கவிதை03





காயும் வெய்யில் சாலையில்

குடை பிடிக்கும் அபத்தமில்லாமல்

பாதையின் நிழல் வெளிக்கு

அனிச்சையாய் வழிநடத்தும்

காதலன் நீயாய் இருக்க.,

சூரியன்-பிள்ளை உன்னை

சந்திக்கவும் கூடுமோ

என் காதலையும் மீறி...

5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நாமக்கல் சிபி said...

நல்ல கவிதை பாராட்டுக்கள்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
காயும் வெய்யில் சாலையில்
குடை பிடிக்கும் அபத்தமில்லாமல்
பாதையின் நிழல் வெளிக்கு
அனிச்சையாய் வழிநடத்தும்
காதலன் நீயாய் இருக்க
///

ரொம்ப நல்லா இருக்குங்க...

பட்டணத்து ராசா said...

//காயும் வெய்யில் சாலையில்
குடை பிடிக்கும் அபத்தமில்லாமல்
பாதையின் நிழல் வெளிக்கு
அனிச்சையாய் வழிநடத்தும்
காதலன் நீயாய் இருக்க.,//

இது வரைக்கும் ok

//சூரியன்-பிள்ளை உன்னை
சந்திக்கவும் கூடுமோ
என் காதலையும் மீறி...//

இது புரியலயே வித்யா.

இராம்/Raam said...

//சூரியன்-பிள்ளை உன்னை

சந்திக்கவும் கூடுமோ

என் காதலையும் மீறி...//

என்னாம்மா ஒன்னுமே புரியலே.எதை உணர்த்துகின்றன இந்த வரிகள்....

குழப்பத்துடன்,
ராம்

G.Ragavan said...

கவிதையின் இரண்டாம் பாகம் சற்றுப் புரியவில்லை.

இன்னாருடைய குழந்தையைச் சுமக்க வேண்டும் என்று எழும் ஆசையா!

அல்லது வெயில் பிடித்திருப்பதால் சூரியனை அணைப்பதாகக் கருதுவதா!

கொஞ்சம் விளக்குங்கள் லிவிங் ஸ்மைல் வித்யா!