கண்டனம் : Drag Queen Rose Vengatesan

எனது வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு பாலியல் சிறுபாண்மையினர்களான (LGBT-Lesbian, Gay, Bisex and Transgenders) குறித்த புரிதல் இருக்கும் என்று நம்புகிறேன். இல்லை என்பவர்களுக்கு இப்பத்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் எனவே படிக்காமல் கடந்துவிடலாம்.

திருநங்கைகள் போல பால்மாற்று விளைவு எதும் இன்றி, அதே சமயம் சமபால ஈர்ப்பு உடையவர்கள் போன்றும் இன்றி இன்னதென்று புரிந்து கொள்ள முடியாத சிலர் உள்ளனர். அவர்கள் Drag Queen என்று அழைக்கப்படுபவர்கள். மேலும் அறிய இங்கே சொடுக்கவும். இன்னதென்று வகைப்படுத்த முடியாத தான் தோன்றித்தனமானவர்கள். இவர்களை சமபால் ஈர்ப்புடையவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனெனில் சமயங்களில் பெண்ணுடை அணிந்து கொள்வார்கள், அதேசமயம் ஆண் போலவும் நடந்து கொள்வார்கள்.

திருநங்கைகள் போல் தோன்றினாலும் பால்மாற்று சிகிச்சை செய்து கொள்ளமாட்டார்கள். மார்பக சிகிச்சை மட்டும் மேற்கொன்டு, ஆண்களுடன் உடலுறவு கொள்வார்கள். அப்போது தங்களையே பெண்ணாகவும், தன் பெண்ணுடலுடன் போகம் கொள்ளும் ஆணாகவும் சரியாக சொல்வதென்றால், சுய புணர்ச்சி கொள்வது போன்ற மனநிலை உடையவர்களாக இருப்பார்கள். ஆண்/பெண் பேதமின்றி யாருடனும் உடலுறவு கொள்ளும் பாலியல் விரும்பிகள்.




பொதுவாக, இது போன்ற ட்ராக் குயின்களையும் திருநங்கைகள் என்றே அனைவரும் கருதுவதுண்டு. இதனால் பெரிய நஷ்டம் இல்லை என்பதால் நான் உட்பட யாரும் இவர்களைக் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், தற்போது இந்த கண்றாவியைப் பற்றி பேச வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன்.

நம் அனைவராலும், திருநங்கை என்று அறியப்பட்டு, ஊடகத்தில் புகழ்பெற்று வரும் ட்ராக் குயின் ரோஸ். பலருக்கு இது அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆரம்பத்தில் எனக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. தனிப்பட்ட முறையில் தனது நண்பர்களுடனும், தன்னுடன் பாலியல் தொடர்பு கொள்ளும் பல நண்பர்களிடமும் ரோஸ் எனப்படும் ரமேஷ் தன்னை ஒரு ட்ராக் குயின் என்றும், சில சமயங்களில் தன்னை ஒரு கே என்றும் வெளிப்படையாகவே கூறிக்கொள்வதுண்டு.


திருநங்கைகளுக்கான சமூக மாற்றம் என்பது, பல மனித உரிமை ஆர்வலர்களாலும், ப்ரியா பாபு முதல் ரேவதி, லிவிங் ஸ்மைல், நூரி, அருணா, ரம்யா, ஆல்கா, கல்கி வரை பல திருநங்கைகளாலும் முன்னெடுத்து செல்லப்பட்டது. இவர்கள் அனைவரது ஆரம்பக் கட்ட முயற்சியும் வெற்றியுமே ரோஸ் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக வளர அடித்தளமாக இருந்தது.

2007ல் பாகிஸ்தானில் பேகம் என்னும் ட்ராக் குயின் 9X தனியார் தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றினை தொகுத்து வழங்கினார். தமிழகத்தில், திருநங்கைகளுக்கான சமூக மாற்றம் துவங்கிய நாட்களில் ட்ராக் குயினான ரமேஷ் வெங்கடேசன் பேகம் போல் தொலைக்காட்சி ஊடகத்தில் செலிபிரிட்டியாக வளர தன்னை திருநங்கையாக அறிவித்துக் கொண்டு தமிழ் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

அவர் திருநங்கை இல்லையென்றாலும், திருநங்கை என்று அறியப்படுவதாலும் அதனால் திருநங்கைகள் குறித்த நல்ல விவாதம் அமைந்ததால் மற்ற் திருநங்கைகள் அனைவரும் மௌனமாக வரவேற்றோம்.





ஆனால், புகழ் மயக்கத்தில் இன்னும் சாதிக்க நிறைய உள்ள நிலையில் திருநங்கைகள் குறித்த அடிப்படை புரிதல் இன்றி ஏனோதானோ-வென இவர் பரப்பி வரும் அவதூறுகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. தன்னை பேச அழைக்கும் இடங்களில், பத்திரிக்கை நேர்காணலில் தன்னை உயர்வாகவும் எல்லாத் திருநங்கைகளையும் மட்டமாகவே தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.


சமீபத்தில் ஒரு பத்திரிக்கை ஒன்றில் அளித்த நேர்காணலில் அளவு மீறி அவதூறாகப் பேசி வருகிறார். அதன் சாராம்சம் சுருக்கமாக எல்லாத் திருநங்கைகளும் பிச்சை மற்றும் பாலியல் தொழிலாளிகளுமாகவே இருப்பாதக கூறிவருகிறார். திருநங்கைகள் உழைக்கத் தயாராக இல்லை என்கிறார். இதுவரை ஏற்பட்ட திருநங்கைகள் சமூகபுரிதல் மற்றும் மாற்றங்களுக்கு தான் ஒருவரே காரணம் என்றும் கூறுகிறார். தன்னையும் திருநங்கைகள் பிச்சை/பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயப்படுத்தியாகவும் கூறுகிறார்.

நிஜத்தில் இவருடன் எந்த திருநங்கைக்கும் தொடர்பில்லை. உண்மையில் இவர் பிரபலமாவதற்கு முன்பு, தன்னை கே என்றே அனைவரிடமும் கூறிக்கொன்டு சமபால் ஈர்ப்பு கொண்ட தோழர்களுக்கான தொன்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். மட்டுமன்றி மற்ற திருநங்கைகள் மீது இவர் வைக்கும் அதே குற்றச்சாட்டிற்கும் இவரே உரியவர் தான்.


மற்ற திருநங்கைகள் பணத்திற்காக பாலியல் தொழில செய்தால் இவர் வெறும் பாலியல் தேவைக்காகவே ஆண்கள் கழிப்பறை, ECR Road, Beach என்று வெறியுடன் சுத்தியவர்தான். இன்று ரோஸாக பிரபலமடைந்த போதும் அதில் எந்த மாற்றமும் இன்றி அலைபவர்தான். ரோஸ் நேரம் என்னும் தனது நிகழ்ச்சிக்கு உதவி இயக்குநர்கள் தேர்வு செய்யும் தகுதியான ஆட்களை விட்டு தன்னுடன் உடலுறவு கொன்ட ஆண்களை நிகழ்ச்சிக்கு பயன்படுத்தும் அற்ப பாலியல் வெறியர் தான் ரோஸ். இத்தகைய கீழ்தரமான செயலை உதவி இயக்குநர்களே நேரில் கன்டு எரிச்சலடைந்ததும் உன்டு.


தனது அலுவலகத்திலேயே பலரையும் வரவைத்து இத்தகைய கருமத்தை செய்பவர் தான். எனக்கும் ரோஸுக்கும் பொதுவான சில நண்பர்கள் இதை நேரடியாக கண்டு என்னிடம் கூறி வருந்தியதும் உண்டு.


இத்தைகைய கீழ்த்தரமான இவர் பொருளாதார தேவைக்காக பாலியல் தொழில் செய்யும் நிஜ திருநங்கைகளை விமரசனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது.

நான் உட்பட பலரும் கண்டிப்பாக திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வேன்டும் என்று தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இவர் எப்போதும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவ்வாறு சொல்வதில்லை ஆனால் திருநங்கைகள் மீது மட்டும் பலி போட்டு அதன் மூலம் தன்னை உயர்ந்தவராக காண்பித்துக் கொள்கிறார்.

நிஜ திருநங்கைகள் பலரால அவர்களது சூழல், காரணமாக தொடர்ந்து மேற்படிப்பு மேற்கொள்ள முடிவதில்லை. அதையும் தாண்டி படித்த பல திருநங்கைகள் உண்டு. அவர்கள் குறைந்த பட்சம் தொன்டு நிறுவனங்களிலாவது பணிபுரிவதுன்டு. இவர் பிரபலமடைவதர்கு முன்பிருந்தே பல திருநங்கைகள் பூ கட்டுதல், சமையல் என சுயதொழில் செய்தும், சித்தாள் வேலை போன்று சுயதொழில் செய்தும் கண்ணியமாக வாழ்வதுண்டு.

திருநங்கைகளின் சமூக அவலம் குறித்த அரசியல் இன்றி, தனது சுயலாபத்திற்காக, பேர் புகழ் அடைவதற்காகவும் முட்டாள் தனமாக தனக்கு கிடைத்திருக்கும் கௌரவத்தை இழந்து வருகிறார். நிஜத்தில் இவர் ட்ராக் குயின் என்பதால் திருநங்கைகள் யாரும் இவரை ஒரு பொருட்டாக மதிக்காக நிலையில் தன் மீது அனைவரும் பொறாமைப்படுவதாகவும் கூறுகிறார்.

எந்த சமூக அங்கீகாரமும் இல்லாத நிலையிலே ப்ரியாபாபு போன்ற பல திருநங்கைகள் பல சாதனைகள் செய்தபோதும் திருநங்கைகள் மத்தியில் அவருக்கோ, என்னை போன்ற மற்ற தோழிகளுக்கோ பொருளாதாரரீதியில் எளியவர்கள் என்ற காரணத்தால் எந்த தனி மரியாதையும் கிடைத்ததில்லை. யார் மீதும் எந்த பொறாமையும் இருந்ததில்லை. யாரும் யார் மீதும் பொறாமை கொண்டதுமில்லை. எங்களைப் போன்ற சமூக போராளிகளுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த மரியாதையும் இருந்ததில்லை. இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது.


தன்னை ஒரு பெரும் சகாப்தமாக கருதி, கற்பனை வாழ்க்கையில் மிதக்கும் ரோஸ் எனப்பட்டும் ரமேஷ் வெங்கடேஷனுக்கு அனைத்து திருநங்கைகள் சார்பாக இதை ஒரு நேரடி எச்சரிக்கையாக பதிவு செய்கிறேன்.

பி.கு.


தயவுசெய்து, யாரும் இதை தனிநபர் வஞ்சம் என்று தவறுதலாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது குறித்து மேலும் விளக்கம் தர தயராகவே உள்ளேன் (விரைவில் கணினி பெற்றதும். அவர் ட்ராக் குயினாகவே இருந்தலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மேது எனக்கு எந்த விமர்சனமும் கிடையாது. அவர் திருநங்கை என்ற அடையாளத்தை பயன்படுத்தி வளர்ந்து விட்டு, எங்களையே கேவலப்படுத்துவதை கண்டிப்பதே இந்த பதிவின் நோக்கம். அதோடு, இது ஒட்டு மொத்த திருநங்கைகளின் குரலும் ஆகும்.

5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

குலவுசனப்பிரியன் said...

திருநங்கைகள் பற்றி தங்களைப் போன்றவர்களின் முயற்சியால் இப்போதுதான் கொஞ்சமாவது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதனால் ஆதயம் அடைந்துவிட்டு போராடுபவர்களை அவதூறு பேசுவது நியாயமல்ல.

Kalki Subramaniam said...
This comment has been removed by the author.
Romeoboy said...

பிரபலம் ஆவதற்கு இதுவும் ஒரு வழியா ???

உங்கள் புத்தகத்தை பற்றி எனது விமர்சனத்தை எழுதி உள்ளேன் படித்து பார்க்கவும்

http://ennaduidu.blogspot.com/2009/10/blog-post_29.html

ஆதி said...

அவர் போராடி ஜெயித்தவர் என்று பலமுறை எண்ணி இருக்கிறேன், அவர் அந்த உயர்ச்சி சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தையும், நல்ல மதிப்பையும் திருநங்கைகள் மேல் ஏற்படுத்தும் என்று எண்ணி இருக்கிறேன்.. உறழ்வுக்குறிய விசயங்களை அவர் தொலைக்காட்சியில் பேசு போதெல்லாம் உண்ணிப்பாய் கவனித்துப்பார்த்திருக்கிறேன், என்றாலும் கோவா படத்தில் உள்ள விஷயத்தை படம் வெளியான சில நாட்களிலேயே கையில் எடுத்தப்போது தற்போது இது தேவையா என்று தோன்றியது, அது மட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் ஒரு முதிர்ச்சியான விவாதம் இல்லை.. இப்போ அவரும் அப்படித்தான் என்று கேள்விப்படும் போது safe mode-ல் தன்னை வைத்துக் கொள்ளத்தான் அந்த நிகழ்ச்சியை நடத்தினாரோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.. அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.. எந்த சமுதாயத்தை வைத்துக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாரோ அந்த சமுதாயத்தை இழிவுபடுத்துவது கண்டிக்க வேண்டியதே..

nithya said...

well i would like to say u dont know the definition of drag queens drag queens are men who entertain in female mode in bars and pubs . then i would like to ask who gave u the authority to talk about someones sexual orientation and u almost made rose as a dog lookin for sex in the street and i would say same on u and the way u wrote ur blog seems lik a personel vendetta rather than a social responisiblity