellent, wish u all success,


my blogspot is http://vnsubash.blogspot.com/

Unknown said...

All finished.The main theme of srilankan war is a war against a culture.That same happened for Hindus in pakistan and bangladesh already.I f u get chance try to see those peoples real voice.India pim government did the same pimp job in srilanka too.y i mention pimp because even those minor girls were raped by indian(1981 IPK) and srilankan army.
SO those who made it happed called pimp but nothing.
Indian companies like tata,airtel wants srilanka as their market but LTTE is the big barrier for their business in there so they deside to take them out.They did it.

Now even singala people are coming and taking sand from Thalaivar Prabakarans birth place why?

He was not doing any pimp activity like now what happening in srilanka.